Everything posted by பகிடி
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
கைவசம் எப்படி இருக்கும்? அவரின் நடவடிக்கைகளை கவனிக்கும் பொழுது தீவிர தமிழ் தேசியம் பேசி விரும்பியோ விரும்பாமலோ இந்தியாவின் இலங்கை மீதான அரசியலுக்கு கூலிகளாக பயன்படுத்தபடும் நபர்களை அவர் கழற்றி விடுகின்றார்.
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
தமிழரசுக் கட்சியில், இந்திய சார்பு நிலை எடுக்கும் அனைவரும் துரத்தப்பட வேண்டும் அதற்காக கட்சி சேதத்தை சந்தித்தாலும் தைரியமாக அதனை செய்யும் சுமந்திரன் நீண்ட கால நோக்கில் இலங்கைத்தமிழர்களுக்கு நன்மையையே செய்கின்றார்.
-
டம்மியாக்கப்பட்ட தமிரசுக் கட்சி செயலாளர் பதவி : ஊழல் மோசடி செய்தவரே வன்னி வேட்பாளர்
சிவமோகன் போன்றவர்களை தமிழரசுக் கட்சி வெட்டி எறிவது நாட்டுக்கும் தமிழர்களுக்கும் நல்லது. சத்தியலிங்கம் செய்தது சரியே
-
மதுபானசாலை விவகாரம் - யாழ் வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி.க்களுக்கு கீதநாத் காசிலிங்கம் சவால்
மது இல்லாத மனித சமுதாயம் என்று ஒன்று உண்டா? கசிப்பு போன்ற கள்ள தரமற்ற சாராயம் வளங்காமல் எம் தமிழ் மக்களுக்கு நல்ல பேச்சுத் தொடர்புக்கும், களிப்புறவும், தரமான மது முக்கியம். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று சொல்லி மக்களை நல்ல சரக்கு குடிக்க விடாமல் வைத்திருக்கும் ஆட்கள் தான் உண்மையான தமிழ் இனத் துரோகிகள்
-
ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்!
மக்கள் குற்றவாளிகளையும், பணம் படைத்தோரையும், வெறும் செல்வாக்கானோரைம் தமது பிரதிநிதியாக அனுப்பினால்( மக்கள் மாக்கள் ஆனால் )படித்த ஆனால் செல்வாக்கோ பணபலமோ அற்ற ஆனால் சட்டப் புலமை உள்ள , international low தெரிந்த நிதி, கணக்கியல் அனுபவம் உள்ள நபர்கள் பாராளுமன்றம் செல்வது எப்படி? அதற்க்கு தேசியப் பட்டியல் உதவும். உதாரணம் தமிழ் நாட்டில் திமுக வில் பாராளுமன்றதில் மேல் சபையில் வில்சன் என்ற ஒருவர் உள்ளார். அவர் தான் இப்போது தி மு க தமிழ் நாடு சம்பந்தமான விஷயங்களுக்கு டில்லியில் உள்ள நபர். அவர் மக்களால் தேர்ந்து எடுக்கப்படவில்லை. இங்கே எதற்கு senate, house of commons என்று இருக்கிறது?
-
யாழில் தேசிய மக்கள் சக்தியில் களமிறங்கும் மருத்துவர் சிறிபவானந்தராஜா
இந்தியாவின் தாளத்துக்கு ஆடும் அனைத்து தமிழ் கட்சிகளும் ( தமிழரசுக் கட்சி உட்பட ) தோற்கடிக்கப் பட வேண்டும்
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
நுணாவிலான் இதை இவ்வளவு விளக்கமாக எழுதியது D.B.S.JEYARAJ. ஜெயராஜ் ஒரு தமிழினத் துரோகி என்று இங்கே உள்ள சீமான் ஆதரவு தமிழ் வெறியர்கள் நிறுவி கன காலம் ஆகி விட்டது, இத்தனைக்கும் இவர்கள் திரு ஜெயராஜ் அவர்களை அடித்தும் இருந்தார்கள். நிலைமை இப்படி இருக்க இவர்கள் நீங்கள் மேலே சமர்ப்பித்த அவரின் கட்டுரையை எங்கனம் ஏற்பார்கள்?
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
இங்கே புலம் பெயர் நாடுகளில் சீமானை ஆதரிக்கும் ஒரு கூட்டம் தாம் தான் இலங்கைத் தமிழரை பிரதிநிதித்துவம் செய்யும் ஆட்கள் என்று சொல்வது போல சுமத்திரணை எதிர்க்கும் கூட்டமும் தாம் தான் மொத்த யாழ்பாணத்துக்கே சொந்தம் என்று நினைத்துக்கொண்டு உள்ளது. வெளியே தமது அரசியல் கருத்துக்ககளை பகிர்ந்து கொள்ளாத ( வெறி நாய்க்கடிக்குப் பயந்து ) நன்கு படித்த பண்பான ஒரு சனம் இன்றும் யாழ்ப்பாணத்தில் உள்ளது. அவர்கள் சுமத்திரனைத் தான் ஆதரிப்பார்கள். மேற்படி சனங்கள் வெளியே தாம் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்ளததால் பலர் அங்கே சுமத்திரனுக்கு பயங்கர எதிர்ப்பு என்று நம்ப வைக்கப்படுகின்றார்கள்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
அருந்தவபாலன் இப்போது யாரோடு?
-
விண்ணைத் தொடும் தேங்காய் விலை
இலங்கையில் தேங்காய் விலை கூடியதற்கு ஒரு காரணம் வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுவது ஆகும், அதிலும் coconut oil supplements இன் விலை மேற்கு நாடுகளில் மிகவும் அதிகம். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த வியாபாரிகள் இலங்கை மருத்துவர்களை ஏமாற்றி( தேங்காயில பயங்கர கொலஸ்ரோல் எண்டு) அவர்கள் மூலம் மக்களை ஏமாற்றி இலங்கையில் இருந்து குறைந்த விலையில் தேங்காய் வாங்கி விற்க முயன்று இருப்பார்களோ என்பது தான் இலங்கையில் இலவசமாக கிடைக்கும் ஆனால் இங்கே விலை அதிகம் விற்கப்படும் இன்னொரு பொருள் முருங்கை இலை பவுடர்.
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கும் அவரின் உற்றார் உறவினர்களுக்கும் அனுதாபங்கள். அப்பாவின் நினைவுகள் உங்களை வழிநடத்தட்டும்
-
மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
சரியோ பிழையோ சுமந்திரன் தான் மதுபான உரிமைப் பத்திரம் பெறவில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார். இப்போது சுமத்திரனை துரோகி என்று சொல்லிக்கொண்டு தமிழ் பிள்ளைகளை கொலைக்களம் அனுப்ப தமிழ் இன வெறியைத் தூண்டும் போலி தமிழத் தேசிய வியாதிகள் தாங்கள் மதுபான அனுமதிப் பத்திரம் வாங்கவில்லை என்று சொல்லட்டுமே, தாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்க என்ன தடை?
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை செய்தியாக்குவது, அந்தக் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கு இழுத்து தலைகுனிய வைப்பது எந்த வகையில் ஊடக தர்மம் ஆகும்?
-
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை மறைக்கும் முன்னாள் ஜனாதிபதிகள்: அருட்தந்தை குற்றச்சாட்டு
செய்தது இந்தியா வெளியே சொல்ல முடியாது.
-
பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிவிப்பு
உண்மையிலேயே பாராளுமன்ற கன்டீன் சாப்பாடு நல்லாத்தான் இருக்கும். இத சாப்பிடவென்றே ஒரு நாள் பாராளுமன்றம் போனான்
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
கல்வி அறிவு என்பது என்ன?
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
உண்மை, சித்தார்த்தன் மற்றும் புளாட் உறுப்பினர்கள் வவுனியாவில் செய்த சிலர் அபிவிருத்திக்களுக்கு நிதி பாராளுமன்ற ஒதுக்கீட்டில் இருந்தே பெற்றார்கள்.
-
இன்றைய உணவு ஒம்லெட், உருளைக்கிழங்கு,…
போன மாசம் toronto வந்திருந்தேன், நாலு நாள்த் தான் அங்கே நின்றேன். வெறுத்தே போய் விட்டது, alberta வந்த பிறகு தான் கனடாவில் இருக்கின்றோம் என்ற எண்ணம் திரும்பி வந்தது.
-
உலகின் பழமை வாய்ந்த மொழி எது?
உலகில் geographic அறிவு கொஞ்சமும் அற்ற சனங்கள் வாழும் நாடு அமெரிக்கா.
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கையில் இனபிரச்சனை தீர்க்கப் படக் கூடாது என்று நினைத்து செயல்படும் இரண்டு கூட்டங்கள் உள்ளது. அதில் முக்கியமானது தமிழ் வெறியேற்றி பிள்ளைகளைக் கொலைக்களம் அனுப்பும் கூட்டம். அந்தக் கூட்டம் பின்வரும் பண்புகளைகளை முழுதாகவோ பகுதியாகவோ கொண்டிருக்கும் 1) உள்ளே மறைந்துள்ள கடும் இந்திய விசுவாசம் 2) தமிழர்கள் சிங்களவர்களை விட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் 3) சாதிய அடிப்படையில் தாழ்வு மனப்பான்மை, அதனை மேற்கொள்ள தமிழ்வெறி முலாம் பூசும் தன்மை 4) சிங்களாவரோடு சேர்ந்தால் இன்னொரு தமிழனை அடக்கி ஆள முடியாது என்னும் உயர் சாதி மனோபாவம் 5) திருத்தவே முடியாத இந்து மத வெறி 6) ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை அற்ற மேற்புல் மேயும் நிலை 7) திமுக கருணாநிதி அண்ணா ஆகியோரிடம் வன்மம் 8) குடும்பம் மற்றும் சமூக வாழ்வில் ஜனநாயகம் அற்ற தன்மை
-
உலகில் அங்கீகரிக்கப்பட்ட நாடாக இலங்கையை மாற்றும் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் - பிரதமர்
படிப்பது என்பது பரீட்சையில் பாஸ் பண்ணுவதற்குத் தான் என்பதை நிறுத்த ஆவன செய்ய வேண்டும். எங்களால் பரீட்சையில் நல்ல புள்ளிகளை பெற முடிகிறது ஆனால் வேலையில் அதன் பெறுபேறு தெரிவதில்லை. தெற்காசியா மாணவர்கள் எழுதுப் பரீட்சைகளில் திறம்பட செயல்படுகின்றர்கள் ஆனால் critical thinking, research, trouble shooting போன்ற விஷயங்களில் நாம் பின்னடைவு, புதுக் கண்டு பிடிப்புகள் வராமைக்குக் காரணம் பரீட்சையில் 90+ எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் தான்.
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
ஆத்திமுக்கா(😄) போல் சிதறுண்டு போகாமல் கட்சி காப்பாற்றப் பட வேண்டும் என்றால் இதைத் தவிர கட்சித் தலைமைக்கு வேறு வழி இல்லை. சில வேளைகளில் கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் போகலாம் ஆனால் கட்சி ஓரளவுக்கு உயிப்புடன் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவுக்கு தொண்டர்கள் விலக நேரலாம்
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
தகவலுக்கு நன்றி என்றாலும் theological ரீதியில் சைவம் ஆரிய இந்து மதத்தை விட்டு அதிக தூரம் விலக முடியாது. Reincarnation ( மறுபிறப்புக் கொள்கை ), ஆத்துமா சாகாது, துன்பம், சாவு ஆகியவற்றுக்கு காரணம், மரணத்துக்கு பின்னான வாழ்வு என்று பல theological விவாதங்களுக்கு பதில் தேடிப் புறப்பட்டால் அந்த வழி ஆரிய இந்து மதத்தின் பிறப்பிடம் வேத மதத்தையே சென்றடையும்.
-
சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!
இலங்கையில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில் மக்களை தமிழ் வெறியேற்றி கொலைக்களம் அனுப்பாமல் சாணக்கியத்துடன் ஓரளவுக்கேனும் ஜனநாயகத் தன்மையுடன் செயல்ப்டுபவதோடு ஏதேனும் ஒரு நடைமுறைக்கு உகந்த தீர்வு ஒன்றை பெற்றுத் தரக்கூடிய ஒரே கற்றறிந்த அரசியல்வாதி திரு சுமந்திரன் தான்
-
புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றால் அது பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் ஆதரிக்கப் படும் ஒரு ஜனாதிபதியாலேயே/ கட்சியாலேயே முடியும்