Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தல்

Featured Replies

வெற்றி பெற்ற தமிழர்களுக்கு வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா...

பரார்... பரார்....

"இடைக்கா(டர்)டு to கோண்டாவில் எக்ஸ்பிரஸ்" உண்டியலானுக்கு ஆப்பு வைக்க வருகிறது!!

ரோகரா...

இவர்கள் வெற்றி பெற்றபின்பு தேசியப் போராட்டத்திற்கு உள்ள தடைகளை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா!!

தயா இடைக்காடர் என்பவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்??

உங்கட ஊர்தான்...! :wink: (சல்லியடியாம்.)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஊர்தான்...! :wink: (சல்லியடியாம்.)

ஒ.

மாணிக்க இடைக்காடரின் மகனா?? :roll: 8)

பிரித்தானியாவில் பாரிய அரசியல் மாற்றங்கள் - விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்தவர் பதவி பறிக்கப்பட்டது. பிரித்தானிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவிரைவில் உதயமாகும்.

(சனிக்கிழமை) 6 மே 2006 ,

பிரித்தானிய ஆளும் தொழில்கட்சி நடந்து முடிந்த பிரதேச சபை தேர்தலில் பாரிய தோல்வி அடைந்துள்ளது. விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சித்து வந்தவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரித்தானியாவில் தடை செய்வதற்கு மூலகாரணகர்த்தாகவும் இருந்த ஜக்சறா பிரித்தானிய பிரதமர் ரொலிபிளேயரால் பதவி பறிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் இந்தவருட தேர்தல் முடிவுகளில் தமிழ் மக்களின் வாக்குகள் பல தீர்மானங்களை எடுக்க ஏதுவாக அமைந்துள்ளதுடன் பிரித்தானிய வாழ் தமிழர்களிடம் அரசியல் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்கவும் தூண்டியுள்ளது. தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில் செல்பவர்களை விசேடமாக பிரித்தானியாவில் இந்த தேர்தலில் தெரிவு செய்துள்ளார்கள். கடந்தகாலத்தில் தமிழ் என்ற ஒரு பொய்யை மக்களுக்கு காட்டி தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டவர்கள் விகிதாசார அடிப்படையில் தேர்தலில் தோல்வி அடைந்தும் தமிழ் தேசியத்திற்காக குரல் கொடுப்போன் என்று இனங்காணப்பட்டவர்கள் அதிகப்படியான வாக்குகளை தமது கட்சிகளுக்குள் போட்டிபோட்டவர்களை விடவும் அதிகமாக பெற்றுள்ளார்கள் இதே நேரம் வெம்பிலி பகுதியில் தமிழ் தேசியத்திற்கு விரோதமாக கோவில் நடாத்தும் ஒருவருக்கு எதிராக ஆரம்பமான பிரச்சனை தேர்தல் காலத்தில் அரசியல் மயப்பட்டு நேற்றைய தேர்தல் முடிவுகளில் அதன் பலாபலன்கள் வெளிவந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக ராஜன் மற்றும் அவர் தலைமையில் இளைஞர்கள் மேற்கொண்டு வந்த தொழில் கட்சிக்கு எதிரானது தொடர் போராட்டங்கள் கோவிலுக்கு எதிரான தொடர் போராட்டங்கள் மற்றும் பிரித்தானிய அரசியல் வாதிகளுக்கு பெரிகாடினர் தொடர்பான தினமும் கொடுத்து வந்த முறைப்பாடுகள் அனைத்தும் மக்களை சென்றடைந்து பெரிகாடினரின் கோட்டை என்று கருதப்படும் பிரதேசத்தில் தொழில் கட்சி படுதோல்வி அடைந்து தலைகீழாக அரசியல் மாற்றமடைந்து லிபரல் டெமோகிரசிக் கட்சி அனைத்து அதிகப்படியான பிரதேசத்தையும் கைப்பற்றி உள்ளது. இதனால் தொழில் கட்சிக்குள் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதுடன் கோவிலுக்கு எதிராக இன்னும் இரண்டு வருடத்திற்கு ராஜனால் நண்பர்கள் சகிதம் மேற்கொள்ளப்பட இருக்கும் போராட்டம் பெரிகாடினரை வெம்பிலி பகுதியில் இருந்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் துரத்திவிடும் என்று நம்பகரமாக அறியமுடிகிறது. கோவில் மக்களிடம் ஒப்படைக்கபடாவிட்டால் தொழில் கட்சி வெம்பிலி பகுதியில் இருந்து அகற்றப்படும் என்று கோவில் மீட்கும் ஆர்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள். கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் துண்டு பிரசுரங்களை தொழில் கட்சிக்கு எதிராக ஆர்பாட்டக்காரர்கள் ஆங்கிலத்தில் அச்சடித்து மக்களிடம் வினியோகித்திருந்தார்கள். எனவே தமிழ் மக்களின் அனைத்து நகர்வுகளும் லண்டனில் நீண்டகால நோக்கம் கொண்டவையாகவும், சரியான பாதையில் செல்வதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளதுடன் பிரித்தானியாவில் தெரிவாகி உள்ள தமிழ் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர்களின் நலன்களை பிரதிபலிக்கும் அமைப்பாக செயற்பட உள்ளதுடன் தமிழரின் உரிமைக்காக பாராளுமன்ற தேர்தலில் குதித்து பாராளுமன்றத்திற்கு தமிழரின் கோரிக்கைகளை கொண்டு செல்ல உள்ளார்கள்.

பிரித்தானிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவிரைவில் உதயமாக வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளதுடன் இவ்வாறான தமிழரின் அரசியல் அபலாசைகளை பிரச்சாரம் செய்யும் ஒரு கட்டமைப்பு முக்கியமாக அமெரிக்கா, கனடா ஆகியவற்றிலும் தேர்தல் காலங்களில் அதிக கவனம் செலுத்தி உருவாக்கப்படல் வேண்டும். சர்வதேச பாராளுமன்ற அரசியல் அரங்கில் தமிழ் தேசியக்குரல் வலுவடைய வேண்டும் என்று பலரும் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

http://www.nitharsanam.com/?art=17050

பிரித்தானியாவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றது. இதில் லேபர் கட்சி படுதோல்வியச் சந்தித்துள்ளது. இத்தேர்தலில் தேசியப் பிரட்சனைகள், கட்சியிலுள்ள அமைச்சர்களின் குளறுபடிகள் , .. போன்ற பல விடயங்கள் லேபர் கட்சியை பாதித்திருந்தது.

ஆனால் இத்தேர்தலில் 8 தமிழ் கவுன்ஸிலர்கள் லண்டனில் பல பகுதிகளில் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், குறிப்பாக கரோ கவுன்ஸிலில் 4 தமிழ் கவுன்ஸிலர்கள் தெரிவாகியுள்ளார்கள். ஏறக்குறைய 7000 ஈழத்தமிழ் மக்கள் வாழும் கரோப் பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் பிரித்தானிய வெளியுறவு அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் கரத் தோமஸ் இங்குள்ள தொகுதியொன்றின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழமையாக கொன்ஸவேட்டிக் கட்சியின் கோட்டையாக கருத்தப்படும் கரோப்பகுதி, கடந்த கவுன்ஸில் தேர்தலில் லேபர் கட்சி கைப்பற்றியிருந்தது. ஆனால் மற்றைய கவுன்ஸில்களில் லேபர் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விகளோடு ஒப்பிடுகையில், கரோக் கவுன்ஸில் பகுதி பழமைவாத கட்சியின் வாக்காளர்களை பெருமளவு கொண்டிருந்தாலும் பாரியளவு பாதிக்கவில்லை.

ஆனால் அடிப்படையில் லேபரின் கோட்டையாக கருதப்படும் பிரன்ற் கவுன்ஸில், வரலாற்றில் பாரிய தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஆசிய இனத்தவர்களை பெரும்பாண்மையாக கொண்டிருக்கும் இப்பிரதேசத்தில் ஏறக்குறைய 10000 இற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் வசிப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ் பிரன்ற் பகுதியிலுள்ள தொகுதியொன்றிலேயே பரி காடினர் நீண்ட காலமாக லேபர் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான லேபரின் கோட்டை சரிந்தது ஏன்????????????

பிரன்ற் கவுன்ஸில் பகுதியில் ஒவ்வொரு கவுன்ஸிலர்களையும் தெரியும் தொகுதிகளில், அக்கவுன்ஸிலர்களை தெரிவு செய்வதில் தீர்மாணிக்கும் வாக்காளர்களாக இருக்கும் ஈழத்தமிழ் மக்கள் இம்முறை தேர்தலை புறக்கணித்ததற்கு காரணம் என்ன??????

அதிலும் 3 தமிழ் வேட்பாளர்களை பிரன்ற் தேர்தலில் லேபர் கட்சி நிறுத்திய போதிலும், அவர்கள் வெற்றி பெறாததற்கு காரணம் என்ன????????

இவற்றிற்கான விடைகள் இன்று லேபர் கட்சிக்கு நன்றாகத் தெரியத் தொடங்கி விட்டது. விடைகளுக்கு பரிகாரம் உடனடியாகக் காணத்தவறின் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அறுவடைகளை சந்திக்க நேரும்!!!

------------------------------------

Harrow:

Old Council Con/28 Lab/30 LD/3 Others/2

New Council Con/38 Lab/24 Ld/1

-------------------------------------

Brent:

Old Council Con/18 Lab/34 LD/11

New Council Con/15 Lab/21 Ld/27

-------------------------------------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா....

பிரண்ரில் லேபருக்கு விழுந்த மரண அடியில், கடந்த சில வாரங்களாக ஈழ்பதீஸானை மீட்க நடக்கும் போராட்டம் பெரிய காரணம் என பிரன்ற் கவுன்ஸிலின் முன்னால் லீடர் இன்று பகிரங்கமாக ஒத்துக் கொன்டுள்ளாராம்.

லேபர் கட்சிக்கு சொந்தமான கட்டத்தில் கீழுக்கு ஈழ்பதீஸானையும், மேலுக்கு லேபர் பிரன்ற் தலைமையகத்தையும் வைத்திருந்தால்????

கடந்த சில வாரங்களாக ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் இரு மொழிகளிலும் ஆலய அடிவாரத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாம். இத்துண்டுப்பிரசுரங்கல், போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பல தூதுக்களை லேபர் தரப்பு விட்டதாம். ஆனால் இளையர் தரப்பு மறுத்து விட்டதாம். ஆலயத்தை மக்களிடம் ஒப்படையுங்கள், நாம் நிறுத்துகிறோம் என்று கூறி விட்டார்களாம்!! ... விளைவு லேபருக்கு ரோகரா!!!!!

இப்போ, இன்னும் அடுத்தடுத்த வருடத்தில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும் ரோகரா வருமோ என்ற பயமாம்!!!!

அநேகமாக அடுத்த முறை புதுப்பிக்கும் ஈழ்பதீஸானின் கட்டட லீஸ் இல்லை என்று கதை அடிபடத் தொடங்கியிருக்கிறது. எல்லாம் ஈழ்பதீஸானை மீட்க பிரித்தானிய சட்ட வரைமுறைக்குள் போராட்டத்தை தொடங்கியிருக்கும் இளையர்களின் கையிலேயே தங்கியுள்ளது. அவ்விளையர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, உதவிகளைச் செய்ய வேண்டிய கடமை ஈழ்பதீஸானின் பக்த கோடிகளில் தங்கியுள்ளது.

ஈழ்பதீஸானே!! நீ மக்களின் சொத்தாவதே, எமது குறிக்கோள்!!!

அரோகரா....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.