Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது

Featured Replies

piragal_thiru.jpg

தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது

Sep 20 2012 08:09:24

கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியமைக்கான மகாராணி எலிசபெத் II நினைவு வைர விழா விருது தமிழர்கள் நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1952 இல் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எலிசபெத் II மகாராணியின் வைர விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக கனடாவிற்கும் மேலும் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தத்தம் சமுதாயத்தினருக்கும் சிறந்த சேவையாற்றிய சிலருக்கும் இந்த விருதினை வழங்கி கௌரவிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஒன்ரோறியோவில் மகாராணியின் வைர விழா நினைவு விருதினைப் பெற 2000 தெரிவு செய்யப்பட்டனர்.

விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட தமிழர்கள்

piragalthiru.jpeg

பிறகல் திரு - Jane Finch neighborhood, United Way of York Region, co-founding the Aboriginal Professionals Network மற்றும் கனடியத் தமிழர் பேரவை மூலமாக பல வழிகளில் கனடியத் தமிழ் சமுதாயத்திற்கு தன்னார்வத் தொண்டு செய்து வந்த திருவின் சேவைகளை அங்கீகரித்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜூடி ஸ்க்ரோ மற்றும் வடக்கு யோர்க் பகுதியின் ஒன்ரோறியோ சட்டசபை உறுப்பினரான் மரியோ செர்கியோ ஆகியோர் திருவின் பெயரை இந்த விருதுக்காக முன்மொழிந்திருந்தனர்.

தன்னலமில்லாது அவரவர் சமுதாயத்திற்கும் , நாட்டிற்கும் அரும்பணியாற்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருடனும் இந்த உயரிய விருதினை பகிர்ந்து கொள்வதாக விருதினை வாங்கிய போது திரு கூறினார்.

image_675.jpeg

அஜக்ஸ் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவையாற்றியமைக்காக தினேஷ் குமாருக்கு விருது வழங்கப்பட்டது. அஜக்ஸ் தமிழர்கள் மட்டுமன்றி கனடாவில் வாழ்ந்து வரும் ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் சிறந்த சேவையாற்றிய இவரின் பெயரை அஜக்ஸ்-பிக்கரிங் பாராளுமன்ற உறுப்பினர் ஜோ டிக்சன் பரிந்துரைத்திருந்தார். சுனாமி உள்ளிட்ட இயற்கைச் சீரழிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்ட போது கனடியத் தமிழர்களை ஒன்றாகத் திரட்டி பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க அரும்பணியாற்றியவர் தினேஷ் குமார். துர்ஹம் தமிழர் சங்கம் மூலமாக அப்பகுதியில் வசித்து வருவோருக்கு சிறந்த தொண்டாற்றியவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

junita_6765.jpeg

மார்க்கம் மற்றும் ஸ்காபுறோ பகுதிகளில் வசித்து வரும் தமிழர்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக ஜோனிடா நாதனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சரான மைக்கேல் சான் இந்த விருதினை வழங்கினார். யோர்க் நகர கனடிய மனநல சங்கம், யோர்க் குடும்ப நல சேவைகள் சங்கம் உள்ளிட்ட பல தன்னார்வத் தொண்டு நிறுவங்களுடன் இணைந்து ஜோனிடா நாதன் சேவையாற்றி வருகிறார். சமுதாயத்தின் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்யும் முக்கிய பொறுப்புடனும் செயலாற்றி வருகிறார். பெற்றோருக்கும் பாடசாலைகளுக்குமான தொடர்பினை அதிகமாக்க முக்கிய பங்காற்றியவரும் இவரே. அரசு அலுவலகம் ஒன்றில் முதன்முறையாக தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையையும் இவருக்கு உண்டு. யோர்க் மாவட்ட பொது பாடசாலைகள் அமைப்பின் பொறுப்பாளராகவும் , கனடியத் தமிழர் பேரவையின் துணைத் தலைவராகவும் தற்போது செயலாற்றி வருகிறார்.

imahr345566.jpeg

கனடிய மாணவர் கூட்டமைப்பிலும், யோர்க் நகர மாணவர்கள் அமைப்பிலும் பல புரட்சிகளை ஏற்படுத்திய தலைசிறந்த மாணவருக்கான விருதை கடந்த யூலை மாதத்தில் பெற்றவர் கிருஸ்ண சரவணமுத்து. சிறிலங்காவில் நடைபெற்ற போருக்குப் பின்னர் தமிழர்களுக்கான உரிமையையும் , மனித நேயத்தினையும் வலியுறுத்தி சிறிலங்க அரசின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச ரீதியிலான தனிப்பட்ட விசாரணை அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியவர் சரவணமுத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.