Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதுவுமே செய்யாத அரசை நம்பி நாங்கள் என்ன விடயத்தைப் பற்றிப் பேசுவது? - அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Appathurai_Vinayagamoorthy-150-seithy.jpg

[size=4]எதுவுமே செய்யாத அரசை நம்பி நாங்கள் என்ன விடயத்தைப் பற்றிப் பேசுவது? வடக்கு, கிழக்கை இராணுவத்தினர் கைப்பற்றிய பிரதேசமாக இன்னமும் எவ்வளவு காலத்துக்கு இந்த அரசு வைத்திருக்கப்போகிறது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். தனது இல்லத்தில் நேற்றுமாலை நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.[/size]

[size=4]ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என எதுவுமில்லை என்று ஐ.நா. சபைக்குத் தெரிவித்திருக்கிறார். அத்துடன் மக்களின் மீளக்குடியமர்வு நடவடிக்கைகளுக்கு அரச அதிபரும், பிரதேச செயலர்களுமே பொறுப்பு எனவும் தெரிவித்திருக்கிறார்.[/size]

[size=4]ஆனால் இங்கே வலி.வடக்கில், முள்ளிவாய்க்காலில், சம்பூரில், மன்னாரில் என்று எங்களது பிரதேசங்களுக்கு நாங்கள் செல்லமுடியாமல் இருக்கிறோம். எங்களை விடாமால் இராணுவத்தினர் தடுக்கின்றனர். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்.[/size]

[size=4]பிரதேச செயலாளரிமோ, அரச அதிபரிடமோ கேட்டால் இராணுவத்தினரிடம் கேட்குமாறு கூறுகின்றனர். சிவில் நிர்வாகத்தில் தலையிடுவதற்கு இராணவத்தினருக்கு என்ன உரிமை இருக்கிறது.' போர் முடிந்த விட்டதாகச் சொல்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்குப் பகுதிகளை இன்னமும் தாம் கைப்பற்றிய பகுதிகளாக வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவ்வாறு வைத்துக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.[/size]

[size=4]நாம் மக்களை சொந்த இடங்களில் மீளக்குடியமத்துமாறு இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி ஆகியோருக்குக் கடிதம் எழுதினால் அவர்கள் பதிலளிப்பதில்லை. அப்படியானால் நாம் எங்கு சென்று முறையிடுவது?[/size]

[size=4]2003 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தாக்கல் செய்த வழக்கிலும், 2004 ஆம் ஆண்டு காசிப்பிள்ளை யோகேஸ்வரன் மூலமாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினதும் இடைக்காலத் தீர்ப்பு 2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.[/size]

[size=4]அதையாவது ஒழுங்காக நடைமுறைப்படுத்தினார்களா? இந்த அநியாயங்களுக்கு எதிராக மக்கள் திரண்டால் கழிவு ஒயில் ஊற்றுகின்றனர். மக்களைப் படையினர் மிரட்டுகின்றனர். இராணுவம் தாங்கள் நினைப்பது எதுவானாலும் செய்கின்றார்கள். இதனை நினைக்கவே அக்கிரமமாக இருக்கிறது.[/size]

[size=4]போரின் இறுதிக் கட்டத்தில் தாங்கள் இராணுவத்தினரிடம் கையளித்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களது உறவினர்கள் கேட்கின்றார்கள். செஞ்சிலுவைக் குழு சொல்கின்றது காணாமற்போன 15 ஆயிரம் பேர் தொடர்பில் அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்று. ஐ.நா. சொல்கிறது 5ஆயிரம் பேரை இரகசிய இடங்களில் வைத்திருக்கின்றார்கள் என்று.[/size]

[size=4]தடுப்பிலுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுங்கள் நாங்கள் அதைத் தான் ஆரம்பத்தில் இருந்து கேட்கின்றோம். 2009 ஆம் ஆண்டு மட்டக்குளிப் பகுதியில் வைத்து ரூபன் என்ற நபரை இனந்தெரியாதவர்கள் கடத்திச் சென்று கப்பமாக 75 லட்சம் ரூபா கோரினார்கள். மனைவியால் அதை வழங்க முடியவில்லை.[/size]

[size=4]2 வருடங்கள் கடந்த நிலையில் கடந்த டிசெம்பர் மாதம் ரூபனை பாதுகாப்புப் படையினர் கிராமசேவையாளரிடம் ஒப்படைத்தனர். ரூபனுக்கு தன்னை எங்கு கடத்தி வைத்திருந்தார்கள் என்பது தெரியாது.[/size]

[size=4]இவ்வாறு இன்னும் ஆயிரம் ஆயிரம் ரூபன்கள் இருக்கலாம். அப்படி அவர்கள் உயிருடன் இருக்கையில் காணாமற்போனவர்களுக்கு ஏன் மரணச்சான்றிதழ் கொடுக்கின்றீர்கள். நாங்கள் அரசிடம் சொல்லி பயனில்லாததால் இப்போது சர்வதேசத்திடம் செல்கின்றோம் என விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.