Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளஸ்டர் குண்டு பற்றிய செய்தியை வெளியிட்ட ஏபி செய்தியாளர் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவராம்.

Featured Replies

சிறிலங்காவில் இறுதிப் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரத்தை முதல்முறையாக கண்டுபிடித்துள்ளதாக ஐ.நா நிபுணர் வெளியிட்ட தகவலை அம்பலப்படுத்திய ஏபி செய்தியாளர், முன்னர் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்பட்டவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் தெற்காசியப் பிரிவின் பணிப்பாளராக உள்ள ரவி நெஸ்மன் என்ற இந்திய ஊடகவியலாளரே, சிறிலங்காவில் இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் ஐ.நாவிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார்.

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன், ஐ.நா தலைமையகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல் அறிக்கையை அடிப்படையாக வைத்தே அவர் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தார்.

இந்த அறிக்கை அசோசியேட்டட் பிரசின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

சிறிலங்காவில் போரின்போது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறிலங்கா படைகள் அதனை நிராகரித்துள்ளன.

அத்துடன் இந்த தகவலை அம்பலப்படுத்திய ஊடகவிலாளர் ரவி நெஸ்மன் சிறிலங்காவில் இருந்து வெளியேற்றப்படவர் என்பதால், விசமத்தனமாக இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசதரப்பு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் நடந்து கொண்டிருந்த போது, ரவி நெஸ்மன் கொழும்பில் பணியாற்றியிருந்தார்.

போர் இழப்புகள் பற்றிய உண்மைத் தகவல்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை வெளிப்படுத்தி வந்த ரவி நெஸ்மனின் நுழைவிசைவை 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த குறுகிய காலத்தில், நீடிக்க மறுத்த சிறிலங்கா அரசாங்கம் அவரை கட்டாயமாக வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, சிறிலங்காவில் கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவுக்குத் தகவல் அனுப்பிய ஐ.நா நிபுணர் அலன் போஸ்டனை சிறிலங்கா இராணுவத்தின் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் சந்தித்து விளக்கம் கோரியதாக சிறிலங்கா இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

அதேவேளை, கிளஸ்டர் குண்டுகள் பற்றிய ஆதாரங்கள் குறித்து மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட ஐ.நா நிபுணர் அலன் போஸ்டன் மறுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவர், ஏபி செய்தியை நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://thaaitamil.com/?p=17646

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.