Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அர

Featured Replies

தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும்: வைகோ

[சனிக்கிழமை, 27 மே 2006, 08:45 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழர் பகுதிகளில் சிங்கள இராணுவத் தாக்குதலை தடுக்க இந்திய அரசு தலையிட வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியர்கள் அனைவருக்கும் மிகவும் கவலை அளிக்கக்கூடிய இலங்கை அகதிகளைப் பற்றிய சில முக்கியமான தகவல்களை தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

"இலங்கைத் தீவிலிருந்து தமிழ் அகதிகள் கூட்டம், கூட்டமாய் தமிழகக் கடலோரப் பகுதியை நோக்கி (தங்கள் உயிரைப் பணயம் வைத்து, கொந்தளிக்கின்ற கடலில்), வருவது மிகுந்த வேதனை தரக்கூடிய காட்சியாக உள்ளது.

இலங்கை ராணுவம் தமிழர் வாழும் பகுதிகளில் எப்படிப்பட்ட கொடூரமான தாக்குதல் நடத்துகிறது என்பதை அங்கிருந்து அகதிகளாக வரும் தாய்மார்கள் கண்ணீரும், கம்பலையுமாக விவரிப்பது நெஞ்சை உருக்குவதாக உள்ளது.

இத்தகைய கொலை பாதக தாக்குதலில் அப்பாவிப் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் இறந்துள்ளார்கள் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 15 மாதங்களாக இந்தியாவுக்கு வந்த அகதிகளின் எண்ணிக்கை 2000-த்தை கடந்து உள்ளது. பெருமளவில் இலங்கையில் இருந்து அகதிகளாக இடம் பெயர்ந்து வருபவர்கள், இன்னும் பலர் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து இந்தியா வர காத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது இந்திய அரசு போதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த வாரம் நடந்த ஒரு சோகமான நிகழ்வு குறிப்பிடுவதற்கே மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. இலங்கை, மன்னார் தீவிலிருந்து பயணம் செய்த 5 பேர், மோசமான வானிலை காரணமாகவும், கடல் தொடர்பான போதிய தொழில்நுட்பம் இல்லாமையாலும், கடலில் மூழ்கி மடிய நேர்ந்தது.

துன்பத்துக்கு ஆளான தமிழர்கள் அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் இந்தியாவை அடைய முற்படும் போது இச்சம்பவங்களால் கடலே அவர்களுக்கு கல்லறையாகிவிடுகிறது. இந்த வாரம் ஒரு பைபர் கிளாஸ் படகு கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது. அதற்கு முன்னர், இந்தியக் கடலோர காவல்படையினர் இலங்கையில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த சில படகுகளைக் கைப்பற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தபோது, அந்தப் படகுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். போர் அபாயத்தால் சீரழிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்புக்காக இந்தியா வரும்போது, மோசமான வானிலை, கடல் தொழில்நுட்பமின்மை, இந்திய அளவில் படகு பறிமுதல் பற்றிய பயம் ஆகிய தடைகளையும், சங்கடங்களையும் சந்தித்து பெரும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டியுள்ளது.

ஏற்கனவே இந்திய அரசு, தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு அகதிகள் முகாம்களில் 75,000 இலங்கை தமிழ் அகதிகளை தங்க வைத்து பராமரித்து வருகிறது. நம்மிடம் அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ஏற்றுக்கொள்வதையே நாம் ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறோம்.

இன்று இலங்கை தீவில் நடந்து கொண்டிருப்பது அதன் உள்நாட்டுப் பிரச்சினை மட்டும் இல்லை. அது சர்வதேச கவனத்தையும் கவரக்கூடிய மனிதாபிமான பிரச்சினை. இந்தக் காலக்கட்டத்தில், மறைந்த அன்றைய பாரத பிரதமர் இந்திராகாந்தி அன்றைய கிழக்கு பாகிஸ்தான், இன்றைய வங்காளதேசத்திலிருந்து அகதிகள் கூட்டம், கூட்டமாய் வருவது தொடர்பாக குறிப்பிட்ட சரித்திர புகழ் வாய்ந்த ஒரு செய்தியை இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

"அகதிகள் பிரச்சினை என்பது மனிதாபிமானப் பிரச்சினை. இது தொடர்பாக இந்தியா கண்மூடி இருக்க இயலாது'' என்பதாகும்.

தொன்று தொட்டு தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களுக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. எனவே, இந்தியா அரசு அரசியல் ரீதியாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழர் பகுதிகளில் இராணுவ தாக்குதலை உடனடியாக நிறுத்த செய்யவேண்டும். இந்தியா வந்தடையும் அகதிகளுக்குப் போதிய பாதுகாப்பும், உதவிகளும் செய்ய இந்திய அரசு உடனடி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பகுதிகளில் அகதிகள் இறப்பும், காணாமல் போவதும் தடுக்கப்பட வேண்டும்.

இந்த நிகழ்வுகள் தரைப்பகுதியில் நடந்தால் ஏற்படும் இழப்புகள் மிகக் குறைவாகவே இருக்கும். இச்சம்பவங்கள் நீர் நிறைந்த நடுக்கடலில் நடப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள நாம் பெரிதும் கடமைப்பட்டு உள்ளோம்.

இச்சம்பவங்கள் தொடர்பாக இந்திய பிரதமர் கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

1. பாம்பன் தீவிலிருந்து (இராமேஸ்வரம் தீவு) கிழக்கே 11 கிலோ மீட்டர் தொலைவில் சர்வதேச எல்லை உள்ளது. தனுஷ்கோடி பழைய அலை தாங்கியில் தொடங்கி 15 கி.மீட்டர் தூரம், சேது மணல் தொடரின் வடக்குப்பகுதி முழுவதும் இந்திய கடலோரப் பாதுகாப்பு படையின் 24 மணி நேர கண்காணிப்பு பணி தொடர வேண்டும்.

2. அகதிகள் ஏற்றப்பட்ட படகுகள் தனுஷ்கோடியில் அகதிகளை எந்த பிரச்சினையும் இன்றி இறக்கிவிட்டுவிட்டு, திரும்ப மன்னார் தீவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

3. அனைத்து அகதிகளும் இங்கு வந்த பிறகு அவர்களுக்கு உரிய அடிப்படை தேவையான உணவு, உடை, முதல்-உதவி அனைத்தும் அளிக்கப்பட வேண்டும்.

4. அடையாள அட்டை வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அரசு சார்பில் செய்ய வேண்டிய சம்பிரதாயங்கள் நிறைவேற்றப்படுமுன் இந்திய அதிகாரிகள் அகதிகளை மண்டபம் முகாமுக்கு அழைத்துச்சென்று பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும். இந்த பணியில் அரசு அதிகாரிகளுக்கு உதவியாக சமூக ஆர்வலர்களின் சேவை பயன்படுத்தப்படலாம்.

மிகவும் இக்கட்டான இந்த நேரத்தில் எடுக்கப்படும் மேற்கண்ட நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களோடு தொப்புள் கொடி உறவுள்ள பாதுகாப்புக்காக அல்லல் பட்டுக்கொண்டு இருக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்த பேருதவியாக இருப்பதோடு, அமைதியையும் அளிக்கும்.

நன்றி புதினம்

  • தொடங்கியவர்

தேர்தலில நான் அம்மாவிற்காக முழு மூச்சாக பிரசார வேளையில் ஈடுபட்ட படியால் ஈழ தமிழருக்காக குரல் கொடுக்க முடியாம போச்சு மீண்டும் எனது தொப்புள் கொடி உறவுகளுக்காக அய்யா கருணாநிதியுடன் சேர்ந்து ஈழ தமிழருக்காக குரல் கொடுப்பேன் அடுத்த தேர்தல் பிரசாரம் தொடங்கும் வரை,.............................

தமிழ் எனது மூச்சு முதலமைச்சர் பதவி எனது உயிர்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.