Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வீட்டின் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்!

Featured Replies

சாவகச்சேரி நகரசபைத் தலைவர் வீட்டின் மீது இனம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது .trans.gifசாவகச்சேரி நகர சபைத் தலைவரான இ.தேவசகாயம்பிள்ளை வீட்டின் மீது நேற்று நள்ளிரவு வேளை மோட்டார் சைக்கிளில் வந்த குழுவென்று வீட்டின் மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டதாகவும், வீட்டின் கதவு, ஜன்னல் ஆகியன சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நான்கு மோட்டார் சைக்கிளில் பெற்றோல் மற்றும் கற்கள், பொல்லுகளுடன் வருகைதந்த குழு ஒன்று நகரசபைத் தலைவரது வீட்டின் வெளிக்கதவால் உள் நுழைந்து வீட்டிக் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன் அங்கு நின்ற மோட்டார் சைக்கிளையும் பெற்றோல் ஊற்றிக் கொழுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதல் சத்தம் கேட்டு நகரசபைத் தலைவரும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்து பார்ப்பதற்குள் அவர்கள் கொண்டுவந்த கற்கள் மற்றும் பெற்றோல் போத்தல்களை அவ்விடத்திலே போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவத்திற்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்றமும் அதன் கைக்கூலிகளுமே காரணாம் எம நகரசபைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்

அண்மைக் காலமாக சாவகச்சேரி சந்தை வெளிக்கதவுகள் பூட்டப்படுவது தொடர்பாக நகரசபைத் தலைவருக்கும் கைத்தொழில் வணிக மன்றத்திற்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், அதன் எதிரொலியாக அப்பிரதேசத்தில் நிலை கொண்டுள்ள அரசியற் கட்சியின் பின்னனியில் தமது வீட்டுக்கு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் நகரசபைத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாவகச்சேரி நகர மையத்தில் அமைந்துள்ள நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் கதவுகள் இரவு 7 மணிக்கு மூடுவது வழக்கம் எனினும் வர்த்தக நிலையங்களின் நலன் கருதி 8 மணிக்கு சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரதான கதவை மூடுவதற்கு நகரசபையானது தீர்மானம் மேற்கொண்டது.

ஆனால் வணிக மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நவீன சந்தையின் மேல்மாடியில் இருபுறங்களிலும் உள்ள கடைகளின் கதவுகள் 10 மணிவரை திறந்திருப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.அண்மைக் காலமாக நவீன சந்தையின் பிரதான நுழைவாயிற் பகுதியில் ஒருசிலர் விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடத்துள்ளமையினை அடுத்து சபைக் கூட்டத்தில் சந்தைக் கட்டடத் தொகுதியின் பிரதான கதவுகளை 8 மணியுடன் மூட தீர்மானிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் கடந்த வெள்ளிக் கிழமை இரவு 8மணிக்கு பிரதான நுழைவாயிற் கதவு மூடப்பட்டது அவ்வேளையில் அங்கு வந்த வணிகர் மன்றத் தலைவர் தலமையிலான குழுவினர் அங்கு நின்ற நகரசபை உறுப்பினரை தாக்க முற்பட்டதுடன் சிறிலங்கா காவல் துறையினரின் உதவியுடன் பிரதான நுழைவாயில் கதவு திறக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி நகரசபைத் தலைவரும் உறுப்பினர்களும் சாவகச்சேரி காவல் நிலையத்தை முறையிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

http://thaaitamil.com/?p=16619

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.