Everything posted by island
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
அதை விட திரள்நிதி சேர்தது அனுப்பினால் வாற கொமிசன் உபரி கூட வரும். 😂
-
தலைவனை இழந்த ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை – விஜய்
இலங்கை தமிழர் பிரச்ச்சனைக்கு தமிழநாட்டு அரசியல்வாதிகள் எவராலும் ஒரு ஆணியை கூட பிடுங்க முடியாது என்பதே ஜதார்ததம். சீமான் போன்றவர்கள் இதை வைத்து தமிழ் நாட்டு தற்குறிகளை ஏமாற்றி ஏதும் தரகு அரசியலை செய்து பிழைத்து வருகின்றனர். அதை பார்தத விஜையும் அதே சீமான் வகையறாகளின் அரசியலை பின்பற்றி இந்த விடயத்தை வைத்து ஏதும் இலாமடையலாமோ என்று எண்ணுவதே இந்த விஜயின் பேச்சு.
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
மந்திரிமனை ஐரோப்பிய திராவிட சிற்ப கலையை உபயோகித்து கட்டப்பட்டது. Mantri Manai Article Talk Language Watch Edit Mantri Manai or Manthiri Manai (pronounced[mən̪d̪ɪɾɪˑmənəj]; literally Abode of Minister) is a historic palace situated in Nallur, Jaffna, Sri Lanka. It is one of the archaeological protected monuments in Jaffna District and was listed by the Sri Lankan government in 2007.[2] Mantri Manai மந்திரி மனை Mantri Manai Location in greater Jaffna General information Status Good Town or city Jaffna Country Sri Lanka Coordinates 9°40′38.9″N80°02′09.3″E Owner Sri Lankan government Landlord S. Thambipillai[1] Height Architectural European and Dravidian Technical details Material Brick, lime plaster, wood, tile Designations Archaeological protected monument (23 February 2007) Known for Jaffna kingdom The palace is associated with the Jaffna kingdom. It is believed to be one of the palaces or residences of a minister of Cankili, king of Jaffna, before the fall of the Jaffna kingdom to the Portuguese.[3] The building is surrounded by other historical remains of the Jaffna kingdom such as the Sattanathar temple, which was one of the city temples of the kingdom; Yamuna Eri and Cankilian Thoppu are also located nearby. However, much of the architectural style belongs to the post-Jaffna kingdom era.[4] https://en.m.wikipedia.org/wiki/Mantri_Manai
-
மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!
ஆயுள் தண்டனை வழங்கப்படு முன் விசாரணை கைதியாக உள்ள போது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் நாய்களுக்கு வந்தால் பிணை வழங்கப்படுமா?
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
தமிழ் மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கு கற்பனைகள் உதவப் போவதில்லை. கடந்த கால கசப்பான அனுபவங்களின் படிப்பினைகளை வைத்து எமது தவறுகளை திருத்தி சரியான பாதையில் சென்று எமது மக்களின் வாழ்வியலை இலங்கையில் மேம்படுத்த வேண்டுமே தவிர அரசியலில் கற்பனைகள், சென்ரிமென்றுகள் எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும். முடிந்தது முடிந்தது தான். தோல்வியடைந்த அனுகுமுறைகள் படிப்பினைகளை தருமே தவிர அது முன்மாதிரிகளை தராது. அப்படி தரும் என நம்பிக்கைகள் வளர்த்து சில சுயநலமிகள் புலம் பெயர் நாடுகளிலும் இலங்கையிலும் தமது அரசியல், பண இலாபத்துக்காக கூறினாலும் ஆரோக்கியமான மனநிலை உள்ள எவரும் இந்த stupidl தனத்தை கணக்கெடுக்க மாட்டார்கள்.
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
அந்த மண்ணில் பிறந்ததால் தவறுகளை சுட்டிக்காட்ட கூடாது என்று சொல்கின்றீர்களா? அல்லது வசதி இருந்தால் மட்டுமே சுற்றாடலையும் கழிவறையையும் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்று கூற வருகின்றீர்களா? கழிவறையை சுத்தமாக வைத்திருப்பது அவ்வளவு செலவு கூடிய செயற்பாடா? அல்லது எமது மண்வாசனை என்பது இப்படி நாற்றம் பிடித்த வாசனையுடன் கழிவறையை வைத்திருப்பது தான் என்பதால் அதில் குறை காண்பது அபத்தம் என்று கூற வருகின்றீர்களா?
-
சுய மரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் அரசியல், மொழி, பண்பாட்டுத் தளத்தில் ஏற்படுத்திய மாற்றம் என்ன?
ஏன் யாழ்பாணம் பெரிய திறமா? யாழ்பாண தனியார் பஸ் நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன் சென்றேன். கழிவறை மட்டுமல்ல அதை ஒட்டி இருந்த மக்கள் பஸ்ஸிற்கு காத்திருக்கும் இடத்திலேயே நிற்க முடியாத வயித்தைக் குமட்டும் நாற்றம்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ரயில்வே பாலத்தை விட அதற்கு நடந்து செல்லும் ஒற்றையடி மலைப்பாதை மிக அருமை. நானு ஓயாவில் இருந்து எல்ல வரை ரயிலில் தொங்கி கொண்டு பயணம் சுக அனுபவம்.
-
பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
கருணா என்ற தன மனிதன் ஆயுத போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திருப்பியதால் அவரால் எதையும் சாதிக்க முடியாது தன்னைக் காப்பாற்றியதைத் தவிர, ஆனால், விடுதலைப்புலிகள் என்ற இயக்கம் அன்று இருந்த நிலையில் உரிய வேளையில் உலக ஜதார்த்ததை புரிந்து தீர்வை நோக்கிய பாதையில் அதை செய்திருந்தால் நிச்சயமாக தமிழர் வாழ்வில் பல வினை திறனான positiv ஆன பாரிய மாற்றங்களை செய்திருக்க முடியும். கருணா உண்மையில் என்ன கூறினோரோ என்பது தெரியாது. ஆனால் அப்படிக் கூறியிருந்தால், 2002/ 2003 காலப் பகுதியில் தமது இயக்கத்திற்கு இருந்த பேரம் பேசும் வலிமையையும் உலக அங்கிகாரத்தை நோக்கிய நிலையையும், கெளரவத்தையும் ஒப்பு நோக்கி, அதை மனமார்ந்து உணர்ந்து, அந்த நிலையை இப்படி பாழாக்கிய மடைத்தனமான அரசியல் தீர்மானங்களை எடுத்தவர்களை நோக்கி அப்படிக் கூறியிருந்தால் நிச்சயமாக அது சரி தான்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நீங்கள் கூறுவது தவறு. புலம் பெயர் உறவுகளின் தொகையை விட வெளிநாட்டவரின் எண்ணிக்கை மிக மிக அதிகம். புலம் பெயர் இரண்டாம் தலைமுறை பிள்ளைகள் கூட சுற்றுலா தளங்களையே விரும்புகிறார்கள்.
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Ella நகரத்தில் இருக்கிறேன். ஶ்ரீங்காவில் இருக்கிறேனோ அல்லது ஐரோப்பிய நாட்டில் இருக்கிறேனோ என்று தெரியாத அளவுக்கு உள்ளது.
-
சிறிதரன் எம்.பியின் கருத்து:முஸ்லிம்கள் ஒரு தேசிய இனம் இல்லையா?
மொழியை மையமாக வைத்து தமிழரும் முஸ்லீம்களும் ஒன றிணைந்த காலம் ஒன று இருந்தது. அதை வளர்தெடுக்க தவறி விட்டோம். அதை கெடுத்தத்தில் தமிழ் தரப்புக்கும் முஸலீம் தரப்புக்கும் சம பங்கு உள்ளது.
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
ஈழத்தின் மிகச் சிறந்த பல்துறைக் கலைஞர், சிந்தனையாளரை இழந்துள்ளோம். சிங்கப்பூரில் தனது வேலையை உதறிவிட்டு ஈழப்போராட்டத்தில் ஒரு போராளியாக இணைந்த இவர் காலப்போக்கில் போராட்டத்தின் கசப்பான அனுபவங்களால் நாட்டில் இருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேறி கலைத்துறையில் தனது பங்களிப்பை தொடர்ந்தார். அவர் வாழ்ந்த சுவிற்சர்லான்ட் நாட்டை போல் பல் மொழி, பல் கலாச்சார நாடாக அனைத்து இனங்களும் மகிழ்வுடன் வாழும் நாடக தனது தாய்நாடும் விளங்க வேண்டும் என்பதே இறுதிக் காலங்களில் அவரது கனவாக இருந்தது. அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
அப்படியே அவைக்காக தான் அவர் வரவில்லை என்றாலுமே பரவாயில்லை. எனது முன்னுரிமை விருப்பம் தமிழ் பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் தொழிற்குறை முன்னேற்றங்களும் பேச்சளவில் நின்றுவிடாது ஒரளவுக்காகவது நிறைவேற்றப்பட வேண்டும் முன்னேற்றங்கள் காணப்படல் வேண்டும் என்பதே. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே. இதில் எவரது ஆட்சி என்பதில் கூட எனக்கு அக்கறை இல்லை. துறைசார் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலை வாய்பபுக்காக ஏங்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யாழ்பாணத்தில் உள்ளனர். இவ்வாறான விடயங்கள் இனியும் ஏதும் பின்னடைவுகளை காணக்கூடாது.
-
யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!
செம்மணிக்கு வந்த என் பி பி அமைச்சரையும் எம்பிகளையும் அவமதித்து அடிக்காத குறையாக விரட்டிவிட்டு அவர்களின் சப்பாத்துகளை கைப்பறிவிட்டதாக முகநூல்களலும் ஏன் பராளுமன்றத்திலும் கூட வெட்டி வீரம் பேசியவர்கள் ஜனதிபதி பார்கக வரவில்லை என்று புலம்புகிறார்கள்.
-
நெல்லியடியில் வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் பணம் கொள்ளை ; 10 சந்தேகநபர்கள் கைது
வெளி நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்து வசிக்கும் இவர் பணத்தை வங்கியில் போடாமல் பெருந்தொகை பணத்தை வீட்டில் வைத்திருந்தார் என்றால் இவர் என்ன type ஆன மனிதர் என்று புரிந்து கொள்ள முடியவில்லை.
-
நல்லூர் தேர்திருவிழாவில் பணப்பையை பறிகொடுத்த வெளிநாட்டு பெண்
கோவிலுக்கு வந்த ஒரு மணி நேரத்துக்கிடையில் தனது பணம், கிரடிட் காட் போன்ற பெறுமதியான பொருட்களை திருடர்களிடம் இழந்த வெளிநாட்டுப்பெண் சமூகவலைத்தளத்தில் அதைப் பதிவு செய்துள்ளார். https://www.facebook.com/reel/9991376287630968
-
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!
பொதுவாகவே, இயல்பாக அரசியலை அவதானிப்போர், கிரமமாக பத்திரிகை வாசிப்போர் என்று சாமான்ய மக்களே புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை புரிந்து கொண்ட நிலையில், தீர்க்க தரிசனமான ஒரு தலைமையின் கீழ் வளர்ந்தோம் என்று பெரிதாக பீற்றி கொள்பவர்கள் சிலருக்கு 2009 ல் நடந்த விடயம் 2025 ல் கூட புரியவில்லை என்பது நல்ல ஜோக் தான். தீர்க்க தரிசனம் என்றால் 15 -20 வருடங்களுக்கு பின் நடக்க இருப்பதை இப்போதே தமது நுண்ணறிவின் துணைகொண்டு அனுமானிப்பது. ஆனால், இங்கு தீர்கக தரிசன கோஷ்டிக்கு 16 வருடங்களுக்கு முன் நடந்ததை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை. இதற்குள் இவர்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் வழிகாட்ட போகிறார்களாம். சின்ன புள்ள தனமா இல்ல. 😂
-
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!
எனது அவதானிப்பின் படி இப்படியான பிற்போக்கான விடயங்களில் சமூக வலைத்தளங்களில் யாழ்பாணத்து தமிழர்களின் மனப்பாங்கும் முஸ்லீம்களின் மனப்பாங்கும் ஒரே விதமாகமாகவே உள்ளது. இதை பல விடயங்களில் அவதானித்துள்ளேன்.
-
வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!
இது நல்ல விடயம். விமான நிலையத்தில் கார் வாடகைக்கு எடுக்க ஏற்கனவே முன்பதிவு செய்து செல்பவர்களுக்கு இந்த நடைமுறை வசதியாக இருக்கும். அரச சேவைகளை மக்கள் பெறும் நடைமுறை இலகுவாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதே.
-
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி
இன்றைய தாயக அரசியலை சீர்கெடுத்ததே இப்படியான புலம் பெயர் முன்னாள்களின் ரிமூட் கொன்றோல் செயற்பாடுகளே.
-
தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை
இதில் பொலிசார் திறமையாக செயற்பட்டு மூன்று கொலையாளிகளும் தப்பி செல்ல விடாது அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டது நல்ல விடயம். வீட்டுக்கு விருந்தினர்களாக வந்து அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இருவரின் மனைவிமார் கையால் பிஸ்கட் தேனீரும் வாங்கி குடித்துவிட்டு அவர்களின் கணவரை படுகொலை செய்த நம்பிக்கை துரோகிகளான அயோக்கியர்களை சுட்ட நிசாங்க பாராட்டுக்குரியவர்
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
நான் யாரையும் நியாயப்படுத்தவில்லை. கொலைகளை யார் செய்தாலும் அது குற்றம் தான். தமிழ் தேசிய சூழலில் உள்ள அரசியல்வாதிகள், சிவில் சமூகம், ஊடகவியலாளர்கள் நினைத்திருந்தால் யுத்தம் ஆரம்பித்த 1980 களின் ஆரம்பத்தில் இருந்து கொலை செய்யப்பட்டவர்கள், காணாமல் ஆக்ககப்படவர்கள் பெயர் ஶ்ரீலங்கா இராணுவத்தால் அல்லது எந்த இயக்கங்களால் அந்த கொலை நடத்தப்பட்டது யார் மீது அதிக சந்தேகம. உள்ளது போன்ற விபரங்களுடன் திகதி வாரியாக ஒரு பட்டியலை தயாரித்திருக்க முடியும்.அதை சர்வதேச கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கலாம். அவை இந்த புதை குழுகளில் உள்ளனவா என்பதை டிஎன் ஏ பரிசோதனை மூலம் கண்டு பிடிக்கலாம்.மாவட்டங்களின் 1980 ம் ஆண்டுல் இருந்தான குடிசன மதிப்பு புள்ளிவிபரங்களின் துணையுடன் அதை செய்திருக்கலாம். அப்படி செய்வதன் மூலம் அந்த கொலைகளை யார் யார் செய்தார்கள் என்பதை விசாரணை உதவியாக அமையும். அத்தோடு அந்த கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் உலகில் எங்கு வசித்தாலும் அந்த பட்டியலை சரி பார்க்கவும் மேலதிக தகவல்களை வழங்கவும் நீதி விசாரணை சாட்சிகாக மாறவும் முடியும். இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. ஏனெனில் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒரு சிலரவது தற்போது உயிருடன் ஏதோ ஒரு நாட்டில் வாழக்கூடிய சாத்தியம் உள்ளது. ஆனால், அதை செய்ய இவர்கள் எவருக்கும் அக்கறை இல்லை. அந்த கொலைகளை செய்தவர்களில் சிலர் தற்போது அரசியல்வாதிகளாக சிவில் சமூகத்தினராக, ஊடகவியலாளராகவோ அல்லது புலம் பெயர்ந்தோ மக்களுக்குள் பரவி இருக்கலாமென்பதால் அதை செய்ய இவர்களுக்கும் சற்று பயமாகவும் இருக்கலாம். ஆனால் இந்த நடவடிக்கை மூலம் நிச்சயமாக இலங்கை இராணுவத்தினர் செய்த கொலைகளை இனம் காண முடியும்.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
கொலைகளை செய்பவர்கள் அனைவரும் தப்பிக்கும் நோக்குடன் ஏதோ ஒரு காரணத்தை கூறிக்கொண்டே இருப்பர். இந்த விடயத்தில் இலங்கை அரசு இயக்கங்கள் எல்லோருமே ஒரே நேர்கோட்டிலேயே ஒரே கொள்கையிலேயே பயணித்தார்கள். அவரவுக்கு சார்பானவர்கள் அவர்களின் கொலைகளை மட்டும் நியாயப்படுத்துவார்கள். ஏதோ யுத்தம் முடிந்தது மக்களைப் பொறுத்தவரை மகிழ்சசியே. தமிழர்களின் ஜனத்தொகை யுத்தத்திற்கு முன்னர் இருந்த காலத்தில் வளர்சசியடைந்த வேகத்தில் மீண்டும் வளர்ச்சியடைய தொடங்கியுள்ளது. அதே போல யுத்தத்திற்கு முன்பு இருந்த கலவி, வேலைவாய்புகள், சுய பொருளாதாரம் ஆகியவை கிடைத்தாலே தற்போதைய நிலையில் போதைமர என்ற நிலையே காணப்படுகிறது. 1970 களில் யாழ்பாணத்தில் சொந்த உழைப்பில் வீடுகளைக் கட்டிய எம்மவரால் இன்று ஊர் உழைப்பில் அதை செய்ய முடியாதுள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் தங்கி வாழும் பொருளாதார நிலையையும் சோம்பேறித்தனத்தையும் யுத்தமே ஏற்படுத்தியது.
-
எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன் ; சி.வீ.கே.சிவஞானம்
ஏதோ டக்லஸ் மட்டும் தான் படு கொலைகளை புரிந்தது போலவும் மற்றைய இயக்கங்கள் புனிதர்கள் போலவும் கூறப்படுகிறது. இலங்கையில் போரடிய அனைத்து இயக்கங்களும் பல ஆயிரம் படுகொலைகளை நிகழ்ததியவர்கள் தான். இதில் யாரும் சுத்தமானவர்கள் கிடையாது. ஶ்ரீலங்கா இராணுவம் தமிழ் மக்களை படுகொலை செய்ய சூழ்நிலையை அமைத்து கொடுத்ததில் தமிழ் க்கங்களுக்கு பங்கு உள்ளது.