Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்காவின் புதிய தூதுவரின் கருத்துத் தொடர்பில் இலங்கை அரசுக்கு அதிர்ப்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

michele_j_sison-100x100.jpg

மனித உரிமைகள் விவகாரம், பொறுப்புக்கூறும் கடப்பாடு உள்ளிட்ட இலங்கை விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் மிசேல் சிசன் வெளியிட்டுள்ள கருத்துகளானது அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என அறியமுடிகின்றது.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர மட்டத்திலான உறவில் பனிப்போர் மூண்டுள்ள இவ்வேளையில், புதிதாக நியமனம் பெற்று கொழும்பு வரவுள்ள அமெரிக்கத் தூதுவர், இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முன் கூட்டியே அறிவித்துள்ளமையானது அரசுக்கு இனியில்லை யென்றளவு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நியமனத்துக்கான உறுதியை அமெரிக்க செனட் கடந்த புதன்கிழமை மிச்செலி சிசனுக்கு வழங்கியது. நியமனத்தை பெற்றப் பின்னர் விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர் இலங்கை விவகாரம் குறித்து முக்கிய பல விடயங்களை எடுத்துரைத்தார்.

அதில் குறிப்பாக, யுத்த இடப் பகுதிகளில் இலங்கை அரசு குறைக்க வேண்டும், வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க வேண்டும, யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை அரசு வெளிப்படுத்த வேண்டும் போன்ற விடயங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இவரின் கருத்துகளானது இலங்கை அரசுக்கு சவால்மிக்கதாக அமைந்துள்ளன என்றும், எனவே, மேற்கூறப்பட்ட விடயங்களை அரசு கட்டாயம் செய்து முடிக்கவேண்டும் என்றும் மேற்குலக அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை, தூதுவர் வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில் வெளிநாடு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து, அமெரிக்கத் தூதுவர் நாட்டுக்கு வந்ததும் அவரை அழைத்து நிலைமைகளைத் தெளிவுபடுத்துமாறு வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என அறியமுடிகிறது.

அத்துடன், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மெற்கொண்டு வருகின்றது என்றும் நம்பகரமாக தெரிவருகின்றது.

http://www.saritham.com/?p=61706

பதட்ட இடமான மத்திய கிழக்கில் பல நிலைகளில் சேவையாற்றியிருந்தாலும் மிசேல் சிசனுக்கும் இலங்கை நியமனம் தேன் நிலவு விடுமுறையாக இருக்க சந்தர்ப்பமும் உண்டு.

போய் வா மகளே போய் வா கண்ணில்

புன்னகை சுமந்து போய் வா போய் வா போய் வா

தாய் வீடென்பதும் தன் வீடே தந்தையின் நாடும் நம் நாடே

சேயும் சேயும் வரக்கண்டால் திறவாக் கதவும் திறவாதோ?

போய் வா மகளே போய் வா கண்ணில்

புன்னகை சுமந்து போய் வா போய் வா போய் வா

ஒரு நாள் கோபம் ஒரு நாளே அதில் உற்றவர் கோபம் வளராதே

மணநாள் மன்னன் உனைக் கண்டு மதி மயங்குகிறான் நீ தளராதே

போய் வா மகளே போய் வா கண்ணில்

புன்னகை சுமந்து போய் வா போய் வா போய் வா

காவலர் சேனை நின்றிருக்கும் தந்தை கண்களும் உன்னைக் கண்டிருக்கும்

பாவலர் தோழியர் இசை கேட்கும் அன்புப் பார்வையெல்லாம் உன்னை வரவேற்கும்

போய் வா மகளே போய் வா கண்ணில்

புன்னகை சுமந்து போய் வா போய் வா போய் வா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.