Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலைவாசி உயர்வு மட்டுமா மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு..? ஈழதேசம் செய்தி..!

Featured Replies

விலைவாசி உயர்வு மட்டுமா மகிழ்ச்சி அளிக்கிறது. காங்கிரஸ் அரசுக்கு..? ஈழதேசம் செய்தி..!

விலைவாசி உயர்வு மகிழ்ச்சி அளிக்கிறதாம். பணவீக்கம் உயர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பேணி பிரசாத் வர்மா கூறியுள்ளார். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மற்றும் இதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் வேளையில், இரும்பு மற்றும் கனிமவள அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளது கடும் புயலை கிளப்பி உள்ளது. உணவுப் பொருள்களான அரிசி,பருப்பு,கோதுமை, ஆட்டா மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதனால் உணவுப் பணவீக்கம் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். உருளைக் கிழங்கு, வெங்காயம் போன்ற உணவுப் பொருள்களின் விலையேற்றங்களை ஊடகங்கள் தனியாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. மாறாக, சிமென்ட், இரும்பு போன்ற கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தை ஊடகங்கள் பெரிதாக கண்டு கொள்வதில்லை. அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்திற்கு ஊடகங்கள் வர்ணங்கள் பூசி போலியாக கண்ணீர் வடிக்கின்றன. உணவுப் பொருள்களின் விலையேற்றம் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் பிரசாத் வர்மா அவர்கள்.

21TH_CARTOON_COLOU_1184011f.jpg

கருத்துப்படம் ஹிந்து

அமைச்சரின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்து உள்ளனர். கொஞ்ச நாட்களுக்கு முன் திரு.ப.சிதம்பரம் இவ்வாறு சொன்னார்..அரசியின் விலையை ஒரு ரூபாய் உயர்த்தினால் குய்யோ முறையோ என்று கத்தும் நடுத்தர வர்க்கம் தான் 20 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்குகிறார்கள். ஐஸ்க்ரீம் விலை உயர்ந்தாலும் வாங்கி உண்பதில் தயக்கம் காட்டுவதில்லை என்று சொல்லி, இந்திய அளவில் செமையாக வாங்கிக் கொண்டார் என்ற நிலையில், தற்போது பேணி பிரசாத் வர்மா இவ்வாறு செப்பியுள்ளார். இந்த கருத்துக்கு பொருளாதார விளக்கங்களை கூறுகிறார்கள் இவ்வாறு. 'ஒரு நாட்டின் ஆரோக்கியமான பொருளாதாரத்துக்கு மிதமான பணவீக்கம் அவசியம் தேவை.எத்தனையோ பொருளாதார நிபுணர்கள் இந்த கூற்றுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள்,அதிகப்படியான பணவீக்கம் ஒரு நாட்டுக்கு நிச்சயம் நல்லதல்ல. அதே நேரத்தில் பூஜ்ஜிய பண வீக்கமும் நாட்டுக்கு நல்லதல்ல. குறிப்பாக வட்டி விகிதங்கள் குறைய பண வீக்கம் அவசியம். ஆகையால் அமைச்சர் பேணி பிரசாத் வர்மா அவர்கள் சொன்னதில் உண்மை இருக்கிறது என்கிறார்கள்.

எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனங்களை இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வு விவசாயிக்கு நன்மை அளிக்கிறது என்றால், உர விலையும் உயர்ந்திருக்கிறதே..? இது எந்த வகையில் நன்மை அளிக்கும் என்று கேட்டுள்ளார். தவறான விவசாய கொள்கைகளை காங்கிரஸ் அரசு பின்பற்றி வருகிறது.விவசாய மானியம் விவசாயிகளை சென்றடைவதில்ல என்றார்.

சமாஜ்வாதி கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது இவ்வாறு. மத்திய அமைச்சரவையில் இருந்து வர்மாவை நீக்காவிட்டால், காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று அக்கட்சியின் தலைவர் மோகன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க., வின் அருண் ஜெட்லி கூறுகையில், விலையேற்றம் குறித்து இதுபோன்ற கருத்துக்களை சொல்பவர்களுக்கு கடன் மற்றும் இடுபொருள்களின் விலையேற்றத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை. விலையேற்றம் விவசாயிகளையும் பாதிக்கும். உணவுப் பொருள்களின் விலையேற்றம் எவ்வகையிலும் விவசாயிகளுக்கு பயன் தராது என்றார்.

அதே கட்சியின் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் யாரும் பணவீக்கம் போன்ற எந்தப் பிரச்சனைகளாலும் பாதிக்கப்படுவதில்லை. விலையேற்றத்தால் பாதிக்கப்படும் சாதாரண மக்களை அவர்கள் சந்திப்பதில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. உரங்களின் விலையேற்றம், மின்பற்றாக்குறையால் விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். " சாதாரண மக்களுக்கே இந்த ஆட்சி என்று காங்கிரஸ் பேசுகிறது. ஆனால் அந்தப் பாதையிலிருந்து எப்போதே காங்கிரஸ் தடம் மாறிவிட்டது என்றார் ஷா நவாஸ். வர்மாவின் இந்த கருத்து பெரும் நகைச்சுவையாக இருக்கிறது என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார். உயர்ந்து வரும் பணவீக்கம், ஊழல்.லஞ்சம்,வறுமைக்கோடு, வேலையின்மை ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், விலையேற்றத்தை நியாயப்படுத்துகிறார்.

ஆக, ஒரு கட்சியின் தலைவருக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது என்ற செய்தி நகைச்சுவையாக இருக்கிறது. சங்க்பரிவார் கூட்டத்திற்கோ அவர்கள் விவசாயிகளை அறிந்திருக்கவில்லை.காங்கிரஸ் கட்சி சாதாரண மக்களுக்கான கட்சி அல்ல என்று சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள கட்சிகள் எவரும் இந்த மகிழ்ச்சி தரும் விலைவாசி ஏற்றத்திற்கு எந்த கருத்தும் சொல்லவில்லை. விலைவாசி என்றால் ஏறத்தான் செய்யும். இதற்கெலாம் கருத்து சொல்லிக் கொண்டிருக்க முடியுமா..? என்ற மனநிலையில் இருக்கிறார்கள். மன்மோகன் சிங் ஒரு பொருளாதார மேதை, அவருக்கு ஒரு படி கீழே உள்ள பொருளாதார மேதைகளான அலுவாலியா, ரெங்கராஜன் போன்றவர்கள் எல்லாம் இந்த விலைவாசி ஏற்றமும் பணவீக்கமும் ஏற்படக் காரணம் என்ன..? என்று தெரியாதவர்களா என்ன..! கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பொருளாதார மேதைகள் என்று அவர்களே சொல்லுகிறார்கள். மக்களுக்கான விவசாயிகளுக்கான பொருளாதார மேதைகளா இருப்பதற்கு அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்கு..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

காங்கிரஸ் கட்சிக்கு, 2 ஜி ஊழல், காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், K.G.ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், கறுப்புப் பணம் பதுக்கல் ஊழல், இஸ்ரோ ஊழல், கிரானைட் ஊழல் என்று தொடங்கி ஆயுத ஊழல் என்று முடியாமல், செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பும் .ஊழல், நிலவில் தண்ணீர் இருக்கும் என்று கண்டிபிடித்த ஊழல் என்று எவ்வளவோ மகிழ்ச்சியாக இருக்கையில், இவ்வாறு மகிழ்ச்சி அளிக்கும் பொழுது விலைவாசி உயர்வும், விவசாயிகள் தற்கொலையும் மகிழ்ச்சியாக இருக்காத என்ன..?

- சங்கிலிக்கருப்பு -

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.