Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    30345
  • Joined

  • Last visited

  • Days Won

    4

Everything posted by நன்னிச் சோழன்

  1. கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும் வீரவணக்கக் கொடி மஞ்சள் நிறத்திலும் இது உண்டு.
  2. முழுதாக என்று சொல்லிட முடியாது... காசாவுக்குள் எப்படியோ ஈரானிய ஆதரவு உடைய சிரியாவைத் தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் வீரர்கள் உள்நுழைந்து போரிட்டுக்கொண்டிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
  3. பின்னாளில் மூன்று உள்ளிணைப்பு மின்னோடி (IBM) கொண்ட வேவ் ரைடர் சண்டைப்படகிற்கு இவரது நினைவாக "றோசா Rosa" என்று பெயர் சூட்டப்பட்டது.
  4. வேலாயுதம் வசந்தி என்ற இயற்பெயர் கொண்டு திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தமிழீழ மண் மீட்புப் போரிலே இணைந்து கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறப்பு பயிற்சிகளை திறமையாக செய்து முடித்தார்.மகளிர் நாங்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்ற செயல் வடிவம் மூலம் பயிற்சி ஆசிரியர்களுக்கு பல முறை நிரூபித்துக் காட்டினார். மகளிர் பிரிவில் இவரது அசாத்தியமான திறமை தேசியத் தலைவரின் பார்வைக்கு அறிவிக்கப்படுகிறது.அந்த சூழ்நிலையில் கடற்புலிகளின் கப்பலுக்கான விநியோக நடவடிக்கைக்கு மகளிர் அணி கட்டாயமாக பங்கு கொள்ள வேண்டிய தேவை இருந்தது. இந்த விநியோக நடவடிக்கைக்காக கடற்புலிகளின் சிறப்பு தளபதியால் லெப் கேணல் றோசாவை உள்வாங்க சிறப்பு தகமைப் பரீட்சை வழங்கப்பட்டது. இந்த தகமைப் பரீட்சையில் அதிகூடிய திறமையை வெளிப்படுத்தி அந்த கப்பல் விநியோக அணிக்கு பொறுப்பாளராக சிறப்பு தளபதியால் நியமிக்கப்பட்டார். லெப் கேணல் றோசாவாலே போராட்ட வரலாற்றில் மகளிர் அணி முதன்முதலாக வெற்றிகரமாக கப்பலுக்கான விநியோக நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு சாதனைத் தடம் பதித்தார். இவருடைய திறமை பல சண்டைக்களங்களில் கடற்பரப்பில் ஈடுபடுத்தியது. ஒரு தொகுதி இராணுவ தளபாடங்கள் இடம்மாற்றும் நடவடிக்கை ஒன்றில் 18-04-1998 அன்று திருமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். இவரை இந்நாளில் நெஞ்சில் நிறுத்தி இவரோடு வீரச்சாவடைந்த அனைத்து மாவீர மறவர்களுக்கும் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம். உங்கள் விடுதலை வேட்கை என்றும் எங்களை வழிநடத்தி போராட்டப் பாதையில் வீறுகொண்டு பயணிக்க வழிவகுக்கும். https://www.tamilarul.net/2022/04/18_01976124944.html
  5. கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் இசையமைத்தவர்: இசைத்தென்றல் பாடல் வரிகள் கு. வீரா பாடகர்: திருமலைச் சந்திரன் மற்றும் இளங்கீரன் இறுவெட்டு: அறியில்லை/ தனிப்பாடல் கரும்புலிகள் வாழும் எரிமலையின் தேசம் - அந்தக் காலனையே கலக்கிடும் கந்தக வாசம்! (இது கரும்புலிகள்) தமிழீழ மண்ணில் உயிராய் வைத்தோம் பாசம் - அந்தப் பாச உணர்வில் தேசப்புயலாய் நாங்கள் உருவானோம்! (இது கரும்புலிகள்) தலைவனின் விழிகளில் தீப்பிழம்பினால், தடைகளை உடைத்துமே தூள் கிளப்புவோம்! (தலைவனின்) (கரும்புலிகள்) வெடிமருந்தில் உடையணிந்து விரைவோம் - எந்த வேளையிலும் காற்றுக்குள் நுழைவோம்! (வெடிமருந்தில்) கொடிகொண்டு ஆளும் தமிழீழ மண்ணில் - நாங்கள் கொலுவிருந்து பார்ப்போம் தலைவனது கண்ணில்! (கொடிகொண்டு) (தலைவனின்) (தலைவனின்) தீயாக எரியுமே பகைவீடு - அந்தக் கனலோடு தெரியும் எங்கள் வரலாறு! (தீயாக) இரும்பிலும் இறுகிய மனமென்பார் - எங்கள் இதயத்தின் மென்மையை எவர் அறிவார்?! (இரும்பிலும்) (தலைவனின்) நெய் விளக்கை ஏற்றிவைத்து நெஞ்சம் அழும் - அந்த நினைவினிலே விடுதலைத்தீ விஞ்சி எழும்! (நெய் விளக்கை) மெய்யுணர்வு விழித்துவிட களம் வந்தோம் - நாங்கள் மீண்டும் தமிழ் ஆளவென்று பலம்கொண்டோம்! (தலைவனின்) (தலைவனின்) (கரும்புலிகள்) (இது கரும்புலிகள்) (தமிழீழ) (இது கரும்புலிகள்) (தலைவனின்) (தலைவனின்) ========================================== புலிகள் யாரென எதிர்காலத் தலைமுறைக்கு எடுத்தியம்பும் பாடல் பாடலிற்கான கொழுவி: வேங்கை மாவீரரெல்லாம் "வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள்" எனத் தொடங்கும் இப் பாடலின் வரிகள்: பல்லவி: வேங்கை மாவீரரெல்லாம் சரித்திரவான்கள், வேலுப்பிள்ளை பிரபாகரன் சொல் நடந்தார்கள்! அனுபல்லவி தம் இனிய நாளையெல்லாம் தந்தார் அன்று - அதில் நாளை எங்கள் சந்ததிகள் வாழ்வாரென்று! சரணம்: மாண்டவர்கள் மீண்டுமினிப் பிறப்பதில்லையே - எங்கள் மாவீரர் புகழ் மண்ணில் இறப்பதில்லையே! தமக்காக இவர்கள் என்றும் வாழ்ந்ததுமில்லை - இவர் தாள்போற்ற மறுப்பவனும் தமிழனுமில்லை! பொய், களவு, மது, மாது, புகை, சூது என்றும் புன்செயல்கள் இல்லை இவர் ஒருபோதும். பொன் பொருளில் ஆசையில்லை இவர்களுக்கு புகழ் கொடுத்தார் ஈன்று பெற்ற தாய்களுக்கு! தன்மானத் தமிழர்களாய் பிறந்தார்கள் ஏற்றத் தாழ்வின்றி ஒரு குலமாய் சிறந்தார்கள். உண்மையான இறைவன் இவர்கள் தானே எங்கள் உரிமைக்காய் ஈடுவைத்த மறவர்கள் தானே!
  6. தமிழ்நெற் ஒரு மின்னஞ்சற் பட்டியாக (mailinglist) 1995 நடுப்பகுதியில் நோர்வேயின் பேர்கன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், இணையத்தள செய்தி நிறுவனமாக 1997 ஜூன் மாதம் ஒஸ்லோவில் இருந்து அமெரிக்கா, பிரித்தானியா, ஸ்கொட்லான்ட், கனடா போன்ற இடங்களில் இருந்தோரின் துணையுடன் இயங்கலாயிற்று. 1998 ஆம் வருட ஆரம்பத்தில், நோர்வேயின் நீதி அமைச்சின் கீழ் இயங்கிய குடிவரவுத் திணைக்களம் அறிவித்திருந்த குடியேற்றவாசிகளுக்கும் அவர்களின் தாயகத்துக்குமான செய்திப் பரிமாற்றத்துக்கான ஓர் உதவித்திட்டத்தின் கீழ் சுயாதீனமாக நிதியைத் தமிழ்நெற் தேடிப் பெற்றுக்கொண்டது. எனினும், இரண்டு வருடங்களுக்குள் அந்த நிதியைத் துண்டிக்கும் வகையில் இலங்கை அரசு நோர்வே வெளிவிவகார அமைச்சினூடாக மறைமுக அழுத்தங்களை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நெற்றுக்கான நிதியூட்டம் முழுமையாகச் சுயாதீனமானதாக, ஆசிரியர் பீடத்தவரின் பொருளாதார முயற்சிகளிலும் பொதுமக்களின் பங்களிப்பிலும் தங்கியிருப்பதாக மாத்திரமே அமையவேண்டும் என்று அதன் ஆசிரியபீடம் முடிவெடுத்துக்கொண்டது. அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்தே, குறிப்பாக மாமனிதர் சிவராம் அவர்கள் 1997 ஒக்ரோபரில் எம்மோடு இணைய முன்னர் இருந்தே, செயற்பட்டு வந்த மூத்த ஆசிரியர் ஒருவரின் சுயாதீன நிதித் திரட்டலோடு தமிழ்நெற் இயங்கலானது. அதேவேளை நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழக விஞ்ஞானப் பூங்காவில் (Oslo Research Park) ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கி (Everbit Systems Development AS) அது ஈட்டிய வருவாயில் தமிழ்நெற்றின் பல வேலைகள் நடந்தேறின. தமிழ்நெற்றில் தற்போதும் பயன்படுத்தப்படும் உள்ளடக்க முகாமைத்துவ அமைப்பு (Content Management System / CMS) மற்றும் அதன் தொழில்நுட்பத் தளம் அங்கேயே உருவானது. இன்றும் அதே அடிப்படையில், பிரத்தியேக வழங்கியில் (Dedicated Server) அது இயங்கி வருகிறது. எமது சொந்தத் தொழில் நுட்பம் என்பதால் பாதுகாப்பையும் இறுக்கமாகக் கட்டிக் காக்கமுடிகிறது. இலங்கை அரசு 2007 இல் தமிழ் நெற்றைத் தாக்குவதற்கு வெளி நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தவும் தயார் என்று அறிவித்திருந்தது. இதனால் எமது வழங்கியின் மூல இணைய எண் (IP) வெளியில் தெரியாதவாறு Advanced DDoS Mitigation வெளி நிறுவனம் ஒன்றால் வழங்கப்படுகிறது. மேலும், அண்மைய வருடங்களில் மெய் நிகர் முகாமைத்துவத் தளம் (Virtualization Management Platform), முகில் கணின வழங்கியாகவும் (Cloud based VPS) ஒன்றுக்கு மேற்பட்ட மூல இணைய எண்களுடன் தொழில் நுட்பம் ஆசிரியபீடத்தினாலேயே கையாளப்பட்டு வருகிறது. YouTube வீடியோக்களைப் பாதுகாப்பதற்காக, பிரத்தியேகமான வீடியோ தள வழங்கி ஒன்றில் வீடியோக்களை பாதுகாத்தும் வருகிறோம். தற்போது (2021 இல்) பயநிடை (API) நுண்சேவைகள் (Micro services) அடங்கிய தரவமைப்பாக (Data Structure) தமிழ்நெற்றை மாற்றிவருகிறோம். இதற்கிடையில் தமிழ்நெற்றையும் குறித்த ஆய்வுப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளையும் சில தமிழ்த் தரப்புகள் முன்னெடுத்திருந்தன. ஆனால், அந்த நடவடிக்கைகளால் குறித்த நிறுவனத்தினதோ அல்லது தமிழ்நெற் இணையத்தளத்தினதோ சுயாதீனத்தன்மையைக் கட்டுப்படுத்த முடியாதவாறு பாதுகாக்கவேண்டிய நிலைமை தோன்றியது. குழப்ப நடவடிக்கைக்கு ஆளானவர்களிற் சிலரும் தமது கோரிக்கைகளை, உண்மைநிலை உணர்ந்து, பின்னாளில் கைவிட்டுவிட்டனர். இந்த நூற்றாண்டின் முதல் நாளான 01 ஜனவரி 2000 அன்று தமிழ்நெற் ஆசிரிய பீடம் அதன் அறக்கட்டளையில் இருந்து நிர்வாகரீதியாக விடுபட்டு, சிவராம், சிறிதரன், ஜெயச்சந்திரன் ஆகிய ஆசிரியர்கள் மூவரின் பொறுப்பில் சர்வதேச ரீதியாக நிர்வகிக்கப்பட்டது. சிவராம் அவர்களைத் தமிழ்நெற்றில் இருந்து ஓரங்கட்ட, அல்லது வெளியேற்ற, முன்னெடுக்கப்பட்ட முனைப்புகளை எதிர்கொண்டு தமிழ்நெற் தனது சுயாதீனத் தன்மையைப் பேணுவதில் மிகவும் உறுதியாகச் செயற்படவேண்டி இருந்தது. இவ்வாறு ஆசிரிய பீடத்தவரின் சுயமுயற்சியிலேயே தமிழ்நெற் தனது மூல நடவடிக்கையின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாத்துவந்தது. எனினும், ஒஸ்லோ விஞ்ஞானப் பூங்காவில் இயங்கிய நிறுவனத்தை மாமனிதர் சிவராமின் படுகொலைக்குப் பின்னர் நடாத்தமுடியாத நிலை தமிழ்நெற் நிறுவக ஆசிரியருக்கு உருவாகியதால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தமிழ்நெற்றின் நாளாந்தச் செய்திகளைக் கவனிக்கும் வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டியிருந்தது. ஆங்கிலத்தில் வெளிவந்துகொண்டிருந்த தமிழ்நெற் ஜேர்மன் மொழியிலும், பிரெஞ்சு மொழியிலும் வெளியாகவேண்டும் என்ற விருப்பு தமிழ்த் தேசிய மட்டங்களில் பரவலாக முன்வைக்கப்பட்டபோது, செய்திகளின் மொழிபெயர்ப்புக்கு ஐரோப்பாவில் மூவர் தொழில் ரீதியாக வேலைக்கமர்த்தவேண்டிய சூழலில் சில மாதங்கள் தமிழீழ நடைமுறை அரசின் பணிப்பின் பேரில் அதற்குரிய நிதிப் பங்களிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. தவிரவும், 2009 இற்குப் பின்னர் தமிழ்நெற்றின் நிதிச் செலவுகளுக்குச் சிக்கல் ஏற்பட்ட தருணங்களில் சில அமைப்புகள், குறிப்பாக அவற்றில் இருந்த பொறுப்பாளர்கள் முடிவுகளை மேற்கொண்டு, தாமாக முன்வந்து சில நிதிசார்ந்த சிக்கல்களில் இருந்து விடுபட உதவியும் இருந்தார்கள். எனினும், எத்தருணத்திலும் எமது மூல நடவடிக்கையான ஆங்கில செய்திச் சேவையின் எந்த ஒரு பணிக்கும் வேறு எங்கிருந்தும் நிதியூட்டம் பெறப்படவில்லை. ஆசிரியபீடத்தில் இருந்தோரின் முயற்சியாலும் பொதுமக்களின் நேரடிப் பங்களிப்பாலும் மட்டுமே சுயாதீனமான முறையில் நிதியூட்டம் செய்யப்பட்டுவந்தது. காலப் போக்கில் சில அவசியமான முயற்சிகளில் நிதியற்ற சூழலிலும் அகலக் கால் வைத்து செயற்படவேண்டிய நிலை உருவாகியபோது ஆசிரியபீடத்தவர்கள் சுமைதாங்கிகளாக நிதிச் சுமையை சொந்தத் தோள்களில் சுமக்கவேண்டிய நிலையும் உருவாகியது. இதற்காக ஆசிரியபீடத்தவர் தனிப்பட்ட கடன்களைப் பெற வேண்டிய சூழலும் தோன்றியது. தமிழ்நெற் முன்னெடுக்க விரும்பிய பலகணி எனும் நேர்காணல் முயற்சிக்கு பிரித்தானியாவில் சிலர் பரோபகார மனதோடு உதவினார்கள். கருவிகள் சிலவற்றைக் கொள்வனவு செய்ய முடிந்தாலும், வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்குரிய கலையகத்தை அமைத்துக்கொள்வது சாத்தியமற்ற ஒன்றாகியது. இதற்கும் எமது சுயாதீனத் தன்மை பற்றிய நிலைப்பாடே காரணமாகியது. சுயாதீனத் தன்மையைக் கைவிட்டு சில அமைப்புகளுடன் இயங்கும் தெரிவை மேற்கொண்டிருந்தால் பிரித்தானியாவில் ஓரிடத்தில் எமது கலையகம் உருவாகியிருக்கும். ஆனால், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பை நாம் கருத்திற்கொண்டே பின்வாங்கவேண்டியிருந்தது. பலகணி போன்ற நடவடிக்கைகளில் ஊடக ரீதியாக அகலக் கால் வைத்துச் செயற்படுவதற்கும் அவசியமான முயற்சிகளைத் தொடர்வதற்கும் மட்டுமல்ல, நாளாந்தச் செய்திகளைத் தயாரித்து வெளியிடுவதற்குக் கூட நிதியற்ற சூழல் உருவாகியது. எனினும் எமது சுயாதீன நிதியூட்டல் என்ற விடயத்தில் நாம் எப்போதும் போல மிகவும் தெளிவான நிலைப்பாட்டிலேயே தொடர்ந்தும் உள்ளோம். தமிழ்நெற் மீதான பொருளாதாரச் சுமைகளில் இருந்து விடுபட தொலைதூரத்தில் இருக்கும் பரோபகார உள்ளம் கொண்ட ஒருவர் உதவியதால் நிதிசார் நெருக்கடிகளில் இருந்து தமிழ்நெற் விடுபட்ட போதும் பெரும்பணிகள் சிலவற்றைத் தொடரமுடியாமல் பின்வாங்கவேண்டியிருந்தது. தமிழ்நெற்றின் மூல வேலைக்குரிய நிதி சுயாதீனமானதான முறையில் திரட்டப்படவேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாம் கடைப்பிடித்துவரும் பொதுவிதியைக் கைவிடாது நிதியூட்டம் செய்வது மிகவும் சிரமமானதொன்றாகியுள்ளது. ஆசிரியபீடத்தவர்கள் சிலர் நாட்டமிழக்கும் போது அல்லது அவர்களது தனிப்பட்ட வருவாய் பின்னடைவு காணும்போது தமிழ்நெற்றுக்கான நிதியூட்டலும் சிக்கலாகிவிடுகின்றது. அது மட்டுமல்ல பொதுமக்களிடம் சென்று நிதிசேகரிக்கும் திறமையும் ஆசிரியபீடத்தில் மீதமானோருக்கு இருக்கவில்லை. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2018 இல், எமது கடந்த காலச் செயற்பாடுகளை, குறிப்பாக நிதி தொடர்பான விடயங்களை, முழுமையான ஒரு மீளாய்வுக்கு உட்படுத்தி அதன் பின்னரே தமிழ் வாதாடு தளம் என்ற அணுகுமுறையைச் செயற்படு தளமாக வகுத்துக்கொண்டோம். பொதுவெளியில் இதுவரை வெளிவராதிருந்த தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மை குறித்த உண்மைகள் சொல்லப்படவேண்டும் என்பதையும் முடிவெடுத்துக்கொண்டோம். தமிழ்நெற் என்ற ஊடக வேலைக்கு அப்பால் பொது முன்னெடுப்புகள் பரவலான பங்களிப்போடும் சுயாதீனத் தன்மையோடும் வேறொரு தளத்தில் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற முடிவுக்கும் வந்தோம். அவ்வாறு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் வேறு அமைப்புகளும் நிதிப் பங்களிப்பை வெளிப்படைத் தன்மையோடு மேற்கொள்ள முடியும். அனைவரும் பிளவுகளைத் தாண்டி ஒருங்கிணைந்து வேலை செய்யும் வாய்ப்பை ஒரு தளமாக உருவாக்கமுடியும். இன அழிப்புக்கான சர்வதேச நீதிக்கான பொருத்தமான கோரிக்கைகள், ஆதாரங்கள், நடவடிக்கைகளுக்குரிய சரியான திசையில் ஈழத்தமிழர் தேசத்தை இட்டுச்செல்லும் வழிமுறை அனைத்து வேலைத்திட்டங்களிலும் முதன்மையானது என்ற வகையில் தமிழ் வாதாடு தளத்தின் அணுகுமுறையை வகுத்துக்கொண்டோம். அங்கு துடிமத் தளப் பொறிமுறையே பிரதானமாக அடையாளம் காணப்பட்டது. அறிவைக் கடத்தும் நூலாக்கம் போன்ற பெரும் நிதித் தேவையோடு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தமிழ்நெற்றால் அடுத்ததாகத் தொடரப்படவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். வழமைபோல தமிழ்நெற் ஆசிரியபீடம் எவ்வித பொருளீட்டும் நோக்கற்றுச் செயற்படும். எமது ஆசிரியர்கள் தமது நேரத்தை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் சேர்த்தே தமிழ்நெற்றின் சுயாதீனத் தன்மையைப் பேணிவந்துள்ளார்கள். தொடர்ந்தும் மக்கள் பங்களிப்போடு தமிழ்நெற் தன்னை மீளுருவாக்கம் செய்துகொள்ளும் வகையில் அதற்குரிய நிதித்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில இணையத்தள மற்றும் செய்திநிறுவன வேலைகளுக்கும் அப்பால் நூலாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகையில் அவை தனிவேறான நிதித் திரட்டலோடு நேரடியான மக்கள் பங்களிப்போடு, ஆசிரியபீடத்தில் இருந்து வேறுபட்டு, பொதுப்படையான தன்மையோடு கையாளப்படவேண்டும் என்ற முடிவையும் மேற்கொண்டுள்ளோம். இதற்கு தமிழ்நெற் அறக்கட்டளை மற்றும் அதைப்போன்ற பொருளாதார இலாபநோக்கற்ற அறக்கட்டளைகள் வேறேதும் இருப்பின் அவற்றையும் அணுகலாம் என்றும் முடிவுசெய்துள்ளோம். 2020 இன் இறுதியிலும் 2021 இன் ஆரம்பத்திலும் இரண்டு நூல்வெளியீடுகளை தமிழ்நெற் அமேசனூடாக மிகவும் குறைந்த செலவில் வெளியிட்டது. இது ஒரு முன்னோடி நடவடிக்கையே. அவற்றில் ஒன்று கையடக்கமான இளைய தலைமுறைக்குரிய ‘தமிழும் ஈழத்தமிழும்’ (Tamil And Eezham Tamil) என்ற ஆங்கில நூலாகும். மறைந்த பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் தமிழ்நெற்றுக்காக எழுதிய அறிமுகம் ஒன்றே சிறிய கைநூலாக வெளியாகியது. அதைப் போல, ‘தமிழ்த் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும்’ (The Fall and Rise of the Tamil Nation) என்ற ஆங்கில நூலின் மறுபதிப்பு தகுந்த உரிமை பெற்று உரிய பின்னிணைப்புகளின் சேர்ப்போடு வெளியிடப்பட்டது. தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழர் சுயாட்சிக்கழகத்தை ஆரம்பித்து தமிழ் இறைமைச் சிந்தனைப் பள்ளியின் முன்னோடியாகிய வ. நவரத்தினம் அவர்கள் எழுதிய நூலே அதுவாகும். இவற்றை அமேசனில் அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். அதைப்போல வேறு ஒரு தொகுப்பை தமிழ்நெற் அறக்கட்டளை, மாற்றுச் செய்திநிறுவன வலையமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ் வாதாடு தளம் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகவும் குறைந்த செலவில் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளோம். இவற்றுக்கான நிதிச்செலவை சில பரோபகார நல்லெண்ணம் கொண்டவர்கள் பொறுப்பேற்றுள்ளார்கள். செய்தி, நூலாக்கம், மற்றும் கருத்து நிறுவனமான தமிழ்நெற்றுக்கு அப்பாற்பட்ட பொதுவான செயற்பாடுகளில் வேறு சில அமைப்புகளும் தேவைக்கேற்ப இணைந்து செயற்படும் வகையில் தமிழ் வாதாடு தளத்தின் ஊடாக வெளிப்படைத் தன்மையோடு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது சிறப்பாக அமைந்துள்ளது. இன அழிப்பு நீதிக்கான துடிமத்தள உருவாக்கத்தையும் வேறு பல வேலைத்திட்டங்களையும் பரவலான பங்கேற்புடன் தமிழ் வாதாடு தளம் முன்னெடுக்க ஆரம்பித்துவிட்டது என்பது மன நிறைவு தரும் செய்தி. https://www.tamilnet.org/
  7. இதிலை செத்த யூதனுக்கு சாவு எப்பிடி தெரிஞ்சிருக்கும் என்டு பாருங்கோ.... செத்தாலும் இப்பிடி சாகக் கூடாதப்பா.
  8. அன்றை நாள் வலிதாக்குதலில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலிகளில் ஒருவரான கப்டன் ஈகன் எ புலேந்திரன்
  9. இதையெல்லாம் ஆங்கலத்திலும் வெளியிட்டால் வெளிநாடுகளில் உள்ளவர்களும் வாசித்து மாணவர் அமைப்புகள் மூலம் மீள்வெளியீடு செய்ய வசதியாக இருக்கும்.
  10. ஒரு சின்ன முயற்சியில் வெற்றி அடைந்துள்ளேன்! யாழில் மட்டும் பாவிக்கத்தக்க தமிழீழத் தேசியக் கொடி எமோஜியை வடிவமைத்துள்ளேன். வழக்கமாக ஊரில் செய்வது போன்று இருப்பதை வைத்தே ஒன்றை உருவாக்கியுள்ளேன். இது ஒரு செப்பமற்ற வடிவமைப்பே (crude design) ஆகும். இருப்பினும் ஒரு முயற்சிதான். கிட்டத்தட்ட ஒரு எமோஜிக்கு நிகராக இதை நீங்கள் பாவிக்கலாம். ஏன், ஒரு செப்பமற்ற ஒரு எமோஜிதான் இதுவும் கூட. முயற்சி செய்து எப்படி இருக்குதென்டு சொல்லுங்கோ! செய்முறை: ஒரு புலிக்கொடியை எடுத்து 30 தர 16 என்ற அளவிற்கு மாற்றியுள்ளேன். பாவிக்கும் முறை: இதனை "Copy image address"/ "Copy link address"/ "Copy link" செய்து உங்களுக்குத் தேவையான எழுத்துக்களின் நடுவில் எவ்விடத்தில் ஒட்டினாலும் அவ்விடத்தில் புலிக்கொடியின் எமோஜி தோன்றும் . Copy this and save it in your keyboard clipboard. So that you can reuse it. image address: <-- எடுத்துக்காட்டு https://yarl.com/forum3/uploads/monthly_2024_02/large.Tamil_Eelam_Flag_svg.png.42a10655ca40d28029bdb47880fc1971.png
  11. வெள்ளா முள்ளிவாய்க்காலில் (முள்ளிவாய்க்கால் அ பகுதி) சிங்களவர் மீதான கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியொன்றின் பஃவல் கவசவூர்தித் தாக்குதல் (ZPU-2) 03-05-2009
  12. நல்ல தகவல். சீருடையான் என்பது பெயர் போன்று தென்படவில்லை. ஏதேனும் படை வீரனோ?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.