Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊடகங்களை சட்டத்தின் பிடியால் அடக்கி ஒடுக்குவதற்கு சிறீலங்கா அரசு முயற்சி

Featured Replies

படுகொலைகளாலும், கடத்தல்களாலும் இதுவரை காலமும் நசுக்கப்பட்ட ஊடக சுதந்திரம் தற்போது சட்டத்தின் கோரப் பிடிகள் ஊடாக அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பத்திரிகை சுதந்திரம் ஒன்றும் விதிவிலக்கில்லை. அதுவும் தமிழ் தேசியத்தை இன்றும் தமது நினைவுகளில் வைத்திருக்கும் ஊடகங்கள் ஒவ்வொன்றும் நீதிக்கு முன்னால் தலைகுனிய வைக்கப்படுவதோடு தண்டிக்கவும் படுகின்றது.

ஜனநாயகத்தினை தாங்கி நிற்கும் 4 தூண்களில் ஒன்றாக சொல்லப்படும் ஊடகத்திற்கே இந்த நிலை என்றால். அந்த நாட்டில் வாழுகின்ற சாதாரண மக்கள் இந்த சட்டத்தினால் நீதியான பார்வையில் பார்க்கப்படுவார்கள் என்று நம்புவது முட்டாள் தனமானது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் பத்திரிகைள் என்று எடுத்துப்பார்த்தால் பத்திரிகை தர்மத்தில் நின்று தமிழ் தேசியம் என்னும் பாதையில் இன்றுவரை சென்று கொண்டிருப்பதில் சுட்டிக்காட்ட வேண்டியவை உதயன் மற்றும் யாழ்.தினக்குரல் பத்திரிகைகள் மட்டுமே. இவற்றுடன் அவ்வப் போது வலம்புரி பத்திரிகையும் வந்து செல்கின்றது.

உலக நாடுகளின் பார்வை முழுவதும் இப்போது தமிழ் மக்கள் பக்கம் திரும்பியுள்ளது.

அதுவும் குறிப்பாக ஈழத்தில் யாழ்ப்பாணத் தமிழர்களை மிகவும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு உள்ளார்கள். அவ்வாறு கவனிக்கப்படும் யாழ் மக்களுடைய குரலாக வெளிவருவது மேற்குறித்த இரு பத்திரிகைகளுமே. இவ்விரு பத்திரிகைகளின் குரல்வளை நசுக்கப்பட்டால் தமிழ் மக்களின் அவலங்கள் வெளிவருவது தடுக்கப்படும் என்ற அற்ப ஆசையில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது நன்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.

கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கத்தின் அட்டூழியங்களை வெளிக்கொணர்ந்த பத்திரிகையாளர்கள் நடு வீதியில் நாய் சுடுகின்றது போல் சுட்டு கொல்லப்பட்டார்கள். சிலர் கடத்தப்பட்டார்கள். பத்திரிகை நிறுவனங்கள் அடித்து நொருக்கப்பட்டது. பத்திரிகைகள் எரிக்கப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் மிரட்டப்பட்டனர்.

அவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் செய்யும் ஒவ்வொரு காட்டுமிராண்டித் தனங்களையும் வெளிக் கொண்டு வருவதற்கு தமிழ் தேசிய உணர்வுடன் ஒரு ஊடகன் புதிது புதிதாக உருவெடுத்துக் கொண்டே இருந்தான். ஏனேனில் தமிழ் தேசியம் ஒன்றும் எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடங்கள் அல்ல. நாம் மற்றையவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு. சிறிலங்கா அரசாங்கம் தமிழ் தேசியவாதி ஒருவனை அழிக்கும் போது அவன் போல் 100 பேர் உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.

இயலாமல் போன சிறிலங்கா அரசாங்கம் தாமும் தம் ஒட்டுக்குழுக்கள் சார்ந்த பத்திரிகைகள் அச்சிடுவதில் இறங்கியது. அந்த முயற்சியும் அவர்களுடைய நயவஞ்சகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. மக்களிடம் சிறிலங்கா அரசாங்கம் தமது கருத்துக்களை திணிக்க முயற்சித்த போதுதான் யாழ் மக்கள் தமிழ் தேசியத்தில் இருந்து ஒருபோதும் விலகப் போவதில்லை என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கும்.

தமிழர்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்து தமிழ் தேசியத்திற்கான குரல் எமது ஊடகங்கள் வாயிலாக ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. எனவே ஊடகங்களின் குரல்களை அடக்குவது என்பது சிறிலங்கா அரசாங்கத்திற்கு கட்டாயத்தின் தேவையாக உள்ளது. எனவே படுகொலைகளுக்கும், கடத்தல்களுக்கும் அஞ்சாத ஊடகங்களை சட்டத்தின் பிடியால் அடக்கி ஒடுக்குவதற்கு கங்கணம் கட்டிக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்கு அரசாங்கத்தின் அடிவருடியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இவர்களில் ஒருவர்தான் நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கத்தின் சிறந்த அடிவருடியாக செயற்பட்டுவரும் ஈ.பி.டி.பி கட்சி சம்மந்தமான செய்தி பிரசுரித்ததற்கு உதயன் மற்றும் தினக்குரல் பத்திரிகையாசிரியர்களை குறித்த ஈ.பி.டி.பி உறுப்பினர் முன்னிலையில் வைத்து விசாரணை செய்திருந்தார். விசாரணை செய்வதோடு நிறுத்தினால் பரவாயில்லை. குறித்த பத்திரிகையாசிரியர்கள் அவமானப்படுத்தப்பட்டது மட்டுமன்றி ஈ.பி.டி.பி உறுப்பினருக்கு நற்சான்றிதளும் வழங்கி வைத்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணத்தில் வெளிவரும் ஊடகங்களுக்கு பேரிடி கொடுத்தது யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி மா.கனேசராஜாவின் விசித்திர நாடகமாகும். சாதாரண மனிதனுக்கு இருக்கக் கூடிய பண்புகள் கூட இல்லாத ஒரு ஜீவனை நீதவான் என்னும் பட்டம் கொடுத்து இருக்கையில் அமர்த்தினால் என்ன நடக்குமோ அதுதான் யாழ்ப்பாணத்தின் நீதியின் மகத்துவமாக உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.சுமந்திரனை யாழ்.நீதவான் நீதிமன்றில் வைத்து விமர்சித்ததிற்காக கணேசராஜா அதே மன்றில் சுமந்திரன் முன்நிலையில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார்.

இதனை உதயன் பத்திரிகை தனது பத்திரிகையில் செய்தியாக வெளியிட்டிந்தது. இதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணேசராஜா உதயன் பத்திரிகை ஆசிரியரை பகிரங்க மன்னிப்புக் கோரவைத்ததுடன், மறுப்புச் செய்தியும் பிரசுரிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டிருந்தார். இதற்கு உடந்தையாக அதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசிக் கொண்டு திரியும் சிறிகாந்தா மற்றும் றெமிடியஸ் ஆகியோர் இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் ஊடகம் மட்டுமல்ல சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் அனைத்து சக்திகளும் சட்டத்தின் பிடியால் அடக்கி ஒடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பினை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ்.பஸ் நிலையத்திற்கு முன்பாக நடாத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்க முடியாத ஆர்ப்பாட்டத் தடையுத்தரவினை கணேசராஜா வழங்கி சாதனை படைத்திருந்தார்.

இது போன்று யாழ்,போதனா வைத்திய சாலையில் நடைபெறும் ஊழல் சம்மந்தமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், வைத்தியர் ஜெயக்குமார் வீட்டின் மேல் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கும், கவனயீர்ப்பு போராட்டத்திற்கும் தடையுத்தரவினை வழங்கியிருந்தார். ஆனால் ஜே.வி.பி நடைத்திய ஆர்ப்பாட்டப் பேரணி மட்டும் பொலிஸ் பாதுகாப்பில் நடைபெற்றது.

கொலை வெறி சிறிலங்கா அரசாங்கத்தின் பிடிகளில் இருந்து நீதியின் நிழலில் நின்று கொள்ளலாம் என்ற எண்ணமும் தகர்த்தெறியப்பட்டுள்ளது.

- ஈழமகன்

http://thaaitamil.com/?p=31111

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.