Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி! அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி! மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி! மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி! எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி! இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி! குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி! குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1 அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும் நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன் என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1 அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம் நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2 அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும் கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும் வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன் விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3 வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர் மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்? அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப் பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4 வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந் தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5 எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும் பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால் கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந் தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6 எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல் தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண் டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7 யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர் தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில் ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8 இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில் வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல் அற்பக் குழியி லரவ மிருப்பதெனும் கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9 ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும் பானமதை யுண்டு பசியினால் - ஞானமது கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும் உண்டால் அமிர்தரச முண். 10 சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன் காலனவர்க் கேமரணங் காண். 11 வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில் நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப் பாலுமது நெய்யெனவும் பார். 12 முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப் பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13 காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின் மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக் காலமென்னி ரண்டாண்டில் காண். 14 கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும் உள்ளமதி லுண்டென்றே உன். 15 என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக் கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின் வீரியமா யானுணரு மெய். 16 உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால் மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால் கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச் சொற்பாயும் வாசியில் தேகம். 17 அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல் அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும் கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு விண்டறிய லாமே விதி. 18 எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத் தேக மொழியாமல் சித்தி பெறுஞானம் யோகசித்தி போசைவிதி யுன். 19
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய......
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் விடுவிக்க வல்லவரே – 2 எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும் விடுவிக்க வல்லவரே – 2 1. நம்மை காக்கின்றவர் தூதரை அனுப்பிடுவார் அக்கினி ஜுவாலையிலே அவியாமல் காத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) 2. நம்மை அழைத்தவரோ கைவிடவே மாட்டார் கலங்காமல் முன் சென்றிட கரம் பற்றி நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2) 3. சத்துருவின் கோட்டைகளை தகர்த்திட உதவி செய்வார் தயங்காமல் முன்சென்றிட தாங்கியே நடத்திடுவார் இடைவிடாமல் ஆராதிப்போம் நம் வாழ்வில் என்றும் ஜெயமே (2)
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஐயாயிரம் ஆண்டுகள் முன்னே நடந்தது அரபு நாட்டில் ஓர் தியாகம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தலை எழுத்தை மாற்றிவிடும் பிள்ளையார் சுழி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நான் அனாதை என்று அழுதேன் நீ அனாதையில்லை எந்தன் சொந்தம் என்றீர் ஐயா அனாதை என்று அழுதேன் 1. காணாமற் போன ஆடாய் அலைந்தேன் கர்த்தாவே உந்தன் கண்கள் கண்டது மார்போடு அணைத்தீர் மந்தையில் சேர்த்தீர் மகிமை செலுத்திடுவேன் 2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் கிடந்தேன் நான் கதறி முறையிட்டு அழுதேன் கருத்தாய் விசாரித்தீர் கண்ணீரை மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன் 3. மாராவின் தண்ணீர் போன்ற வாழ்க்கை அது மதுரமாக மாறாதென்று மலைத்தேன் மாராவின் தண்ணீரை மதுரமாய் மாற்றினீர் மகிமை செலுத்திடுவேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உதயங்கள் எல்லாம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணனைத் தேடி வந்த ராதையும் நானே காணமல் நீண்ட காலம் வாடுகின்றேனே .....!
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி கப்பிய கரிமுக, னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ கற்பக மெனவினை, கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன் மற்பொரு திரள்புய, மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு, பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய, முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம் அச்சது பொடிசெய்த, அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும் அப்புன மதனிடை, இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள், பெருமாளே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாரியாத்தா முத்து மாரியாத்தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணாலே கண்டதும் கொஞ்சம் காதலே கேட்டதும் கொஞ்சம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பஞ்சமுகநாதனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும் சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே பரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் உன்னைக்காக்கவல்லோர் காக்கும்வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே 2. ஐயம் மிருந்ததோர் காலத்தில் ஆவி குறைவால்தான் மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன் என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார் முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்கவல்லோர் 3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார் என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஏகன் உண்மை தூதரே
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஈத் ஸ்பெசல் 😋 பிரியாணி
-
நகைச்சுவைக் காட்சிகள்
- உணவு செய்முறையை ரசிப்போம் !
கடல் உணவு கொத்து சுலபமான முறையில் தேவையான பொருட்கள்: 500g மைதா மா 250ml சமையல் எண்ணை தேவைக்கேற்ப உப்பு 5 முட்டை 500g கணவாய் 500g இறால் 5 பெரிய வெங்காயம் 10 பச்சைமிளகாய் கறிவேப்பிலை 4 tbsp கறித்தூள் 1/2tbsp மஞ்சள் தூள் 1 sp கடுகு 1 sp வெந்தையம் 1 எலுமிச்சை- இறைவனிடம் கையேந்துங்கள்
கண கண கண கணபதி- இறைவனிடம் கையேந்துங்கள்
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.- இறைவனிடம் கையேந்துங்கள்
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)- இறைவனிடம் கையேந்துங்கள்
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் ( 2 ) பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2 ) மண்ணான மனுவுக்கு மன்னாவை அளிப்பது லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் ( 2 ) தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் 3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் ( 2 ) இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் ( 2 ) உமக்கு அது லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் இயேசுவுக்கு லேசான காரியம் என் இயேசுவுக்கு லேசான காரியம் ( 2 )- இறைவனிடம் கையேந்துங்கள்
இறையைத் தேடாத மனமும்- இறைவனிடம் கையேந்துங்கள்
(செஞ்சுருட்டி ராகம்) ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி ஆகம வே…த கலாமய ரூ…பிணி அகில சராசர ஜனனி நாராயணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே (புன்னாகவராளி ராகம்) பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும் பாடிக் கொண்டாடும் .அன்பர் பதமலர் சூடவும் பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆ..டவும் பாடிக் கொண்டா-டும் .அன்பர் பதமலர் சூடவும் உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும் உலகம் முழுதும் எனது அகமுறக் காணவும் ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே (நாதநாமக்ரியை ராகம்) உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய் உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய் நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய் நிழல் எனத் தொடர்ந்த முன்ஊழ் கொடுமையை நீங்கச் செய்தாய் நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே (சிந்து பைரவி ராகம்) துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய் தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் தொடர்ந்த முன் மாயம் நீக்கி பிறந்த பயனைத் தந்தாய் அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய் அடைக்கலம் நீயே அம்மா.... அம்மா அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வே…த கலாமய ரூ…பிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஸ்ரீலலிதாம்பிகையே ஏஏஏஏஏஏஏஏஏஏஏ அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்.. பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்.. குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்.. பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே! திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக! குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக! (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம் அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம் அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம் (அலைமகளே வருக) மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம் ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம் அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்! சங்கு சக்ரதாரி நமஸ்காரம்! சகலவரம் தருவாய் நமஸ்காரம்! பத்ம பீட தேவி நமஸ்காரம்! பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!- இறைவனிடம் கையேந்துங்கள்
(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு) நீலகண்டன் நெற்றிக் கண்ணில் நெருப்பு வடிவாகத் தோன்றி நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு) விழிகளொரு பன்னிரண்டு உடையவனே என்று சொல்லி விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு) உலகமென்னும் கடல் தனிலே உடல் என்னும் ஓடமது உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு) ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு) கருணையே வடிவமான கந்தசாமித் தெய்வமே உன் கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு) நெற்றியிலே நீறணிந்து நெறியாக உனை நினைந்து பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு) நெஞ்ச மதில் வஞ்சமின்றி நிர் மலனே நின்னடியைத் தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு) ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு) திருப்புகழைப் பாடி உந்தன் திருவடியைக் கைதொழுது திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) கந்தர நுபூதி பாடி கந்தனே உன் கழலடியைக் கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) மந்திரமும் தந்திரமும் மருந்துமாக நின்ற உந்தன் மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு) தெள்ளு தினை மாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு) வடிவேலா என்று தினம் வாழ்த்துகின்ற அடியவர்க்கு கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு) பரங்குன்று செந்திலும் பழனி மலை ஏரகம் பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு). - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.