Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களின் கைப்பைகளுக்குள் சட்டம்! - கந்தரதன்

Featured Replies

பிரித்தானியாவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றுமுடிந்த நிலையில், பல்லின மக்களும் ஆர்வமாகக் கலந்து கொண்ட நிலையில் சிங்களத்தின் தமிழர்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக பல கோரிக்கைகளை முன்வைத்து மனித நேயன் சிவந்தன் தனது உணவு மறுப்புப் போராட்டத்தை 22 நாட்களாக தொடர்ந்து முடித்துள்ளார்.

இப்போராட்டம் இன்று சர்வதேச மக்களை ஈர்த்துள்ளது. அவர்கள் இப்போராட்டத்தின் நோக்கம் பற்றியும் சிங்களத்தினால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் பலவும் சிவந்தனின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அழித்திருந்தன. இந்தநிலையிலும் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஓய்ந்தபாடில்லை. ஐக்கிய நாடுகள் சபையினால் சிறீலங்காவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள படையினர் அகற்றப்படவேண்டும்.

ஆனால், கடந்தவாரம் சிறீலங்காக் கடற்படை வடக்கில் தமிழர் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து மேலும் மூன்று பாரிய கடற்படைப் பிரிவுத் தளங்களை அமைத்துள்ள தகவல் தாயகத்திலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கு மேலும் ஆத்திரத்தை உண்டு பண்ணியுள்ளது. இந்தக் கடற்படைப் பிரிவுத் தளங்கள் கடந்த முதலாம் நாள் சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது வேறு.

பூநகரிக்கு அண்மையில் உள்ள கல்முனையிலும் சுண்டிக்குளத்திலும் இந்தப் புதிய தளங்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன. மற்றையது யாழ் வேலணை சாட்டிப் பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது. சாட்டியில் நிரந்தர முகாங்கள் அமைக்கப்படுவதற்காக பெருமளவிளான தளபாடங்கள் இறக்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மாதகல் சம்பில்துறையில் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ள தம்பகொலபட்டுன விகாரைக்கும் சிறிலங்கா கடற்படைத் தளபதி பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சிறிலங்கா கடற்படையினரால் தென்பகுதியில் இருந்து வரும் பௌத்த யாத்திரிகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு நிலையத்தையும் அவர் பார்வையிட்டுள்ளார். ஆயினும் தமிழ் மக்களுக்கு இப்பகுதிக்கு செல்வதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் தமிழ் கடற்றொழிலாளர்களுக்கும் தொழில் செய்ய விதிக்கப்பட்ட தடை தொடர்கின்றது. ஆனால், தென்பகுதி சிங்களவர்கள் அங்கு உல்லாசமாக கடற்படையினரின் ஒத்துழைப்புடன் தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதேவேளை, வடமராட்சி கிழக்கில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை மற்றும் சங்கு பிடித்து வரும் தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களின் நடவடிக்கையினால் உள்ளூர் கடற்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இந்நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் அவர்களின் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள உதவிப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்னிலங்கை மீனவர்களால் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த கடற்தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

படையினரும் சிங்கள கடற்தொழிலாளர்களும் தங்களின் வலை உபகரணங்களைச் சேதமாக்கி வருகின்றனர் என அப்பிரதேச கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடற்தொழிலாளர் சங்கங்களால் எவ்வாறான சட்ட திட்டங்கள் போடப்பட்டாலும் அதற்கு செவி

சாய்க்காமல் தென்னிலங்கை மீனவர்கள் படையினரின் ஓத்துழைப்போடு தமது அடாவடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பல தமிழ் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களையும் சொத்துக்களையும் உரிமைகளையும் சூறையாடி வருகின்ற சிங்களம் இன்று தமிழ் யுவதிகளையும் விட்டுவைப்பதாக இல்லை. யாழ் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் யுவதி ஒருவர் சிங்கள இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட யுவதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் லக்ஸபானா மின் விநியோக இணைப்பு வேலையில் ஈடுபட்டு வரும் மின்சார சபையின் இனவெறிச் சிங்கள இளைஞர் ஒருவர் வீதியால் சென்று கொண்டிருந்த இந்த யுவதியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்தவாரம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட யுவதி உடனடியாக போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சிங்கள இளைஞன் கைது செய்யப்பட்டு காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதும் குறித்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என்பது கேள்விக்குரியதே. சிறிலங்கா சட்டம் என்பது எல்லாம் சிங்களவர்களின் கைப் பைகளுக்குள்ளேயே அடங்கியுள்ளது. இன்றைய நிலையில் நாம் ஆயிரம் சிவந்தணல்களாக உருமாறவேண்டிய நேரம் இது. சற்று சிந்தியுங்கள் செயற்படுங்கள்!

(சூறையாடல் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.