Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலம் குறித்து சர்வசன வாக்கெடுப்புத் தேவையென இலங்கையின் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

Featured Replies

வாழ்வின் எழுச்சி[size=4] சட்டமூலத்துக்கு ஆதரவாக இலங்கை நாடாளுமன்றத்துக்கு முன்பாக இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள், மகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஆகியோர் பங்குபற்றியதாக எமது கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இதேவேளை திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையில் கொழும்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது.[/size]

http://thamilfm.com/...l.aspx?ID=13122

Edited by akootha

  • தொடங்கியவர்

[size=4]பிரதம நீதியரசரை மகிந்த கூட்டம் கலைக்க முதல் அவரும் கூட்டாளிகளும் சற்று முந்தியதாகவே தெரிகின்றது. [/size]

13ம் திருத்தம் நீக்கப்படாமல், 13ம் திருத்தத்தை எதிர்த்து எந்த சட்டமும் இயற்ற முடியாது. இதை சாதாரண சட்ட வல்லுனர்களே சொல்வார்கள். வடமாகாண அதிகாரம் வடமாகாண மக்களால் நடைமுறைப்படுத்தவே 13ம் திருத்தம் இருக்கிறது. வடமாகாண அதிகாரத்தை 13ம் திருத்தம் முழுதாக இருக்கும் போது பாரளுமன்றம் மீற முடியாது. இந்த பிரச்சனையே சோல்பரி அரசியல் அமைப்பிலிருந்து கோடீஸ்வரனின் வெற்றிக்கு காரணமாக தொழில்பட்டது. சட்டம் என்று ஒன்று இருக்கும் போது அதை பாராளூமன்றமோ அல்லது, அதிபரோ மீறமுடியாது. அரசியல் அமைப்பில் சட்டம் என்று ஒன்று இல்லா போது மக்களிடம் அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்த்தலாம். 13ம் திருத்தம் தெளிவாக வடமாகாணம் வெளிப்படையாக ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்ற இடத்தில் அபிப்பிராய வாகெடுப்பு மூலம் 13ம் திருத்தற்திற்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது. இரண்டு அரசியல் அமைப்பு சட்டங்கள் ஒன்றுக்கு ஒன்று முரன இயற்ற முடியாது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி இன்னொரு சட்டம் இயற்ற முடியாது. இவர்களுக்கு இருக்கும் வழி 13ம் திருத்தத்தை நீக்குவதே. இதில் சுப்பிறீம் கோடு தனது வரம்மை மீறி பாரளுமன்றத்திற்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்திருக்கு.

13ம் திருததத்தை நீக்காமல் பாளுமன்றம், மூன்றிம் இரண்டு தனி பெரும்பான்மையைத்தானும் வைத்து மாகாண அதிகாரங்களுக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாது.

அரசியல் அமைப்பு சட்டங்கள் மற்றய எல்லாச்சடத்திற்கும் மேலானவை. எனவே மூன்றில் இரண்டை வைத்து முதலில் 13ம் திருத்ததை நீக்காமல் மாகாண அதிகாரங்களை மீறி இயற்றப்படும் சட்டங்கள் செல்லுபடியாகா.

  • தொடங்கியவர்

[size=5]வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை :[/size]

[size=5]உயர் நீதிமன்றம் தீர்ப்பு[/size]

[size=4]2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.

முரண்பட்டுள்ள சரத்துக்கள் திருத்தம் செய்யப்படவேண்டியவை எனக்குறிப்பிட்டுள்ள உயரநீதிமன்றம்,திருத்தங்களின்போது எழுகின்ற முரண்பாடுகளை சரிசெய்து கொள்ளமுடியும் என்றும் அறிவித்துள்ளதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்[/size]

http://www.virakesari.lk/article/local.php?vid=1491

  • தொடங்கியவர்

[size=6]சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சுசில்[/size]

[size=4]வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்;டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் பிரகாரம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவையில்லை என அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.[/size]

[size=4]மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் சுசில் பிரமேஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் திவிநெகும சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்த சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தின் போது அரசியலமைப்பு அமைவாக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரமேஜயந்த மேலும் தெரிவித்தார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/52157-2012-11-07-10-42-16.html

வடமாகாண ஆளுநர் கருத்து சபையின் அங்கீகாரம் ஆகாது - உயர் நீதிமன்றம்

thivinwkuma.jpg

"திவிநெகும' சட்டவரைவுக்கு ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்றுவிட்டு வடக்கு மாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது.

* "திவிநெகும' நடைமுறைக்கு 2/3 பெரும்பான்மை அவசியம்

* வரைவில் பல பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை

* அதில் ஒரு பிரிவுக்கு வாக்கெடுப்புத் தேவை

* அனைத்து மாகாண சபைகளிலும் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும்

எனவே ஆளுநரின் அனுமதியை அங்கீகாரமாக கருத முடியாது. மாகாண சபையின் கருத்து முறையாக பெறப்பட வேண்டும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்துள்ளது உயர் நீதிமன்றம்.

"திவிநெகும' சட்டவரைவு தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனைச் சபாநாயகர் நேற்றுச் சபையில் வாசித்தார்.

அந்தத் தீர்ப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பின் முழு விவரம் வருமாறு:

சட்டவரைவு ஒன்றை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு முன் அச்சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானதா என்று ஆராய்ந்துபார்த்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்திற்கே உள்ளது.

ஏனைய எட்டு மாகாணங்களிலும் முறையாக அனுமதியைப் பெற்று வடமாகாணத்தில் மட்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் ஒருவரின் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கின்ற அரசமைப்பின் கோட்பாட்டை மீறும் வகையில் உள்ளது.

எனவே, ஆளுநரின் அங்கீகாரத்தை வடமாகாண சபையின் அங்கீகாரமாகக் கருதமுடியாது. மாகாணசபையின் கருத்து முறையாகப் பெறப்படவேண்டும். இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு இச்சட்டவரைவை நாடாளுமன்றில் நிறைவேற்ற முடியும்.

அரசமைப்பின் 12(1) சரத்தின் படி சட்டவரைவின் "ஏ' பிரிவு அரசமைப்புக்கு முரணானதாகும். எனவே, இதை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

இச்சட்டவரைவின் 4,42 ஆம் பிரிவுகள் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் அதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். அதே போல், சட்டவரைவின் 8(2) சரத்து அரசமைப்பின் 3 ஆவது பிரிவுக்கு முரணாக இருப்பதால் இதை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

திணைக்களத் தலைவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படுவதாக இருந்தால் அது அரசமைப்புக்கு முரண் அல்ல. சர்வஜன வாக்கெடுப்புத் தேவையில்லை. அதே போல் சட்டவரைவின் 11 மற்றும் 18ஆம் பிரிவுகளும் அரசமைப்புக்கு முரணாக உள்ளன.

ஆகவே, இதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்ற வேண்டும். இச்சட்டவரைவின் 14 ஆவது பிரிவு அரசமைப்புக்கு முரணாக உள்ளபோதிலும் "திவிநெகும' திணைக்களப் பணிப்பாளர்கள், "திவிநெகும' மக்கள் சங்க நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு என்பவை தொடர்பில் வலய அமைப்புகளின் கருத்தை அறிந்து செயற்படுவதால் அப்பிரிவு அரசமைப்புக்கு முரணாகாது.

இச்சட்டவரைவின் 17(1) பிரிவு அரசமைப்புக்கு முரணானது. ஆகவே, அரசமைப்பின் 84(2) ஆவது சரத்தின்படி இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

அதேபோல, சட்டவரைவின் 19 ஆவது பிரிவும் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் இதனையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும். மேலும், சட்டவரைவின் 25(4) மற்றும் 29(4) ஆகிய பிரிவுகள் அரசமைப்புக்கு முரணாக இருப்பதால் இதையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும்.

சட்டமூலத்தின் "ஏ'யில் உள்ள சில பிரிவுகள் அரசமைப்புக்கு முரணானவை. நாடாளுமன்ற அனுமதியுடன் கூட்டு நிதியத்தில் வைப்புச் செய்வதாயின் இது அரசமைப்புக்கு முரண்படா.

ஆகவே, இச்சட்டவரைவு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்று சபாநாயகர் கூறினார்.

http://onlineuthayan.com/News_More.php?id=304211589307465621

திவிநெகும சட்டமூலத்துக்கு கருத்து வாக்கெடுப்பு - சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கியது [ வியாழக்கிழமை, 08 நவம்பர் 2012, 01:23 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ]

susil%20pream%20jeyanth.jpgதிவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தும் முடிவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.

திவிநெகும சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பை மீறும் வகையில் அமைந்துள்ளதால், அது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

முன்னதாக, உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தாலும், கருத்து வாக்கெடுப்பை நடத்தி திவநெகும சட்டமூலத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறியிருந்தார்.

ஆனால், திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு கருத்து வாக்கெடுப்பை நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த நேற்று இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய போது,

உயர் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் திவிநெகும சட்டமூலத்திற்கு கருத்து வாக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவையில்லை.

அரசியலமைப்புக்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.puthinapp...?20121108107258

"If the mountain won't come to Muhammad then Muhammad must go to the mountain."

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.