Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. 41 வது கேள்வியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கேட்டிருந்தேன். உண்மையில் 9 தொகுதியில் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் . தவறுதலாக புதுச்சேரியையும் இணைத்து சேர்த்து 10 என்று கேட்டிருந்தேன். கிருபன் எழுதிய விடைகளை பார்க்கும் போது தவறை உணர்ந்தேன். நன்றி கிருபன். இதனால் 41 வது கேள்விக்கு 10 என்று பதில் அளித்த கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலியின் விடைக்கு 9 என்று ஏற்று கொள்கிறேன். goshan_che குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி என்று பதில் அளித்தினால் 41 வது கேள்விக்கான இவர்களின் பதில் 6 ஆக ஏற்கிறேன் பாலபத்ர ஓணாண்டி - நீங்கள் இக்கேள்விக்கு 3 என விடை அளித்திருக்கிறீர்கள் . உங்கள் விடை 3 ? அல்லது 2? சுவி நீங்கள் 8 என பதில் அளித்திருக்கிறீர்கள். உங்களது விடை 8 ? அல்லது 7?
  2. வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள்
  3. இறுதி நாள் ஜூன் 03 திகதி சிட்னி நேரம் இரவு 11:59 ஆக மாற்றப்பட்டுள்ளது.
  4. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை) முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்? 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் 5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? 1) 5% க்கு குறைய 2) 5% - 6% 3) 6% - 7% 4) 7% - 8% 5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) போட்டி விதிகள் 1)மே20 ம் திகதிக்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  5. அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  6. அங்கு தேசிய கட்சிகளுக்கு எப்போதும்ஓரளவு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் விஜய் வசந்துக்கும் பொன் ராதாகிருஷ்ணாவுக்கும்தான் சரியான போட்டி
  7. ஆழ்ந்த இரங்கல்கள். மேலே ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது , கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’ என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது. ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது. - மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). தமிழ் மொழி மூலமான இலத்திரணியல் கல்வியின் தந்தையும் , தாயகத்தில் இன்றைய பல்வேறு இலத்திரணவியல் கல்வி முறைக்கும் வித்திட்ட கல்வி களஞ்சியம் Dr. எதிர் என எல்லோராலும் மிக அன்பாக அழைக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் எதிர் வீரசிங்கம் அவர்கள்
  8. 17 வது கேள்விக்கு பதிலைக் காணவில்லை
  9. 1)RR, CSK,SRH, KKR 2) 1# RR 2# CSK 3# SRH 4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
  10. Jake Fraser-McGurk இன் ஆட்டத்தினை பார்த்தபின்பு நேரமிருந்தால் கலந்து கொள்கிறேன்
  11. 19வது கேள்வி எந்த அணி . நீங்கள் வீரர் ஒருவரின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்
  12. சன்ரைஸ் அணியில் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் விஜயகாந்த் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
  13. இந்தியாவில் தமிழகத்தில்தான் தேசியக்கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை. இங்கு திமுக அல்லது அதிமுகக்குதான் ஆதரவு. இதனால் தேசிய கட்சிகள் இவை இரண்டுடன் மாறி கூட்டணி வைத்திருக்கின்றன. எனினும் 2006 உட்பட பிஜேபி தமிழகத்தில் தனித்து போட்டியிட்டிருக்கிறது . 2006 இல் சட்டசபை தேர்தலில் 232 தொகுதியில் 226 தொகுதியில் போட்டியிட்டது. இதில் 2.1% வீத வாக்குகளை பெற்றது. விபரங்களுக்கு https://en.wikipedia.org/wiki/2006_Tamil_Nadu_Legislative_Assembly_election 2006 இனை விட இப்பொழுது பிஜேபிக்கு வாக்குவீதம் கூடியுள்ளது. திமுக 180 தொகுதிகள்,200 தொகுதிகள் போட்டியிட்டு இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்
  14. 2009 முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்தபின்பு 2010 இல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளில் முதலிடம் பிடித்தார் சரத் பொன்சேகா. மகிந்தாவை தோற்கடிக்க சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து. அத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் சிவாஜிலிங்கம் அல்லது விக்கிரமபாகு கருணாரட்னா போன்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் தங்கள் இனத்தினை அழித்த சரத் பொன்சேக்காவுக்கு, மகிந்தா தோற்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் வாக்களித்தார்கள். வட இந்தியாவில் மோடி ஆதரவு அதிகமென்றாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அதிகம். இதனால்இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 6.58% ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கலாம். அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார். யாரின் வாக்குகளை கவரபோகிறார்?. விஜயின் திரைப்பட இரசிகர்கள் இளைஞர்கள். அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்களா?
  15. விஜயகாந்தின் கட்சி 2006 இல் முதலாவதாக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முதல் தேர்தலில் 8.5% வித வாக்குகளை பெற்றது. வன்னியர் அதிகம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்குள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். 2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.29% வாக்குகளை தேமுக பெற்றது . 2011 இல் அதிமுக அணியில் தேமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற சிலர் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயாலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவை வழங்கினார்கள் . அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்தார்கள். (கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்து ரணில் பிரித்ததினை போல) விஜயகாந்தின் மனைவி, மைத்துனரின் கட்சியில் செல்வாக்கு செலுத்த பல தொண்டர்கள் அதிமுக, திமுகவில் இணைந்தார்கள். அப்பொழுதே தேமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது. 2014 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழருவி மணியன் முயற்சியில் பிஜேபி கூட்டனி , 2016 இல் திமுகவுடன் பேரம் பேசி அதைவிட அதிக இடங்கள் மக்கள் நலக்கூட்டணியில்பெற்று போட்டியிட்டு தேதிமுக வாக்குவீதத்தினை இழந்து செல்வாக்கினை இழந்து விட்டது திமுக , அதிமுகவுக்கு மாற்று என்று தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜய்காந்த். இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழரின் நிலமை ஓரளவு தெரியும். வாக்குவீதம் எவ்வளவு அதிகரிக்கும் ? அல்லது குறையுமா?
  16. ஆம் நான் இந்த திரியில் முழுவதையும் வாசிக்கவில்லை. காதல் தோல்வியினால் இறந்து போனவர் என்று சொன்ன நபரையும் தெரியும். 3 மணித்தியாலங்கள் உண்ணாவிரதம் இருந்து எல்லோரையும் ஏமாற்றியவரையும் தெரியும். ஆனால் நீங்கள் அவரது கட்சி அல்லது அவரை மட்டும் எதிர்க்காது தொடர்ந்து அன்று தொட்டு இன்றுவரை ஆதாரவாக குரல் குடுப்பவர்களை ( அவர்கள் திராவிடக் கழகத்தை சேர்ந்தவர்கள் என்பதினால் அல்லது தேர்தல் கூட்டணி என்பதிலா) எதிர்ப்பது சரியா? . 1989 இல் ஈழத்தில் விடுதலைப் புலிகளின் ஆதரவோடு ஈரோஸ் இயக்கம் பாராளுமன்றதேர்தலில் போட்டியிட்டது. இத்தேர்தலில் இவர்களை எதிர்த்து EPRLF இல் சுரேஷ் பிரேமச்சந்திரன் போட்டியிட்டார். அவரால் உருவாக்கப்பட்ட மண்டையன் குழுவால் பல அப்பாவி இளைஞர்கள் சித்திரவாதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். 2004 இல் விடுதலைப்புலிகளின் ஆதரவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களில் ஒருவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் ஒருவர். அண்ணன் திருமாவளவன், அய்யா வைகோ, அய்யா ராமதாஸ், சகோதரர் அன்புமணி ஆகியோரை பற்றி நாம் தமிழர் தம்பிகள் இனி விமர்சிக்க வேண்டாம்” என்று அன்பு கட்டளை இட்டுள்ளார் சீமான்.- அண்மையில் யாழில் வந்த செய்தி . ஆனால் நீங்கள் துரோகிகள் என்கிறீர்கள் பிற்காலத்தில் சீமான் இவர்களுடனும் கூட்டணி வைக்கலாம். அப்படி வைத்தால் அவரை துரோகி என்பீர்களா? அல்லது ராஜதந்திரம் என்பீர்களா அல்லது கூட்டணி வைத்தாலும் ஈழ ஆதரவாக இருக்கிறாரே என்று சொல்வீர்களா?
  17. திமுக ,அதிமுகவுக்கு நிரந்தர வாக்குகள் எப்பொழுதும் இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வி அடைந்தது. அந்த தேர்தலில் அதிமுக 37 இடங்களையும் , NDA கூட்டாணியில் பிஜேபி, பாட்டாளி மக்கள் தல ஒரு இடங்களை பெற்றது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைதான் 2 வது பெரிய கட்சி. அத்தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் 27.18%. 27% வீத வாக்குகள் பெற்றிருந்தும் 39 தொகுதியிலும் ஒரு இடங்களை பெறமுடையவில்லை. 8% வீதத்துக்கும் குறைவான வாக்குகளை கொண்ட நாம் தமிழர் கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும். அத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கொம்னியூஸ்ட் கட்சிகள் பெற்ற வாக்குகள் 5.47%. இம்முறை இவை திமுக கூட்டணியில். அத்துடன் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருப்பவர்கள் பெரிய கட்சிக்கே வாக்களிப்பார்கள். 2014 தேர்தல் விபரங்களை பார்க்க https://en.wikipedia.org/wiki/2014_Indian_general_election_in_Tamil_Nadu
  18. சீமானின் ஆதரவிற்காக எங்களுக்கு ஆதரவுதந்தவர்களை குறை கூறுவது அழக்கல்ல . முத்துக்குமார் தொடங்கி பலர் எமக்காக தீக்குளித்தார்களே. இவர்களில் தீராவிட கழகங்களை சேர்ந்தவர்களும் பலர். ராசீவ் கொலையில் சந்தேகப்பட்டு பல வருடங்களாக சிறையில் வாடிய பேரறிவாளன் திராவிடக்கழக குடும்பத்தினைச் சேர்ந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் பயிற்சி களமான சேலம் மாவட்டம் புலியூரில் இருக்கும் பொன்னம்மான் நினைவு கூடத்தில் மாவீரர் நாள் சிறப்பாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் குளத்தூர் மணி உட்பட பல திராவிட கழகத்தினை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு வருடங்களும் கலந்து கொள்வார்கள். இதே போல பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இவை எம்மவர்களின் ஊடங்களில் வருவதில்லை . சசிகலாவின் கணவர் நடராஜா வழங்கிய நிலத்திலேயேதான் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையிலே கட்டப்பட்டது . இதில் பலரது பங்களிப்பு இருக்கிறது நாங்கள் யாழில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறோம். ஆனால் எமக்காக தமிழகத்தில் இருந்து வந்து போராடி வீரமரணம் அடைந்தோறும் இருக்கிறார்கள். கீழே இணைத்த இணைப்பில் பாருங்கள். இதில் தமிழகத்தினை சேர்ந்த கரும்புலியும் இருக்கிறார் https://www.thaarakam.com/news/38071
  19. ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்? 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.