Everything posted by island
- IMG_6134.jpeg
- IMG_6133.jpeg
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
யாயினி, பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை மக்கள் அனுப்புவது மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கே. ஆனால், அரச்சனா உட்பட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் பாராளுமன்ற சிறப்புரிமையை பாவித்து செய்வது, அடுத்த தேர்தலுக்கான தமது சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மட்டுமே. தான் இப்படிக் குரைப்பதால் இந்த பிரச்சனை மேலும் பற்றியெரிந்து, தமிழ்மக்களுக்கே அது பாதிப்பை உண்டாக்குமே தவிர பிரச்சனை தீரப்போவதில்லை என்பது, அர்சசனாவுக்கு நன்கு தெரியும். அப்படி பிரச்சனை மேலும் பற்றி எரிந்தால், அதை இன்னும் தனது அரசியல் நலன்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம் என்பதும் அரச்சனாவுக்கு தெரியும். அதனால் மற்றய தமிழ் பாராளுமன்ற உறுபினர்களை போல் பண்பாக உரையாற்றாமல் தான் இப்படி நாய் போல் குரைப்பது பிரச்சனையை மேலும் அதிகரித்தாலும், தனக்கு மற்றயவர்களை விட வாக்குகளை அதிகரிக்க வைக்கும், என்று அவர் நம்புகிறார். பண்பற்று பேசுபவர்களை ரசிக்கும் கூட்டம் சமூகவலைத்தளங்களில் இருப்பதை துல்லியமாக அறிந்து அரசியலுக்கு வந்தவர் அவர். வைத்தியத்துறையில் தன்னால் மிளிர முடியாது அந்தளவுக்கு அந்த துறையில் தனக்கு அறிவில்லை என்பதை உணர்ந்து அடுத்தவனை வித்தியாசமாக பேக்காட்டி வாழலாம் என்பதை துல்லியமாக கணிப்பிட்ட திறமை உடைய அர்சசனா உண்மையில் பாராட்டுக்குரியவர்தான். @Justin கூறியது போல் பாராளுமன்றத்துக்கு வெளியே பம்மிக்கொண்டு அடக்கி வாசித்து தனது பதவியை காப்பாற்றிகொள்ளவும் அர்சசனாவுக்கு நன்கு தெரியும். தனது அப்பா தமிழீழ காவற்துறையில் உயர் அதிகாரி என்றும், ஜேர்மனியில் இருந்து தேசியத்தலைவரின் கொள்கைகளின் பார் ஈர்ககப்பட்டு இங்கு தாயக பணி புரிய வந்ததாகவும் தமிழ் சனலில் கூறிவிட்டு, அதே மாதமே( அது போன மாசம் என்று சொல்லவேண்டிய தேவையே இருக்கவில்லை) சிங்கள சனலில் பல்டியடித்து அப்பா வேலையில்லாமல் கஷரப்பட்டதால் புலிகளின் பொலிசில் கடமையாற்ற வேண்டிய தேவை வந்ததே தவிர அவர்களது கொள்கைகளில் அப்பாவுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என பேட்டியளித்த பின்பும் தனக்கு வாக்களிக்கும் மென்டல்கள் கணிசமான அளவில் இருப்பதை அனுபவத்தில் உணர்ந்தவர் அவர். இருப்பினும், 1970/80 களின் இருந்த இளம் சமுதாயம் போல் இப்படியான அரசியல் சுயநலமிகளின் பேச்சில் மயங்கி தமது வாழ்வைத் தொலைக்காமல், இவர்களின் அயோக்கியத்தனமான அரசியலை திரும்பி கூட பார்ககாமல் தாமுண்டு தமது கல்வி, தமது உழைப்பு , தமது career என்று தமது வாழ்வை அமைக்க விரும்பும் அதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணிசமான இளம் சந்ததி தாயகத்தில் தற்போது இருப்பது ஆறுதலான, தமிழர் வாழ்வில் நம்பிக்கையளிக்க கூடிய விடயம்.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.
-
திருகோணமலை - அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..!
ஶ்ரீலங்கா பாராளுமன்றத்தில் பிரபாகரன் என் தலைவன் என்று வீர முழக்கமிடும் அர்ச்சனா பிரான்ஸ் வந்த போது தான் நடத்திய கூட்டதிற்கு தயவு செய்து தலைவர் படங்களையோ புலிக் கொடிகளையோ கொண்டு வரவேண்டாம் என்று கெஞ்சி கெஞ்சி மக்களிடன் வேண்டு கோள் விடுத்தது ஏன்? யாருகாவது தெரியுமா?
-
பாடசாலை மாணவர்களை சபரிமலை புனித யாத்திரைக்கு அனுப்பும் பெற்றோர்கள், குருசாமிகளின் கவனத்துக்கு...
எங்கெல்லாம் பணவசதி பெருகிய மக்களும் அறியாமையும் சேர்ந்து தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் ஐயப்பன் மட்டுமல்ல எல்லா சாமிகளும் எழுந்தருளுவார்கள்
-
தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்
தீர்வுக்கு வழி என்னவென்றால், டில்கோவின் நாலு பெக் ஒடர் பண்ணி அடிசிட்டு படுக்கிறது மட்டும் தான். இதில் கலந்து கொண்டவர்களில் பலர் அதைத் தான் செய்திருப்பர். தீர்வு கிடைத்த மகிழ்ச்சியுடன் மாலையில் வீட்டுக்கு சென்றிருப்பர்.
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
அப்படி ஒன்றும் பிறக்க தேவையில்லை. சாதாரண நாய், பூனைக்கு இருக்கும் அறிவுடனாவது ஒரு தலைமை பிறந்தால் அது போதும். 😂
-
மன்னிப்புக் கோரல் எல்லோருக்கும் பொதுவானதுதானா?
தம்மை விட பெரும்பான்மையாக உள்ள சிங்களவரோடும் ஒத்து போகமுடியவல்லை. தம்மை விட சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம் மக்களோடும் ஒத்து போக முடியவில்லை. தமக்குள் இருக்கும் கிறிஸ்தவர்களுடனும் மதம் மாற்றுகிறான் என்று இடைக்கிடை பாய்ச்சல். பக்கது நாடு இந்தியாவுடனும் தந்திரோயபாய ரீதியிலாவது நட்புடன் இருக்க முடியவில்லை. சர்வதேசத்தில் சக்திவாய்ந்த நாடுகளான மேற்குலகோடும் முரண்டு பிடி. யாராவது தமிழருக்குள் சற்று moderate ஆக சிந்தித்தாலும் அவர்களுக்கு துரோகி என்று கூறி பழி போட்டு ஒதுக்கல். இப்படியான குண்டு சட்டிக்குள் குதிரையோட்டும் குறுந்தேசியவாதம் என்றுமே வெற்றி பெறப்போவதில்லை.
-
மாமனிதர் நடராஜா ரவிராஜ் நினைவு தினம்.
மாமனிதர் ரவிராஜுக்கு நினைவு வணக்கம். சிறந்த ஆற்றல் உள்ள ரவிராஜ் போன்றவர்கள் தமிழர் அரசியலுக்கும் தலைமை வகிக்க தகுதியானவர். அன்றைய பேச்சுவார்ததை குழுவில் இவர் போன்றவர்கள் திரு அன்ரன் பாலசிங்கத்தோடு இணைந்து அவருக்கு பலம் சேர்த்திருந்தால், பேச்சுவாத்தை முடிவுகளை எடுக்கும் குழுவில் அங்கம் வகித்து பேச்சுவார்ததை முன்னேற்றம் காண வாய்புகள் இருந்திருக்கும். உலகளாவிய அரசியல் பாரவை கொண்ட இவர் போன்றவர்கள் வெறும் பிரச்சாரத்துக்கு பயன்பட்டனே தவிர இவர்களது அரசியல் ஆற்றல்கள் பயன்படுத்தப் படவில்லை. இவரது பங்குபற்றுதல் தமிழர் தரப்பின் தவறான அரசியல் தீர்மானங்களை தடுத்து நிறுத்த உதவியிருக்கும். 1998 ல் மேயர் சிவபாலன் விடுதலைப்புலிகளின் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட வேளையில் உதவி மேயராக இருந்த ரவிராஜ். அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் அதிஷ்ரவசமாக தப்பினார். அன்று கொல்லப்பட்டிருந்தால் மாமனிதர் விருது கிடைத்திருக்காது. துரோகி என்ற பட்டத்துடன் இன்று மறக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆகியிருப்பார். ஆனால் அவரது அதிஷரம் அவர் இன்று மாமனிதர். தமிழர் அரசியலில் துரோகிக்கும் தியாகிக்கும் நூலிழை தான் வித்தியாசம். அவரவர் அதிஷரமும் அடங்கியுள்ளது.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
பொதுவாக ஆளும்கட்சியிடம் இருந்து மக்கள் எதிர்பார்ககும் அனுகூலங்களையே கூறினேன். அது பொதுவான அனுகூலங்களாகவும் இருக்கலாம் தனிப்பட்ட அனுகூலங்களாகவும் இருக்கலாம். தீவிர தமிழ் தேசியம் பேசி வயிறு வளர்ககும் பல அரசியல்வாதிகள் புலம் பெயர் தமிழ் தேசியர்கள் கூட கூட தமது சொந்த நலன்கள் என்று வரும் போது ஆளும்கட்சியுடன் நல்லுறவை பேணி தமது நலன்களை காப்பாற்றிக் கொள்ளும் போது சாமான்ய மக்கள் அப்படி செய்வதில் தவறில்லை.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
போராட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு சிறிய தவறை சுட்டிக்காட்டினலே போதும் உடனே, போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார்கள் மாவீரர்களை கொச்சைப்படுத்தி விட்டார்கள் என்று மூக்கால் அழுவதே வேலையாகிவிட்டது. 15 வருடத்திற்கு மேலாகிற்று ஆனால் இவர்கள் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை. தொடர்ந்து தோல்வி பாதையில் வெற்றி நடை போடுவதும் ஒரு சுகம் தான். என்ன சுகம்! இந்த சுகம்!
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
குமாரசாமி, அது தான் தெளிவாக கூறினேன் அரசியல் ரீதியான இனவாதம் என்பதை. இவ்வாறான இனவாதம் உருவாவதற்கு மற்றய இனம் தொடர்பான அச்ச நிலையை அரசியல்வாதிகள் அல்லது ஊடகங்கள் மேற்கொள்ளவது முக்கிய காரணம். ஶ்ரீலங்காவில் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தொடர்பான அச்சநிலை என்பது அப்படி ஊட்டப்பட்டது. ஆனால், சமூக ரீதியான இனபேதம் என்பது நாம் மேலானவர்கள் என்ற நினைப்பில் மற்றய இனங்களை கீழானவர்கள் என்ற கற்பிதத்தில் ஏற்படும் இனபேதம். அப்படியான இனவாதம் சிங்கள மக்களிடம் இல்லை என்பதை அவர்களுடன் தனிப்பட பழகும் போது உணர்ந்து கொள்ளலாம். தமிழர்கள் சிங்களக் கட்சிகளுக்கு வாக்களிப்பது அரசியல் அனுகூலங்களை நோக்கியதே என்பது வெளிப்படையானது. சிங்கள கட்சி என்பதை விட ஆளும் கட்சி என்பதே உண்மை. தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை அல்லது சுயாட்சியை வெளிப்படையாக ஆதரித்த எந்த சிங்களக் கட்சிக்கும் தமிழர்கள் அடையாளத்திற்காக கூட வாக்களித்தில்லை. உதாரணமாக 1982 ஜனாதிபதி தேர்தலில்ல நவ சமாஜக்கட்சி தமிழரின் சுயநிர்ணய கோரிக்கையை வெளிபடையாக ஆதரித்தது. ஆனால் ஜேஆர் அதை விட பல மடங்கு அதிக வாக்குகளை யாழ்பாணத்தில் பெற்றார். 1999 ல் பலமாக தமிழர் தரப்பால் விமர்சிக்கபட்டசந்திரிகா கணிசமான வாக்குகளைப் பெற்றார். கடந்த தேர்தலில் கூட தமிழ் மக்களின் சுயாட்சி அலகுகளை ஆதரித்த மக்கள் போராட்ட முண்ணணிக்கு வாக்களிக்காமல் என் பி பி கே மக்கள் வாக்களித்தனர். இந்த நிலையில் நீங்கள் தமிழர் பிரதேச தேர்தல் வாக்களிப்பை இங்கு உதாரணத்திற்கு எடுத்தது தவறானது.
-
முஸ்லீம்கள் மீது இனச்சுத்திகரிப்பு இடம்பெறவில்லை; போராட்டத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்! - சி.சிவமோகன்
நீங்கள் என்னதான் இவ்வாறான கேலிகள் மூலம் உண்மைகளை மறைக்க முயன்றாலும் உண்மை என்னவென்றால் ஶ்ரீலங்காவில் சிங்களவரின் இனபாகுபாடு என்பது அரசியல் ரீதியானது. அரசியல்வாதிகளால் உருவாக்கப்படுவது. தனிப்பட அவர்கள் தமிழர்களிடம் நட்புடன் பழகுவார்கள். ஆனால் தமிழரிடம் அதுவும் யாழ்பாண தமிழரிடம் உள்ள இன பாகுபாடு என்பது சமூகரீதியானது. யாழ்பாண பேச்சுநடை தவிர்ந்த வேறு மொழிநடையில் ஒருவர் உரையாடினாலே அவரை வேற்றினமாக பார்ககும் அளவுக்கு இன ஒதுக்கல் சமூகத்தில் வேரூன்றி காணப்படுகிறது. முழுக்க முழுக்க சிங்கள பார்வையாளர்களைக் கொண்ட சிங்கள தொலைக்காட்சிகளில் தமிழ் கலைஞர்கள் தொன்றி பார்வையாளர்களின் பாரட்டுக்களை இலகுவில் பெற்றுவிட முடியும். ஆனால் தமிழ் தொலைக்காட்சிகளில் அது நடை பெறாது.
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
உயர் நீதிமன்ற நீதியரசர்களக கடந்த வாரம் மூன்று தமிழர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதை விட உயர் நீதி மன்ற நீதியரசராக இருந்த தமிழர் எஸ் துரைராஜா பதில் பிரதம நீதியரசராக பதவியுயர்தப்பட்டார். எனவே இளஞ்செழியனின் குற்றச்சாட்டு தவறானது. அவரது தனிப்பட்ட பிரச்சனையை இனப் பாகுபாட்டின் காரணமாக தனக்கு பதவியுயர்வு வழங்கப்படவில்லை என்று சித்தரிக்க முயன்றுள்ளார். வழமையான தமிழ் அரசியல்வாதிகள் காலங்காலமாக செய்யும் வேலையை தானும் முயன்று பார்த்துள்ளார் என்றே எடுக்கவேண்டியுள்ளது.
-
புகைப்படம் எடுத்தாலும் பத்மேவைத் தெரியாது -நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா
இங்கு செய்தி எல்லாம் கூட்டெழுத்தில் இருப்பதனால் வாசித்து கொண்டே இருக்கிறேன். இன்னமும் முடிக்கவில்லை. கூட்டெழுத்து படித்தவர்களுக்கு மட்டுமே படங்களுக்கு இடையில் உள்ள செய்து புரியும்.
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
பதிலுக்கு நன்றி. நான் கேட்டதற்கு காரணம் வைத்திய கலாநிதி வல்லிபுரநாதனில் கட்டுரையில் குடிநன மதிப்பில் இலங்கைத்தமிழராக மலையக தமிழரை பதிவு நல்லது என்று கூறியிருந்தார். வெறும் பதிவில் எமது எண்ணிக்கையை கூட்டிகாட்ட மட்டும் அவர்களைச் சேர்க்காமல் அவர்களை நம்மை போல் நடத்துவதே சிறந்தது. ஆனால் அப்படி நடக்க இலங்கை தமிழர் மனநிலை ஒரு போதும் சம்மதியாது என்பதால் அவர்களுக்கு இழப்பு மட்டுமே தான் வரும் என்பது எனது அபிப்பிராயம்.
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
குடிசன கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதனின் கருத்துகள் தொடர் பாகவே எனது கருத்தை கூறியிருந்தேன்.
-
தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி - ச.லலீசன் சுட்டிக்காட்டு
தமிழர்களின் சனத்தொகை பேணப்பட வேண்டுமானால் வட கிழக்கில் பொருளாதார நிலை உயர்வு காணவேண்டும். வாழ்ககை தரமல உயர்வதற்கு சகஜமான வாழ்ககை நிலை ஏற்படவேண்டும். புலம்பெயர் முதலீடுகள் வட கிழக்கு நோக்கி நகரவேண்டும். அரசிடம் உரிமைகளை வலியுறுத்தி பெறும் அதே வேளை தெற்குமன் நல்லுறவை பேணவேண்டும். ஒரு comfort zone ல் மக்கள் வாழ்வதாக உணரும் போது குடியகல்வுகள் கட்டுப்படுத்தப்படும். சனத்தொகையில் இயல்பான வளர்சசி போக்கு ஏற்படும். அத்தோடு இலங்கை தமிழரின் சனத்தொகையை உயர்த்திக் காட்டும் நோக்குடன் மலையக தமிழர் இலங்கை தமிழர்களாக அடையாளப்படுத்துவது எந்த வகையில் மக்களுக்கு பலன் தரும் என்று தெரியவில்லை. ஏனெனில் குடித்தொகை கணக்கெடுப்பு என்பது வீட்டுவசதிகள் மற்றும் இன்னாரென்ன மக்கள் வாழ்வாதார திட்டங்களுடன் தொடர்பு பட்டது என்பதால், இதில் மலையக தமிழர் இலங்கை தமிழராக பதிவு செய்தால் மலையக தமிழருக்கான வீட்டுவசதி நிதி ஒதுக்கீடு போன்றவை குறைக்கப்பட்டு அதன் மூலம் ஏற்கனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அந்த மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாதா? இது குறித்த விபரங்களை @Justin @goshan_che போன்ற கருத்தாளர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்.
-
கட்டாயத்தின் பேரில் ஓய்வு பெற நேர்ந்தது - இளஞ்செழியன்
தற்போதைய நிலையில் ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தக்கூடிய சிறந்த நிர்வாக திறமையுடன் வடக்கில் தமிழர் பலத்தை சமயோசிதமாக கட்டியெழுப்பக் கூடிய நிர்வாகி ஒருவர் முதமைச்சராக வந்தாலே தமிழ் மக்களுக்கு நல்லது. பொது வெளியுல் கண்கலங்கும், அனுதாபத்தை தேடும் இவரது சென்றி மென்ற் அரசியல் இவரது நிர்வாக திறமையை சந்தேகிக்க வைக்கிறது.
-
யாழ்.பல்கலை நூலகத்தில் இருந்து மகசீன்கள் மீட்பு ; சோதனை நடவடிக்கைக்கு பொலிஸ் முஸ்தீபு
யாழ் பல்கலை கழக மணவர் தங்கும் விடுதியில் துப்பாக்கிகள் மீட்பு . முஸ்லீம் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு மேல் பகுதியில் இருந்து ரி56 வகை துப்பாக்கிகளும் சில வெடி பொருட்களும் மீட்பு. இவ்வாறு இந்த செய்தி அமைந்திருந்தால் இங்கு கருத்துக்கள் எவ்வாறு அமைந்திருக்கும். 😁
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இலங்கையில் தமிழ் முஸ்லீம் முரண்பாடுகள் என்பது 1977 முன்பு பாரியளவில், அதாவது நாடு தழுவிய ரீதியில் இருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு சில பகுதிகளில் சில தகராறுகள் இருந்தன. அவை அவ்வப்போது கிளம்பும் போது இரு பகுதியினரிலும் சிவில் சமூகத்தினர் பேசி அதை முடிவுக்கு கொண்டுவருவர். இது கிட்டத்தட்ட யாழ்பாணத்தில் அதே காலப்ப்பகுதியில் அவ்வப்போது கிளம்பும் சாதி சண்டைகள் போன்றதாக இருக்கும். ஆனால் இது இருபகுதி மக்களிடையே பாரிய விரிசலாக, ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டதாக மாறியது ஆயுத போராட்ட இயக்கங்கள் தோன்றிய பின்னரே. வடக்கு மகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றிய சம்பவம் இரு பகுதி மக்களிடையே பாரிய இடைவெளியை ஏற்படுத்தியதோடு தமிழர்களின் போராட்டதிற்கும் இதனால் பாரிய அரசியல் ரீதியான பின்னடைவு ஏற்பட்டது. பிள்ளையார் பிடிக்க போக அது குரங்காக மாறிய கதையாக ஆயுத போராட்ட தேவைக்காக முஸ்லீம்களை வெளியேற்றி அவர்களது சொத்துகளை அபகரித்த செயல் அதே விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக சர்வதேச ரீதியாக பலத்த அடியை கொடுத்தது என்பதை உலகளாவிய அரசியல் பார்வையற்ற புலிகளால் அன்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. இலங்கை அரசுக்கு தமிழர் போராட்டத்துக்கு எதிரான பரப்புரை செய்ய உதவியையே அன்று புலிகள் செய்தனர். ஆனால் இன்று கூட இதை புரிந்து கொள்ளாதவர்களாகவே தமிழ் அரசியலில் பலர் உள்ளார்கள். முஸ்லீம்களை வெளியேற்றியது மாத்தயாவின் தவறான அரசியல் தீர்மானத்தால் என்றும், கிழக்கில் அனைத்துக்கும் கருணா தான் காரணம் என்றும், பிரபாகரன் ஒன்றுமே அறியாத அப்பாவி என்றும் இக்கட்டுரை கூறி இருந்தால் இங்கு கருதெழுதிய பலர் இதனை ஆதரித்திருப்பார்கள். கட்டுரை எழுதிய இக்பாலுக்கு பாராட்டு மழை பொழிந்திருக்கும் இவர்கள் பிரபாகரனின் வக்கீல்களாக இங்கு ஆஜராகினார்களே தவிர நாட்டின் இனப்பிரச்சளைக்கு தீர்வு காணவேண்டும் என்றோ எதிர்கால தமிழ் சந்ததி இலங்கையில் மகிழ்சியாக இனப்பாகுபாடற்ற ஒரு தேசத்தில் வாழவேண்டும் என்ற அக்கறையிலோ இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அரசியல் போக்கே என்பிபியை நோக்கி மக்கள் வாக்குகள் திரும்பக் காரணம். யுத்தம் காரணமாக பாரிய வீழ்சசியடைந்தி ருந்த தமிழர் சனத்தொகை மெதுவாக வளர்சசியடைய தொடங்கியுள்ளது . இது ஒரு நல்ல அறிகுறி. நாம் விரும்பியோ விரும்பாமலோ இலங்கை என்ற நாட்டிற்குள் தான் தமிழ் மக்கள் வாழ்வு . நாட்டில் வாழும் அனைத்து இனங்களினதும் புரிந்துணர்வின் அடிபடையிலேயே ஒரு தீர்வு அமையப்பெறலாம். அதற்கேற்ப நல்லுறவை கட்டியெழுப்புவதும் சிறுபான்மையான இனங்கள் இரண்டும் புரிந்துணர்வின் அடிபடையில் அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதும் காலத்தின் தேவை. ஆகவே, இது ஒரு இயக்கத்தின் தவறு மட்டுமே தவிர ஒட்டுமொத்த தமிழர்களின் தவறல்ல என்ற நிலைப்பாட்டுடன் உறுதியாக இவ்வாறான ஒரு சிலரின் சீண்டல்களை புறந்தள்ளி எமது சமுதாயத்தை வட கிழக்கில் கல்வி, தொழில்நுட்ப, வர்த்தக பொருளாதார அரசியல் ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். ஏற்கனவே இரண்டு தலைமுறையை நாசப்படுத்திய வழியில் சிந்திகாது புதிய தலைமுறையாவது அறிவார்ந்த அரசியலை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை நோக்கி நகருவதற்கான ஆரம்ப வழியையாவது சமைத்து கொடுக்க வேண்டும். அண்மையில் தாயகம் சென்ற போது அவதானித்த விடயம் 2000 ம் ஆண்டுகளில் பிறந்த ஆற்றலுள்ள பல திறமை சாலியான இளைஞர்கள்/ யுவதிகள் பலர் பல கற்கை நெறிகளில் பயின்று தமிழர் அரசியலில் ஆர்வம் அற்று தமிழர் அரசியலில் ஈடுபடுவோர் எல்லாம் படிபறிவற்ற காடையர்கள் என்ற கணக்கில் அந்தப் பக்கம் திரும்பி பார்கதவர்களாக உள்ளனர். நல்வாய்பாக இன மத வெறுப்புக்கு ஆட்படாதவர்களாக அவர்கள் இருப்பது சிறந்த பாராட்டப்படவேண்டிய விடயம் என்றாலும் அவர்கள் அரசியலில் அக்கறையற்று இருப்பது தமிழர் அரசியலுக்கு உணமையில் நல்லதல்ல. ஆனால், அவ்வாறு அவர்கள் சிந்திக்க வைத்தவர்கள் பொறுப்பற்ற விதத்தில் வெறுப்பு அரசியலைப் பரப்பும் புலம் பெயர்/ தாயக தமிழ் தேசிய அரசியல் வியாபாரிகளே.
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
இங்கு புலிகள் செய்த செயல்களுக்கு தமிழர்கள் பொறுப்பேற்க முடியாது. அதே போல இலங்கை இராணுவத்தின் கட்டளையின் கீழ் செயற்பட்ட முஸ்லீம் ஊர்காவற்படை செய்த செயலுக்கு முஸ்லீம் மக்களும் பொறுப்பேற்க முடியாது. செய்தியில் கூட பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் என்று தான் கூறப்பட்டிருகிறதே தவிர தமிழர்கள் எடுத்த தவறான முடிவால் என்றோ, தமிழர்கள் தான் இதற்கு பொறுப்பு என்றோ கூறப்படவில்லை. எனவே, இது போன்ற விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் அலட்டிக்கொள்ள தேவையில்லை. இந்த சம்பவங்கள் எல்லாமே இப்போது வாழும் தமிழ் மக்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள்.
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
சின்மயி- வைரமுத்து பிரச்சனையில் இங்கு பெரும்பாலானோர் வைரமுத்து ஆதரவாளர்கள் தான் என்பதைப் புரியாதது உங்கள் தவறணைக் காலம்.
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
சகட்டு மேனிக்கு நமக்கு பிடிகாதவனையெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து போட்டு தள்ளினா நாடு கிடைக்கும் என நம்பியது அந்தக் காலம். சகட்டு மேனிக்கு பிடிக்காதவனுக்கெல்லாம் துரோகி பட்டம் கொடுத்து திட்டி தீர்த்தால் நாடு கிடைக்கும் என்று நம்புவது இந்த காலம். இது ஈழத்தமிழன் மலிபன் பவர்.💪 🍪