Everything posted by island
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
ஒம் கோசான்.இயக்கங்களின் கிளைகள் அமைப்பு ரீதியாக வளர்சசியடையாத காலகட்டம். ஒரு புளொட் உறுப்பினர் தனது இயக்கத்திற்கு நிதி சேகரித்தார். அதே வேளை புலிக்கு சேர்ததவரும் அந்த நகரத்துக்கு வந்து கூட்டம் வைத்தார். புலிக்கு காசு சேர்தவருக்கு இவர் ஊரிலேயே நெருங்கிய நண்பர். புலி உறுப்பினர் தூரம் காரணமாக அடிக்கடி வர முடியாத நிலை. எனவே ஏற்கனவே மக்களிடம் பேசி உறுதியளிக்கப்பட்ட பணத்தை சேர்க்க நம்பிக்கையான ஆள் தேவை. தனக்கு நம்பிக்கையான இந்த புளொட்உறுப்பினரிடம் உதவியை பெற்றார். இவரும் இரண்டு இயக்கத்துக்கும் நிதி சேர்தது புலிக்கு சேர்ந்த பணத்தை தனது நண்பரான புலி உறுப்பினருக்கும் , புளொட்டுக்கு சேர்ந்த பணத்தை தனது அமைப்புக்கும் அனுப்பினார். கணக்கு பார்த்து சரியாக அனுப்பினாரா அல்லது கணக்கு விட்டாரா நாமறியோம். 😂 அந்த நேர வேகத்தில் இது பற்றிய அக்கறையும் இல்லை.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
புளொட்டுக்கும், புலிக்கும் ஒரே ஆளே காசு சேர்த்ததும் ஒரு காலத்தில் இருந்தது கோசான். பகடிக்கு சொல்லவில்லை உண்மையில் நடந்தது.
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இது ஒருவரது கருத்து என்றால் அதை கணக்கெடுக்கவே தேவையில்லை. இது சிறு உதாரணம் மட்டுமே. அந்த கொலை நடந்த பின்னர் சமூக ஊடகங்களில் பெரும்பாலான தமிழ் மக்களின் கருத்துகள் இக்கொலைக்கு ஆதரவாகவே இருந்தன. இங்கு இணைத்த கருத்தை விட மோசமான பல கருத்துகளும் வந்திருந்தன. இப்போதும் அந்த சமூக ஊடகங்களை சென்று பார்கலாம்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
நீங்கள் கூறியவை பிற்காலங்களில் நடந்தவை. ஆரம்பத்தில் பல குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவற்றுக்கு எனது ஞாபகத்தை தவிர ஆவணங்கள் இல்லை. கோபு என்ற நபர் பல குற்றச்செயல்களுக்காக புலிகளால் கொல்லப்பட்டார். போயா என்ற நபரும் இதே காரணத்துக்காக ரெலோ அல்லது ரெலியால் முதல் முறை சுடப்பட்டு யாழ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன று இரவு ஆஸபத்திரிக்குள் நுளைந்து மீண்டும் சுட்டு கொல்லப்படார். இவர்கள் இருவருக்கும் அரசியல் தொடர்பு இருக்கவில்லை. நீங்கள் கேட்டதால் இதை பதிந்தேன். மற்றப்படி நான் கூற வந்த முக்கிய விடயம் இன்று மனித உரிமை, நீதிமன்றம், உலகில் துப்பாக்கி பாவிக்கும் புரொட்டோகோல் எப்படி என்றெல்லாம் முகநூல்களில் வகுப்பு எடுபவர்கள் எல்லோருமே இந்த கொலைகளையும் கடந்த வருடம் நடைபெற்ற மனைவியின் தலையை வெட்டிய குற்றத்தையும் ஒப்பிட்டு பாராட்டி எழுதியவர்கள் தான். அதுவே நான் கூற வந்த கருத்து. அதில் ஒரு முக நூல்க்கருத்து பின்வருமாறு இருந்தது. உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
இவையெல்லாம் முறையாக ஆவணப்படுத்தப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டதே எவருக்கும் தெரியாது எமது ஊரில் வீடு உடைத்து களவு செய்பவர் என ற குற்றச்சாட்டுகள் எழுதி அவர் மீது ஒட்டி கொலை செய்யப்பட்டார். சுட்டவரை கண்டவர்களும் உள்ளார்கள். சுட்டவரும் ஊராருக்கு அறிமுகம் ஆனவர்தான். ஆனால் அந்த நேரம் இவையெல்லாம் தவறோ சரியோ ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. 1983 -1985 ல் இவாறான கொலைகள் பல நடந்தன. இன்று பெயர் விபரங்கள் கூட ஆவணப்படுத்தப்படவில்லை. அவரவர் அந்தந்த ஊராருக்கு மட்டும் ஞாபகம் இருக்கும். 1986 என்று நினைக்கிறேன் ஜேர்மன் தொலைக்காட்சி ஒன்று ஒரு விவரணத்தில் இந்த செயற்பாட்டை ஆவணப்படமாக வெளியிட்டு கண்டித்திருந்தது.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
சென்ற வருடம் மனைவி மீது சந்தேகப்பட்டு அவரின் தலையை வெட்டிய வரை வீரத்தமிழன் என்று தமிழ் முக நூல்களில் பலர் எழுதினார்கள். செய்தி பின்னோட்டத்தில் பெரும்பாலானோர் அந்த கொலை செய்த கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கினார்கள். சிலர் ஒரு படி மேலே போய் தலைவன் வழி வந்த வீரத்தமிழன் இப்படித்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்று போற்றிப் புகழ்ந்தாரகள். இப்போது அதே நபர்களின் முகநூல்கள் அப்படியே பிளேட்டை மாற்றி அந்த 17 வயது சிறுவன் தப்புசெய்தாலும் இப்படி தண்டனை கொடுக்க கூடாது, நாட்டில் சட்டம் எதுக்கு இருக்கு, நீதி மன்றம் எதுக்கு இருக்கு இதென்ன காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் கெம்புகிறார்கள். கண்மூடித்தனமான ஒருதலைப்படச கொலைகளுக்கு அன்றும் இன்றும் வக்காலத்து வாங்கியவர்கள் வாங்குபவர்கள் எல்லாம் துப்பாக்கி பாவிப்பதற்கு உலகில் உள்ள புரொட்டகோல் பற்றி எல்லாம் வகுப்பு எடுக்கிறார்கள்.
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
பொலிசாரின் செயல் அத்து மீறல் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த சம்பவம் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படல் வேண்டும் இதுவே இனிமேல் இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க உதவும். ஒரு காலத்தில் கோழிக்கள்ளன், நகை களவெடுத்தான் என சிறு குற்றங்களுக்கெல்லாம் எந்த நம்பகமான விசாரணையும் இன்றி தான் தோன்றித தனமாக மின்கம்பங்களில் கட்டி படுகொலை செய்த காட்டுமிராண்டி தனம் போல் பொலிசார் செய்வது நியாயமாகாது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
தாங்களே கும்பலாக செய்தி என்ற பெயரில் உருட்டுகளும் செய்தி திரிப்புகளையும் தங்களுக்கு விருப்பமான் தலைப்புகளை இட்டு யுரூப், ரிக்ரொக், ஃபேஸ் புக் என்று சமூக ஊடகங்களில் பதிவேற்றுவது. பின்னர் அதையே கொண்டுவந்து ஆதாரம் என்பது. இப்பவ்வும் அந்தப் பழைய நினைப்பில். 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
சிறிமாவின் பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்திய விதம் விமர்சனத்துக்குரியது. பல பொருளாதார வல்லுனர்கள் இது பற்றி கூறியுள்ளார்கள். ஆனால், வடபகுதி விவசாயிகள் மட்டுமல்ல, அகில இலங்கை உள்ளூர் உற்பத்தியாளரும் இந்த பொருளாதாரக் கொள்கையால் நன்மையடைந்தனர். மக்கள் அன்றாட பாவனையில் இருந்த வெங்காயம், மிளகாய் ஆகியனவற்றை வட பகுதி விவசாயிகள் அதிகமாக உற்பத்தி செய்ததால் நல்வாய்பாக வட பகுதி விவசாயிகள் உடனடி நன்மையடைந்தனர். மற்றபடி, பாணுக்கு கியூவால் பாதிக்கப்படவர்கள் சிங்கள மக்கள் மட்டுமல்ல, யாழ்பாணம் உட்பட வட கிழக்கிலும் அதே நிலை தான். சடுதியான இறக்குமதி தடையையல் 1973 ன் இறுதியில் இருந்து குறுகிய காலத்திற்கே அது இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் அரச/ தனியார் துறை ஊழியர்கள். சுய தொழில் செய்வோர் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், . 1974 ன் நடுப்பகுதியின் பின் நிலமை சற்று சீராகியது. ஒட்டு மொத்தமாக உள்ளூர் உற்பத்திகள் அதிகரித்தன. பல தரவை நிலங்கள் விவசாய நிலங்களாகின. படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டதின் மூலம் மக்களுக்கு வன்னியில் அரசால் காணிகள் வழங்கப்பட்டது அந்த காலத்தில் தான். ஆனால் திட்டத்தின் எதிர்பார்ப்பின் அளவுக்கு யாழ் மக்கள் தமது சோம்பேறித்தனத்தால் அங்கு செல்லவில்லை என்பது வேறு விடயம். எந்த ஒரு பொருளாதார திட்டமும் அதன் பலனை கொடுக்க சிறிது காலம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் இலங்கை போன்ற நாடுகளில் வழமையான பொதுத்துறை ஊழல் இந்த பொருளாதார கொள்கை நடைமுறை படுத்தலில் பாரிய சிக்கல்களை உருவாக்கியது. அரச துறையில் ஊழல்கள் மலிந்தது இத்திட்டதை பெரிதும் பாதித்தது. ஊழலை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியது. ஆளும் கட்சியினரே பல ஊழல்களை செய்தனர். இது பல எதிர்மறையான அனுபவங்களை மக்களுக்கு கொடுத்தது. இதன் பலனை ஐக்கிய தேசியக்கட்சி 1977 ல் அறுவடை செய்தது. மற்றப்படி நான் சிறிமா ஆட்சியை அப்படியே முழுமையாக ஆதரித்து எப்போதுமே கருத்திடவில்லை. எந்த ஆட்சி என்றாலும் அவர்களால் தமிழருக்கு நன்மையான திட்டங்கள் வரும் போது தந்திரோபாய ரீதியில் கண்டும் காணாமல் அனுமதிக்க வேண்டிய தமிழரசு எல்லா திட்டதையும் மூர்க்கமாக தனது அரசியல் பிழைப்புக்காக எதித்தது. அதற்கு வழமைபோல் பல சொத்தைக் காரணங்களை தூக்கி பிடித்து உணர்சசி அரசியலை மட்டும் செய்தது. அதைத் தவறு என்று குறிப்பிட்டதை தூக்கிப் பிடித்து நான் சிறிமாவை ஒரேயடியாக புகழ்ந்ததாக மடைமாற்றுவது தமிழ் தேசியவாதிகளின் இயல்பு தான் என்பதால் அதில் ஒன்றும் எனக்கு ஆச்சரியம் இல்லை. மக்கள் நன்றியறிதலுக்காக வாக்களித்ததாக கூறியவுடன் நன்றி இலங்கை தமிழரின் இரத்தத்தில் ஊறியது DNA யில் ஊறியது என்று வெற்றுப் பெருமை மார்தட்ட வேண்டாம். இப்படியான வெற்றுப் பெருமை மார்தட்டல்கள் தான் தமிழரை அழித்து இந்த நிலைக்கு கொண்டு வந்தது. கொப்பேகடுவ்வுக்கு வடபகுதி மக்கள் வாக்களித்தது நன்றியறிதல் மட்டுமல்ல மீண்டும் சு. க ஆட்சிக்கு வந்தால் மீண்டும் இறக்குமதி தடை வரும் நாம் நன்மையடையலாம் என்ற சுய நல எதிர்பார்ப்பினாலும் தான். அதில் தவறில்லை சாதாரண மக்கள் அரசிடம் தமக்கு நன்மைகளை எதிர்பார்த்து வாக்களிப்பது இயல்பானது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
உங்கள் கருத்துகளுக்கு நன்றி கோசான். ஒரு விடயத்தை மட்டும் சுட்டிக் காட்ட விழைகிறேன். தமிழ்த் தேசிய போர்வையை போர்ததியதன் மூலம் தமது வண்டவாளங்களை அந்த போர்வைக்குள் மறைத்து, நல்ல தமிழன், நல்ல அரசியல்வாதி, நல்ல மனிதன் என்ற பெயரை பெற்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகளில் பலர் உண்டு. அன்றும் இன்றும் அது தான் உண்மை. எவ்வளவு இறுக அந்த போர்வையை போர்கிறர்களோ அந்தளவுக்கு அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறாது காப்பாற்றப்படும் கேடயமாக அது செயற்படும் என்பதை புரிந்தவர்கள் அவர்கள். உதாரணங்கள் தந்தால் அதுவே நீண்ட விவாதம் ஆகும் என்பதால் தவிர்ககிறேன். டக்லஸ் நீண்ட காலம் அரசாங்கத்தில் அமைசராக இருந்தாரே தமிழ் மக்கள் சார்பாக செயற்பட்டு தவிர ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நன்மை பயக்கும் ஏதாவது திட்டங்கள் ஏதாவது செய்தாரா? எனது பார்வையில் அப்படி இல்லை. ஒரு வேளை எனது கண்ணுக்கு அது தெரியவில்லையோ? அவ்வாறு செய்தார் என்பதை நீங்கள் நிரூபித்தால் அவரது அந்த செயலை நான் ஆதரித்து எழுதுவேன். (கவனிக்க அந்த செயலை மட்டும்)
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நீ தமிழன் என்றால் நான் கூறும் தமிழ் தேசிய கோட்பாட்டையும் அதை நான் செயற்படுத்துவதையும் அந்த செயற்பாட்டையும் அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றே தீவிர தமிழ் தேசியம் பேசுவோர் எதிர் பார்கின்றனர். அவரகள் உரு வந்து ஆடுவதை சாந்தப்படுத்தி நல்வழிப்படுத்த கோசான் சிலவற்றை சிலவற்றை சொல்ல வேண்டும் தானே! அதில் தவறில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
கோசான், “போராடி இருக்கவே தேவையில்லை, இலங்கை தேசியத்தைள் கரையலாம்”, என்பது எனது கருத்து அல்ல. அப்படி மக்களை நினைக்க வைத்தவர்கள் இந்த தீவிர தமிழ் தேசியர்களே. நடைமுறைச் சாத்தியமற்றதை வேண்டி பிடிவாதம் பிடித்து பெறக்கூடியவற்றை தொடர்ந்து இழப்பது குறித்தே எனது கருத்துகளை தெரிவித்திருந்தேன். 2002 ல் இருந்து அரசியல் போராளிகள் ஐரோப்பா முழுவதும் செல்வதற்கும் உலக நாடுகளின் ராஜதந்திரிகளை சந்தித்து உரையாடி எமது பக்க நியாங்களை எடுத்து கூறவும் நல்லுறவுகளை வளர்தது லொபி செய்யவும் அதன் மூலம் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவதற்கான சிறந்த வாய்பபு கிடைத்தது. நோர்வே அநுசணை விசா கிடைத்து ஐரோப்பா வந்தவர்கள் எல்லோரும் அடுத்த யுத்தத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் மக்களை சந்திப்புகளில் மட்டுமே அதிக கவனத்தையும் நேரத்தையும் செலவிட்டிருந்தனர். மக்களின் ஆவலை தூண்ட யுத்தக் கதைகளை சுவார்சியமாக கூறி மக்களை உசுபேற்றி விட்டு சென்றனர். இது தமிழ் தேசியத்தை வளர்ததா? அல்லது அதற்கு ஆப்பக அமைந்ததா என்பதை உங்கள் சிந்தனைக்கு விடுகிறேன். துரையப்பா மீதும் அவரது அரசியல் மீதும் எவர் அவதூறுகளை சுமத்தினாலும் விமர்சனங்களை வைத்தாலும் யாழ்பாணத்திற்கு அவரைப் போல ஒரு சிறந்த மேயர் இதுவரை கிடைக்கவில்லை என்பது எவரலும் மறுக்க முடியாது. ஆளும் கட்சியை பகீரங்கமாக ஆதரித்தார் என்பதே அவர் மீதான துரோகி பட்டம். ஆனால் இன்று ஆளும் கட்சியில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்று அவர்களைத் துரோகிகள் என்று மக்களிடம் கூற முடியத கையறு நிலை. அத்துடன் மாநகர சபைக் கட்டத்தினுள் ஒரு சிறிய அறையில் இருந்த நூல் நிலையத்தை மாற்றி யாழ்பாணத்திற்கு ஒரு அழகிய நூலகம் கட்டம் தேவை என்று 1050 களின் நடுப்பகுதியிலேயே பேரவா கொண்டு நூல்நிலைய கட்டட நிர்மாணிப்பில் key role ஆக செயற்பட்டவர் அவராகும் . 1950 களில் வெளிவந்த பத்திரிகைகளை பார்ததால் அவரது அந்த பங்களிப்பு தெரியும். நூல் நிலைய எரிப்பை வைத்து அரசியல் செய்த தேசியர்கள் அவரது அந்த பங்களிப்பை கபடத்தனமாக மறைத்து அவர் மீது அவதூறுகளையே பொழிந்தனர். அது தான் தமிழரசுக்கட்சியின் அரசியல். காரணம் அவர் இருந்தால் யாழ்பாண தொகுதி கிடைக்காது என்ற பயமே.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
நான் எந்த பதிவிலும் ரஞ்சித்துடன் தனிப்பட்ட முறையில் மல்லுக்கட்டவில்லை. அவருடன் தனிப்பட பகையும் கிடையாது. அவரது கருத்துகளை விமர்சிக்கும் போது அவர் கோபப்படுகிறார். பொதுவெளியில் இங்கு வைக்கப்படும் கருத்துக்களுக்கு பதிலளிக்கிறேன். விமர்சனங்களை வைக்கிறேன், கேள்விகள் கேட்கிறேன். ரஞ்சித் இங்கு பொது வெளியில் வரலாறுகள் என்ற பெயரில் ஒருதலைப்பட்ச தகவல்களை அடிப்படையாக கொண்டு அவற்றை முழுமையான உண்மை போல் இங்கு எழுதும் போது அது தொடர்பாக கேள்வி கேட்க கூடாதா? பொது வெளியில் எழுதும் எவரும் இவ்வாறான கருத்தியல் விவாதங்களுக்கு தயாராகவே இருக்க வேண்டும். அவரது கருத்துகள் புனிதமானவை, அவற்றுக்கு எவரும் விமர்சனம் வைக்க கூடாது என்பது அவரது கொள்கையாக இருக்கலாம். அதற்கு நான் கட்டுபட முடியாது சிறிமா பண்டாரநாயக்காவை புகழந்தேனாம். அதை ஒரு குற்றமாம். சிறிமாவின் உள்ளூர் உற்பதி கொள்கையை யாழ்பாண விவசாயிகள் பாரிய நன்மையடைந்ததும், யாழ்பாண விவசாயிகளின் குடிசை வீடுகள் அவரது காலத்தில் கல்வீடுகளானதும் அதற்காக அவர்கள் அவரை ஒட்டு மொத்தமாக புகழ்ந்ததும் அந்த நன்றியறிதலுக்காக 1982 ல் அவரது மாமன் ஹெக்டர் கொப்பேகடுவவுக்கு தன்னிச்சையாக பெருவாரியாக வாக்களித்தது அனைவருக்கும் தெரிந்த விடயம். அத்தனை யாழ் விவசாயிகள் மீதும் குற்றம் சாட்டுவாரா? யாழ் பலகலைகழகத்தை சிறிமாவோ திறந்த போது முழுமையாக எதிர்த்தது தமிழரசுக்கட்சி தனது அரசி யல் ஆதாயத்துக்காக. தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி ஒன்றும் புனிதமானதோ விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதோ அல்ல. பிரச்சனைகளை தீர்வு காண்பதை விட அதை வைத்து காலாகாலமாக அரசியல் செயத்து தமிழரசுக்கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் மீது விமர்சனம் செய்யக்கூடாதா? தேசியத்துக்கு எதிரானவனாம். அடுத்த குற்றச்சாட்டு. என்னை பொறுத்தவரை தமிழ் தேசியம் என்றால் தமிழரின் அரசியல் பலத்தை உயர்ததுவது, கல்வி/ தொழில்நுடப/ வர்த்தக / பொருளாதார பலத்தை உயர்ததுவது, வட கிழக்கில் தமிழரின் சனத்தொகையை குறையவிடது காப்பது. இவற்றை ஜனநாயக நீரோட்டதில் இணைந்து ஆளும் அரசுகளோடு தந்திரோ உறவுகளோடாவது மேற்கொள்ளுவது இன்றைய அவசர தேவை. அதை விடுத்து உசுப்பேற்றுவது, சாத்தியமற்ற வெற்று கோசங்களை வைத்து வினைதிறனற்ற, மக்களுக்கு உபயோகமற்ற அரசியல் நடத்துவது, அதை தூண்டுவிடும் புலம்பெயர் தேசிய வியாபாரிகளும் செய்வது தமிழ் தேசியம் என்றால் அதற்கு நான் எதிரானவன் தான். அது வெளிபடையாக கூறுகிறேன். அந்த கருத்துகளை எதிர் கொள்ள இயலாமல் துரோகி, கோடரிக்காம்பு, இழிந்த இனத்தவர் போன்றவற்றையே அவர் போன்றவர்களால் கூற முடியும். ஏனென்றால் அவர்கள் கற்ற அரசியல் என்பது எதிர் கருத்துடையவர்களை வன்முறை மூலம் அகற்று அது முடியாத போது மீது அவதூறு கூறி அவரை அகற்று என்பதே.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இந்த திரி தொடங்கியதில் இருந்து இறுதியுத்த மக்கள் அழிவுக்கு சம்பந்தர் மட்டும் தான் முதன்மை காரணிபோல் வழமையான பாணியில் தேசியர்களால் திரிக்கப்பட்டது. தம்மால் ஏன்ற்கனவே பரப்ப்பட்ட உலக மகா பொய்களை எல்லாம் புலவர் போன்றவர்கள் இங்கு கொண்டுவந்து கொட்டினார்கள். நீங்களும் கனடாவில் இருந்து ஒரு சென்றிமென்ற் நடிகர் தத்துரூபமாக நடித்ததை இங்கு கொண்டுவந்து இணைத்தீர்கள். அப்போதேல்லாம் அது 2009 ல் நடந்த சம்பவங்கள் என்று உங்களுக்கு தெரியவில்லையா? தெரிந்தும் அவற்றை எல்லாம் ரசித்த உங்களால் அந்த உருட்டுகளை உடைந்து தர்ககரீதியாக கேள்விகளை பல உறவுகள் கேட்க தொடங்கியதும், ஏன் 2009 ல் நிற்கின்றீர்கள் அதற்கு பின்னரான காலத்துக்கு வாருங்கள் என்று புலம்புகினீர்கள். ஏற்கனவே இருந்த அரசியல் பலத்தையும் சிதைத்து சுக்குநூறாக்கி விட்டு ஒன்றுமே இல்லாத ஒரு இருண்ட காலத்தை உருவாக்கி விட்டுருப்பதே 2009 ல் இருந்து இன்று வரை உள்ள நிலை. ஆயுத போர் வரும்வரை தமிழரின் சனத்தொகை அதிகரித்து சென்றது. ஆயுதப் போராட்டம் அதை அழித்தது. இப்போது மீண்டும் வளர்சியடைகிறது. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலையில் தமிழரை விட்டு சென்ற பிறகு திரும்பவும் அரசியல்ப் பலம் பெறுவது என்பது எனது, உங்களது வாழ்ககைக்காலத்தில் காலத்தில் நடக்கப்போவதில்லை. எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கி புகழ்ந்து பக்கம்பக்கமாக எழுதுவது, அதில் ஒருவன் தவறுகளை சுட்டிக்காட்ட வெளிக்கிட்டால் ஐயோ! பழசை கிளறுறான், மாவீரரை கொச்சை படுத்தி போட்டான் என்று துள்ளி குதிக்கிறது. போராளிகளின் தியாகத்தை உபயோகித்து தமது தரப்பு அரசியல் தவறுகளை மறைத்து அடுத்தவர் மீது பழி போடுவது . இந்த அயோக்கிய அரசியல் தமிழருக்கு விடிவை தராது என்று தெரிந்தும் அதை செய்யும் நீங்கள் எப்படி தாயகத்தில் தமிழரின் அரசியல் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பீர்கள்? கோசான், Multiple choice கேள்விகளில் நான்கு பதில்களில் இறுதியாக தேர்வாக “மேற்கூறிய எவையும் இல்லை” என்று ஒரு தேர்வு இருக்கும். நீங்கள் ஏன் அதை இங்கு சேர்ககவில்லை. 😂
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
Free size என்று ஆடை வடிவமைப்பில் தைக்கப்பட்ட ஆடையை நீங்களாக அணிந்து, அடடா எனக்காக என்னை அளவெடுத்து தைக்கப்பட்டது என்று அடம் பிடிப்பது போல் உள்ளது உங்கள் கருத்து.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
ஒருவர் எழுதும் எழுத்தை வைத்து அவரை இனத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் இன்றி, அல்லது வேண்டுமென்றே யாரோ ஒரு அனாமதேயம் பரப்பிய வதந்தியை வைத்து என்னை வேற்று இனம் என்று கதைகட்டி வசைபாடுபவர்களால் எழுதப்படும் ஒருதலைப்பட்ச வரலாறுகள் எவ்வாறான பல வதந்திகளை வைத்து கதை கட்டி இருப்பார் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள உங்களது இந்த பதிவு சாட்சி
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
எல்லாம் முடிந்துவிட்ட பிறகு அதாவது மே மாதம் 12 திகதி கூட பெரும் தொகைப் பணம் தேசியத்தை நேசித்த மக்களை தவறாக வழிநடத்தி உசுப்பேற்றி அவர்கள் பெயரில் வங்கியில் பெறப்பட்டு அந்த மில்லியன் கணக்கான ஈரோ பணம் முதலிடப்பட்டதும் வியாபாரத்தில் தானே. மக்கள் அழிவில் வியாபாரம் செய்தவர்கள் எல்லாம் போராட்டத்தை உபயோகித்து தான் செய்தார்கள். அவர்களை பற்றி பேசினால் அதில் எங்கிருந்து தனிநபர் தாக்குதல் வருகிறது?
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
சொல்லுறது புரியாமல் விட்டால் அப்படி தான் இருக்கும். 😂 உங்களுக்கு இனா ஈயன்னக்கு அங்கால கற்பிக்கும் கற்பித்தல் திறமை எனக்கில்லை.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
The great explanation. சிக்கலான விடயங்களை மற்றயவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் கூறும் திறமையில் உங்களுக்கு நிகர் நீங்களே என்று கூறுமளவுக்கு பொருத்தமான உதாரணங்களுடன் தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி . இதைக் கூட புரியவில்லை என்று கூறுபவர்கள் நடிகர் திலகங்களே.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம்
அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?
-
தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்
எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
2009 ஆரம்பத்தில் இருந்தே இணைத்தலைமை நாடுகள் உட்பட உலக நாடுகள் எல்லாமே பலதடவைகள் கேட்டது, புலிகள் ஆயுதங்களை கையளித்து உடனடியாக பேச்சுவார்ததைக்கு திரும்புவது மட்டுமே பாரிய மக்கள் அழிவை தடுக்கும் வழி என்பதையே. அது சரியா பிழையா என்பதற்கப்பால் இணைத்தலைமை நாடுகள் புலிகளிடம் இதையே தொடர்ந்து வலியுறுத்தின அதை மேற் கொள்ள புலிகள் தயாராக இல்லாதபோது உங்கள் சம்பந்தர் என்ன எவர் என்னதான் சூட்சுமத்தை கையாண்டாலும் யுத்தம் நிறுத்தப்பட்டிருக்காது என்பதை புரிந்து கொள்ள அது ஒன்றும் சிக்கலான விடயம் அல்ல. சம்பந்தரின் தரகு இல்லாமலேயே புலிகளால் இதை நேரடியாகச் செய்திருக்க முடியும். நாம் ஆயுதங்களை நிரந்தரமாக கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்ப தயார் என ஒரு பகீரங்க அறிக்கையை புலிகள் விட்டிருந்தாலேயே போதும் யுத்தம் நிறுத்தப்பட்டு மக்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். புலம் பெயர்ந்த நாடுகளில் சாதாரண மக்கள் எல்லாம் இராப்பகலாக தமது உறவுகளை காப்பாற்ற ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டிருந்தாலும், அந்த ஆர்பாட்டங்களை ஒழுங்கு செய்த புலிகளின பிரதிநிதிகள் அந்த ஆர்பாட்டங்களை மக்களின் ஆர்பாட்டங்களாக காட்டாமல் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் என்ற தோற்றபாட்டையே சர்வதேசத்திற்கு காண்பித்திருந்ததையும் இங்கு நினைவிற் கொள்க. இத்தனை தவறுகளும் சேர்த்தே மக்களை அழித்திருக்க நீங்களோ முழுப்பழியையும் சம்பந்தர் என்ற தனி நபர் மீது போட்டு பொறுப்பானவர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றீர்கள். ஆயுதங்களை ஒப்படைக்க கேட்பதும் ஆயுத போரை கைவிடுமாறு கேட்டதும் நியாயமற்ற கோரிக்கை இனத்தின் தன்மானப்பிரச்சனை என்றும், அப்படி செய்ய முடியாது என்று நீங்கள் கூறுவீர்களானால், கடைசியில் மே மாதம் அதை தானே செய்தீர்கள். அதை ஜனவரியில் செய்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம் அல்லவா!