Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

british-flag-seithy150.jpg

அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 40 தமிழர்கள் உட்பட்ட இலங்கையர்களின் நாடுகடத்தும் பிரித்தானிய அரசாங்கத்தின் நடவடிக்கை இறுதி நேரத்தில் இடைநிறுத்தப்பட்டது. இவர்கள் நேற்று வியாழக்கிழமை மாலை நாடு கடத்தப்படவிருந்தனர். எனினும் லண்டனில் உள்ள மேல்நீதிமன்ற நீதிபதிகள் இவர்களின் நாடு கடத்தல் உத்தரவை நிராகரித்தமையை அடுத்து நாடு கடத்தல் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

PVT 030 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவிருந்தனர். இந்தநிலையில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. இந்த சட்டநடவடிக்கையின்போது இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுகின்றவர்கள் அங்கு கைதுசெய்யப்பட்டும், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர் என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை கருத்திற்கொண்டே நீதிபதிகள் நாடு கடத்தல் உத்தரவை இடைநிறுத்தினர். இதேவேளை இந்த தீர்ப்பு மிகவும் பெறுமதிவாய்ந்த ஒன்றாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரித்தானிய பணிப்பாளர் டேவிட் மெப்ஹேம் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின்மூலம் பிரித்தானிய அரசாங்கம் விழிப்படைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இந்த தீர்ப்பு பிரித்தானிய அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் என்று சட்டத்தரணிகளான நிசான் பரம்ஜோதி மற்றும் சிவானி ஜெகராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.co...&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் கொழும்பை வந்தடைந்தனர்

பிரிட்டனில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 36 இலங்கையர்கள் இன்று காலை விசேட விமானமொன்றின் மூலம் கொழும்பை வந்தடைந்தனர். இவர்களிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

நாடுகடத்தப்பட்டவர்களில் 22 தமிழர்கள், 8 சிங்களவர்கள், 6 முஸ்லிம்கள் அடங்குகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக பிரித்தானிய அதிகாரிகள் 72 பேரும் மேற்படி விசேட விமானத்தில் வந்தமை குறிப்பிடத்தக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.