Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தினேஷ் ஷாப்டரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு. சுமார் 06 மாதங்களாக பொலிஸ் பாதுகாப்பில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் குறித்த சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் எமது செய்தியாளர் தெரிவித்தார். பொரளை பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த ஷாப்டரின் சடலம் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி நீதிமன்ற உத்தரவின் பேரில் ஐந்து நிபுணர்கள் அடங்கிய சட்ட வைத்திய அதிகாரிகள் குழு முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி நிபுணர் தடயவியல் மருந்து வாரியம் முன்பாக மீண்டும் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தமேற்பட்டதன் காரணமாக மரணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடம் உத்தரவிட்டுள்ளார். அதன் பின்னர், தினேஷ் ஷப்டரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1357201
  2. இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுதாக்குதல். கடந்த சில மணித்தியாலங்களில் தெற்கு காசா நகரில் இரண்டு பள்ளிவாசல்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களால் அல்-சப்ரா பகுதியில் உள்ள அலி பின் அபி தாலிப் மற்றும் அல்-இஸ்திஜாபா என்ற பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் காசாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து முந்தைய வான்வழித் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ள பாடசாலை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகதிகள் முகாம் கடந்த நாட்களில் மூன்று முறை தாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த புதிய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அத்தோடு முற்றுகை நடவடிக்கைக்கு மத்தியில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர் பொனல்கள் மற்றும் ஜெனரேட்டர்களை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1357192
  3. மேலே... உள்ள முறை மூலம் முகப் புத்தகத்தில் இருந்து படத்தை இணைக்கக் கூடியதாக உள்ளது சுவியர்.
  4. எனக்கும் இரண்டு நாட்களுக்கு முன் நேரடியாக படத்தை கொப்பி பண்ணி இணைக்கும் போது உங்களுக்கு காட்டிய மாதிரி, படத்தை இணைக்க முடியாமல் இருந்தது. பின் படத்தின் image address copy பண்ணி... கருத்து எழுதும் பெட்டியின் அடியில் உள்ள Insert other media ஐ கிளிக் பண்ணி, பின் Insert Image from URL ஐ கிளிக் பண்ணி.. வரும் பெட்டியில் paste செய்து, இடது பக்கம் உள்ள Insert into post ´ஐ கிளிக் பண்ணும் போது படம் நேரடியாக தெரியும்.
  5. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தப்பட வேண்டும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்புகளுக்கும் இடையில் இடம்பெறும் போர் நிறுத்தப்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார். பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரரமடைந்துள்ள நிலை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்; காசா பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைப்பு விடுத்துள்ளார். https://athavannews.com/2023/1356887
  6. அதுகும்... தமிழ் கோடீஸ்வரரின் கொலைக்கு கிடைத்த நீதி. இப்ப யார், கொலையாளி என்பதையும் கண்டு பிடிக்க வேண்டும். அது... பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால்... நீதி தேவதை... மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுவார். ஆக மொத்தத்தில், இப்ப பாதிக் கிணறுதான் தாண்டியுள்ளார்கள்.
  7. தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு. வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, இந்தச் சம்பவத்தின் மூலம் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தீர்ப்பளித்த நீதவான், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளது. மரண விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நிபுணர் குழுவின் அறிக்கைகளை பரிசீலித்த நீதவான் இதனை அறிவித்தார். கழுத்து மற்றும் முகத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே அவரது மரணம் பதிவாகியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாஃப்டரின் மரணம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட 5 பேர் கொண்ட நிபுணர் குழு குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356661 @goshan_che, @satan
  8. தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு! பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் அந்த குழுவின் இறுதி அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்ட போதே கொழும்பு மேலதிக நீதவான் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1356460
  9. ஆழ்ந்த அனுதாபங்கள் யாயினி. உங்கள் தந்தையின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏
  10. காஸா போரை நிறுத்த மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்! காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்வாறு அறிவித்தால் டெல் அவிவில், ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1356347

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.