Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை - புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா கலைஞர்?

Featured Replies

மீண்டும் போரை நோக்கி நகரும் இலங்கை நெருக்கடியில் புதிய அணுகுமுறையை கடைப்பிடிப்பாரா கலைஞர்?

இலங்கையில் முற்று முழுதான போர் மீண்டும் மூளுவதைத் தடுப்பதென்பது சாத்தியமில்லாமல் போகக் கூடுமென்று அஞ்ச வேண்டிய அளவுக்கு நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமானவையாக அமைந்திருக்கும் இன்றைய நிலையில், தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையில் கடைப்பிடிக்கக் கூடிய அணுகுமுறையில் மாற்றமெதுவும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பை தமிழர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அரசியல் வட்டாரங்களும் அவதானிகளும் கருணாநிதியின் அரசாங்கத்திடமிருந்து புதிய அணுகுமுறையை பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை என்ற தொனியிலேயே கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர்.

தி.மு.க.அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து மேலோட்டமாகவே குறிப்பிட்டிருந்தது. இலங்கைத் தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெற்று அமைதியாக வாழ்வதற்கான வழிவகைகளைக் காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்று அதில் கூறப்பட்டிருந்த அதேவேளை, தி.மு.க.தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி எதையுமே குறிப்பிடவில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் கணக்கில் எடுக்காத போக்கைக் கடைப்பிடிக்கும் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்ட வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தொல். திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் பிரசாரங்களில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பெருமளவுக்கு பேசக் கூடிய சூழ்நிலை இருக்கவில்லை.

ஜனநாயக முற்போக்கு முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இலங்கை நெருக்கடியைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றன. கலைஞரின் தி.மு.க.வும் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியும் கூட மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் புதுடில்லியின் நிலைப்பாட்டை அடியொற்றியே செயற்பட்டு வந்திருக்கின்றன. குறிப்பாக, 1991 க்கு பிறகு கருணாநிதி இலங்கை விவகாரத்தில் மத்திய அரசாங்கங்களின் நிலைப்பாட்டுக்கு எதிராக எதையும் சொன்னதில்லை. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு முன்னணியில் இருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்துவதற்கு முன்னதாக வைகோ இலங்கை விவகாரத்தில் மத்திய அரசாங்கத்தின் மீது செல்வாக்கைப் பிரயோகிக்கக் கூடிய அந்தஸ்தில் இருந்தார் என்று கூறப்படுவதுண்டு. மத்திய கூட்டரசாங்கத்தில் வைகோவின் கட்சி இன்னும் கூட அங்கம் வகிக்கிறது என்றபோதிலும் தி.மு.க.வுக்கு விரோதமான போக்கு காரணமாக மத்திய அரசாங்கத்தினால் முன்னர் போன்று அவர் மதிப்புடன் நோக்கப்படக் கூடிய வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்று நம்பப்படுகிறது.

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை மிக எளிதாக நினைத்த மாத்திரத்தில் சந்திக்கக் கூடிய ஒரு நிலையில் வைகோ இருந்தார் என்பதும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உத்தேச பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை கிடப்பில் போட வைத்ததில் வைகோவுக்கு பெரும் பங்கு உண்டு என்பதும் பரவலாகப் பேசப்பட்ட விடயம்.

போரையொத்த நிலைவரம் இலங்கையில் தோன்றியிருக்கின்ற போதிலும், தமிழகத் தேர்தல் பிரசாரங்களில் கட்சிகள் இலங்கைப் பிரச்சினையை குறிப்பாக, தமிழர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற இன்னல்களை பெரிதாகப் பேசி சர்ச்சை கிளப்பத் தலைப்படவில்லை. என்றாலும், புதிதாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகள் செல்லத் தொடங்கியிருப்பதை ஊடகங்கள் வெளிப்படுத்தத் தவறவில்லை.

இலங்கையில் முற்று முழுதான போர் மூண்டு, கணிசமான எண்ணிக்கையில் மீண்டும் தமிழகத்துக்கு அகதிகள் படையெடுக்கும் நிலை உருவானால் மாத்திரமே கலைஞர் கருணாநிதியின் புதிய அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரதிபலிப்பைக் காட்டக் கூடுமே தவிர, மற்றும்படி தற்போதைக்கு இலங்கை நெருக்கடியில் பெரும் கொள்கை மாறுதலுக்கு சாத்தியமெதுவுமில்லை என்பது தென்னிந்திய அரசியல் அவதானிகளின் பரவலான கருத்தாக இருக்கிறது. இலங்கைப் படைகளினால் தமிழர்களும் தமிழக மீனவர்களும் கடுமையான இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவார்களேயானால் அல்லது கொல்லப் படுவார்களேயானால் மாநிலத்தில் தோன்றக் கூடிய எதிர்ப்புணர்வுகளுக்கு ஏற்ற வகையில் பிரதிபலிப்பை வெளிக்காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் கலைஞரின் அரசாங்கத்துக்கு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா ஆட்சியின் இறுதி மாதங்களில் தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகளின் செயற்பாடுகள் மீண்டும் சற்று தீவிரமடையக் காணப்பட்டன. கடந்த டிசம்பர் இறுதியில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்திப்பதை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தவிர்த்துக் கொண்டதும் கவனிக்கத்தக்கது. கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் கூடுதலான அளவுக்கு சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழ்நிலை தோன்றும் என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க. வின் நிலைப்பாட்டில் மாற்றத்துக்கு இடமில்லை என்று சென்னையில் உள்ள இலங்கை விவகார அவதானிகளும் பாதுகாப்புத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களும் கூறுகின்ற அதேவேளை, கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பதால் தங்கள் இன்னல்களுக்கு விடிவை காண்பதற்காக அவர் குரலெழுப்பத் தவறமாட்டார் என்று கணிசமான இலங்கைத் தமிழர்கள் நம்புகிறார்கள். இலங்கையில் மீண்டும் முற்று முழுதான போர் மூளுவதைத் தடுப்பதற்கும் சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இந்தியாவின் உதவி அவசியமானது என்று சர்வதேச சமூகம் கருதுகின்ற தற்போதைய சூழ்நிலையில், இந்திய மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கைச் செலுத்தக் கூடிய நிலையில் இருக்கும் முதலமைச்சர் கருணாநிதி இலங்கை நெருக்கடி ஒரு சிக்கல் மிகுந்த கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் தனது தற்போதைய நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமென்பதே இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பாகவிருக்கிறது.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.