வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .
கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."
இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
ஏறத்தாள 47 வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலைப் பொழுதில் எனது முதல்மொழி என்னை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் . இறைவன் வகுத்த சிருஷ்ட்டியில் எல்லாவற்றுக்குமே ஒருகாரணம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் , இன்று வரை எனது தேடல்கள் அதை நோக்கியே எனது ஆழ் மனதில் இருந்ததுண்டு . நான் கடந்து வந்த பாதைகள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இருந்த போதிலும் , எனது பிறப்பின் காரணதுக்கான தேடல்கள் இன்றுவரை தொடர்கின்றன . எனது பிறப்பை நினைவில் வைத்து வாழ்த்திய எனது அனைத்துக் கள உறவுகளுக்கும் , எனது தலை " நன்றி " என்று சொல்லிச் சாய்கின்றது .
நண்பர் கிருபன்ஜிக்கும் எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க :) .
வணக்கம் கள உறவுகளே !!!!
கடந்த சில நாட்களாக எனது கவனம் வேறு பதிவுகளில் சென்றதால் உடனடியாக இதற்குப் பதில் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . நீங்கள் எல்லோரும் நான் 600 விருப்பு வாக்குகளை எடுத்தமைக்கு மனதார என்னைப் பாராட்டியுள்ளீர்கள் . நான் இந்த வேளையில் எனது மனதில் தோன்றிய சில எண்ணவலைகளை உங்களிடம் பகிரலாம் என நினைக்கின்றேன் .
இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் . கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் . நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அருமை நண்பன் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்த வாழ்த்துப் பகுதியில் , வாழ்த்து என்ற போர்வையில் நான் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டேன் . அந்த நிலையானது மறைமுகமாக எனது ஆக்குதிறனை உசுப்பிக் கொச்சைப்படுத்தப்பட்டது . அப்பொழுது நான் நன்றி சொல்லவேண்டும் என்ற வேண்டுகோள்கள் பலரால் வைக்கப்பட்டன . ஒருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டு அவர் வந்து மண்டியிட்டு நன்றி சொல்லவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையினை அருவருப்பின் உச்சக்கட்டமாகப் பார்த்தேன் .
இங்கு பொதுவாக விருப்பு வாக்குகள் பல காரணங்களுக்காக உங்களால் அளிக்கப்படுகின்றன . ஒரு சிரிப்பிற்கே பல விருப்பு வாக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் என் மனதில் வந்து போகின்றன . நான் அடிப்படையில் ஒரு விமர்சகனோ கருத்தாளனோ கிடையாது . எனது சுயபடைப்புகளை நீங்கள் எல்லோருமே வாசித்து , அதனால் கவரப்பட்டே மனமுவந்து எனக்கு இவ்வளவு விருப்புவாக்குகளை தந்திருக்கின்றீர்கள் . இப்பொழுது எனது பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன . உண்மையில் உங்கள் பாராட்டுகள் யாவுமே இந்தக் கருத்துக்களத்திலே கள உறவாக உள்ள திருமதி கோமகனையே போய் சேரவேண்டும் . ஏனெனில் பல சந்தர்பங்களில் நான் மனம் வெறுத்துப்போய் கருத்துகளத்தை விட்டு மறைய முற்பட்டபொழுதெல்லாம் விடாப்பிடியாக நின்று தனது இதமான பேச்சுகளால் எனது ஆக்கு சக்கதியை அதிகரிக்கச் செய்தவர். இறுதியாக எனக்குப் பாராட்டுச் சொல்லிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி என்ற வார்த்தையின் அதியுச்ச வலுவுடைய வேறு சொல்லை அகராதியில் தேடியவாறு உங்கள் முன் எனது தலை சாய்கின்றது . அதே வேளையில் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் தமிழ் சிறியருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கின்றேன் . நன்றி வணக்கம் .
நேசமுடன் கோமகன்
நீண்ட காலத்தின் பின்பு யாழ் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே தெரிகின்றன . நீங்கள் முகத்தாரின் பாணியில் ஒருநாடகம் எழுதியதை நிட்சயம் பராட்டவேண்டும் . ஒரு கார் வாங்கப்போவதை " வெத்திலை போட வைக்கும் " பக்குவம் கண்டு பிரமிக்கின்றேன் . ஒரு கதைசொல்லிக்கான பக்குவத்தை விரைவில் அடைந்ததையிட்டு மகிழ்சி . மேலும் கிராமியத் தமிழில் எழுதும் பொழுது சிறிது அவதானம் வேண்டும் ( உ + ம் = டாக்டர் இட்டை = டாக்குத்தரிட்டை , டப்பாக் கார்ல போறனான்.= ஓட்டைக் காறிலை போறன் ,வச்சிருக்கன் = வைச்சிருக்கிறன் ) இவைகளையும் , எழுத்துப் பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள் . உங்கள் நாடகத்திற்குப் பாராட்டுக்கள் சுமே .
தொலையாத உரு
மாற்றத்திற்கில்லை ஓய்வு.
அவ்வப்போது அடுப்புத்தணலாக மூண்டெழுகிறது வயிறு.
ஓசைகள் தெறித்ததிரும் காதுச்சவ்வுகள்.
எவரெவவோ என் கனவுகளைப் பயங்கரங்களாக்கி மறைகின்றனர்.
நித்திரை தரும் இரவுப் பூதம்.
அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது.
தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம் அருகில் வருகின்றன.
நாடுமில்லை
இருப்பதற்கொரு வீடுமில்லை
இது என் பெயருமில்லை
அடையாளங்களற்ற நான் அகதியுமில்லையாம்.
உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து படிகளின்றி இறங்க
யாருமற்ற காட்டுக்குள் என்புகளைப் பாம்புகள் நொருக்குகின்றன.
முன் குவிந்த ஆடைகளிலிருந்து எதுவொன்றும் அணிய முடியவில்லை.
கடிகார முட்களின் வேகம் குரூரத்தைக் குத்துகிறது.
அந்தரித்த நித்திரையில் அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான்.
அதுவல்லாப் போதில் அந்நியம் சுற்றிக் கிடக்கிறது.
‘எதுவும் எதுவும் எனதல்ல. அதுவும் இதுவும் எனதல்ல. இதுவும் அதுவும் எனதல்ல’
நீ அந்நியமானவள் என்கிறது இம்மொழி.
தோல்நிறம் நீ எவளோவெனச் சொல்கிறது .
இவை உனக்கல்ல என்பதாக அலுவலகங்கள்.
மிரண்ட கண்களின் குற்றத்தால் அடையாளஅட்டை கேட்கப்படுகிறது.
தொலையட்டுமே என்று எறிபட்ட ஏதோ ஒரு உயிரினமாக
வீதிகளின் இருள் மறைவில் இன்னும் துலையாது அலைகிறது இவளுரு.
தர்மினி
http://thoomai.wordpress.com/2013/01/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81/