Everything posted by பகிடி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் தான்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
இங்கே உங்களோட உரையாட முடிந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே. உங்கள் பாராட்டுத்தல்களுக்கு நன்றி
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நன்றி. அங்கே வாழ்ந்து வாழ்வின் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வர கொஞ்சம் முயன்று இருக்கின்றேன். நேரம் கிடைக்கும் பொழுது தொடர்ந்து எழுதுவேன். என்னை உற்சாக படுத்தியதற்கு மீண்டோருமுறை நன்றி
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நன்றி அன்பரே! ஓரளவுக்கு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு, கனநாள் facebook இல் இருந்தேன். பின்னர் அது என்னை addict ஆக்கி விட்டதை உணர்ந்ததும் ஒரே அடியாய் அதை மூடி என்னுடன் தொடர்பில் இருந்த ஒரு 1500 பேருக்கு ஒரே நாளில் ராட்டா சொல்லி விட்டேன். இது நடந்து 2 வருடம் ஆகி விட்டது, facebook ஐ இன்னும் திரும்பியும் பார்க்கவில்லை.தொடர்ந்து எழுத விரும்புகிறேன். வாழ்த்தி வரவேற்றதற்கு இன்னுமொரு தரம் நன்றி. நான் இங்கே வந்து மெடிக்கல் எக்ஸாம் எல்லாம் முடித்து விட்டேன்.. என்றாலும் appointment தரவில்லை. அண்மைக்காலத்தில் இங்கு வந்த மருத்துவர்கள் அனைவருக்கும் இது தான் நிலைமை. என்னைப்போல் இங்கு ஒரு பத்தாயிரம் பேரின் நிலைமை இது தான்.ஆஸ்திரேலியா அல்லது யூஸ் இல் படித்து பின்னர் பட்ட மேற்படிப்பும் படித்து இருந்தால் இங்கே வேலை கிடைக்கும். ஆனால் இந்தியா, இலங்கை, பாக்கிஸ்தான், ரஷ்யா டாக்டர்ஸ் நிலையோ அந்தோ பரிதாபம்.சிலருக்கு அத்தி பூத்தால் போல் வேலை கிடைக்கும். அது வரை ஆறு மாசம் சொந்த நாட்டில் doctor வேலை மிச்சம் 6 மாசம் இங்கு ஏதாவது வேலை என்று பல வருடங்கள் கழிக்க எதிர்பார்ப்புடனேயே கழிக்க வேண்டும். இதில் சில சமயம் குடும்பம் இரண்டாகி விடும், இங்கே citizenship கிடைக்க இன்னும் சில வருடங்கள் ஆகும். கையில் காசும் இருக்காது, 45 வயதில் சில நேரம் வேலை கிடைக்கும், ஆனால் இப்படி ஒரு தியாக வாழ்க்கைக்கு நான் ரெடி இல்லை. Emergency service இல் டிரைவர் ஆக வேலை செய்யவில்லை. பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். Pre hospital medical practice கடைசி பத்து ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டு விட்டது. அதில் advance care Paramedics ஆகவே வேலை செய்கிறேன். இதில் ஒரு 100 க்கு மேற்பட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கான medications நோயாளிகளுக்கு அளிக்க முடியும். ஒரு heart attack, stroke,அல்லது சுவாசம் சம்பந்தமாக ஏதும் நடந்தால் ஆஸ்பத்திரி கொண்டு போகாமலேயே வீட்டில் வைத்து சத்திர சிகிச்சை தவிர அனைத்து சிகிச்சைகளையும் அளித்து நோயாளி ஓரளவு சரியானவுடன் ஆஸ்பத்திக்கு அனுப்ப முடியும், stroke வந்தால் ambulance இன் உள்ளே வைத்து MRI scan எடுத்து தலையில் எங்கே எந்த நாளத்தில் இரத்தக் கசிவு உண்டு என்று பார்த்து அதை உடன் தடுத்து பாதிப்பின் அளவை கணிசமாகாக குறைக்க முடியும். தேவையானால் இரத்தம் ஏற்ற முடியும். கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் தான் இந்த தொழிலில் இவ்வளவு scope Of practice. ஒரு நாள் சம்பளம் $500 -$600. இரவு வேலை என்றால் இன்னும் கூட. இன்னும் சில வருடத்தில் Air ambulance இல் critical care para medics ஆக வர விரும்புகிறேன்.இதனால் தான் இந்த வேலையை தேர்ந்து எடுத்தேன். இதற்காக இங்கு 3 வருடம் படித்தேன். ( medical exam clear செய்த பிறகும் இதற்கு வேறு படித்து இன்னொரு எக்ஸாம் கொடுக்க வைத்தார்கள் படுபாவிகள்.)எனக்கு தெரிந்த பல இந்திய பாகிஸ்தான் டாக்டர்ஸ் இங்கு டாக்ஸி ஓட்டும் நிலை.. ஆகவே எனக்கு இது கிடைத்த வரை சந்தோசம். நான் செய்த பிழை கனடா வந்தது தான். இங்கு இந்த பிரச்னை இருக்கு என்று தெரிந்து தான் வந்தேன். எக்ஸாம் முடித்து விட்ட படியால் இவர்கள் எப்போதாவது சிலநேரம் தேவைப்பட்டால் கூப்பிட்டு எங்காவது கனடாவில் கண் காணாத தேசத்தில் appointment கொடுத்தால் நல்லம்.. இல்லாவிட்டால் ஒரு துன்பமும் இல்லை. ஏதாவது europ போய் இருந்தால் இந்த சிக்கல் இருந்து இருக்காது.. கல்யாண சம்பந்தம் அமைந்தது கனடாவில் தான்.திருமணம் செய்யும் குடும்பம் முக்கியமா எனது கனவு முக்கியமா என்ற நிலையில் முதலாவதை தேர்ந்து கொண்டு இங்கு வந்துவிட்டேன்.😉 நன்றி கிருபன்.
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
உண்மைதான் ஈழப்பிரியன். எல்லா ஞாபகங்ககளையும் எழுத்தாக்குவது அவ்வளவு இலக்குவல்ல. சரியான தகவல்ககளை எழுத வேண்டும். சுவாரசியமக்கவும் இருக்க வேண்டும். எனது எண்ணங்களை திணிப்பதாக்கவும் இருக்கக்கூடாது. யாரையும் நியாயம் தீர்ப்பதாக்கவும் இருக்கக்கூடாது.அந்த வகையில் சிறு சிறு ஆக்கங்கள் ஆக எழுதலாம் என்று எண்ணுகிறேன்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நன்றி யாயினி என்னை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி நுணாவிலான் அவர்களே.. நானும் ஒரு நுணாவிலான் தான்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
அதுவும் சரிதான்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நீங்கள் ஒரு இடத்தில் உக்கிரெயின் காரர் சுத்து மாத்துக்காரர் என்று சொல்லியதில் உண்மை உண்டு.நானே பல தடவை அனுபவ பட்டு உள்ளேன். என்றாலும் எல்லோரையும் என்னால் அதே தராசால் அளக்க முடியாது. நல்ல அனுபவங்களும் உள்ளது. கிழக்கு உக்ரெனியர்களில் இந்த சுத்து மாத்து அதிகம். இது சுத்து மாத்து தன்மை மேற்கு நோக்கி நகரும் பொழுது குறைவடைக்கிறது. நன்றி நிலாமதி.
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நன்றி நன்னிச் சோழன் அவர்களே. நிறைய எழுத்துப் பிழைகள் உண்டு எனது பந்திகளில்.. தவிர்த்து இருக்க வேண்டும். கிடைத்த குறைந்த நேரத்தில் எழுதியதால் சரி பார்க்க இயலவில்லை
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நீங்கள் சொன்னது போல் தவறுதலாக பிழை நேர்ந்து விட்டது என்று நினைக்கிறன்..
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நன்றி தமிழ் சிறி அவர்களே.யாழ் அகவை 24 இல் சுய ஆக்கம் பகுதியில் பதிந்து உள்ளேன்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நன்றி எனக்கு எப்படி இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லையே
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன். நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன். படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன். டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள். நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள் போய் இருக்கின்றேன் இவர்களுடன். குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான். நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான். நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன். Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர். வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது. இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால். நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார். நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம். எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம். ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி. மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள். ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை. கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் கிவ் இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும். இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.) ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள். கிரிமியா இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம். 2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன். இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே.. அனுப்பவ படிப்பினைகள் இவைதான் 1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில். 2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு . 3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன். அழகான அசோவ் மோரே ( கடற்கரை ) றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை. இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.