Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சிறிலங்காவுடனான வர்த்தக செயற்பாட்டினை இந்தியா இழந்துவிடக் கூடாது'

Featured Replies

சிறிலங்காவுடனான வர்த்தக செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா முதன்மை நிலை வகிக்கின்றது. இந்த நிலையை இந்தியா ஒருபோதும் இழந்துவிடக் கூடாது.

இவ்வாறு சிறிலங்காவிற்கு பயணம் செய்த The Hindu Business Line செய்தியாளர் எம்.ரமேஷ் எழுதியுள்ளார். அதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

கடந்த வாரம் சிறிலங்காவுக்கு சென்றிருந்த போது, இந்த எழுத்தாளர் சிறிலங்காவைச் சேர்ந்த இராஜதந்திரி ஒருவரை தொடர்பு கொண்டு உரையாடலை மேற்கொண்டிருந்தார்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலைமையில் சிறிலங்காவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருந்ததை சிறிலங்கர்கள் எவ்வாறு நோக்குகின்றனர்?

பதில்: இந்தியா தம்மை ஏமாற்றிவிட்டதாக சிறிலங்கர்கள் கருதுகின்ற அதேவேளையில், இந்தியா சந்திக்கும் அரசியல் நிர்ப்பந்தங்கள் தொடர்பாகவும் அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள்.

கேள்வி: உண்மையில் இந்தியாவின் இத்தீர்மானமானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?

பதில்: சிறிலங்கா இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததால், இந்தியா பேரவையின் வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டி ஏற்பட்டது.

கேள்வி: சிறிலங்காவுக்கு எதிராக தற்போது இந்தியா வாக்களித்ததன் மூலம் தற்போது சிறிலங்காவானது தனது வாக்குறுதியை நிறைவேற்றுமா?

பதில்: இந்தியா சிறிலங்காவில் நிலையான தீர்வொன்றை எட்டுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக முயற்சித்தது. இதனை விட வேறு முயற்சிகள் எதையாவது செய்ய முடியுமா?

கேள்வி: சிறிலங்கா தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை என நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? புனர்வாழ்வு என்ற பெயரில் வீதிகள் மற்றும் பாடசாலைகள் புனரமைக்கப்படுகின்றன. இது தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: இவை எல்லாம் உண்மை. ஆனால் அடிப்படைப் பிரச்சினை தற்போதும் காணப்படுகின்றது.

கேள்வி: எந்தப் பிரச்சினை?

பதில்: இனப் பாகுபாடு.

சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததன் மூலம் அல்லது வாக்களிக்காது விட்டிருந்தால் சிறிலங்காவில் நிலவிய இனப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இது உதவியாக உள்ளதா? என சிறிலங்காவில் விவாதம் ஒன்றை மேற்கொண்டேன்.

இவ்வாறான விவாதம் ஒன்றின் பெறுபேறானது எந்தவொரு பயனுள்ள தீர்வையும் எட்டுவதில்லை. ஆனால் சிறிலங்காவில் வாழ்கின்ற பலருடன் இது தொடர்பாக நான் பல்வேறு விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் மேற்கொண்டேன். இவ்வாறான முயற்சியின் ஊடாக சிறிலங்காவில் நிலவும் இனப் பாகுபாடு தொடர்பில் விழிப்புணர்வையாவது ஏற்படுத்த முடியும் என நான் எண்ணிக் கொண்டேன்.

சிறிலங்கா அரசாங்கம் இன்று வெற்றி மமதையில் உள்ளதாக சிறிலங்கா நாடாளுமன்றின் எதிர்க்கட்சி உறுப்பினரான கலாநிதி கர்சா டீ சில்வா கூறினார். "அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக குறைந்தது கலந்துரையாடல்களைக் கூட மேற்கொள்வதில் விருப்பம் கொண்டிராதா நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்" என அவர் மேலும் கூறினார்.

"வீதியை புனரமைத்தல் நல்லது. ஆனால் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் என்பது மிக முக்கியமானது. ஆனால் இது இன்னமும் நிறைவேற்றப்படவில்லை" என பௌத்த சிங்களவரான கலாநிதி டீ சில்வா குறிப்பிட்டார்.

இந்தியாவைப் பொறுத்தளவில் மாநில அரசுகளிடம் காவற்துறை அதிகாரம் காணப்படுகின்றது. இந்திய மத்திய அரசு, மாநில காவற்துறையைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை. சிறிலங்காவின் வடக்கு, கிழக்கை ஒன்றுசேர்த்தல் போன்ற சில கோரிக்கைகளை நிறைவேற்றுவது கடினமான செயலாகும். ஆனால் இவ்வாறான கோரிக்கைகளை விட மிக இலகுவாக, சாதரணமாக நிறைவேற்றக் கூடிய பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறிலங்கா கைக்கொள்கின்ற சில வழிமுறைகள் வரவேற்கப்படக் கூடியவை. ஆனால் பொது மக்களின் அரசியற் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு செயற்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கையாளுவதை விட மக்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான அணுகுமுறைகள் மக்கள் மத்தியில் பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, சிறிலங்காவின் வடக்கில் வாழும் மக்கள் ஒரு இடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்கு பயணம் செய்ய வேண்டுமாயின் பல மணித்தியாலங்கள் செலவிட வேண்டியுள்ளது. இது மக்களை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது. அதாவது சிறிலங்காவில் தற்போதும் இனப்பாரபட்சம் நிலவுகின்றது என்பதையே இது சுட்டிநிற்கின்றது. காணாமற் போன தமது உறவுகளை மக்கள் தேடுகின்றனர். இதனால் இவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான மக்களுக்கு 'உளவியல் மீளிணக்கப்பாடு' மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியமானதாகும். உண்மையில் இந்த விடயம் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

பதிலாக, சிறிலங்கா அரசாங்கமானது தனது முழு வளத்தையும், வலுவையும் பொருளாதார அபிவிருத்திக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியாவின் பார்வையில் இது தேவையான ஒன்றாகும். தனது அயல்நாட்டில் 20 மில்லியன் மக்கள் வாழ்வதால் தனது சந்தையை, வர்த்தக செயற்பாடுகளை விரிவாக்கிக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை இந்தியா கொண்டுள்ளது. சிறிலங்கா இந்தியாவுடன் பெரிதளவில் போட்டியிடவில்லை. சுற்றுலாத்துறை, தேயிலை மற்றும் இரத்தினக்கற்கள் போன்றவற்றில் சிறிலங்கா செழுமை பெற்றுள்ளது.

ஆகவே பொருளாதார அபிவிருத்தி நல்ல முறையில் காணப்படுகின்றது. ஆனால் இந்தியாவனது சிறிலங்காவில் தொடர்ந்தும் நிலவும் இனப்பாகுபாட்டை சகித்துக் கொண்டு வாழமுடியாது. இதனால் இந்தியாவானது சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இந்தியாவானது சிறிலங்காவில் தனது பொருளாதார ஈடுபாட்டை மேலும் அதிகரித்துக் கொண்டு, இங்கு இடம்பெறும் இனப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருவதில் செல்வாக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில், சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததானது பெரியளவில் பாதிப்பைக் கொண்டு வரவில்லை என்பது நல்வாய்ப்பாகும்.

சிறிலங்கர்கள் இந்தியாவின் அரசியல் நிர்ப்பந்தத்தை விளங்கிக் கொள்கிறார்கள். சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க மாட்டாது என சிறிலங்கர்கள் நம்பியிருந்தனர். ஆனால் இந்தியா பேரவையின் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. ஆனால் இதனால் பெரியளவில் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.

ஆனால் உண்மையில், இந்தியாவானது சிறிலங்கா மீது செல்வாக்குச் செலுத்துவதற்கான நல் வாய்ப்பைக் கொண்டுள்ளது. சீனாவின் சிறிலங்கா மீதான பொருளாதார முதலீட்டை விட இந்தியாவின் நடவடிக்கைகள் மிக ஆழமான, பரந்துபட்ட ஒன்றாக காணப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, சிறிலங்காவின் எரிபொருட் சந்தையில் 35 சதவீதமானவை இந்திய எண்ணெய் வள கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமானதாகும்.

இதேபோல் சிறிலங்காவிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுக்கப்படும் தொலைபேசி அழைப்புக்கள் 1:4 என்ற விகிதாசாரத்தில் Tata தொடர்பாடல் சேவையின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டு யுத்தமானது 2009 ல் நிறைவுக்கு வந்ததன் பின்னர் சிறிலங்காவில் அதிக முதலீட்டை இந்தியா மேற்கொண்டுள்ளது. அதாவது 1.5 பில்லியன் அமெரிக்க டொலராகும். சிறிலங்கா தனக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2011 இல், இந்தியாவிலிருந்து 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்களை (519 மில்லியன் டொலர் பெறுமதியான ஏற்றுமதிக்கு எதிராக) சிறிலங்கா இறக்குமதி செய்துள்ளது. ஓப்பீட்டளவில் சீனாவிலிருந்து குறைந்தளவான பொருட்களே இறக்குமதி செய்யப்படுகின்றன. 2011 இன் முதல் அரை ஆண்டில், சீனாவிலிருந்து சிறிலங்கா 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்திருந்தது. ஏற்றுமதி 68 மில்லியன் டொலராகும்.

இதேபோன்று சிறிலங்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பிரயாணிகளில் இந்தியர்கள் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். 2011 ல் 855,000 சுற்றுலாப் பிரயாணிகள் இந்தியாவிலிருந்து சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்தனர். சிறிலங்காவில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கும் அதேவேளையில், இந்தியா ஒவ்வொரு விடயத்திலும் தனக்கான செல்வாக்கை அதிகரித்து வருகின்றது.

சிறிலங்காவில் இந்தியா எவ்வாறான முதலீடுகளை மேற்கொண்டுள்ளது என்பதை நோக்கில் இது தெளிவாகும். இந்தியாவின் Renuka Sugars: 220 மில்லியன் அமெரிக்க டொலர்களை அம்பாந்தோட்டை சீனித்தொழிற்சாலைக்காக முதலிட்டுள்ளது. இலகு கடன் திட்டத்தின் கீழ் சில தொடரூந்துப் பாதைகளை செப்பனிடுவதற்காக இந்தியாவின் IRCON சிறிலங்காவில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட்டுள்ளது. இதே போன்று, NTPC நிறுவனத்தின் சம்பூர் அனல் மின் திட்டம், 250 மில்லியன் டொலர்கள் செலவில் அமைப்பதற்கான இந்திய முதலீடு.

ஆனால் இந்தியாவானது இவ்வாறான திட்டங்கள் தொடர்பில் விரைவாகச் செயற்படவேண்டும். அதாவது NTPC திட்டம் போன்று தாமதமடையும் சில திட்டங்களை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆகவே சிறிலங்கா மீதான இந்தியாவின் பொருளாதார முதலீடுகள் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளதால், இந்தியா இவ்வாறான நல் வாய்ப்பை தவற விடக்கூடாது. இந்தியாவானது தனது அயல்நாடான சிறிலங்காவில் வாழும் 20 மில்லியன் மக்களுக்கான சந்தை வாய்ப்பை நிலையாக பற்றிப் பிடித்திருக்க முயற்சிக்கும் அதேவேளையில், இவ்வாறான முயற்சிகளை இந்தியாவானது தனது சொந்த நலனை நோக்காகக் கொண்டாவது செயற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20120412105983

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன பெரிய வர்த்தகம். 

காந்தி : அஞ்சு ரூபாக்கு சேஞ் இருக்கா?

பண்டார: நஹி. ஒரு ரூபாக்கு சல்லி இருக்கா?

காந்தி: நோ,  வா சேர்ந்து போய் பிச்சை எடுப்பம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.