Everything posted by தமிழ் சிறி
-
சுதந்திர இந்தோ-பசிபிக் திட்டத்தின் மையமாக இருக்கும் இலங்கை ; அமெரிக்க தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ள எரிக் மேயர்
வடக்கில்…. ஒரு அமெரிக்க தூதகரத்தையும் திறந்தால் நல்லாய் இருக்கும். 😁
-
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன்.
புயல் ஓய்ந்த பின் சந்தித்த காட்சிகள் – நிலாந்தன். நாடு புயலில் சிக்கிச் சின்னாபின்னமாகி அதிலிருந்து முழுமையாக மீண்டெழாத கடந்த வாரம், யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு (டி.ரி.என்.ஏக்கும்) இடையே ஒரு சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. புயலின் அழிவுகளில் இருந்து மக்கள் முழுமையாக மீண்டு எழவில்லை. சிதைந்த வீதிகள் பல இப்பொழுதும் திருத்தப்படவில்லை. உடைந்து தொங்கும் பாலங்கள் பல இப்பொழுதும் முழுமையாகக் கட்டப்படவில்லை.நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் மக்கள் முழுமையாக வீடு திரும்பவில்லை. சேறு படிந்த நகரங்களையும் வீதிகளையும் கட்டிடங்களையும் முழுமையாகத் துப்பரவாக்கி முடியவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மேற்படி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒரு சந்திப்புத்தான். இப்படி ஒரு சந்திப்புக்கு சுமந்திரன் ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தார்.அதற்கு சுரேஷ் பிரமச்சந்திரன் பகிரங்கமாகப் பதில் கூறியதோடு சில கேள்விகளையும் எழுப்பியிருந்தார். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கிறது. சந்திப்பின் பின் சுரேஷ் பிரேமச்சந்திரனும் சுமந்திரனும் தெரிவித்த தகவல்களைத் தொகுத்துப் பார்த்தால் மாகாண சபைத் தேர்தல்களை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கே வைக்கப்படுகிறது. எனவே மாகாண சபைத் தேர்தல் ஒன்றை நோக்கி இந்தச் சந்திப்பு இடம் பெற்றிருக்கலாம். மாகாண சபைத் தேர்தலை வைக்க வேண்டும் என்று ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக கருத்தரங்குகளை ஒழுங்குப்படுத்திவருகிறது. அவ்வாறான ஒரு கருத்தரங்கு வவுனியாவில் நடந்தபோது அதில் சுமந்திரனும் கலந்து கொண்டார்;பேசினார். மாகாண சபைத் தேர்தலை ஆகக்கூடிய விரைவில் வைக்க வேண்டும் என்று இந்தக் கட்சிகள் கேட்கின்றன. மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட டி.ரி.என்.ஏ ஏற்கனவே தமிழ்த் தேசியப் பேரவை என்ற ஒரு கூட்டுக்குள் காணப்பட்டது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின்பின் ஓர் எழுத்துமூல ஆவணத்தில் கையெழுத்திட்டு அந்த கூட்டு உருவாக்கப்பட்டது.அப்பொழுது நடந்த ஒர்ஊடகச் சந்திப்பில் கஜேந்திரக்குமார் பின்வருமாறு சொன்னார் “இந்தக் கூட்டு உடையுமாக இருந்தால் அதைத் தமிழ் மக்கள் தாங்க மாட்டார்கள்” என்று. அவர் ஏன் அப்படி சொன்னாரோ தெரியவில்லை. ஆனால் நாடு தாங்க முடியாத ஒரு புயலில் சிக்கி மீண்டும் எழுந்து கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் தாங்க முடியாத அந்த உடைவு விரைவில் ஏற்படுமா ? ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தல்களை வலியுறுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தியபோது அந்தக் கூட்டில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின.டி.ரி.என்.ஏ ஓர் இலட்சியக்கூட்டு அல்ல.அந்த கூட்டுக்குள் இருப்பவர்கள் அனைவருமே முன்பு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்களைச் சேர்ந்த கட்சிகள்.முன்பு தமிழரசுக் கட்சியோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயல்பட்ட கட்சிகள்.பின்னர் தமிழரசுக் கட்சியின் பெரிய அண்ணன் தனத்தால் அந்தக் கூட்டுக்குள் இருந்து வெளியேறிய அல்லது வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்ட கட்சிகள். கடந்த ஆண்டு பொது வேட்பாளரை முன்நிறுத்திய கூட்டுக்குள்ளும் மேற்படி கட்சிகளில் பெரும்பாலானவை காணப்பட்டன.அவர்களுடைய சொந்த வாக்கு வங்கி பலவீனமானது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகளை அவர்கள் வெல்லமுடியும்.ஆனால் மாகாண சபைத் தேர்தலிலோ, ஒரு நாடாளுமன்றத் தேர்தலிலோ பெரிய வெற்றிகளைப் பெறத் தேவையான வாக்கு வங்கி அவர்களுக்கு இல்லை.இந்த விடயத்தில் தங்களுடைய உயரம் என்னவென்று அந்த கட்சிகளுக்கும் தெரியும்.சங்குச் சின்னத்தை தங்களுடையதாக்கியதன் மூலம் தமது வாக்கு வங்கியை மேலும் பலப்படுத்தலாம் என்று அவர்கள் கண்ட கனவு பலிக்கவில்லை. எனவே வெற்றி பெறக்கூடிய கட்சியோடு இணைவதன் மூலம் தான் அவர்களால் எதிர்காலத்தில் கட்சிகளாக நின்றுநிலைக்க முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி இப்போதைக்கு தமிழரசுக் கட்சிதான். எனவே தமிழரசுக் கட்சியோடு ஏதோ ஓர் இணக்கத்துக்கு வர வேண்டிய நிர்ப்பந்தம் இந்தக் கட்சிகளுக்கு உண்டு. உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்ததன்மூலம் அவர்கள் மூன்று உடன் நன்மைகளைப் பெற விரும்பினார்கள். முதலாவது, தங்களைத் துரோகிகள் என்றும் ஒட்டுக் குழுக்கள் என்றும் இந்தியாவின் ஆட்கள் என்றும் பெட்டிகட்டி,முத்திரை குத்திய தீவிர தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட தரப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற ஒரு கட்சியோடு கூட்டுக்குப் போவதன் மூலம், தமிழ்த் தேசியப் பரப்பில் தங்களைப் பற்றியுள்ள முற்கற்பிதங்களை அகற்றலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு. இரண்டாவது உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்த கையோடு தமிழரசுக் கட்சியோடு நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்திராத ஒரு பின்னணியில், தமது பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் இணக்கத்துக்கு போக வேண்டிய தேவை இருந்தது. மூன்றாவது உள்ளூராட்சி சபைகைளை இயலுமானவரை கைப்பற்றுவது. இப்பொழுதும் அந்த அடிப்படையில்தான் அவர்களை தமிழரசுக் கட்சியோடு பேச முற்பட்டுள்ளார்.மாகாண சபைத் தேர்தலில் கிடைக்கக்கூடிய வெற்றிகளை உறுதிப்படுத்துவது. இப்பொழுது நடக்கும் பேச்சுக்கள் வெற்றி பெறுமாக இருந்தால் அதன் முதல்விளைவு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தனிமைப்படுத்தப்படும்.அதே சமயம் டி.ரி.என்.ஏ.யும் மதிப்பிறக்கத்துக்கு உள்ளாகும். அதாவது தமிழ்த் தேசியப் பரப்பில் அவர்கள் நம்பத்தக்க சக்திகள் அல்ல, இலட்சிய பாங்கான கட்சிகள் அல்ல என்ற அபிப்பிராயம் எண்பிக்கப்படும்.ஏற்கனவே பொது வேட்பாளர் விடையத்தில் சங்குச் சின்னத்தை எடுத்ததன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் சிவில் சமூகங்களோடு இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை பெருமளவுக்கு இழந்து விட்டார்கள். அதற்குப் பின்னர்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு ஓர் எழுத்துமூல ஆவணத்தின் அடிப்படையில் கூட்டாகச் செயல்படச் சம்மதித்தார்கள்.இப்பொழுது தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியதன்மூலம் அவர்கள் தமிழ்த் தேசியப் பேரவையுடனான தமது உறவைப் பலவீனப்படுத்தியிருக்கிறார்கள்.அதன் மூலம் எதிர்காலத்தில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத தரப்பு இது என்ற முற்கற்பிதம் மேலும் நிரூபிக்கப்படும். அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சியும் அவர்களைக் கைவிடுமாக இருந்தால்,அல்லது கூட்டமைப்பாக செயற்பட்ட காலகட்டங்களில் மேடைகளில் பகிரங்கமாகவே அவர்களை ஒட்டுக் குழுக்கள் என்று அழைத்தது போல இனிமேலும் அழைப்பார்களாக இருந்தால், டி.ரி.என்.ஏ என்ற கூட்டுக்குள் இருக்கும் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்? இக்கட்டுரையில் ஏற்கனவே குறிப்பிட்டது போல, கஜேந்திரகுமார் கூறியது போல,தமிழ்த் தேசியப் பேரவையுடனான அவர்களுடைய இணக்கம் உடையுமாக இருந்தால்,அதைத் தமிழ் மக்கள் தாங்குவார்களோ இல்லையோ டி.ரி.என்.ஏ. தாங்குமா என்ற கேள்வி உண்டு. மாகாண சபைத் தேர்தலை நோக்கி மேற்படி சந்திப்பு நடந்திருக்கலாம். ஆனால் ஒரு மாகாண சபைத் தேர்தல் நடக்குமா இல்லையா என்பது இப்பொழுதும் சந்தேகம்தான். புயலுக்கு பின்னரான அரசியல் சூழலானது ஒரு தேர்தலை வைக்கத் தக்கதாக இல்லை. ஏற்கனவே அரசாங்கம் புயலுக்கு முன்பு மாகாண சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தது. அதேசமயம் மாகாணங்களின் எல்லைகளை மீள நிர்ணயம் செய்ய வேண்டி இருப்பதனால் அதற்கு கால அவகாசமும் கேட்டது.இப்பொழுது புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலில் அரசாங்கம் மேலும் கால அவகாசத்தை கேட்க வாய்ப்பு உண்டு.இந்தியாவை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் மாகாண சபை தேர்தலை அடுத்த ஆண்டு வைக்கலாம். அப்படி ஒரு தேர்தல் நடக்குமாக இருந்தால் அது தமிழ்த்தரப்பின் பாவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையுமா? இப்போதைக்கு தமிழரசு கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றன. ஆனால் அதில் அர்ஜுனாவும் களமிறங்கி இளஞ்செழியனும் களமிறங்குவாராக இருந்தால், அவர் தமிழரசு கட்சியின் வேட்பாளராக களமிறங்கவில்லை என்றால்,அப்பொழுது தமிழரசுக் கட்சியின் வெற்றி வாய்ப்புக்களின் பருமன் குறையும்.அதுமட்டுமல்ல தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு முன்னேறும். எனவே நடக்குமா இல்லையா என்று உறுதியாகத் தெரியாத ஒரு தேர்தலை நோக்கி,ஏற்கனவே இருந்த ஒரு கூட்டை உடைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியோடு இணங்கிப்போவது என்று டி.ரி.என்.ஏ முடிவெடுக்கமாக இருந்தால்,அது கஜேந்திரக்குமார் சொன்னதுபோல, தமிழ்த் தேசியப் பரப்பில் ஏற்கனவே உள்ள மிகப் பலவீனமான ஒரு ஐக்கியத்தின் முடிவாக அமையும். ஆனால் அதை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்வார்கள். ஏனென்றால் முள்ளிவாய்க்காலை கடந்து வந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு இனி எதிர்காலத்தில் தாங்கிக் கொள்ள முடியாத துயரம்; தாங்கிக் கொள்ள முடியாத காயம்; தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்று எதுவும் கிடையாது. https://athavannews.com/2025/1456314
-
கருத்து படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்!
இந்திய சென்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்கவந்த ரசிகர்கள் மத்தியில் கலவரம்! ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இன்று காலை இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில் அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். இதனையடுத்து கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்ட தனது உருவச்சிலையை மெஸ்ஸி காணொலி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து சால்ட்லேக் ஸ்டேடியத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த மைதானத்தில் வருகை தந்த மெஸ்ஸிக்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். இதன்போது மைதானதிற்கு வந்த மெஸ்ஸி வெகு சில நிமிடங்களே களத்தில் இருந்ததாகவும், அப்போதும் அவரை சரியாக பார்க்கக் கூட முடியாத வகையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை முழுவதுமாக சூழ்ந்துகொண்டதாகவும் ரசிகர்கள் கூறினர். இந்நிலையில் மெஸ்ஸியை காண இந்திய மதிப்பில் 5,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை நுழைவு சீட்டு பெற்று ரசிகர்கள் வந்துள்ள நிலையில் மைதானத்திற்கு வருகைதந்த மெஸ்ஸி உடனே அங்கிருந்து வெளியேறியமையினால் ரசிகர்கள் ஆத்திரமடைந்தனர். இதனால் மைதானத்தில் தண்ணீர் போத்தல்களை எறிந்தும் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையை அடித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுப்பட்டனர். இதனால் ரசிகர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில் மெஸ்ஸி கலந்துகொண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை பொலிஸார் கைது செய்த நிலையில் மேலும் டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பித் தருவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1456260- லண்டனில் சிறுமி துஷ்பிரயோக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை பிரஜை!
சிங்களவன் ஊரிலேயே காமம் தலைக்கு ஏறி, பாலியல் வன்புணர்வு செய்து கொண்டு திரிகின்ற இனம். இவர்களின் மதத் தலைவர்களான பிக்குகள் தான்… இவர்களுக்கு வழிகாட்டி. இவனை தூக்கி 25 வருசமாவது மறியலில் போடுங்க சார்.- இத்தாலி – இலங்கை இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
இத்தாலி – இலங்கை இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து! இத்தாலி மற்றும் இலங்கைக்கு இடையில் சாரதி அனுமதிப்பத்திரங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நேற்று (12) இத்தாலியின் ரோம் நகரில் கையெழுத்திடப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் இத்தாலிக்கான இலங்கைத் தூதுவர் சத்யா ரொட்ரிகோவும், இத்தாலி அரசாங்கம் சார்பில் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான பிரதி அமைச்சரும் அரச செயலாளருமான மரியா திரிபோடியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் காலாவதியாகியிருந்த நிலையில், அது முதல் இரு நாடுகளின் மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகாரிகளுக்கிடையில் ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது குறித்து இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து இக்கையெழுத்திடல் இடம்பெற்றுள்ளது. இந்தச் சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தத்தின் மூலம், இரு நாடுகளிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுக்கொண்ட நபர்கள் தமது செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ள வசதி அளிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முதன்முறையாக 2011 ஆம் ஆண்டு இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதோடு, 2021 இல் காலாவதியாவதற்கு முன்னதாக 2016 இல் புதுப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டதன் மூலம், குறித்த நாடுகளில் வசிக்கும் பிரஜைகள் 6 வருட காலப்பகுதிக்குள் எழுத்துமூல மற்றும் செய்முறைப் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் தமது சாரதி அனுமதிப்பத்திரத்தை மாற்றிக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டுகிறது. இந்த வசதியானது இத்தாலியில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். https://athavannews.com/2025/1456242- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சுமந்திரனின் வடையை அடிபட்டு தின்பவர்கள்… அரசியல் வறட்சி உள்ள சுத்த ஞானசூனியங்களாக மட்டுமே இருக்க முடியும். 😂- கருத்து படங்கள்
- டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
டிசம்பர், ஜனவரி மாதங்களில் மீண்டும் புயல் அபாயம் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு! வடகிழக்கு பருவப்பெயர்ச்சி காற்று வலுவடைந்துள்ள நிலையில், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை வடிவக் குழப்பங்கள், தாழ்முக்கங்கள் அல்லது புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார், கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி செயற்பட்ட விதம் குறித்த தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் ஊடாக இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, வட மாகாணத்தில் சாதாரண மழைவீழ்ச்சியை விட அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும், வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை அண்மித்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் சாதாரண மழைவீழ்ச்சியை விடக் குறைவான மழைவீழ்ச்சியே நிலவும் என அந்தத் தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் அல்லது புயல்கள் உருவாகும் பட்சத்தில், இந்த வானிலை முன்னறிவிப்புகளில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1456220- இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் !
இன்று முதல் அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் ! நாட்டை உலுக்கிய “டித்வா” புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கடந்த 2 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, அவசர அனர்த்த நிலைமை காரணமாக காணாமல் போன ஒருவரைப் பற்றி 2 வாரங்களுக்குப் பின்னரும் தகவல் கிடைக்கவில்லை என்றால், அவருக்கு அல்லது அவளுக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை காணாமல் போயுள்ள 203 நபர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈட்டுப் பணத்தை விரைவில் பெற்றுக்கொள்ளும் நோக்கில், இந்தச் சான்றிதழ்களை வழங்க அந்தத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கான தேவையான சட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த அனர்த்தம் காரணமாக நபர் ஒருவர், உறவினர் அல்லது நண்பர் காணாமல் போயுள்ளார் என்பதை உரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்தினால், அந்த மாவட்ட பிரதிப் பதிவாளருக்கு இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனர்த்தத்துக்கு உள்ளாகி காணாமல் போன நபர் தொடர்பில் ஆட்சேபனைகள் எழவில்லை என்றால், பிரதேச செயலாளரினால் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் விண்ணப்பத்தை, பதிவாளர் நாயகத்தினால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவிப் பதிவாளர் நாயகம் அங்கீகரிப்பார். இதேவேளை, மத்திய மாகாண மக்களுக்காக இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல், காணாமல் போனவர்களின் இறப்புச் சான்றிதழ் விநியோகித்தல் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் விசேட நடமாடும் சேவையொன்று இன்றும் (13) மற்றும் நாளையும் (14) நடைபெறுகின்றன. குறித்த சேவைகள் அனைத்தையும் அந்தச் சந்தர்ப்பத்திலேயே இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண பிரதிப் பதிவாளர் நாயகம் தரங்க சுபாஷினி தெரிவித்தார். சேதமடைந்த திருமண, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்குவதும் இந்த நடமாடும் சேவையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய இன்றையதினம் (13) நடமாடும் சேவையானது உடஹேன்தென்ன, இலக்கம் 1, தமிழ் மகா வித்தியாலயம், பரகல ஜனபதத்தில் காலை 9 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு – 0812224470 எனும் இலக்கத்திற்கு அழைக்குமாறும் நாளையதினம் (14) நடமாடும் சேவை தொலுவ பிரதேச செயலகத்தில் காலை 9 மணி முதல் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1456227- கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்
தாய்லாந்து-கம்போடியா நாடுகள் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் – அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு! தாய்லாந்து-கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது. இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. எல்லையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் எட்டு வீரர்கள் காயமடைந்தனர். பதிலுக்கு தாய்லாந்து ராணுவம் விமானப்படை மூலம் கம்போடியா மீது தாக்குதல் நடத்தியது. இன்னும் மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 1,100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிரீயா விஹார் கோவில் சேதம் அடைந்தது. இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன் மற்றும் கம்போடியா பிரதமர் ஹன் மானெட் ஆகியோருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மோதல் தொடர்பாக மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் உதவியுடன் ஆலோசனைநடத்தியதாகவும் இதன் பயனாக தாய்லாந்து- கம்போடியா நாடுகள் மீண்டும் போர் நிறுத்தம் செய்ய சம்மதித்துள்ளன என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிக்கையினூடாக தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1456214- வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வாயால், வடை சுடுவதில்…. சுமந்திரன் கில்லாடி. 😁 இப்பிடி இவர் சுட்ட வடைகள்… ஏராளம். 😂 அதை தின்னத்தான் ஆட்கள் கிடைக்குதில்லை. 🤣- யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது
அமரர் ரவிராஜ் ராஜ்கிரண் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரின் சிறுநீரகத்தை தானம் செய்ய சம்மதித்த பெற்றோருக்கு பாரட்டுக்கள்.- தமிழ்த்தேசிய அரசியலில் ஐக்கியம் – ஒற்றுமை – கூட்டணி – கூட்டமைப்பு
இது…. வர இருக்கும், மாகாண சபைத் தேர்தலுக்கு….. சுமந்திரன் தன்னை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்பதற்காக, ஏற்படுத்திய கூட்டணி. தேர்தலில் “செருப்படி” வாங்கிய பின்… இவர்கள் காணாமல் போய் விடுவார்கள். 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!
இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்! எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, போராட்டம் காரணமாக பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படடுள்ளது. நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மீனவ அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் இது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எதையும் மேற்கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரியே நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இன்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1456107- ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஹொக்கைடோவின் சில பகுதிகளுக்கும், அமோரி, இவாட் மற்றும் மியாகி மாகாணங்களின் கடற்கரைகளுக்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. இந்த ஆலோசனையின் கீழ் உள்ள பகுதிகளில் 1 மீட்டர் வரை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) எதிர்வு கூறியுள்ளது. திங்கட்கிழமை பிற்பகுதியில் அதே பகுதியில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20 கி.மீ ஆழத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.44 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர், வடக்கே ஹொக்கைடோ முதல் டோக்கியோவின் கிழக்கே உள்ள சிபா வரை பரந்த பகுதியில் வசிக்கும் மக்கள், ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பதால், எச்சரிக்கையாக இருக்குமாறு அரசாங்கம் ஒரு சிறப்பு ஆலோசனையை வெளியிட்டிருந்தது. https://athavannews.com/2025/1456094- “பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!
இவர்கள் செய்யும் சுகாதார கேடான, நரக வேலையால்... ஒருவரின் கண் பார்வை பறி போய் விட்டது. 😪- கருத்து படங்கள்
- யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !
யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில ! வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன. எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது. அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன. நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன? இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது. உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம். ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம். பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1455912- விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”
விரைவான அமெரிக்க விசாக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட “Trump Gold Card”. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் உலகில், உலகளாவிய திறமையாளர்களை ஈர்க்கவும், தக்கவைக்கவும், பணமாக்கவும் அமெரிக்கா எவ்வாறு செயற்படுகின்றது என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு வரையறுக்கப்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது. அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவில் வசிக்க விரைவான அனுமதியைப் பெறுவதற்கான பாதையை வழங்குவதற்காக, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் புதன்கிழமை தனது “ட்ரம்ப் தங்க அட்டை” (Trump Gold Card) விசா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் குறைந்தபட்சம் 1 மில்லியன் டொலர் (£750,000) செலுத்தக்கூடிய செல்வந்த வெளிநாட்டினருக்கு விரைவான அமெரிக்க விசாக்களை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. இது வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் வசிக்கவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது. ட்ரம்ப் தனது நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளை, விரைவான நாடுகடத்தல்கள் முதல் சட்டப்பூர்வ பாதைகளை கட்டுப்படுத்துவது வரை, தீவிரப்படுத்தி வரும் தருணத்தில் இந்த வெளியீடு வந்துள்ளது. தி கார்டியன் செய்தித்தாளின் கூற்றுப்படி, ட்ரம்ப் இந்த திட்டத்தை ஒரு பெரிய பொருளாதார வெற்றியாகக் பார்க்கிறார், இது “பல பில்லியன் டொலர்களை ” திரட்டக்கூடும் என்றும் கூறியுள்ளார். ட்ரம்பின் நிர்வாகம் குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பரந்த ஒடுக்குமுறையைத் தொடர்ந்துள்ளது. சட்டவிரோதமாக நாட்டில் இருந்த லட்சக்கணக்கான மக்களை நாடு கடத்தியுள்ளது மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1455937- கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை
கனடாவில் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை. கனடாவில் பெண் ஒருவரின் சடலத்தை புகைப்படம் எடுத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். வின்னிபெக் பொலிஸ் பிரிவில் 22 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு பொலிஸ் அதிகாரி, பணியில் இருந்தபோது இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது பணியில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்பு ஊதியமின்றி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கன்ஸ்டபிள் எல்ஸ்டன் போஸ்டாக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீன் பவேர்ஸ் தெரிவித்துள்ளார். போஸ்டாக் கடந்த மாதம் பல குற்றச்சாட்டுகளுக்கு, குறிப்பாக மனித உடலின் மரியாதையை இழிவாக்கிய குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். 2021ஆம் ஆண்டு ஒரு வீட்டில் ஏற்பட்ட திடீர் மரண சம்பவத்துக்குச் சென்று, பகுதியளவில் ஆடையுடன் இருந்த இறந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து, அதை இன்னொரு அதிகாரிக்கு அனுப்பியதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் இச்சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கேட்டுள்ளதாக காவல் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். போஸ்டாக் இன்னும் தண்டனைக்காக காத்திருக்கிறார்; மேலும் சில குற்றச்சாட்டுகளும் அவர்மீது நிலுவையில் உள்ளன. https://athavannews.com/2025/1455899- சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்! அரசாங்கத்திற்கு சொந்தமான சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி இலஞ்சம் பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்த நிலையில் உயிர்போகும்வரை தூக்கில் இடப்பட்டதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. சீனா ஹூவாரோங் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் துணை நிறுவனமாக ‘சீனா ஹூவாரோங் இன்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் செயற்பட்டு வருகின்றது. இதன் முன்னாள் அதிகாரியான பாய் தியான்ஹய் கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற அபவிருத்தி திட்டங்களின்போது, சுமார் 15.6 கோடி டெலர் மதிப்பிலான நிதியை இலஞ்சமாக பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழிக்கில் சந்தேக நபர் குற்றவாளினாக இனங்காணப்பட்ட நிலையில் நீதிமன்றம் மரண தண்டனை வித்தித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய நேற்றையதினம் சொத்து மேலாண்மை நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி துக்கில் இடப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த வழக்கில், தியான்ஜினில் உள்ள நீதிமன்றம் கடந்த மே மாதமே அவருக்கு மரணதண்டனை வித்தித்து தீர்ப்பளித்திருந்தது. எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக சந்தேக நபர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. எனினும் உயர்நீதிமன்றமும் மரணதண்டனையை உறுதி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று காலை பாய் தியான் ஹய், அவரது குடும்ப உறுப்பினர்களை கடைசியாக சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன் உயிர்போகும்வரை துக்கிலடப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1455853 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.