Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனவுகள் சிதையும் காலம்.......

Featured Replies

சிறுவயதிலிருந்தே நண்பர்களாக வளரும் எழுத்தாள தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்பப்பின்னணி கொண்ட சரத், சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியான பின்புலத்துடன் சன்னி மற்றும் மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் அப்பா, ஓடிய கணவன் திரும்ப வருவான் என்கிற நம்பிக்கையில் வாழும் அம்மா இவர்களின் மகளான வர்ஷா, இந்த மூன்று நண்பர்களையும், அவர்களது கனவையும் கூடவே கார்ப்பரேட் வாழ்க்கையையும் சொல்கிற படம்தான், ரிது.

1.JPG

கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த இந்த மூவரில், நண்பர்களைப் பிரிய மனமில்லாமல் அமெரிக்கா சென்ற சரத் இந்தியாவிற்கே திரும்பி வருகிறான். மீண்டும் சொந்த ஊரில், தன் மனதிற்கு இணக்கமான நண்பர்களோடு சேர்ந்து புது தொழில் செய்ய வருகிறான். சன்னியும் வர்ஷாவும் பெங்களூரில் இன்போஸிசில் வேலை செய்கின்றனர். சரத்தின் யோசனை அனைவருக்கும் சரியாய்ப்பட அவர்களும் இந்த யோசனையை ஏற்கின்றனர். நெட்சிட்டி எனும் தொழில்நுட்பப் பூங்காவிலிருக்கும் சைபூ எனும் மென்பொருள் நிறுவனத்தில் ஒரு புதிய புராஜெக்ட்டிற்காக மூவரும் இணைகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என தொடங்கும் இவர்களின் இந்த வாழ்க்கையில், உலகமயமாக்கலில் சிக்கித்தவிக்கும் இன்றைய நவீன சாஃப்ட்வேர் கம்பெனியின் பின்புலம் நிறைய மாற்றங்களைத் தருகிறது.

சரத் அமெரிக்கா சென்றிருந்த காலத்தில் அவனுடைய டைரியை படித்திருக்கிறார் சரத்தின் அப்பா. அவன் திரும்பியதும் உன்னிடம் நல்ல எழுத்துத்திறமை இருக்கிறது. அதை விட்டுவிடாதே என்றும் சொல்கிறார். இலக்கியம் படிக்கிறேன் என்றபொழுது கம்ப்யூட்டர் படிக்கச் சொன்ன அதே அப்பா, இன்று இப்படிச் சொல்கிறாரே என நினைக்கிறான். ஆனால் எழுதுவது என்பது சரத்திற்கும் விருப்பமானதாகவே இருக்கிறது. சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் போதும் எழுதுவதைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறான்.

சன்னியிடமும், வர்ஷாவிடமும் சிறுவயதில் அதிகம் விளையாடிய ஏரிக்கரைக்குப் போகலாமா? எவ்வளவு நாளாச்சு அங்கே போய்? என்று கேட்கிறான். ஆனால் இருவருக்குமே அதில் விருப்பமில்லை என்பது அவனுக்குப் புரிகிறது. தனியாக சென்று அங்கே அமர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறான். அப்பொழுது வர்ஷா வருகிறாள். அவளுக்கு விருப்பமில்லை என்றாலும் சரத் வருத்தப்படுவானே என்று நடிக்கிறாள். அவளிடம், சரத் மிக உணர்வுப்பூர்வமாக அவர்களது கடந்த காலத்தை நினைவு கூர்கிறான். இதே ஏரிக்கரையில் ஓரமாய் ஒரு வீடு கட்டி நாம் மூவரும் அதிலே ஒன்றாக இருக்க வேண்டும், சன்னிக்கு இசையார்வம் அதிகம். அவன் ஒரு இசைக்குழு தொடங்க வேண்டும் என்று சொல்லியிருந்தான், அதைச் செய்ய வேண்டும், உனக்கு சேவை செய்வதில் ஆர்வம் அதிகம், எனக்கு எழுத்தாளனாக வேண்டும். இதெல்லாம் நமது பால்யத்தின் கனவு. இப்பொழுது நாம் வளர்ந்துவிட்டோம், ஒன்றாக இருக்கிறோம், பணிபுரிகிறோம், சம்பாதிக்கிறோம். இப்பொழுது நமது கனவுகள் சாத்தியப்பட நிறைய வாய்ப்புகள் உண்டே வர்ஷா? என்கிறான். ஒற்றை வரியில் வர்ஷா சொல்கிறாள் “இன்னுமா அந்தக் கனவையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறாய், சின்னப்புள்ள மாதிரி” என்றதும் மெல்ல சிதையத் தொடங்குகிறது கனவுகள்.

கல்லூரிக் காலங்களிலிருந்தே சரத்தும் வர்ஷாவும் காதலிக்கின்றனர். ஆனால், இருவரும் அதை வெளிப்படுத்திக் கொண்டதில்லையே தவிர இருவருக்கும் அது புரிந்தேயிருந்தது. ஆனால், சரத் அமெரிக்கா சென்ற இந்த மூன்று வருடங்களில் வர்ஷா நிறையவே மாறியிருக்கிறாள். ஒரு முறை சரத் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் பற்றிய பேச்சு வருகிறது, அப்பொழுது “என் நாவல் உண்மையான காதலை சொல்லும், உண்மையான காதல் என்றால் உண்மை மற்றும் காதல். பொய்யும், காதலும் சேரவே முடியாது”என்கிறான் சரத். நிறைய ஆண் நண்பர்களோடு, அதீத நட்பும் இந்த வரிகளும் வர்ஷாவை சரத்திடமிருந்து தள்ளியே வைக்கிறது.

இது ஒருபுறமிருக்க, வெளியில் வெகுளியாக தெரியும் சன்னியோ ஒரு முழு சுயநலவாதியாகவே இருக்கிறான், மேலும், சரத் அமெரிக்காவில் இருக்கும்போது தன்னையும் அங்கே அழைத்துக்கொள்ள வேண்டி சன்னி விரும்பியிருக்கிறான், அதனை தவிர்த்த சரத்தின் மீது மெல்லிய வன்மம் கொண்டிருக்கிறான். அவனது அந்த சிறு ஈகோ சரத்திற்கு எதிராகவும் அவனைத் திருப்புகிறது. மேலும், அவன் ஒரு ஹோமோ செக்‌ஷுவலாகவும் இருக்கிறான். சரத்தைவிட அதிகம் பெயர் பெறவேண்டும் என்கிற வேட்கையில் அவனது கோப்புகளைத் திருடுகிறான். அதே கம்பெனியில் சரத்தை விட உயர் பதவியையும் அடைகிறான். நண்பன் உயர்ந்ததில் தானும் மகிழும் சரத்திற்கு வேறொரு நண்பர் மூலம் முழு உண்மையும் தெரிகிறது.

இடையே ஒரு இக்கட்டான நிலையில் சரத்தின் தந்தை இறந்து போகிறார். சரத்தின் அண்ணன் அப்பாவின் ஆசைப்படியே நீ நல்ல எழுத்தாளனாய் வரவேண்டும் என்கிறார். நானும், அப்பாவும் வாழ்க்கையில் தோற்றவர்கள். நீ தோற்கக்கூடாது என்கிறார். இந்த மூன்று பேரிடிகளில் நிலைகுலைந்து போகிறான் சரத். அந்த சமயத்தில் சரத்தின் அண்ணன், அவன் எழுதி வரும் நாவலின் இரு அத்தியாயங்களை இந்தியாவின் தலைசிறந்த பதிப்பகங்களுக்கு அனுப்பிவைக்கிறார். அதில் லயித்த அவர்கள் பெருந்தொகைக்கு நாவலை பதிப்பிக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். அண்ணனின் அறிவுரையின் பேரில் வேலையை விட்டுவிட்டு தன் அப்பா சுற்றியலைந்த, அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்ததாய் அவர் சொன்ன கல்கத்தா நகர வீதிகளில் அனுபவம் தேடிப் புறப்படுகிறான். அதற்கு முன்பு நண்பர்கள் விஷயத்தில் அவன் எடுக்கும் முடிவும் அந்த சில நிமிட வசனங்களும் தயவு செய்து படம் பார்த்து புரிந்துகொள்ளுங்கள்.

அதன் பிறகு நான்கு வருடங்கள் கழிந்து சன்னிக்கு, இதை வர்ஷாவும் இருக்கும்பொழுது பிரிக்கவும் என்று ஒரு பார்சல் வருகிறது, சரத்திடமிருந்து. அது சீசன்ஸ் என்கிற அவனது முதல் நாவல், அதன் முதல் பக்கத்தில் “இது வெறும் புத்தகம் மட்டுமல்ல, என் வாழ்க்கை, இந்த புத்தகத்தை என் நண்பர்கள் சன்னி மற்றும் வர்ஷாவிற்கு சமர்ப்பிக்கிறேன்” என்று எழுதியிருக்கிறான்.

எழுத்தாளரான தந்தை மற்றும் தீவிர கம்யூனிசவாதியான அண்ணன் என்கிற குடும்ப்பின்னணி கொண்ட சரத், க்டைசியில் எழுத்தாளராகிறான். சதா குடித்துவிட்டு தாயையும் தன்னையும் அடிக்கும் ஒரு குடிகார அப்பா இப்படியா பின்புலத்துடன் சன்னி எப்படியாவது ஜெயிக்கவேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறான். மனைவியைப் பிரிந்து மகள் வயதுடைய ஒரு வெளிநாட்டு பெண்ணுடன் வாழும் ஒருவரின் மகளான வர்ஷா, ஆண்களோடான உறவுச் சிக்கலில் தந்து சுய அடையாளத்தை இழந்து இருப்பதைக் கொண்டு திருப்திப்பட்டுக்கொள்ளும் சராசரி பெண்ணாக ஆகிறாள். இப்படியாக குழந்தைகளின் எதிர்காலம் அமைவது அவர்களின் பெற்றோர்களின் குணாதிசயங்களைப் பொருத்தே பெரிதும் இருக்கிறது என்பதை இந்த மூவரின் வாழ்வும் சொல்லாமல் சொல்கிறது. சுயமாய் சம்பாதிக்க ஆரம்பிப்பதற்கு முந்தைய நட்பிற்கும் அதன் பின்னான நட்பிற்கும் உள்ள வேறுபாடுகளை மிக நுட்பமாக அலசுகிறது இந்தப் படம்.

இது உலகப்படம் அல்ல, ஆனால் ஜஸ்ட் லைக் தட் என்கிற மனப்பான்மையும், இரண்டாவது முறை செய்யும்பொழுது எதுவுமே தப்பில்லை என்று உணர்த்திக்கொள்ளும் மனதையும் கொண்ட இன்றைய இளைஞர்களின் அதிவேகமான வாழ்க்கைமுறைக்கு மிக அவசியமான படம் எனக் கருதுகிறேன். “வாழ்க்கையில் மனுஷன் தன்னைத்தானே சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒரு நேரம் வரும், அப்பொழுது அதைச் செய்யாதவன் தோல்வியடைகிறான்

ஒரே கடல் என்கிற மிகமுக்கியமான திரைப்படைத்தை இயக்கிய ஷ்யாம்பிரசாத்தின் அடுத்த படம். இவரது திரைப்படங்களில் மனித மனதின் நுட்பமான பக்கங்களை பற்றிய ஒரு பார்வையோடே இருக்கும். இந்த படமும் அப்படி மனிதர்களின் மறுபக்கத்தைக் (Grey side of everyone) காட்டக்கூடியதாகவே இருக்கிறது. இந்த படம் சேத்தன் பக்த்தின் ஒன் நைட் @ தி கால் செண்டர் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இப்போ நாவலை படிக்கனும். ரொமாண்டிக் இன்ஸ்ட்ரூமெண்ட் எனப்படும் கிடார்தான் இந்த படத்தின் அடிநாதம், பின்னணி இசையில் அதிகம் கிடார்தான். அருமையாக இருக்கிறது. பாடல்களும் அருமை.

http://eniyoruvithiseivom.blogspot.com/2011/04/blog-post_14.html

[media=]http://www.youtube.com/watch?v=c-JUJd_Efvw&feature=related

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.