Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செவ்வாயில் குடியேறும் பூமிக்காரர்கள் நீரைக் கடித்துத் தின்பார்கள்.!

Featured Replies

[size=1]

[url=""][/size]

curiosity-rover-300x194.jpgசூரியனுக்கு மிக அருகில் உள்ளது புதன் (Mercury), இரண்டாவதாக உள்ளது வெள்ளி (Venus). இதைச் சுக்கிரன் என்றும் அழைப்பார்கள். சூரியனில் இருந்து மூன்றாவது இடத்தில் இருப்பது பூமி (Earth). நான்காவது இடத்தில் இருப்பது செவ்வாய் (Mars). இதை அங்காரகன் என்றும் அழைப்பதுண்டு.

சூரியனுக்குப் பக்கத்திலுள்ள புதன், வெள்ளி ஆகியவற்றில் வெப்பம் மிக அதிகம். சூரியனில் இருந்து தூரஞ் செல்லச் செல்ல வெப்பம் குறையும். நடுத்தர வெப்பம் நிலவுவதால் தான் பூமியில் உயிரினங்கள் வாழக்கூடிய சாத்தியம் அதிகம்.

பூமியும் செவ்வாயும் இரட்டைக் கோள்கள் (Twin Planets) என்று சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூரியன் – பூமி இடைவெளியைவிட சூரியன் – செவ்வாய் இடைவெளி ஒன்றரை மடங்கு அதிகம். அதனால் அங்கு சூரிய வெளிச்சம் வெப்பமாக இருக்காது. கறுப்புக் கண்ணாடி போட்டது போல் குளிர்ச்சியாக இருக்கும்.

பூமியைச் சுற்றும் சந்திரனில் காற்று மண்டலம் இல்லை. செவ்வாயில் காற்று மண்டலம் இருக்கிறது. பூமியில் உள்ள காற்று மண்டலம் போல் அது அடர்த்தியானது அல்ல. செவ்வாய் கிரகத்தின் காற்று மண்டல அடர்த்தி பூமியில் உள்ளதிலும் பார்க்க நூறில் ஒரு பங்கு மாத்திரமே. அதில் கார்பன்டை ஒக்சைற் வாயுவின் அளவு 95 விழுக்காட்டிலும் சற்று அதிகம்.

இந்த வாயுவைக் கொண்டு நீர், ஓக்சிஜின் ஆகியவற்றைத் தயாரிக்க முடியும். செவ்வாயில் வளிமண்டல அழுத்தம் குறைவு என்பதால் அங்குள்ள நீர் திரவமாக இருக்க வாய்ப்பு இல்லை. செவ்வாய் கிரகத்தின் தென்துருவப் பகுதி முழுவதும் ஐஸ் கட்டியாக இருக்கிறது.

தண்ணீர் ஐஸ் கட்டியாகவும் குன்றாகவும் இருப்பதை மார்ஸ் எக்ஸ்பிரஸ், றெக்கனைசன்ஸ் ஓர்பிட்டர், பீனிக்ஸ் ஆகிய விண்கல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. தென்துருவ ஐஸ் உருகுமேயானால் செவ்வாய் கிரகத்தை மூழ்கடிக்கக் கூடிய 33அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கும்.

முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடமாகச் செவ்வாய் இருந்ததாகவும் இப்போது நிலவரம் மாறி விட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நிலவரம் மாறுவதற்கு முன்பு மனிதர்கள் வாழக்கூடிய சூழல் செவ்வாயில் இருந்த படியால் இனிவரும் காலத்திலும் மனிதர்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியுமென்று நம்பப்படுகிறது.

அதற்கு ஏற்ற விதத்தில் நகர்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. 17ம் நூற்றாண்டில் நவீன தொலைநோக்கிகளின் முதல் தலைமுறை வரத் தொடங்கியது. அப்போதே செவ்வாய் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. 1960ம் ஆண்டு தொட்டு இற்றை வரை ஓர்பிட்டர், லான்டர், றோவர் உள்ளிட்ட சுமார் நாற்பதிற்கும் கூடுதலான விண்கலங்கள் செவ்வாய் ஆராய்ச்சியில் ஈடுபட்டன.

அமெரிக்க விண்வெளி ஆய்வுக்கான நாசா (National Aeronautics And Space Administration) 2011 நவம்பர் 26ம் திகதி அனுப்பிய கியூறியோசிற்றி (Curiosity) றோவர் வாகனம் ஏழு மாதப் பயணத்திற்கு பிறகு 2012 ஆகஸ்து 6ம் திகதி செவ்வாயில் தரையிறங்கியுள்ளது.

பூமியில் இருந்து 27 கோடி கி.மீ தூரத்தில் செவ்வாய் இருக்கிறது. இதனால் செவ்வாய்க்குச் சென்ற கியூறியோசிற்றி விண்கலம் பூமிக்கு அனுப்பும் சமிக்ஞைகள் இங்கு வந்து சேரக் குறைந்தது 14 நிமிடம் எடுக்கும். பூமியில் இருந்து பிறப்பிக்கப்படும் ஆணை செவ்வாயைச் சென்றடைய அதே நேரம் பிடிக்கும்.

இன்னொரு சிக்கல் இருக்கிறது. செவ்வாய் கிரகம் தனது அச்சில் ஒரு முறை சுழல்வதற்கு பூமியைப் போல் 24 மணிநேரம் பிடிக்கும் ஆகவே கியூறியோசிற்றி 12 மணிநேரம் பூமியைப் பார்த்தபடி இருக்கும். அடுத்த 12மணி நேரம் அது செவ்வாயின் மறு புறத்தில் இருப்பதால் அது அனுப்பும் தகவல் பூமிக்கு கிடைக்க மாட்டாது.

தடங்கல்களைக் கடந்து செவ்வாயில் மனிதர்களைக் குடியிருத்துவது பற்றிய தீவிர ஆராய்ச்சிகள் தொடங்கி விட்டன. 2025 ஆண்டில் முதலாவது குடியேறிகளை அனுப்புவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. செவ்வாய்ச் சூழலைச் சமாளிக்கக் கூடிய பயிற்சிகள் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு 2013 தொடக்கம் வழங்கப்படும் என்றும் அறியப்படுகிறது.

மனிதன் செவ்வாயில் வாழ்வதற்குப் பொருத்தமான வீடுகள், உணவு வகைகள், பூமியுடனான தொடர்பு வசதிகள், போக்குவரத்துக்கள் பற்றிய ஆய்வுகளும் தொடங்கிவிட்டன. மருத்துவ மனைகள், வீதிகள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் அமைப்பது பற்றிய திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. குடிநீரைக் குடிப்பார்களா அல்லது தின்பார்களா என்பது மாத்திரம் தீர்மானிக்கப்படவில்லை

www.Sangathi24.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.