Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவுப் ஹக்கீம் சொல்லும் காவி உடை பயங்கரவாதம் இதுதானோ? :மனோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பயங்கரவாதத்தை அழித்ததைபோல், காவியுடை பயங்கரவாதத்தையும் ஜனாதிபதி அழிக்க வேண்டும் என நண்பர் ரவுப் ஹக்கீம் கோரிக்கை விட்டுள்ளார். இந்த ஜனாதிபதியின் இந்த அரசாங்கம்தான், இந்த காவியுடை பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கிறது.

80 வருட பழைமையான கிழக்கு மாகாண பாணமை பிள்ளையார் ஆலயத்தின் பிள்ளையார் சிலையை பலவந்தமாக கடத்தி சென்றுள்ள, காவி உடை கோஷ்டி,அரசாங்கத்தின் மதவாத-இனவாத கொள்கை தரும் தைரியத்தில்தான் செயல்படுகிறது. இது இப்படியே போனால், நாளை நல்லை கந்தனையும் இவர்கள கடத்தி செல்வார்கள். கடந்த காலங்களில் இப்படித்தான், கதிர்காம கந்தனையும் இவர்கள் கடத்தி சென்று இன்று அதை ஒரு பெளத்த ஸ்தலமாக மாற்றி விட்டார்கள்.

பாணமை பிள்ளையார் சிலை பலவந்தமாக எடுத்துசெள்ளப்பட்டமை தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நாடு முழுக்க இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்களுக்கு எதிராக நடைபெறும் ஆக்கிரமிப்புகள், தாக்குதல்கள், இத்தகைய கடத்தல்கள் ஆகியவை சிங்கள-பெளத்தத்தின் பெயரிலேயே நடத்தப்படுகின்றன. உண்மையான சிங்கள பெளத்தர்கள் இதை நினைந்து வெட்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களது வெட்கம் எங்கள் பிள்ளையாரை திருப்பி கொண்டுவரபோவதில்லை. இதன்மூலம் குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில்,தமிழர்களின் இன மத அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. இது அதன் ஒரு அங்கம்தான்.

இந்த நாட்டிலே இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தமிழ் பேசும் மக்கள் படும்பாடு,அரசாங்கத்துக்கு உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், எல்லா தமிழ்,முஸ்லிம் கட்சிகளுக்கும் தெரிகிறது. இந்த அரசாங்கத்தின் அஸ்திவாரமே இந்த காவியுடை அரசியல்தான். இந்நிலையில் தங்களது அஸ்திவாரத்தையே எப்படி இவர்கள் அழிப்பார்கள்? இந்த அரசாங்கத்தை அழிக்காமல் காவியுடை பயங்கரவாதத்தை அளிக்க முடியாது.

இந்நிலையில் இந்த அரசாங்கத்திற்கு, சரி எது, பிழை எது என்பது தொடர்பில் நாம் பாடம் புகட்டாதவரைக்கும், இந்த அரசாங்கம் கொடுக்கும் தைரியத்தில் இவை தொடர்ந்து நடக்கும். கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், கேதீஸ்வரம்,நகுலேஸ்வரம் என்று எல்லா ஈஸ்வரங்களையும் குறிவைத்து செயற்படுவது இந்த காவி உடை மத வெறி கோஷ்டிதான்.

உடனடியாக இந்த கடத்தி செல்லப்பட்ட பாணமை பிள்ளையார் மீண்டும் பாணமை ஆலய அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். உடனடியாக இது நடைபெறாவிட்டால், நாம் எமது மத சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கில் நாம் நேரடி போராட்டங்களில் குதிக்க வேண்டிவரும். இனரீதியான போரை முன்னெடுத்த இந்த அரசு, இன்று மத ரீதியான போரை முன்னெடுக்கின்றது என்ற குற்றச்சாட்டை நாம் ஐநாவிலும், சர்வதேச மத சுதந்திர பாதுகாப்பு அமைப்புகளிடமும், இந்தியாவில் உள்ள இந்து மத அமைப்புகளிடமும் முன் வைக்க வேண்டி வரும். இது தொடர்பான மேலதிக தகவல்களை தற்சமயம் நாம் வேண்டி நிற்கின்றோம்.

http://virakesari.lk/article/local.php?vid=64

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.