Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரக்கமற்ற சிங்களக் கைக் கூலிகள்! - கந்தரதன்.

Featured Replies

கேப்பாபுலவு என்பது மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான இயற்கை வளங்களைக் கொண்டு அமைந்த ஒரு கிராமம். இங்கு விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலம் காணப்படுவதுடன் வெள்ளப் பாதிப்பு அற்ற பகுதியுமாகும். இவ்வாறான நிலப்பகுதியை தமதுவசம் சூறையாடியுள்ள படையினர் அப்பகுதிக்கு உரிய மக்களை மீளக் குடியமர்த்தாமல் இழுத்தடித்து வந்த நிலையில் அந்த மக்கள் போராட்டம் நடத்தியபோது அச்சுறுத்தப்பட்டு கழிவு அபிசேகம் செய்தமை தொடர்பாக கடந்தவாரம் இப்பகுதியில் பார்த்தோம்.

இந்த மக்களை பழிவாங்கும் நோக்குடன் சிறீலங்காப் படையினர், மக்களின் விருப்பத்தைக் கேளாமலே மக்களை ஏமாற்றி வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து அவர்களை பலவந்தமாக அகற்றி அடர்ந்த காட்டுப்பகுதியில் நிர்க்கதி நிலையில் விடப்பட்டனர். உங்களுக்கு ஏது சொந்தமண். இது எங்களுக்கு உரியமண் இங்கு நாங்கள் சொல்வதைத் தான் நீங்கள் கேட்கவேண்டும் என்று கடுமையாக மிரட்டி நீர் வசதியற்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் மக்கள் இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். எந்த அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இந்த மக்கள் இரவுப் பொழுதைக் கழிப்பதற்கு படும்பாடு வார்த்தைகளில் சொல்லமுடியாது. இரவு வேளையில் காட்டு மிருகங்களின் ஓலமும் விசஜந்துகளின் தாக்கமும் இந்த மக்களை அச்சமூட்டின.

அச்சத்தினால் அழும் குழந்தைகளை சமாதானப் படுத்துவதற்கு தாம் படும்பாடு பெரும்பாடு என ஒரு வயதான பெரியவர் தடுமாற்றத்துடன் கூறுகிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல குறித்த பகுதி மக்களை மழையும் காற்றும் கடுமையாக சோதித்தன. வீசும் காற்றுக்கும் மழைக்கும் ஈடுகொடுக்க முடியாத தறப்பாளுடன் தமது உயிரையும் உடைமைகளையும் பாதுகாக்கப் போராடியவாறு கேப்பாபிலவு மக்களின் அவலம் தொடர்ந்தவண்ணம் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் தமது சொந்த முயற்சியில் தறப்பாள்கள், மரங்களைப் பயன்படுத்தி தற்காலிகக் கொட்டகைகளை அமைத்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது எனவும் கூறப்பட்டது.பெண்கள், சிறுவர்கள் குளிப்பதற்குரிய பாதுகாப்பான இடங்கள் இல்லாத நிலையே அங்குதொடர்கிறது. இதேவேளை, மக்களைச் சுற்றிப் பெருமளவான படையினரும், படைப் புலனாய்வாளர்களும் சீருடைகளில் சுற்றித் திரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த மக்களை லண்டன் பி.பி.சி உள்ளிட்ட ஊடகங்கள் சந்தித்து கருத்துக்களைக்கேட்டு வெளிப்படுத்தியிருந்தன. இதனையடுத்து தமது குட்டு வெளியுலகுக்கு வரும் என்பதையுணர்ந்த படையினர், ஊடகவியலாளர்கள் இந்த மக்களைப் பார்வையிடுவதற்கு தடைவிதித்துள்ளனர்.

நந்திக் கடல் அருகே சூரியபுரம் காட்டுப் பகுதியில் அநாதரவாக விடப்பட்டுள்ள கேப்பாபிலவைச் சேர்ந்த 110 குடும்பங்களின் நிலை குறித்து நேரடியாக அறிந்துகொள்ள கடந்த வியாழக்கிழமை மாலை அங்கு சென்ற செய்தியாளர்கள் படைத் தரப்பினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். அந்தப் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு கடும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. செய்தியாளர் ஒருவர் தான் சூரியபுரத்தில் தங்கவைக்கப்படவுள்ள மக்களைப் பார்வையிட உள்ளதாகவும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவும் படைத்தரப்பிடம் கூறினார்.

அத்துடன் சிறிலங்கா தகவல் திணைக்களத்தினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையையும் அங்கிருந்த படையினரிடம் காண்பித்து தனது பணியைத் தடையின்றிச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் அதுபற்றி தகவல் திணைக்களத்தின் அடையாள அட்டையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். அதனை ஒரு பொருட்டாக மதிக்காத படையினர், ஊடகவியலாளரை தொடர்ந்து செல்ல அனுமதிக்கவில்லை. ஊடகவியலாளர்களை அனுமதிக்கக் கூடாது எனத் தமக்கு மேலிடத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் படையினர் ஊடகவியலாளரிடம் தெரிவித்தனர்.

யார் அந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்பது பற்றி அறிந்துகொள்ள முடியுமா என ஊடகவியலாளர் படையினரிடம் திருப்பிக்கேட்டபோதும் அதுபற்றித் தெரிவிக்க முடியாது என அவர்கள் மறுத்துவிட்டனர். அந்தப் பகுதிக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மார்க் என்பவரே அந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக படைப் புலனாய்வாளர் ஒருவரால் ஊடகவியலாளரிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இந்த மக்களுக்கு அடிப்படைவசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அரசின் செயலை நியாயப்படுத்தி உண்மைக்குப் புறம்பான தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இது குறித்த மக்களை மேலும் விசனப்படுத்தியுள்ளது. இதேவேளை, இறுதிப்போரின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்ட ‘மனிக் பாம்’ எனப்படும் மாணிக்கம் பண்ணை, மூடப்பட்டதைத் தொடர்ந்து அதன் பெருமளவு நிலப் பகுதியையும் தம் வசப்படுத்த படையினர் முயன்று வருகின்றனர் எனத் தெரியவருகின்றது.

எஞ்சிய பகுதியில் அரச திணைக்களங்களும் தனியார் நிறுவனங்களும் பங்கு கேட்டு வருகின்றன. செட்டிக்குளம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள 6,000 ஏக்கர் நிலப் பகுதியில் இடம்பெயர்ந்தோருக்கான தடை முகாம்கள் அமைக்கப்பட்டன. படிப்படியாக அங்கிருந்து மக்கள் வெளியேறி மீளக் குடியமர்ந்ததை அடுத்து அதன் பெரும் பகு

தியைத் தம் கைவசப்படுத்தும் பணிகளை படையினர் ஆரம்பித்துள்ளனர். ‘செட்டிகுளத்தில் காணிகள் தருமாறு கேட்டு பலதரப்பினரிடம் இருந்தும் எமக்கு விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றை நாம் கவனமாகப் பரிசீலித்து வருகின்றோம். தீர ஆராய்ந்த பின்னர் அது பற்றி முடிவெடுப்போம்’ என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிக் பாம் தடுப்பு முகாமின் வலயம் 3 அமைந்திருந்த பகுதியில் ஏற்கனவே படையினர் 200 ஏக்கர் நிலப்பகுதியைத் தம் வசப்படுத்தி விவசாயப் பண்ணை ஒன்றை அமைத்துள்ளனர். 3 கோடி ரூபாய்க்கு மேல் அதற்காகச் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை,கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியில் காடுகளை அழித்து அப்பகுதியில் பாரிய படைமுகாம் அமைக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஏராளமான சிறிலங்கா படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு துரித கதியில் கண்ணுக்கொட்டிய தூரம் வரை காடுகள் அழிக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி ஆனைவிழுந்தான் சந்திக்கும் தொழில்நுட்பக் கல்லூரிக்கும் இடைப்பட்ட பகுதியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறிலங்காப் படையினர் காடுகளை அழித்து வருகின்றனர். அழிக்கப்பட்டுவரும் காட்டுப் பகுதியில் நிரந்தரக் கட்டடங்களுக்

கான அஸ்திவாரங்கள் போடப்பட்டு வருகின்றன. குறித்த பகுதிகளுக்கு அண்மித்து உள்ள பொது மக்களுடைய குடிமனைகளில் உள்ளவர்களையும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்லுமாறும் சிறிலங்கா படையினர் மிரட்டியுள்ளனர்.

சிறிலங்கா படையினரால் அழிக்கப்பட்டுவரும் அப்பகுதி மக்களுடைய குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால் பெரும் தொகையான மக்களுடைய நிலங்களும் பறிபோகும் அபாயம் எற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. இவ்வாறு குறைந்தது சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பு காடுகள் படையினரால் அழிக்கப்பட்டு படைமுகாம் அமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

படையினரின் இந்த அடாவடிகளை எவ்வளவு காலத்துக்குத்தான் இந்த மனித உரிமை அமைப்புக்களும் ஐ.நாவும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றன? உரிய தரப்பினரே பாதிக்கப்படும் மக்களைக் காப்பது உங்களின் கைகளிலேயே உள்ளது!

(சூறையாடல்கள் தொடரும்)

நன்றி : ஈழமுரசு

http://www.sankathi24.com

[size=4]ஒரு காட்டுமிராண்டி இனவாத தலைமைகளை கொண்டது சிங்களம். சிங்கள மக்கள், பெரும்பான்மையினோர், இந்த இனவாதத்தில் குளிர்காயும் மக்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.