Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழரசு

  1. 18.03- கிடைக்கப்பெற்ற 16 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் மோகன் அருள்ராசா ஜெசிக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.2004 2ம் லெப்டினன்ட் மணிநேசன் (றீகமகன்) கனகரட்ணம் சுரேஸ்குமார் அம்பாறை வீரச்சாவு: 18.03.2001 2ம் லெப்டினன்ட் பாரதி இராசதுரை ஜெயசித்திரா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.1998 வீரவேங்கை பவிதன் காசிப்பிள்ளை மோகனதாசன் அம்பாறை வீரச்சாவு: 18.03.1998 கப்டன் சந்தோசம் சாமிநாதன் சிதம்பரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.1997 2ம் லெப்டினன்ட் கலையரசன் அன்ரனி யொனிபோல் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.1997 2ம் லெப்டினன்ட் கலைச்செல்வன் சோமசுந்தரலிங்கம் விஜயகுமார் திருகோணமலை வீரச்சாவு: 18.03.1997 லெப்டினன்ட் புவியரசன் சகாதேவன் அகலங்கன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.1997 வீரவேங்கை திவாகர் (பாலாஜி) துரைநாயகம் மோகனதாஸ் திருகோணமலை வீரச்சாவு: 18.03.1995 லெப்டினன்ட் சந்திரமோகன் (பீற்றர்) வேலுப்பிள்ளை கிருஸ்ணகுமார் வவுனியா வீரச்சாவு: 18.03.1995 வீரவேங்கை ஆண்டாள் யோகேஸ்வரி கந்தையா வவுனியா வீரச்சாவு: 18.03.1992 வீரவேங்கை பவளராசன் (பவளம்) இரத்தினம் ஞானம் மன்னார் வீரச்சாவு: 18.03.1992 மேஜர் ராஜித் செ.கனேசன் மட்டக்களப்பு வீரச்சாவு: 18.03.1991 கப்டன் மித்திரன் கந்தசாமி சிறீக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 18.03.1991 வீரவேங்கை கவி வேலாயுதம் பிரபாகரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 18.03.1991 வீரவேங்கை விஸ்வம் முத்துலிங்கம் கருணாநிதி கல்முனை, அம்பாறை. வீரச்சாவு: 18.03.1985
  2. இரண்டு நாட்கள் தொடர்ந்த எங்கள் உண்ணாவிரத போராட்டத்தின் அடுத்த கட்டமாய் நாளை (அன்னூர் சசூரி பொறியியல்) கல்லூரியில் வகுப்பு புறக்கணிப்பு போறாட்டம். சாலை மறியல் மற்றும் மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தனித்தமிழ் ஈழம் வெல்லும் வரை குறையப் போவதில்லை எங்கள் தனல் பொறியியல் மாணவர்கள் என்பதாலோ ஊடங்களால் மறைக்கப்டுகிறோம் நாங்கள் உதவி தேவை - முகநூல்: Loyolahungerstrike -
  3. இலங்கைக்கு எதிராக ஆந்திரவாழ் தமிழர்கள் போராட்டம் இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தை ஆதரித்து, ஆந்திர வாழ் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத்தின் மாதாபூரில் உள்ள ஹைடெக் சிட்டி என்ற இடத்தில், இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை, பிற மாநில மக்களும் அறிந்து கொள்ளும் வகையில், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்தும் விநியோகித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19613:2013-03-17-13-12-34&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  4. 6-வது நாளாக தொடரும் உண்ணாவிரதம் திருச்சியில் ஒருவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை அனுமதி தொடர்ந்து 6 நாட்களாக தொடர் உண்ணாநிலை போராட்டம் இருந்து வரும் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்களில் முகமது ஜெப்ரி என்ற மாணவர் இப்பொழுது கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். மருத்துவமனையிலும் அவர் தனது உண்ணாநிலையை தொடர்ந்து வருகிறார். சமூக ஆர்வலர்களும்,தமிழ் உணர்வாளர்களும் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும் அவர் தனது நிலையில் உறுதியாக உள்ளார். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19610:6------------&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
  5. உணர்வை வெளிப்படுத்திய கடலூரைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரிகள்... ராஜபக்சவுக்கு எதிராக கரறுப்பு பட்டியுடன் மீன் வியாபாரம் File Photo கடலூரைச் சேர்ந்த பெண் மீன் வியாபாரிகள், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவுக்குக் கண்டனம் தெரிவித்து கரறுப்பு பட்டியை தங்களது ஜாக்கெட்டில் அணிந்து கொண்டு வியாபாரம் செய்தது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. ராஜபக்சவுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மாணவர்களே இந்தப் போராட்டத்தை உணர்வெழுச்சியுடன் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் பெண் மீன் வியாபாரிகளும் கரறுப்பு பட்டி அணிந்து தங்களது உணர்வை வெளிப்படுத்தினர். கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொல்வதை கண்டித்தும், இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர் குற்றவாளியாக அறிவித்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடலூர் மீன் சந்தையில் மீன் விற்கும் பெண்கள் இன்று கரறுப்பு பட்டி அணிந்து மீன்விற்றனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட மீன் விற்கும் பெண்கள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கரறுப்பு பட்டி அணிந்து இருந்தனர். இதை அனைவரும் பார்த்து நெகிழ்ந்தனர். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/89741/language/ta-IN/article.aspx
  6. ஒரே நாள் திட்டமிடலில் முகநூல் வழியாக, நம் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்று நடைபெற்ற எங்களது ஹைதராபாத் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிர்பார்க்காத சிறப்பம்சங்கள்: 1. காவல்துறை அனுமதி மறுக்கபட்ட பின்னும் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மாதாப்பூர், ஹைதராபாத்தில் போராட்டம் தொடங்கியது. 2. மதியம் 2 மணிக்கு காவல்துறை போராட்டத்தைக் களைக்க நிர்பந்திக்கவே, போராட்டம் இந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டு மாலை 5 மணிவரை தொடந்தது. 3. 60 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர். 4. புதியதலைமுறை, GTV , போன்ற தமிழ் தொலைக்காட்சிகளோடு, டிவி 9 என்ற தெலுங்கு தொலைகாட்சி நிருபர்களும் செய்தி சேகரித்து ஒளிபரப்பினர். 5. அப்துல்காதர் என்ற தோழர், தனது 60 வயது தாய், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். போராட்டம் இடமாற்றம் அடைந்தபோது, இவர்கள் கஷ்டப்படாமல் வீட்டிற்கு போகச் சொல்லியும், அதை மறுத்து போராட்டம் முடியும்வரை உண்ணாவிரதத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர். 6. அந்த சிறு குழந்தைகளும் உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தனர். 7. கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் படத்தைப் பார்த்ததும், சுமார் 8 வயது நிரம்பிய தோழர் அப்துல் காதர் அவரின் குழந்தை அழுதுவிட்டது 8. 450 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இரவு முழுதும் பயணித்து ஒரு தமிழ் நண்பர் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார். 9. புதியதலைமுறை தொலைக்காட்சி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பிய செய்தியை பார்த்து, 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு தோழர், போராட்டம் முடியும் நேரத்தில் கலந்து கொண்டார். 10. நமது கோரிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. 11. ஈழம் தொடர்பான கொடுமைகளை ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மக்களுக்கு தோழர்கள் விவரித்தனர். 12. ஈழக் கொடுமைகளை கேட்டறிந்தபின், இரண்டு வடமாநில மற்றும் தெலுங்கு நண்பர்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் அமர்ந்து பங்கெடுத்தனர். 13. ஹைதராபாத் திருக்குறள் தமிழ்ச்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர். 14. ஈழம் தொடர்பான உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் அவரவருக்கு தெரிந்த ஈழ வரலாற்று நிகழ்வுகளையும் 2 மணி நேரம் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 15. அழுத அந்த குழந்தை கடைசியில் எங்களிடம் கேட்டது, அடுத்த போராட்டம் எப்போது என்று ? - முகநூல்: Loyolahungerstrike -
  7. திண்டுக்கல் மாவட்டம் R.V.S கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில்...தனி ஈழம் ஒன்றே தீர்வு என முழங்குவோம்....வாழ்க தமிழ் தொடர்புக்கு: மா.காளிமுத்து 9159413418 - முகநூல் : loyolahungerstrike -
  8. 17.03- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். மேஜர் கண்ணகி (அமுதமொழி) சிங்கராசா சுயாதினி (தயாளினி) கிளிநொச்சி வீரச்சாவு: 17.03.2003 மேஜர் திருநாதன் (ஜிப்பரி) பெரியசாமி சிவகுமார் திருகோணமலை வீரச்சாவு: 17.03.2001 லெப்டினன்ட் வசந்தன் கோவிந்தன் சிவநேசன் அம்பாறை வீரச்சாவு: 17.03.2000 லெப்டினன்ட் அருள்மணி சிவராசா அற்புதராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.2000 லெப்டினன்ட் அன்பரசன் இராமையா மகேந்திரன் திருகோணமலை வீரச்சாவு: 17.03.2000 வீரவேங்கை மங்கையன் விக்கினேஸ்வரன் லக்ஸ்மன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.2000 மேஜர் மூத்தவன் கிருஸ்ணன் கிருபாகரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.2000 மேஜர் கோமகன் (பழனி) சின்னத்துரை அரவிந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.2000 2ம் லெப்டினன்ட் நந்தாகரன் சீனித்தம்பி யோகேஸ்வரன மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1998 2ம் லெப்டினன்ட் மதிசூடி இராசமாணிக்கம் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1998 வீரவேங்கை தவேந்திரன் செல்லத்தம்பி உதயமோகன் அம்பாறை வீரச்சாவு: 17.03.1998 வீரவேங்கை வினோதா முருகேசு கௌரிதேவி வவுனியா வீரச்சாவு: 17.03.1998 கப்டன் அகிலன் மயில்வாகனம் குணசீலன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1998 2ம் லெப்டினன்ட் தரணிதரன் இந்திரராசா ஜெயந்திரராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1997 வீரவேங்கை எழிலமுதன் தங்கராசா சிறீதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1997 வீரவேங்கை குமணன் நவரத்தினம் நந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1997 கடற்புலி வீரவேங்கை வீரத்திலகன் (சிந்துபைரவன்) தவராசா சபேஸ்கரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1997 கப்டன் சோமு செல்லையா கிருஸ்ணகோபால் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1994 2ம் லெப்டினன்ட் சதா வடிவேல் இன்பராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1994 லெப்.கேணல் ரவி குமரவேல் இரவீந்தரகுமார் முல்லைத்தீவு வீரச்சாவு: 17.03.1994 கப்டன் சேந்தன் சிவபாலசுந்தரம் விக்கினேஸ்வரராசா முல்லைத்தீவு வீரச்சாவு: 17.03.1994 வீரவேங்கை நவமுரளி திருத்தணியாசலம் விமலநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1993 கப்டன் சேது சின்னத்துரை ரவிச்சந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் விதுரன் கந்தையா ஜீவா(நம்பியார் மலையகம், சிறிலங்கா வீரச்சாவு: 17.03.1992 லெப்டினன்ட் தீபன் சுந்தரம் சுதாகரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை தங்கப்பன் கந்தையா சுவேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் செம்மனச்செம்மல் (குரு) வீரசிங்கம் ஜெயராசா அம்பாறை வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் புவியழகன் லுவிஸ் மாத்துள் மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் தகையான் (தாஸ்) ஆரியரத்னலால்சிறி ஆரியதிலக மட்டக்களப்பு வீரச்சாவு: 17.03.1992 கப்டன் குகனேஸ்வரன் (சுசீலன்) அந்தோனி ஸ்ரான்லி முல்லைத்தீவு வீரச்சாவு: 17.03.1992 லெப்டினன்ட் ஈழவன் அரியரத்தினம் பிரதீப்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் ஆண்டகை சிவசுந்தரம் சுரேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் இளம்சேரலாதன் கனகசபை கணேஸ்குமார் திருகோணமலை வீரச்சாவு: 17.03.1992 2ம் லெப்டினன்ட் இராசன் வல்லிபுரம் கேமராசா யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை இராமநாதன் சிவலிங்கம் சிவபாலன் கிளிநொச்சி வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை கூர்வேல் சுந்தரம்பிள்ளை விஜயகுமார் கிளிநொச்சி வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை இளங்குன்றன் அப்புலிங்கம் ஜெகதீஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை ஞானி இராசரத்தினம் வைகுந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 17.03.1992 வீரவேங்கை றமணன் கணபதிப்பிள்ளை இலட்சுமணன் பொத்துவில், அம்பாறை. வீரச்சாவு: 17.03.1988 வீரவேங்கை றிஸ்வான் மாமாங்கம் தெட்சிணாமூர்ததி திருப்பழுகாமம், மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.03.1988 லெப்டினன்ட் ஜீவா (கேதீஸ்) திருச்செல்வம் விஜயானந்தன் குருநகர், யாழ்ப்பாணம். வீரச்சாவு: 17.03.1987 லெப்டினன்ட் லவன் செல்லப்பா பாக்கியநாதன் நிந்தவூர், மட்டக்களப்பு. வீரச்சாவு: 17.03.1987 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  9. அணைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் இல்லங்களும் முற்றுகை இடப்படும் ! விரைவில் இடம் நேரம் நாள் அறிவிக்கப்படும் ! - முகநூல் -
  10. மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அருள்ராஜன் தலைமையில் 20 பேர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். சனிக்கிழமை 3வது நாளில் 9க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். -முகநூல் -
  11. 16.03- கிடைக்கப்பெற்ற 42 மாவீரர்களின் விபரங்கள். வீரவேங்கை கருணாகரன் (வேந்தன்) மாயவன் இராசேந்திரம் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1999 வீரவேங்கை திருமாறன் சுப்பிரமணியம் பரணிதாஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1998 2ம் லெப்டினன்ட் இன்பசாகரன் (நவக்குமார்) கனபதிப்பிள்ளை சந்திரகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1998 கப்டன் கண்ணாளன் சுப்பையா தர்மேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1998 மேஜர் நக்கீரன் (வலை) பாலசிங்கம் பஞ்சநாதன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1998 மேஜர் அருளப்பு ஞானமுத்து அருளம்பலம் அம்பாறை வீரச்சாவு: 16.03.1996 மேஜர் சுசியன் (றோய்) ஜெகநாதன்பிள்ளை மகேந்திரன் பொலநறுவை, சிறிலங்கா வீரச்சாவு: 16.03.1996 லெப்டினன்ட் வண்ணன் தம்பிராசா மோகன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1996 2ம் லெப்டினன்ட் ரவிச்சந்திரன் தம்பிரசா தவராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1996 கப்டன் உலகநம்பி பனான்டோ பேனாட் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1996 லெப்டினன்ட் சின்னவன் இராசரட்ணம் சிவசங்கர் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1996 லெப்டினன்ட் கதிர்காமன் செல்லத்துரை சிறிதரன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.03.1996 லெப்டினன்ட் பரமசிவம் (கிருமானி) திருச்செல்வம் லெட்சுமிகாந்தன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 லெப்டினன்ட் நாதன் நாகமணி குழந்கைவேல் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 லெப்டினன்ட் மலர்விழியான் (மிதுரன்) அழகையா கலைச்செல்வன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 லெப்டினன்ட் சுமங்கலன் (யோகேஸ்) வேலன் பரமேஸ்வரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 2ம் லெப்டினன்ட் மைக்கல்ராஜ் யோகராஜா சுரேஸ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 2ம் லெப்டினன்ட் தனுகரன் தம்பிராஜா செந்தில்குமார் அம்பாறை வீரச்சாவு: 16.03.1994 2ம் லெப்டினன்ட் சிவசீலன் கோதைநாயகம் சுஜிதரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 2ம் லெப்டினன்ட் கலியுகவரதன் (தேவலிங்கம்) வடிவேல் சிவகுமார் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை ஈழவேந்தன் கந்தலிங்கம் கணேசலிங்கம் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை அன்புராஜ் ரவீந்திரன் (ரவிக்குமார்) மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை ஞானசேகரம் (ஞானசேகர்) சுந்தரம் மதிவதனன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை உதயரஞ்சன் இளையதம்பி உதயன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை தங்கரதன் பாலசிங்கம் துரைராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை பாவேந்திரன் சங்கரப்பிள்ளை சண்முகநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை றீககுமார் சிற்றம்பலம் பாக்கியராசா மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை உரிமைகீதன் வினாயகமூர்த்தி பிரகலாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை அலையரசன் கந்தையா தமேந்திரன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை செந்தில் இராசரட்ணம் கவிராஜ் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 வீரவேங்கை வர்ணகுலன் (சுனில்) பூபாலப்பிள்ளை சிவநாதன் மட்டக்களப்பு வீரச்சாவு: 16.03.1994 கப்டன் மகேஸ் (தியாகு) சூசை நேசம்டலிமா மன்னார் வீரச்சாவு: 16.03.1992 லெப்டினன்ட் மன்னன் நடராசா தயாளகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1992 வீரவேங்கை கர்ணன் வேலுப்பிள்ளை விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 16.03.1991 வீரவேங்கை அனஸ் ஆறுமுகம் ஜெகாநந்தராசா கிளிநொச்சி வீரச்சாவு: 16.03.1991 வீரவேங்கை மேனன் வேலுச்சாமி ஜெகதீசன் முல்லைத்தீவு வீரச்சாவு: 16.03.1990 வீரவேங்கை பத்மநாபன் பி.பத்மநாபன் திருச்சி, தமிழகம். வீரச்சாவு: 16.03.1988 வீரவேங்கை மகாலிங்கம் அலெக்சாண்டர் சிறில் சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு வீரச்சாவு: 16.03.1987 2ம் லெப்டினன்ட் ரவி தேவராஜ் அக்கரைப்பற்று, அம்பாறை. வீரச்சாவு: 16.03.1987 வீரவேங்கை ரஞ்சன் தம்பையா விமலரஞ்சன் குமுழமுனை, மணலாறு. வீரச்சாவு: 16.03.1987 வீரவேங்கை பரன் வேலுப்பிள்ளை தர்மலிங்கம் தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு. வீரச்சாவு: 16.03.1986 வீரவேங்கை சங்கர் பாலகிருஸ்ணன் சந்திரசேகரி தம்பசிட்டி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம். வீரச்சாவு: 16.03.1986 தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 42 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!! இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!
  12. தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள். ஓயாத அலை, அணையாத தீ !
  13. ஒரு கிராமத்தின் போராட்டம். செங்கல்பட்டு அருகில் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் காட்சி.
  14. எங்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது! ராஜபக்சே உருவபொம்மையை எரித்து மாணவர்கள் கோஷம்! இலங்கையில் போர்க்குற்றம் புரிந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்ற விசாணைக்கு உட்படுத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் 14, 15.03.2013 ஆகிய இரண்டு நாட்கள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் உண்ணாவிரதத்தை முடிக்கும் நேரத்தில் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும், விடுதியில் மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் செய்தி வெளியானது. இதையடுத்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள், தங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது ராஜபக்சே உருவபொம்மையை எரித்தனர். இரண்டு நாட்களாக மாணவர்களின் உண்ணாவிரத்தின்போது, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்தது குறிப்பிடத்தக்கது. செய்தி, படங்கள்: ஜெடிஆர்
  15. ஈழத்தமிழர்களிற்கு நீதி கிடைக்க வலியுறுத்தி தமிழகம் எங்கும் மாணவர்களது போராட்டம் வீரியம் பெற்றுவரும் நிலையில் திருச்சி மாணவர்களது போராட்டமும் தொடர்ந்துவருகின்றது. திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 21பேர் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்நிலையில் அவர்களிற்கு ஆதரவாக ஏனைய சட்டக்கல்லூரி மாணவர்களும் திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்களும் இணைந்து தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேரணியாக புறப்பட்ட இருநூற்றிற்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது பேரணியாக சென்று ஆங்காங்கே சாலைமறியல் போராட்டத்தை நடத்தியதுடன் மத்திய அரசின் அலுவலகங்களையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளார்கள். திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகமான வருவாய்த்துறை அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டங்களின் போது ஆவேசமாக கோசமெழுப்பிய மாணவி ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இருந்தும் மாணவர்களது போராட்டம் உறுதியுடன் தொடர்தது. ஈழதேசம் இணையத்தள தமிழக செய்திப் பிரிவு. ஈழதேசம் இணையம். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19572:2013-03-15-16-28-37&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.