Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! - வெலிக்கடை கலவரத்தை அடுத்து அரசிடம் அரியநேத்திரன் வலியுறுத்து!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக! - வெலிக்கடை கலவரத்தை அடுத்து அரசிடம் அரியநேத்திரன் வலியுறுத்து!!

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தை அடுத்து புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அச்சத்தில் உள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், 'தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தம் தோய்ந்த வெலிக்கடைச் சிறைச்சாலையில் இன்று சிங்கள கைதிகளின் இரத்தம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும்' எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, கொடூரமான முறையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

'சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பாதுகாக்க முடியாத நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இருப்பதைக் கண்டு வெட்கப்படுகின்றோம். அதேவேளை, கொடூரமான முறையில் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேற்று மாலை வெலிக்கடை சிறைச்சாலை போர்க்களமான சம்பவத்தை தொலைக்காட்சிகளில் நேரடியாகப் பார்த்த தமிழ் மக்கள் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலா என்று பதற்றத்தில் இருந்தனர்.

வெலிக்கடைக்கு அண்மையில் உள்ள புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் நேற்றிரவு பெரும் அச்சத்தில் இருந்தனர். நள்ளிரவு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சம்பவத்தின் பின்னணியில் சிங்கள அரசியல் கைதிகளும், அதிரடிப் படையினரும் இருந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் இந்தச் சம்பவத்தில் சிங்கள அரசியல் கைதிகள் உயிரிழந்துள்ளனர் என்றும், சிறிலங்கா பொலிஸார் மற்றும் அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலைகளில் விரக்தியில் இருக்கும் கைதிகளை அணுகும் முறை சிறிலங்கா அதிரடிப் படையினருக்கு இன்னும் விளங்கவில்லைப் போலவுள்ளது. இதனால்தான் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறிலங்கா படையினர் சோதனை நடத்தும்போது அங்குள்ள கைதிகள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

ஆயுதக் களஞ்சியத்தை உடைத்து ஆயுதங்களை எடுத்த கைதிகள் சிறிலங்கா படைத் தரப்புக்கு எதிராகத் தங்கள் துணிகரத்தைக் காட்டியுள்ளனர். தமது இனத்திற்கு எதிராகவே சிங்களக் கைதிகள் ஆயுதமேந்தும் நிலையை ஏற்படுத்திவிட்ட சிறிலங்கா அரசாங்கத் தரப்பைப் பார்த்து நாம் வெட்கப்படுகின்றோம்.

கைதிகளின் தாக்குதலுக்கு முகம்கொடுக்கத் திராணியற்ற சிறிலங்கா படைத்தரப்பினர் அவர்களைக் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

1983ஆம் ஆண்டு தமிழ் அரசியல் கைதிகளின் இரத்தம் தோய்ந்த வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று சிங்கள கைதிகளின் இரத்தம் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலைக்கு சிறிலங்கா அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

அதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய போர்க்களத்தையடுத்து புதிய மகஸின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பதற்றத்தில் உள்ளனர். சிங்கள கைதிகளின் தாக்குதலையடுத்து தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறிலங்கா பொலிஸார் மற்றும் படைத்தரப்பினர் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகின்றது. எனவே, தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்' என்று நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றுக் கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டமையைக் கண்டித்தும், சிறைச்சாலைகளில் தற்போது அச்சத்தில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் நாடாளுமன்றில் அரியநேத்திரன் இன்று பகல் விசேட உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=bb029026-5bb3-4b4f-8bee-f1f9f79bb32e

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.