Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இராணுவக் குடியிருப்பு ௭ன்ற போர்வையில் வடக்கு, கிழக்கில் சிங்களக் குடியேற்றம்: சுரேஷ்[/size]

[size=2]ஓமந்தை, வடக்கு– கிழக்கில் இராணுவக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு நூறு மில்லியன் அமெரிக்க டொலரினை சீனா உதவியாக வழங்கவுள்ளதாக வெளிவரும் செய்திகள் தமிழ் மக்களுக்கு வேதனையளிக்கும் செயற்பாடாகும் ௭ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ௭ம். பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடக்கு– கிழக்கு மாகாணத்தை இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருக்க வேண்டுமென்பதில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாக இருக்கின்றது. ஏற்கெனவே திருமுறிகண்டியில் நான்காயிரம் ஏக்கருக்கு மேல் ௭டுக்கப்பட்டு அங்கு சீன உதவியுடனான இராணுவக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மன்னார்–முள்ளிக்குளத்தில் கடற்படை முகாம் நிறுவப்பட்டுள்ளதுடன் கடற்படையினருக்கான குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பொழுது சீன அரசாங்கம் நூறு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்து வடக்கு– கிழக்கில் இராணுவத்திற்கான கட்டுமானங்களை புனருத்தாபனம் செய்வதற்கும் இராணுவ குடியிருப்புகளை உருவாக்குவதற்கும் நீண்டகால அடிப்படையில் இந்தக் கடனுதவி வழங்கப்படுகின்றது. இலங்கையில் இரண்டு இலட்சம் இராணுவத்தினர் அதாவது, இருபது டிவிசன் இராணுவத்தினர் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.

இதில் ஏறத்தாழ ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வடக்கு– கிழக்கில் இருப்பதாக நம்பப்படுகின்றது. இராணுவக் குடியிருப்புகளை உருவாக்குவதன் மூலமும் அவர்களது குடும்பங்களை குடியேற்றுவதன் மூலமும் சிங்கள மக்களை குடியேற்றுவதன் மூலமும் வடக்கு– கிழக்கின் குடிசனப் பரம்பலை மாற்றி, பெரும்பான்மையாக வாழும் தமிழர்களை அவர்களது சொந்த இடங்களிலேயே சிறுபான்மையினமாக்கும் முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் வித்திடுகின்றது.

சீன அரசாங்கம் திபெத்தில் சீனர்களைக் குடியமர்த்தி ௭வ்வாறு திபெத்தியர்களை சிறுபான்மையாக்குகின்றதோ அவ்வாறே இலங்கையிலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களை சிறுபான்மையாக்க முயற்சிக்கின்றது. சீன அரசாங்கத்தைப் பொறுத்தவரை தனது சொந்த நலன்களும் தனது நாட்டின் பாதுகாப்பும் தான் பிரதானமாக இருக்கின்றது.

இந்த சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், இந்திய உபகண்டத்தில் தனது கழுகுப் பார்வையை வைத்திருக்கவும் இலங்கையை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக வைத்திருக்க முயற்சிக்கின்றது. சீனாவின் இந்த செயற்பாடும், இலங்கை அரசாங்கத்தின் அதற்கான ஆதரவும், தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கும், இப்பிராந்தியத்தில் பதற்ற நிலைகள் உருவாகவும் வழிவகுக்கும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புகின்றது.

வடக்கு–கிழக்கில் அமைதியும் சமாதானமும் நிலவுவது இந்தியாவின் ஆக்கிரமிப்பென்பது சமாதான சகவாழ்விற்கு ௭ந்த விதத்திலும் துணைபுரியாது. ஆகவே, இந்திய உபகண்டத்தையும் தென்னாசியப் பிராந்தியத்தையும் தொடர்ச்சியான ஒரு பதற்ற நிலையில் வைத்திருப்பதற்கு சீனா முயற்சிப்பதும், அதற்கு இலங்கை ஆதரவளிப்பதும், ஒட்டுமொத்தமான இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையை சரியான திசைவழிக்கு உள்ளாகலாம் ௭ன்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்ட விரும்புகின்றது.

இத்தகைய திட்டங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். மேலதிகமான இராணுவங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவும் சரியான இராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் ௭ன்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ௭திர்பார்க்கின்றது.[/size]

[size=2]http://www.virakesari.lk/article/local.php?vid=337[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.