-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பிரபாகரன் இங்கு பேசுபொருள் அல்ல. திறமையான ராப் பாடகர் இவர் என்பதில் சந்தேகம் இல்லை. இவர் வட இந்திய சங்கித்தனத்துக்கு அடிமையாகாமல் தனது இலங்கைத் தமிழர் என்ற தனித்துவத்துடன் மிளிரவேண்டும் என்பதையே @goshan_che @நியாயம் ஆகிய உறவுகளும் இங்கு சுட்டிக்காட்டினர். 1970 களின் ஆரம்பத்தில் இவர் போன்ற பல ஈழத்தின் பொப்பிசை கலைஞர்கள் இவ்வாறே தனித்துவத்துடன் செயற்பட்டனர். அவர்களை போல இவரும் மிளிரவேண்டும் என்பதே எனது விருப்பம். மற்றபடி, தற்போதைய நிலையில் பிரபாகரனை போற்றுபவர்களில் பல ரகம் உண்டு. அவர்களின் எவரும் பிரபாகரன் விரும்பியதை போற்றமாட்டார்கள். அதில் அவர்களுக்கு அக்கறையும் இல்லை. தமது அரசியல் மதவெறி அஜண்டாவுக்காக தொட்டுக்க ஊறுகாய் போல் பிரபாகரனை போற்றுவோர் சிலர். பிரபாகரனை முன்னுறுத்தி பல கோடிகளை சுருட்டிய (அவர் வந்தால் கணக்கு காட்டுவோம் கோஷ்டி) மோசடிக்கும்பலும் அவர் வரமாட்டார் என்ற துணிவில், பிரபாகரனை போற்றுகிறார்கள். தமது சுய அரசியல் நலத்துக்காக, இலங்கையில் தமிழர் இருப்பை பலவீனப்படுத்தம், அழிவு அரசியலை செய்பவர்களும் அவர்கள் அப்படி செய்தாலும் பரவாயில்லை பிரபாகரனைப் போற்றினால் அது மட்டும் எமக்கு போதும் என்ற மனநிலை உடையவர்களும் பிரபாகரனைப் போற்றுகிறார்கள். அப்படியானவர்களை வைத்து தந்திரமாக பிரபாகரனை ஒரு ட்ரேட் மார்க்காக வியாபாரம் செய்பவர்களும், பணம் பிடுங்குபவர்களும் பிரபாகரனை போற்றுகிறார்கள். இதில் எந்த வகையறா உங்களுக்கு பிடிக்கும் என்பது உங்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம்.
-
வண்ண மயிலேறும் என் தங்க வடிவேலோன்.
பொதுவாக ரப் பாடல்கள் சமுதாய கருத்துகளையும அடிமட்ட மக்களின் அவலங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை வெளிக் கொணர்வதாகவும் இருக்கும். பொப் மாறி யின் பாடல்கள் இன்றும் விரும்பப்படுவதற்கு, அதுவே காரணம். ஆனால் இவரது பாடல்களில் அதைக் காண முடியாது. வெறுமனே அழகு பதுமைகளாக பெண்களை வர்ணிக்கும் பாடல்களும், பக்தி காவடியாடும் பாடல்களுமே இவரது இசையில் மித மிஞ்சி இருக்கும் தமிழ் மொழியை அறிவியல் மொழியாக அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்வதை விடுத்து வெறும் பழமைவாத கருத்துகளை வைத்து தமிழ் வளர்சியை தடுக்கும் பார்ப்பன அடிமைக் கூட்டமாக தமிழர்களை வைத்திருக்கும் மனப்பாங்கை இவர் கொண்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் இவரின் இசைத்திறமை பாராட்டத்தக்கதே.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
இந்த பெர்ணாந்து புள்ளேயை “தமிழ் வந்தேறி” என்று சிங்களவர்கள் திட்டுவதில்லையா? 13 ம் நூற்றாண்டு அதாவது 8 நூற்றாண்டுக்கு முன்னர் வந்த வரலாற்றை வைத்து அப்படி முத்திரை குத்தி சிலரை வந்தேறி என்று திட்டும் போது 100 - 200 வருடத்திக்கு முன்னர் சிங்களவராக மாறியவர்களை அப்படி திட்டுவதில் தவறில்லையே!
-
இலங்கைத் தமிழர் தீர்வு விடயத்தில் அழுத்தங்களை வழங்குவோம் - தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ் நாடு அரசால் இந்த விடயத்தில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கும் அரசியல் சூழ்நிலை இப்போது இல்லை என்பதும், அதற்கான அரசியல் அதிகாரம் தமிழ்நாட்டு அரசுக்கு இல்லை என்பதும், அவ்வாறு அழுத்தம் கொடுப்பது இருக்கும் பிரச்சனைகளை இன்னும் சிக்கலாக்குமே தவிர உதவப் போவதில்லை என்பதும் பட்டறிவின் மூலம் ஸடாலினுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஆனால், இந்த லூசுகள் வந்து கேட்பதால் ஏதோ லூசுகளை திருப்திப்படுத்த அப்படி கூறியிருப்பார் என்று நினைகிறேன். நிச்சயமாக அப்படி அழுத்தம் கொடுக்கும் மகா முட்டாள்தனத்தை அவர் செய்ய மாட்டார் என்பது தெரிந்த விடயம். அரை லூசுகள் மட்டுமே அவர் அப்படி அழுத்தம் கொடுப்பார் என்பதை நம்புவார்கள்.
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
சந்திச்சதோட மான் ஊறுகாய் ஏற்றுமதிக்கு ஒரு ஒப்பந்தம் செய்திட்டு வந்தால் நல்ல காசு சம்பாதிக்கலாம். நாலு பேருக்கு வேலைவாய்ப்பு குடுத்தாயும் இருக்கும்.😂
-
சீமானுக்கும் தமிழ் தேசிய பேரவையினருக்கும் இடையே சந்திப்பு!
உண்மை தான், வெளிநாட்டு ராஜதந்திரிகள் அனைவருக்கும் செருப்படி கொடுத்தால் தான் ஈழத்தமிழருக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.😂😂😂 இது தெரியாமல் 75 வருடத்தை வீணாக்கி விட்டோம். சித்திரமாக வரைந்து தமிழ் மக்கள் அனைவரையும் சென்றடைய வைக்க வேண்டிய அற்புதமான கருத்து.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
தீர்வுகள் தானே வருவதில்லை. பொதுவாகவே உலகில் அரசியல் பேச்சுவார்ததைக்கு வரும் எந்த தரப்பும் முழுமையாக மற்றய தரப்பை ஏற்றுக் கொண்டு சமாதானப் பேச்சுவார்ததைக்கு வருவதில்லை. தீர்வுகளை கொண்டு வருவதும் இல்லை. தொடர்சசியான பேச்சுக்களின் மூலம் பரஸ்பர நம்பிக்கையை கட்டி வளர்தது தீர்வு திட்டத்தை இரு தரப்பும் இணைந்த தயாரிக்கிறார்கள். அதனால் தான் ஆங்கிலத்தில் Negotiation என்று அழைக்கின்றனர். ஆனால் 1990,1994,2002 பேச்சுவார்ததையில் அது நடைபெறவில்லையே! அப்படி இருக்கையில் எப்படி தீர்வுகள் வரும். ஒரு தரப்பின் உள சுத்தி எப்படி உள்ளது என்று உரசிப் பார்தது அது பத்தரை மாற்று தங்கமா, என்று கேள்வி கேட்கும் நீங்கள் மறு தரப்பும் அதே போலவே உள சுத்தியுடன் இருக்கவில்லை அதுவும் கறள் கட்டிய இரும்பாகவே இருந்தது என்பதை ஏன் மறைக்கின்றீர்கள்?
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
அவர்களது தற்போதைய modern name „தமிழீழ தேச பக்தர்கள்“.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
தவறான தகவல்களையும், வெறுமனே காலா காலமாக சொல்லிவரும் சென்றிமென்ற் உணர்சசி வசனங்களையும் உங்கள் கருத்துக்கு வலு சேர்க்க பயன்படுத்தியுள்ளீர்கள். உக்கிரேன் ரஷயாவை மிரட்ட யுத்தத்தை ஆரம்பித்ததாக கதை கூறி நடந்த உண்மைகளை அப்படியே உங்களுக்கு ஏற்ற போல் திரித்துள்ளீர்கள். உக்கிரேன் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. ரஷ்யாதான் யுத்தத்தை ஆரம்பித்தது. உக்கிரேனின் பக்கத்து நாடு ரஷ்யா ஆதலால் அதனை அனுசரித்து யுத்தத்தையும் அதனால் விளைந்த இழப்புகளையும் தவிர்த்திருக்கவேண்டும் என்று உக்கிரேனுக்கு அறிவுரை கூறும் நீங்கள் ஈழத்தில் நாம் உலக அரசியல் சூழ்நிலைகள் எமக்கு சாதகம் இல்லாத நிலையை உணர்ந்தும், இணைத்தலைமை நாடுகளின் கடும் எச்சரிக்கையும் புறக்கணித்து யுத்தத்திற்கு சென்று ஏற்கனவே இருந்ததைக் கூட இழந்த செயலுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள். உக்கிரேன் தனது மக்களை காப்பாற்ற யுத்தத்தை தவிர்த்து பக்கது நாட்டுடன் உடன் பாட்டுக்கு வந்திருக்க வேண்டுமென்றால் எமது தலைமையும் ஆயுதப்போராட்டம் இனி சரி வராது என்பதை உரிய நேரத்தில் உணர்ந்து யுத்தத்தை தவிர்த்திருக்க வேண்டும், ராஜதந்திர அணுகுமுறை மூலம் போராட்டத்தை தொடர்ந்து தம்மை நம்பிய மக்களை அழிவில் இருந்து காப்பாற்றி இருக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு? ஆண்டுகளை 1958, 1977, 1983 என வகைப்படுத்திய நீங்கள் 1987, 1990, 1994, 2002 என வந்த சந்தர்பங்களை எல்லாம் புத்திசாலித்தனமாக பயன்படுத்தாமல், பிடிவாதமாக புறக்கணித்ததில் எம்மவருக்கு இருந்த பங்கைப் பற்றி எதுவும் கூறவில்லை. “போராட்டம்” என்பது, ஆயுதப்போராட்டம் அல்லது வெறுமனே பிடிவாதம் பிடிப்பது மட்டுமல்ல, பேச்சுவார்ததை மேசையில் கலந்து அங்கு செய்வதும் போராட்டம் தான். நட்பு சக்திகளை இயன்ற அளவுக்கு வளர்தது கொள்வதும் அவர்களுடன் உடன்பாடுகளை ஏற்படுத்துவதும் போராட்டத்தின் ஒரு வழி முறை தான். மக்கள் போராடினார்கள் மக்கள் போராடினார்கள் என்கின்றீர்கள். ஆனால், போராட்ட வழிமுறைகளையோ தீர்மானங்களையோ எடுப்பதில் மக்கள் பங்களிப்பு இருக்கவில்லை தலைமை மட்டுமே தீர்மானித்தது . 1987 ல் சுதுமலைக் கூட்டதிலேயே ஆயுதங்களை கையளிக்கிறோம் என்ற கூறியவுடன் கரகோசம் செய்து அதை ஆதரித்தவர்கள் தமிழ் மக்கள். ஆனால் அவ்வேளையில் மக்களின் மனவோட்டத்தை புறக்கணித்ததன் விளைவு என்ன,? பாரிய மக்கள் அழிவுக்கு பின்னர் 22 வருடம் கழித்து ஆயுதங்களை பலவந்தமாக கைவிட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். அதாவது 1987 மக்கள் எதை கரகோசம் செய்து வரவேற்றார்களோ அதே முடிவை அவமானத்துடன் பின்னர் எடுக்க வேண்டிய நிலை வந்தது. உக்கிரேன் அதிபர் ரஷயாவின் ஆக்கிரமிப்பை எதிர்தது போராடியதை தவறு என்று ஏளனப்படுத்துகின்றீர்கள், இத்தனைக்கும் உக்கிரேன் இன்றும் இராணுவ பொருளாதார பலத்துடன் தான் இருக்கிறது. இழந்ததை கட்டியெழுப்புவது அவர்களுக்கு ஒன்றும் சிரமம் இல்லை. ஆனால் , தமிழ் மக்களின் அரசியல் நிலை அப்படியா உள்ளது? இந்த நிலையில் உக்கிரேனுக்கு அட்வைஸ் வேறு.
-
யாழ். விமான நிலையத்துக்கான பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டல்!
ஏதோ அமெரிக்கன் பிளேன் தாங்கள் தாங்கள் தான் அரேஞ் பண்ணி அங்கை போக வைச்ச கணக்கிலை ஒரு கதை. இந்த அமெரிக்க கப்பல் வருகுது எண்டு புரளியை கிளப்பி தானே நம்பிக்கையை ஊட்டி மக்களை முள்ளிவாய்கால்ல இருந்து வெளியேற விடாமல் பலி கொடுத்தவயள்.
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
அட பாவி இந்த முடிவை 3 வருடத்துக்கு முதலே எடுத்திருக்கலாமே? பட்டுத்தான்…. புத்தி வரவேண்டும் என்பது விதி. ஆரும் பப்பா மரத்தில் ஏற்றி விட்டால்,கண்ணை மூடிக் கொண்டு ஏறும் ஆள்தான்… செலென்ஸ்கி. இப்ப… நாரி முறிய, கீழே விழுந்து கிடக்கிறார். சுய புத்தியும் தேவை. இந்த திரியில் கண்ட வசனங்கள் இவை. 😂 இவை அத்தனையும் முகக்கண்ணீடி முன் நின்று தமிழர்கள் தம்மை தாமே கேட்டிருக்க வேண்டியவை அல்லவா! கச்சிதமாய பொருந்துது எமக்கும். 😂
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
தாராளமாக நிறுத்தலாம். எனக்கு பதிலளிக்குமாறு நான் உங்களை வற்புறுத்தினேனா? இல்லையே!
- முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
-
முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்
நேர்மையான யாழ்கள வாசகர்கள் அனைவரும் அதை அறிவார்கள்.