Jump to content

ஈழமும் இந்தியாவும்-17: களத்தில் இறக்கப்பட்ட அத்துலத்முதலி


Recommended Posts

இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருந்த போது ஜெயவர்த்தன அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற பெயரிலான அமைச்சு ஒன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியும், ஐ.தே.க.வில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தவருமான லலித் அத்துலத்முதலி முதலாவது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.

அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதேபோல, அவரது பரிதாபகரமான முடிவுக்கும் இதுவே காரணமாக இருந்தது.

இலங்கையைப் பொறுத்தவரையில் பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விடுபட்ட நாள் முதல் அமைச்சர்களை நியமிப்பதில் பொதுவான அம்சம் ஒன்று காணப்பட்டது. அதாவது நாட்டின் பிரதமராக இருப்பவரே பாதுகாப்பு அமைச்சையும், வெளிவிவகார அமைச்சையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மரபு ஒன்று பேணப்பட்டது. டி.எஸ்.சேனநாயக்கவின் காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் காலம் வரையில் இந்த மரபு பேணப்பட்டது. குறிப்பிட்ட இரு அமைச்சுக்களின் முக்கியத்துவம் கருதியே பிரதமர் அதனைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மரபு பின்பற்றப்பட்டது.

ஆனால், 1978 இல் இலங்கையின் அரசியலமைப்பு மாற்றம் செய்யப்பட்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட ஜெயவர்த்தன, அந்த நிலைமையில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தார். வெளிவிவகார அமைச்சராக ஏ.சி.எஸ்.ஹமீத்தை நியமித்தார்;. ஆனால், பாதுகாப்பு அமைச்சை அவர் தன்வசமே வைத்துக்கொண்டார். 1984 ஆம் ஆண்டில்தான் இந்த நிலை மாற்றப்பட்டது. பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும், தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகவும் லலித் அத்துலத்முதலி நியமிக்கப்பட்டார்.

லலித் அத்துலத்முதலியை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிப்பது என ஜனாதிபதி ஜெயவர்த்தன எடுத்த தீர்மானத்துக்கு பல காரணங்கள் இருந்தன. முதலாவது தனக்கு நம்பிக்கையயான ஒருவராக அத்துலத்முதலி செயற்படுவார் என ஜெயவர்த்தன கணக்குப்போட்டிருந்தார். இதனைவிட, ஜெயவர்த்தனவின் அமைச்சரவையில் இருந்தவர்களில் ஒரு சிறந்த புத்திஜீவியாக அத்துலத்முதலியே கருதப்பட்டார். இவ்வாறான ஒருவரால்தான் தமிழ்ப் போராளிகளின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்கமுடியும் என்பது ஜெயவர்த்தனவின் கணிப்பு!

அத்துலத்முதலியைப் பொறுத்தவரையில் அவர் சட்டத்துறையில் புகழ்பெற்ற ஒரு குடும்பத்திலிருந்து வந்தவர். கொழும்பு றோயல் கல்லூரி மாணவரான அத்துலத்முதலி;, பின்னர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்விகற்று பட்டம் பெற்றவர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர் என்ற பெருமையும் இவரைச் சாரும். இதன்பின்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திலும், இஸ்ரேலிலுள்ள பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றிலும் இவர் வரிவுரையாளராகக் கடமையாற்றினார். இதன் மூலம் சர்வதேச அறிவும், தொடர்புகளும் இவருக்கு இருந்தது.

இதனைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் இந்தியாவின் காய்நகர்த்தல்களை முறியடித்து, தமிழ்ப் போராளிகளையும் தோற்கடிக்க முடியும் என ஜெயவர்த்தன கருதினார். இலங்கையில் இடம்பெற்ற போரைப் பொறுத்தவரையில் லலித் அத்துலத்முதலியின் இந்த நியமனம் மிகவும் முக்கியமானது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலின் மூலம் முதன் முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான அத்துலத்முதலிக்கு உடனடியாகவே வர்த்தக கப்பல்துறை அமைச்சை ஜெயவர்த்தன வழங்கினார். ஜெயவர்த்தனவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு அமைச்சரா இவர் உயர்த்தப்பட்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சின் முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் கவனத்திற்கொள்ளப்படவேண்டியவர்களாகும். இதில் முதலாவதாகக் குறிப்பிடப்படவேண்டியவர் ரவி ஜயவர்த்தன. ஜனாதிபதி ஜயவர்த்தனவின் மகனான இவர், ஜனாதிபதிக்கான பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றினார். தமிழ் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட எஸ்.ரி.எப். எனப்படும் விஷேட அதிரடிப்படையின் பிதா மகனும் இவர்தான். வெளிநாடுகள் பலவற்றுடன் இராணுவ ரீதியான உடன்படிக்கைகளைச் செய்வதற்கும் திரைமறைவில் செயற்பட்டவர் இவர்தான். இதனைவிட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் சேபால ஆட்டிகலை நியமிக்கப்பட்டார். இதற்கு மேலாக ஜெனரல் சிறில் ரணதுங்கவும் பாதுகாப்பு அமைச்சின் முக்கிய பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டடார். கலாநிதி விக்கிரம வீரசூரிய அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார்.

இவ்விதம் தமிழ்ப் போராளிகளை எதிர்கொள்வதற்கு பலமான ஒன்றாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு உருவாக்கப்பட்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக என உருவாக்கப்பட்ட முதலாவது பலம்வாய்ந்த ஒரு அமைப்பு வடிவமாக இந்த அமைச்சைக் குறிப்பிடலாம். இதற்கு முன்னைய காலகட்டங்களில் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இராணுவம் ஏவிவிடப்பட்டபோதிலும், அரசியல் பின்னணியுடனான சரியான வழிநடத்தல் அதற்கு இருக்கவில்லை.

இந்தியாவின் பின்னணியுடன் தமிழ்ப் போராளிகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதனைக் கையாள்வதற்கு கட்டுறுதிவாய்ந்த பொறிமுறை ஒன்றின் அவசியத்தை ஜனாதிபதி ஜெயவர்த்தன உணர்ந்திருந்தார். இவ்வாறான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு தமிழ்ப் போராளிகளைக் கட்டுப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதையும் ஜெயவர்தன உணர்ந்திருந்தார்.

குறிப்பாக இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தனக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதையும் அவர் தெரிந்திருந்தார். இந்த நிலை நாட்டின் பிரிவினைக்கு வழிவிடுவதாக அமைந்துவிடலாம் எனவும் அவர் அஞ்சினார். இந்தப் பின்னணியில் தன்னுடைய நெருங்கிய ஆலோசகர்களுடன் நடத்திய ஆலோசனைகளையடுத்தே அவர் தேசிய பாதுகாப்பு அமைச்சை உருவாக்குவது என்ற தீர்மானத்தை எடுத்தார்.

இருந்தபோதிலும், இந்த அமைச்சு உருவாக்கப்பட்டமை தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இலங்கையின் பழைமையான மரபு ரீதியான தேசிய பாதுகாப்புப் பொறிமுறைக்குப் புத்துயிரளித்து, அதனை மேம்படுத்துவதற்க புதிய அமைச்சின் உருவாக்கம் துணை புரிவதாக அமைந்திருந்த போதிலும், இது அரசியல் - இராணுவ ரீதியிலான ஒரு உபாயத்தை வகுத்துச் செயற்படுவதற்கு எந்த வகையிலும் உதவவதாக அமைந்திருக்கவில்லை என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவின் ஆதரவுடன் மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியும், தீவிரவாத அமைப்புக்களும் செயற்பட்டுக்கொண்டிருந்த நிலையில், அரசியல் - இராணுவ ரீதியிலான இரட்டை அணுகுமுறை ஒன்றே அவசியமானதாக இருந்துள்ளதாக இந்த விமர்சகர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆனால், அவ்வாறானதொரு அணுகுமுறையை தேசிய பந்தோபஸ்த்து அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட அத்துலத்முதலி கொண்டிருக்காததது முக்கியமான குறைபாடாகவே இந்த விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தேசிய பாதுகாப்பு அமைச்சைப் பொறுத்தவரையில் நாட்டில் நடைமுறையிலிருந்த அவசரகாலச் சட்டம், மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றைப் பயன்படுத்திக்கொண்டு போராட்டத்தை அடக்கிவிட முடியும் என்ற தீவிரமான இராணுவக் கண்னோட்டமே காணப்பட்டது.

அதேவேளையில், முக்கியமானதொரு விடயத்தையும் தேசிய பாதுகாப்பு அமைச்சு அடையாளம் கண்டிருந்தது எனக் குறிப்பிடமுடியும். அதாவது இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளே இலங்கைக்குள் ஊடுருவித் தாக்குதல்களை நடத்துகின்றார்கள் என்பதாலும், இந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்தும் உபாயம் ஒன்றை அவர்கள் கையாள்வதாலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல்வழிப் போக்குவரத்தைத் தடை செய்வது அத்துலத்முதலியின் முதலாவது திட்டமாக இருந்தது. இதற்காக கடல் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதாக தேசிய பந்தோபஸ்த்து அமைச்சு அறிவித்தது. கடற்படை உஷார் படுத்தப்பட்டு களத்தில் இறக்கப்பட்டது.

அமைதியாக இருந்த பாக்கு நீரிணையின் நீலக்கடலில் செங்குருதி பாய்ந்தோடுவதற்கும் அத்துலத்முதலியின் இந்த நடவடிக்கைதான் காரணமாக இருந்தது.

தொடரும்..................

பூராயத்துக்காக

சிவயோகன்

http://www.pooraayam...lamindia17.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
    • பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.   பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
    • நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.