Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ம் திருத்தச்சட்டம் நீக்கப்படும் நிலையில், எவ்வாறு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது?: சம்பந்தன்

Featured Replies

Era_sampanthan150news.jpg

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றம் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கிய உறுப்பினர்கள் 13ம் திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போது, எவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவது என்று இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்..

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலெயே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.13ம் திருத்தச் சட்டத்தினை அடிப்படையாக கொண்டே தீர்வு வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரி வருகிறது. இந்தியாவும் இதனையே வலியுறுத்துகிறது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு உறுப்பினர்கள் இதனை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவன்ச போன்றோர் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.அத்துடன், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 19 அரசாங்க உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சிகளின் சார்பில் 12 உறுபினர்களை இணைத்துக் கொள்ளப்படுவர்.

இதிலும் அரசாங்கமே பெரும்பான்மை வகிக்கிறது.இவ்வாறான ஒரு குழுவில் அரசாங்கத்தின் கருத்துக்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும்.இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைவதில் சாத்தியம் இல்லை என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலம் சமர்ப்பித்திருப்பதாகவும், கடந்த ஒரு வருடமாக அரசாங்கத்தின் தீர்வுத் திட்டத்தை எழுத்து மூலமாக வழங்குமாறு கோருகின்ற போதும், அதனை இன்னும் அரசாங்கம் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லாது போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://www.seithy.co...&language=tamil

'13வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும் '

120729173123_rajiv_jayawardane_304x171_dbsjeyaraj_nocredit.jpg

இந்திய இலங்கை ஒப்பந்தம் -- சர்ச்சை தொடர்கிறது

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இதை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு ஒருக்கால் 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் கூறுகிறார்.

சஹாதேவன் பேட்டி

இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு , எனவே இந்த சட்டத்திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார்.

ஏனென்றால், இந்த சட்டத்திருத்தம் இலங்கையின் மற்ற சட்டத்திருத்தங்களைப் போன்றதல்ல. இனப்பிரச்சினைக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட ஒரு நடவடிக்கை. இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளாகியும், தமிழ்ச் சிறுபான்மையினருக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை தர அரசு முன்வரவில்லை என்ற கருத்து சர்வதேசத்தில் மேலோங்கியிருக்கும் நிலையில், இவ்வாறான நடவடிக்கை, இலங்கை மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும் என்றார் சஹாதேவன்.

இந்தியா இந்த நடவடிக்கையைத் தடுக்குமோ இல்லையோ , ஆனால் நிச்சயம் வரவேற்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டது என்ற கருத்து தவறானது என்று கூறிய சஹாதேவன், இலங்கையில், இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை அடுத்து, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றங்களை ஒட்டியே இந்த சட்டத்திருத்தம் வந்தது என்று சமீபத்தில் இந்தியா வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சந்திப்பில் கூறியதை சுட்டிக்காட்டினார்.

இந்த சட்டத்திருத்தம் வெளிநாட்டினால் திணிக்கப்பட்டதல்ல, உள்நாட்டு வழிமுறையிலேயே உருவானது என்று அவர் கூறினார்.

http://www.bbc.co.uk...hsrilanka.shtml

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.