Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெனிக் பாம் தடுப்பு முகாமில் சுஷ்மாவுக்கு நடந்தது என்ன? – இளந்தி

Featured Replies

இந்திய பாராளுமன்ற எதிர் கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற பன்னிரண்டு அரசியல் வாதிகள் பல அரசியல் பாடங்களை இலங்கையில் கற்றுள்ளனர். அவற்றில் முதன்மையானது கேட்ட கேள்விக்கு சுற்றி வளைத்து மழுப்பும் தந்திரோபாயமாகும்.

சுஷ்மா அதற்குப் பலியாகவில்லைப் போல் தெரிகிறது. ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் வவுனியா, செட்டிக்குளம் மெனிக் பாம் தடுப்பு முகாம் செல்வதற்கு பிரயாண ஒழுங்கு செய்யவுமில்லை, நிகழ்ச்சி நிரலில் இடம் ஒதுக்கப்படவும் இல்லை.

சுஷ்மா சுவராஐ; பிடிவாதமாக அங்கு போகத்தான் வேண்டும் என்று கிட்டத்தட்ட அடம் பிடித்தார். இதைத் தட்டிக் கழிப்பதற்காக மெனிக் பாம் நிலவரம் பற்றிய அறிக்கையை அமைச்சர் நிமால் சிறிபால சில்வா வழங்கினார். அதை எற்க சுஷ்மா சுவராஜ் மறுத்து விட்டார்.

அவசரம் அவசரமாக ஒழுங்குகள் செய்யப்பட்டன. இதற்கிடையில் வவுனியா அரச அதிபரும் சில பொறுப்பு வாய்ந்த இராணுவ அதிகாரிகளும் செட்டிக்குளம் தடுப்பு முகாமிற்குச் சென்று அங்கு வாழ்ந்த தமிழர்களை சந்தித்தனர்.

சுஷ்மா சுவராஜ் குழுவினர் வரும் போது அவர்களுடன் அதிகம் பேசக் கூடாது. குறிப்பாக முறைப்பாடுகள் ஒன்றும் செய்யக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு இந்தியக் குழுவினரை இன்முகம் காட்டி வரவேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டது.

கதிர்காமர் முகாமை மாத்திரம் சுவராஜ் குழுவினருக்கு காட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. ஆனந்த குமாரசாமி முகாம் படுமோசமான நிலையில் இருப்பதால் அங்கு அவர்களை அழைத்துச் செல்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

அண்மையில் அடித்த புயலால் தடுப்பு முகாம் சூழல் இன்னும் இயல்பு நிலைக்கு வராமல் இருக்கிறது. முகாம் பகுதியைச் சுத்தப்படுத்தும்படி இராணுவத்தினர் அகதிகளை நிர்ப்பந்தித்தனர். கதிர்காமர் முகாம் மாத்திரம் சிறிதளவு சுத்தம் செய்யப்பட்டிருந்தது.

ஆறாயிரத்திற்கும் கூடுதலான ஈழத் தமிழர்கள் மெனிக் பாம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, கொக்குளாய் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களை மீள் குடியேற்றம் செய்யாமல் அரசு இழுத்தடிக்கின்றது.

சிங்களக் குடியேற்றம் துரித கதியில் தமிழர்களுக்குச் சொந்தமான வாழ்விடங்களில் நடைபெறுகிறது. சுண்டிக்குளம் தொட்டு கொக்குளாய் வரையான கடலோரத்தில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

கொக்குளாய் பிரதேசத்தை சிங்களமயமாக்க அரசு செயற்படுகிறது. இங்கிருந்து விரட்டப்பட்ட தமிழர்கள் மெனிக் பாம் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இராணுவம் தனது தேவைக்காகப் பெருமளவு நிலத்தை அபகரித்துள்ளது.

கொக்குளாயில் 1500 ஏக்கர், துணுக்காயில் 650 ஏக்கர், பழைய முறிகண்டியில் 50 ஏக்கர், கிளிநொச்சி பரந்தனில் 350 ஏக்கர் என்று பெருந்தொகை நிலம் பறிபோயுள்ளது.

இந்த இலட்சணத்தில் எப்படி மீள் குடியேற்றம் நடைபெறும் என்று தெரியவில்லை. துணை அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது கருணா அகதிகள் அனைவரும் யூலை 2012க்கு முன்பாக மீள் குடியேற்றப் படுவார்கள் என்றும் தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளார்.

நடக்கப் போவது என்னவென்று எம்மால் ஊகிக்க முடியும். மெனிக் பாம் முகாமை மூடுவார்கள். ஆனால் புதிய முகாம்களை வன்னியின் பிற பகுதிகளில் திறந்து அங்கு அகதிகளை அடைத்து வைப்பார்கள். இது தான் இலங்கையில் பெரும்பாலும் மீள்குடியேற்றம் என்று அழைக்கப்படுகிறது.

சுஷ்மா சுவராஜ் குழுவினர் உலங்கு வானூர்தி மூலம் வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூடச் சென்றார். இந்திய ஊடகவியலாளர்கள் சிலர் பயணிகளாகச் சென்றனர்.

முன்பு திட்டமிட்டபடி கதிர்காமர் முகாமிற்கு மாத்திரம் சுஷ்மா குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். வழங்கப்பட்ட எச்சரிக்கையையும் மீறி மக்கள் தங்கள் குறைகளை உரத்த குரலில் முறைப்பாடு செய்தனர்.

மழை கொட்டும் போது தமது கொட்டில்களுக்குள் வெள்ளம் புகுவதாகவும் பலத்த காற்று வீசும் போது கொட்டில் கூரை காற்றில் அடித்துச் செல்லப்படுவதாகவும் முறையிட்டனர். மேலும் கடந்த சில மாதங்களாகத் தமக்கு வழங்கப்பட்ட உலர் உணவு படிப்படியாகக் குறைக்கப்படுவதாகவும் சொன்னார்கள்.

மருத்துவ வசதிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுஷ்மாவிடம் நேரடியாகச் சொன்னார்கள். இலங்கை அதிகாரிகள் விளக்கம் கூறத் தொடங்கிய போது அவர்களை நிறுத்தும்படி சுஷ்மா சுவராஜ் கடுமையான தொனியில் உத்தரவிட்டார்;.

எமக்குக் கிடைத்த தகவலின்படி சுஷ்மா குழுவை வரவேற்பதற்கு எட்டுப் பேர் கொண்ட தடுப்பு முகாம் அகதிகளை இலங்கை அதிகாரிகள் ஒழுங்கு செய்திருந்தனர். அவர்கள் இறுதி நேரத்தில் மறுத்து விட்டனர்.

இந்திய ஊடகவியலாளர்கள் சுஷ்மா குழுவுடன் தடுப்பு முகாமுக்குள் நுளைய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் முகாமுக்கு வெளியே செய்தி திரட்டக் காத்திருந்தனர். ஏறத்தாழ இலங்கை அதிகாரிகளின் வேடம் கலைந்து விட்டதாகக் கருத இடமுண்டு.

கொதிப்படைந்த அகதிகள் அரசுடன் ஒத்துழைக்க மறுத்து விட்டது மாத்திரமல்ல மிகவும் துணிச்சலாக அவர்கள் முன்னிலையில் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள். இதில் வரவேற்பதற்கு நியமிக்கப்பட்ட எட்டுப் பேரும் அடங்குவார்கள்;.

மெனிக் பாம் அகதி முகாமில் அவதானித்த காட்சிகள் சுஷ்மா சுவராஜ் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம் காத்திரமான மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

www.Tamilkathir.com

  • கருத்துக்கள உறவுகள்

மெனிக் பாம் தடுப்பு முகாமில் சுஷ்மாவுக்கு நடந்தது என்ன?

அவாவையும் உடுப்பகளட்டி நிர்வாணம் ஆக்கிடங்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.