Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்-? -ஸ்ரேயா கொக்கரிப்பு

Featured Replies

[size=4]நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேற்று சென்னையில் கவர்ச்சி மழை கால் வைத்தது.அது வேறு யாருமல்ல ஸ்ரேயா. இம்முறை கன்னடம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் ‘சந்திரா’ படத்திற்காக வருகை தந்தார். அப்போது ஸ்ரேயாவிடம் கேள்விகணைகள் தொடுக்க… ஒவ்வொரு கேள்விக்கும் தயங்காமல் பதில் அளித்தார்![/size]

[size=4]‘சந்திரா’ படத்தில் உங்கள் கதாபாத்திரம் என்ன?”

“நான் இந்தப் படத்தில் மைசூர் ராஜா வம்சத்தின் கடைசி இளவரசியாக நடிக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் ரூபா ஐயர் ஏற்கனவே சாதனைப் பெண் இயக்குனர். இவரது படங்கள் ஆழமானவை! இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டவை. இந்தப் படத்தில் வாழ்ந்து முடித்த ராஜாவம்சத்தின் இன்றைய இளைய தலைமுறை வாரிசுகள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களது காதல் எப்படி பட்டது என்பதை அற்புதமாக சொல்லியிருகிறார். ராஜவம்சத்தின் கடைசி இளவரசியாக இருக்கும் நானும் எல்லோரையும் போல ரத்தமும், சதையும் உணர்ச்சியும் கொண்ட ஒரு நார்மல் பெண்ணாகத்தான் இருப்பேன். அதேநேரம் ராஜவம்சத்தின் குடும்ப நடைமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும். அந்த வகையில் இது எனது திறைவாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்.

இந்தப் படத்துக்காக முதல் இரண்டுநாள் படப்பிடிப்பை நடத்தியிருகிறார் ரூபா. நான் ராயல் பாத் செய்யும் காட்சியை படமாக்கினார். உண்மையில் அந்த இரண்டு நாள் படப்பிடிப்பில் என்னை ராஜகுமாரிபோல் பார்த்துக் கொண்டார். எனக்கு வெதுவெதுப்பான ஹாட் வாட்டர் ஏற்பாடு செய்து அதில்தான் குளிக்க வைத்தார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படத்தில் நான் கணேஷ் வெங்கட் ராம், மற்றும் பிரேம் ஆகிய மூன்று பேருக்கு இடையிலான முக்கோணக் காதல் பிரச்சனை கதையின் முக்கிய மையமாக இருக்கும். இவர்களோடு விவேக் சாரும் ராஜா குடும்பத்தால் தத்தெடுத்துக் கொண்ட ஒருவராக நடிக்கிறார். அவரது காமெடி படத்தில் கதையோடு ஒட்டியதாக இருக்கும்.”[/size]

[size=4]“இயக்குனர் சொல்லவேண்டிய விஷயங்களையெல்லாம் நீங்கள் சொல்லி விட்டீர்களே?”

“ரூபா இப்போது எனது நெருங்கிய தோழியாகி விட்டார். எனக்கு முழுசுதந்திரம் கொடுத்திருகிறார். அவர் ஒரு அற்புதமான தோழி! கோவித்துக் கொள்ள வாய்ப்பே இல்லை!”[/size]

[size=4]“தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கதாநாயகியாக இருந்துவிட்டு, ‘ராஜபாட்டை’ யில் மீண்டும் ஒரு பாட்டுக்கு ஆடினீர்களே?”

‘எல்லாமே விக்ரமுக்காக. ‘கந்தசாமி’ படத்தில் நடித்தபோது நல்ல நட்பு எங்களுக்குள் இருந்தது. அவரது படம் என்றால் அது பெரிய புராஜெக்ட் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதனால் ‘ராஜபாட்டை’யில் கேட்டதும் மறுப்புச் சொல்லாமல் ஒத்துக்கிட்டேன். ஒரு பாட்டுக்கு ஆடுவது தவறே கிடையாது. பாலிவுட்டில் கேத்ரினா முதல் கரீனா வரை ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். இங்கு மட்டும் அதைத் தப்பாக நினைப்பது ஏன் என்றுதான் புரியவில்லை[/size]

[size=4]“தீபா மேத்தாவின் படத்தில் நடிப்பது பற்றி சொல்லுங்கள்?”

“முதலில் ஷங்கருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ‘சிவாஜி’ படம் எனக்குப் பெரிய அளவில் பெயர் வாங்கித் தந்தது. அந்த படத்தை பார்த்த சிலர், தீபாவின் சகோதரர் அசோக் மேத்தாவிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் ‘வாட்ஸ் குக்கிங்’ பட வாய்ப்புக் கிடைத்தது. அது அசோக் இயக்கிய படம். அதைப் பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தீபா, உடனே தனது அடுத்த படத்தில் வாய்ப்புத் தருவதாகச் சொன்னார். சொன்னபடியே சில மாதங்கள் கழித்து எனக்கு அவரது அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தீபா மேத்தாவின் இயக்கத்தில் நடிப்பது என்பது ஒவ்வொரு நடிகையின் கனவாக இருக்கும். அந்தக் கனவு எனது வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரமே நிறைவேறும் என நினைக்கவில்லை.”[/size]

[size=4]“பல மொழிகளில் நடிப்பது சிரமமாக இல்லையா?”

“கண்டிப்பாக இல்லை. நடிப்புக்கு என எந்தத் தனி மொழியும் கிடையாது. எந்த ஊருக்குச் சென்று எந்த மொழியில் நடிக்க வேண்டும் என்றாலும் அதைப் புது அனுபவமாகவே எடுத்துக் கொள்கிறேன்.”[/size]

[size=4]“தமிழில் மீண்டும் முன்னணி ஹீரோக்களுடன் உங்களைப் பார்க்க முடியுமா?”

“ஏன் இந்தப் படத்தில் என்னுடன் நடிக்கும் கணேஷ் வெங்கட்ராம் முன்னனி ஹீரோ இல்லையா?ரஜினிகாந்துடனேயே நடித்துவிட்டேன். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்? ஹீரோக்களைப் பார்த்துப் படங்களை நான் ஏற்பதில்லை. நல்ல கதை, எனது கேரக்டர், நல்ல புராஜெக்ட் பார்த்துதான் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். அப்படியொரு அற்புதமான படைப்பாக வர இருக்கும் படம்தான் இந்த ‘சந்திரா’.[/size]

[size=4]http://pirapalam.com/cinema/4872.html[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.