Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடவுளே கடவுளே கடவுளே!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]

இன்றைக்கு அலுவலகம் முழுதும், குளிக்கும் போது குஷ்புவை கண்ட ரஜனி கணக்கா ஒரே பரவசம். அரை நாள் பொழுது அதை பற்றி பேசுவதிலேயே கழிந்தது. அப்படி என்ன அதிசயம் நேற்று? கடவுளை கண்டு பிடித்துவிட்டார்கள். வெறும் கவர்ச்சி வார்த்தை இல்லை இது. பிரபஞ்சத்துக்கு உருவம் கொடுத்தவர், வலு கொடுத்தவர், சக்தி கொடுத்தவர் தானே கடவுள்? சிருஷ்டி தானே கடவுள்? அவரே தான்![/size]

[size=4]

47794124965589900177_thumb%25255B4%25255D.png?imgmax=800[/size]

[size=4]

மாட்டருக்கு வருவோம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்ற மாட்டர். அட இது நிஜமாகவே மாட்டர் சம்பந்தமான விஷயம் தான். பிரபஞ்சத்தில் உள்ள பொருட்களின்(matter) வடிவமைப்பு, அவற்றின் குணங்களுக்கென்று இரண்டு ஆதாரமான விஷயங்கள் இருக்கிறது. ஒன்று துகள்கள்(particles), மற்றையது விசை(Forces). இந்த துகள்களும், அவற்றின் செர்மானமும் அவற்றிக்கிடையேயான விசைகளும்( மின் காந்த விசை, ஈர்ப்பு விசை..) தான் அணுவை, மூலக்கூறுகளை, தனிமங்களை, செர்வைகளை, என்னை, உங்களை, ஹன்சிகாவை, கட்டதுரையை, விண்வெளியில் இருக்கும் எல்லாவற்றையும் கட்டமைக்கின்றன.[/size]

[size=4]

பிரபஞ்சத்தில் “இருப்பவை” எல்லாமே துகள்களால் ஆனது. துகள்களை, அடிப்படையில் குவார்க் என்றும் லெப்டான் என்றும் பிரிப்பார்கள். இவை அணுவை விட, பாடப்புத்தகத்தில் படித்த ப்ரோத்திரன், இலத்திரனை விட, சிறிய ஆதாரமான கூறுகள். இவற்றுக்கு என்ன ஸ்பெஷல் என்றால், இவை பல சேர்மானத்தில் இணைந்து விசைகளை மேலும் கீழுமாக உருவாக்கி, இணைந்து பிரிந்து, அணுவை உருவாக்குகின்றன. பல அணுக்கள் சேர்ந்து மூலக்கூறு ஆகி.. அவை எல்லாம் சேர்ந்து .. புல்லாகி, பூடாய் புழுவாய் மரமாகின்றன![/size]

[size=4]

350px-CMB_Timeline300_no_WMAP_thumb%25255B2%25255D.jpg?imgmax=800[/size]

[size=4]

முடிவில்லா பிரபஞ்சத்தை பார்த்தால், நட்சத்திரங்கள், கலக்ஸிகள், மனிதர்கள் பேய்கள், அவட்டார்கள் என இவ்வளவு விஷயம் இருக்கிறது இல்லையா? ஆனால் இப்படியான “பொருட்கள்” வெகு கொஞ்சமே. இருக்கும் மாட்டரை விட இல்லாத மாட்டர் தான் அதிகம்! அந்த இல்லாத மாட்டரை டார்க் எனேர்ஜி என்கிறோம். அவை வெறும் சக்தி தான். அவற்றுக்கு என்று ஒரு திணிவு, எடை இல்லை. ஒளி போல. ஒளி வெறும் போட்டோன்களால் ஆனது. அதற்கென்று ஒரு எடை இல்லை. ஆனால் கலர் இருக்கு. போட்டோன்களின் இயல்பு அது![/size]

[size=4]

ஒளி போல ஓடிக்கொண்டே இருக்காமல், ஆற அமர கூடி இருப்பதற்கு, அதாவது பொருள் என்ற ஒன்று அமைவதற்கு, இந்த குவார்க்குகள் மத்தியிலே ஒரு ஈர்ப்பு விசை, தள்ளு விசை வேண்டும். அதற்கு, அடிப்படையில், திணிவு(Mass) அவசியம். திணிவு இல்லாவிட்டால், ஏனைய ஒன்றுமே இருக்காது. பிடிமானம் இருக்காது. ஒரு விசையை கட்டுப்படுத்த திணிவு அவசியம்(F=MA). ஆனால் அந்த திணிவு எப்படி இந்த பொருட்களுக்கு வந்து சேர்ந்தது என்பது தான் எல்லோரையும் குடையும் கேள்வி. திணிவு ஒவ்வொரு குவார்க்கிலும் இருக்கிறது. அதாவது புரோட்டன், நியூட்ரான் இரண்டுக்குமே! இலத்திரனுக்கும் கூட இருக்கிறது. ஆனால் போட்டோனுக்கு இல்லை. இன்னும் சில கூறுகளுக்கும் இல்லை. ஆளாளுக்கு திணிவு மாறுது. சிலதுக்கு இல்லவே இல்லை. ஆக திணிவு என்பது ஆதாரமான விஷயம் இல்லை. அதை யாரோ கொடுக்கிறார்கள் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். யார் கொடுக்கிறார்கள் என்று தெரியாததால் அதை கடவுள் என்று பெயரிட்டு விட்டார்கள்![/size]

[size=4]

கடவுள் தான் திணிவு கொடுத்தார் என்றால், அந்த கடவுள் எங்கே என்று ஒரு கேள்வி எழுகிறது. ஒரு சிலமனும் இல்லை. ஆக திணிவை கொடுத்துவிட்டு அவர் அழிந்துவிட்டார். அதாவது தோன்றி, கொடுத்ததெல்லாம் கொடுத்துவிட்டு மறைந்துவிட்டார். இதை பரிசோதிக்கும் முயற்சி தான் பிக்பாங்![/size][size=4]

[/size][size=4]

பரிசோதனை அவ்வளவு எளிதல்ல. கணக்கிட்டு பார்த்தால், கடவுளை காண்பதற்கு, மிக வேகமாக எதிரும் புதிருமாய் துகள்களை பாய்ச்சவேண்டும். அவை மோதும்போது சும்மா தண்ணி பீச்சுவது போல வெடிக்கும். அப்போது .. அந்த கண பொழுதில் ஒரு விஸ்வரூபம் எழுகிறது. அந்த விஸ்வரூபத்தை ஹிக்ஸ் வெளி(Higgs Field) என்கிறார்கள். அது ஒரு மாஜிக் வெளி. அந்த வெளிக்கூடாக போகும் துகள்கள், திணிவை பெறுகின்றன. மழை போல. மழைக்குள் நனையும்போது ஓட்டும் ஈரம் போல, அந்த கணம் மட்டுமே தோன்றும் இந்த ஹிக்ஸ் வெளிக்கூடாக போகும்போது இந்த துகள்களுக்கு திணிவு கிடைக்கிறது. போகும் வேகத்தை பொறுத்து கிடைக்கும் எடை மாறுகிறது. சிதரும்போது பெரிய, சிறிய குவார்க் கூறுகள் இந்த வெளியால் போகையில் வெவ்வேறு அணுத்திணிவுகள் வருகின்றன. அப்படி திணிவை, அந்த வெளியில் இருந்து கடத்தி தரும் போர்ட்டர் வேலையை செய்பவர் தான் இந்த ஹிக்ஸ் போசோன்(Higgs Boson)! இவரும், இந்த வெளியும் .. கண்ணிமைக்கும் நேரத்தில், பிக் பாங்கின் போது தோன்றி அதே வேகத்தில் அழிந்துவிடும். அந்த கேப்பில உருவானது தான் யூனிவேர்ஸ்! இதை தான் நேற்று நிரூபித்திருக்கிறார்கள்![/size]

[size=4]

ஆக அந்த வெளியை கடவுள் என்றும் அதை கடத்தும் ஹிக்ஸ் போசனை கடவுளின் தூதர் என்றும் சொல்லலாம் இல்லையா? இப்போது பிரபஞ்சம், அதிலும் நட்சத்திர தொகுதி, பால்வீதி, பூமி, நித்யாமேனன், எல்லோரும் தோன்றியதன் ஆதாரம் கடவுள் தானே. இறைவனும் இறை தூதனும் நம்மையெல்லாம் படைத்துவிட்டு, எஸ்கேப்பாகிவிட்டார்கள். அவர்களின் திணிவு தான் நம்மில். இதை தான் கமல் அன்பெசிவத்தில் “நீ நான் சிவம்” என்கிறார். தாதாவஸ்கி “we all came out of Gogol’s overcoat” என்கிறார். நம்ம டிஆர் .. “தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி” என்கிறார். அட ஒரு ப்ளோவில வந்திட்டு பாஸ்![/size][size=4]

http://www.padalay.com/2012/07/05-07-2012.html[/size][size=4]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.