Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆருக்கு அவமானம்! யாழ்ப்பாணத்தில் இருந்து செம்மணச் செல்வி:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வந்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவைச் சேர்ந்த எம்.பி சுதர்சன நாச்சியப்பன் இலங்கை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என்று அழைத்திருக்கிறார். யாழ்ப்பாண நகரத்தில் வந்திறங்கிய எம்.பிக்களை வரவேற்கச் சென்ற அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவுக்கு இப்படியொரு அடை மொழியுடன் புகழ்ந்தது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்து விட்டது. நாச்சியப்பன் சொன்னதைக் கேட்டு டக்கிளஸ் தேவானந்தா மெய்மறந்து சிரித்துக் கொண்டு நின்றார்.

தொடர்ச்சியாக சர்ச்சiயாக பேசிவரும் இந்திய எம்.பி சுதர்சன நாச்சியப்பன் ஏன் இவ்வாறு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை சொன்னார் என்ற பெரிய சந்தேகம் எழவே செய்யும். எம்.ஜி.ஆர் தமிழக மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். அவரை ஒரு நடிகராக பார்த்த பொழுதே ஏழைகளின் தலைவனாக மக்கள் பார்த்தார்கள். பின்னர் தமிழகத்தின் முதலமைச்சராகி மக்களின் மனங்களில் பெரிய இடத்தை எம்.ஜி.ஆர் பிடித்திருக்கிறார்.

ஈழப்போராட்டத்தின்பாலும் எம்.ஜி.ஆர் மிகுந்த பற்றுக் கொண்டவர். தமீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து போராட்டத்திற்காக உதவி செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது என்று பலரும் சொல்லுவார்கள். அவர் இருந்திருந்தால் ஈழமே அமைந்திருக்கும் என்றும் எம்.ஜி.ஆர் ஆதரவாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஈழத்திலும் எம்.ஜி.ஆருக்கு பெரும் மக்கள் செல்வாக்குள்ளது.

ஈ.பி.டி.பி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தா. இவர் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அதனைக் கைவிட்டு தேர்தல் அரசியலுக்குள் சென்றார். தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்துக்கொண்டிருப்பவர். இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அரசின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக நியாயப்படுத்தி வருகின்றவர்.

இலங்கை அரசாங்கம் செய்த மிகப்பெரிய மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் போரில் ஒரு மக்களும் கொல்லப்படவில்லை என்று கூறி அரசாங்கத்தின்மீதான தனது விசுவாசத்தை காட்டியவர். தொடர்ந்து இலங்கை அரசாங்கத்தின் நிழலில் இருந்து கொண்டு அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் எந்த கருத்து வேறுபாடுமின்றி ஏற்றுக் கொண்டு அமைச்சராக பதவி வகிக்கின்றார்.

யாழப்பாணத்தின் குறுநில மன்னர் போல ஆட்சி செலுத்தி வரும் டக்கிளஸ் தேவானந்தா விடுதலைப் புலிகளின் அழிவின் பின்னர் தனது அரசியல் செயற்பாடுகளை மிக மிக விரிவுபடுத்தியிருக்கின்றார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி முதலமைச்சராக வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்றும் டக்கிளஸ் வெளிப்படையாகக் கூறிக் கொண்டிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நடந்த பல்வேறு குற்றச் செயல்களுக்கு அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் ஈபீடீபீயும் பொறுப்பு என அவர் அங்கம் வகிக்கும் அரசாங்கமும் அவர் நேசிக்கும் தலைவர் மகிந்தவும் நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவே சான்றிதல் வழங்கியிருக்கிறது. கடத்தல், கப்பம் வாங்குதல், கொலை, பாலியல் பலாத்காரம் என்று எண்ணற்ற குற்றச் செயல்களுடன் டக்கிளஸ் தேவானந்தா தலைவராக உள்ள ஈபீ.டீபீ. தொடர்பு பட்டுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன. இவரது கட்சியின் பெயரைக் கேட்டாலே மக்கள் கடுமையாக அச்சப்படும் நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

போர் முடிவுற்ற பின்னரும்கூட சவகச்சேரி கபிலநாத் படுகொலை, நெடுந்தீவு லக்சினி படுகொலைஉட்பட பல்வேறு கொலைகளை டக்கிளஸ் தேவானந்தாவின் கட்சி உறுப்பினர்கள் செய்துள்ளார்கள் என'ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக சுமத்தப்படுகின்றன. தமிழத்தில் வாலிபர் ஒருவரின் கொலை தொடர்பாக டக்கிளஸ் தேவானந்தா குற்றவாளியாக தேடப்படுகிறார்.

இப்படி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கட்சியின் தலைவர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவையே சுதர்சன நாச்சியப்பன் ஈழத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லியுள்ளார். இந்திய எம்.பி நாச்சியப்பன் ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றிருந்த பொழுது இலங்கை தமிழர்களின் நாடு என்றும் அது தமிழகத்தின் இதயம் என்றும் சொன்னவர்.

பின்னர் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர முற்பட்ட பொழுது இலங்கையை ஆதரித்துப் பேசினார். இலங்கை இறைமையுள்ள தனி நாடு என்றார். எம்.பி சுதர்சன நாச்சியப்பன் அடிக்கடி இவ்வாறான நகைச்சுவைக் கதைகளை பேசுபவர். ஏதோ உணர்ச்சிவசப்பட்டு டக்ளஸை ஈழத்து எம்.ஜி.ஆர் என்று புகழ்ந்தாரா தெரியவில்லை.

ராஜபக்சேவின் விருந்துக்குச் செல்லும் இலங்கைப் பயணத்திற்கு அ.தி.மு.க எம்.பி பங்கேற்க மாட்டாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சொன்னார். அப்பொழுது நாங்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்கவே செல்லுகிறோம் என்று தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சுதர்சன நாச்சியப்பனே பதில் அளித்தார்.

இந்திய எம்.பிக்களின் இலங்கைப் பயணத்தை நிராகரித்த தமிழகத்தையும் முதல்வர் ஜெயலலிதாவையும் பழி வாங்கவே நாச்சியப்பன் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவை ஈழத்து எம்.ஜி.ஆர் என்று சொல்லியிருக்கிறார் போல் தெரிகிறது. எம்.ஜி.ஆருக்குத்தான் இது பெருத்த அவமானம். இனி ராஜபச்சவைப் பார்த்து இலங்கை நேரு என்றோ இலங்கை காந்தி என்றோ இந்திய எம்.பி சுதர்சன நாச்சியப்பன் சொல்லாமல் இருந்தால் சிறப்பானதே.

யாழ்ப்பாணத்தில் இருந்து செம்மணச் செல்வி:-

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நம்பியார் யாரு..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.