Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா: உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவாலாகவே உள்ளது!

Featured Replies

உள்நாட்டு பாதுகாப்பு தற்போதும் பாரிய சவால் மிக்க ஒன்றாக உள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்விகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர்கள் சிலரின் கோரிக்கையின் பிரகாரம் சர்ச்சைக்குரிய தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பாக அடுத்த மாதம் 05ஆம் திகதி கலந்துரையாடவுள்ளதாகவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த மாநில முதலமைச்சர்களின் மாநாடு டெல்லியில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இம்மாநாட்டில் ஆரம்ப உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாத அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் உள்ளதாக தனதுரையில் சுட்டிக்காட்டிய இந்தியப் பிரதமர், இது தொடர்பான நிலையான விழிப்பு தேவையென கூறியுள்ளார்.

அத்துடன், ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரதேசங்களின் பாதுகாப்பு நிலைமைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்ட மன்கோகன் சிங், வடக்குக் கிழக்கு நிலைமைகள் தொடர்ந்தும் சிக்கல் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஏனைய உள்நாட்டு பாதுகாப்பு விடயங்களைப் போல், தீவிரவாதத்தை சமாளிப்பதற்கு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த முயற்சிகளை தேவை எனவும் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

இம்மாநாட்டில் தமிழ் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து விவாதிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இவ்விவகாரம் குறித்து தனியாக ஒரு கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங் தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்து விவாதிக்க வரும் அடுத்த மாதம் 05ஆம் திகதி மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுததிருந்தமை தெரிந்ததே.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=60c13eff-257c-4edf-ba9c-beef685881a5

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்சி குடும்ப கொங்கிரஸ் பயங்கரவாதிகளை துரத்தினால் நாடு தானா உருப்படும். 

  • தொடங்கியவர்

இம்மாநாட்டில் தமிழ் முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி மற்றும் ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநில அரசுகளை குறைத்து மதிப்பிடாதீர் : முதலமைச்சர்கள் மாநாட்டில் ஜெயா

மாநில அரசுகளை, மாநகராட்சி அளவுக்கு மத்திய அரசு குறைத்து மதிப்பிடுவதாக டில்லி மாநாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக டில்லியில் முதல்-மந்திரிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமை தாங்கினார். மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.

மாநாட்டில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

தமிழக அரசு சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு அச்சுறுத்தும் சூழ்நிலையை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகிறது. அசாதாரணமான சூழ்நிலை ஒன்று உருவாகும் முன்பே அது குறித்த தகவல் உளவுத்துறை மூலம் பெறப்பட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதால் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்போது எவ்விதமான குறுக்கீடுகளும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது.

ஒவ்வொரு மாநில அரசும், அந்த மாநில மக்கள் மற்றும் அவர்களது தேவைக்கேற்ப காவல்துறையின் செயல்பாடுகளை வரையறுத்துள்ளது. மாநிலத்தின் சமூக-பொருளாதார சூழல் மாறி வரும் நிலையில், அந்த மாநில குற்றங்களின் தன்மை, அவற்றை கண்டுபிடிக்கும் தனித்திறன், பயிற்சி மற்றும் கருவிகளின் பயன்பாடும் மாற்றப்பட வேண்டியது அவசியம்.

மாநில அரசுகளை, மாநகராட்சி அளவுக்கு குறைவாக மதிப்பிட்டு, நிதிக்காக மத்திய அரசை எப்போதும் எதிர்பார்த்திருக்கச் செய்யும் வகையில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் முயற்சி கூட்டாட்சி தத்துவத்தில் கேலிக்கூத்தாக இருக்கிறது. இத்தகைய போக்கு, மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் என்று தனித்தனி கலாசாரம், வகுப்புவாரி அமைப்பு, சமூக, பொருளாதார அம்சங்கள் இருப்பதால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான காவல் துறை நிர்வாகம் இருக்க முடியாது.

சட்டம், ஒழுங்கிற்கு இடையூறாக இருக்கும் சமூக விரோத சக்திகளால் ஏற்படும் சவால்களைச் சந்திக்க வலிமையான, திறமையான, போதிய தளவாடங்களுடன் நன்கு பயிற்சி பெற்ற காவல் படையே சரியான தீர்வாக இருக்கும்.

மாநில அரசுகளின் பலதரப்பட்ட செயல்கள் மற்றும் நிதி ஆதாரங்களை திரட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு, மாநில காவல் துறையை பலப்படுத்தவும், நவீனமயமாக்கவும் மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க முன்வர வேண்டும். நிதி ஆதாரங்களுக்கான வழிமுறைகளை ஒவ்வொன்றாக மத்திய அரசு பறித்து வருகிறது. இதனால் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் மாநில அரசுகள் திணறுகின்றன" என்றார். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37637

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.