Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ. நா. விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய குழுவொன்று அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது

Featured Replies

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் விசேட இராஜதந்திரிகளை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவொன்று அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை வருகின்றது என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய இலங்கை அரசு செயற்படவேண்டும் என சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக வலியுறுத்திவரும் நிலையிலேயே, ஐ.நா.மனித உரிமைகள் குழு அவசர விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் பணிப்புரைக்கமைய இலங்கை வரும் இந்த இராஜதந்திரிகள் குழு, இங்கு முக்கிய பல சந்திப்புகளை நடத்தவுள்ளது என்றும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட முக்கிய பல அதிகாரிகளைச் சந்தித்து இந்த உயர்மட்டக்குழு கலந்துரையாடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசின் வெளிவிவகார நடவடிக்கைகளைக் கையாளும் முக்கியஸ்தர்களையும் ஐ.நா. குழு சந்தித்து பேச்சு நடத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளபோதும், அந்தச் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் இன்னும் தயாராகவில்லை என இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்து வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் உட்பட முக்கிய பல விடயங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றும் அறிய முடிகிறது.

இலங்கை விஜயத்தை முடித்துகொண்டு திரும்பும் குழு தனது ஆய்வறிக்கையை நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் கையளிக்கும்.

அதேவேளை, ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் இவ்வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அந்த விஜயத்துக்கான முன்னேற்பாடுகளை ஆராயவே இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

http://ponguthamil.c...48-53883cfb95f2

Edited by akootha

  • தொடங்கியவர்

எதேச்சதிகார தலைவர்களுக்கு எச்சரிக்கை: பான் கீ மூன்

ban-ki-moon.jpg

லைபீரிய முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர் போர்க்குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டமையானது, தமது மக்களை துஷ்பிரயோகம் செய்யும் எதேச்சதிகார தலைவர்களுக்கு ஒரு வலிமையான எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.

சியரா லியோன், அப்பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலுள்ள மக்களுக்கு இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்' என என பான் கீ மூனின் பிரதி பேச்சாளர் எடுவார்டோ டெல் புவேநேற்றுவிடுத்த அறிக்கையொனறில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

charlestaylor(1).jpg

சார்ள்ஸ் டெய்லர் குற்றவாளியாக காணப்பட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடன் பொதுச் செயலாளரின் இன்றைய எண்ணங்கள் உள்ளன என டெல் புவே தெரிவித்தார்.

தமது கைகளில் இரத்தக்கறை படிந்த பல சர்வாதிகாரிகளுக்கு சார்ள்ஸ் டெய்லர் ஒரு முன்னோடி என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை கூறியுள்ளார்.

இத்தீர்ப்பானது எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர் என்பதை வெளிப்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-07-14-09-13-37/40014-2012-04-26-18-44-57.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.