Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் கழுத்தறுத்த இந்தியா

Featured Replies

ஐ.நாவில் ஈழத்தமிழர்களின் கழுத்தறுத்த இந்தியா – இரா.துரைரத்தினம்,

[size=2]Published on November 11, 2012-9:25 am · No Comments[/size][size=3]

india-srilanka-flags-150x150.jpgஎதிரியை நம்பலாம், ஆனால் நண்பனை போல நடிப்பவனை நம்ப கூடாது என சொல்வார்கள். அது உண்மை என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை மீளாய்வு கூட்டத்தில் ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா நிரூபித்து விட்டது.

ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை நெருக்கடிக்குள் சிக்கப்போகிறது, பொறிக்குள் அகப்பட போகிறது, விசாரணை நடைபெறுகிறது, தீர்ப்பு வழங்கப்பட போகிறது, வாக்கெடுப்பு நடத்தப்பட போகிறது என பலவாறு தமிழ் இணையத்தளங்களும் சில தமிழ் ஊடகங்களும் கற்பனைகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தன.[/size][size=3]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர்களை தொடர்ந்து அவதானித்து வருபவன் என்ற ரீதியில் இவை எதுவுமே நடைபெறவில்லை என்பதுதான் உண்மை. தமிழ் மக்களை ஒரு பிரமையில் மாயையில் வைத்திருப்பதற்காக செய்யப்பட்ட பிரசாரங்கள் தான் அவை.[/size][size=3]

வருகிறார், இதோ ஜேசு வருகிறார், என்பது போல தலைவர் வருகிறார் வெடிக்கிறது ஐந்தாம் கட்ட ஈழப்போர் என ஒரு மாயைக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதற்கு சிலர் முயற்சிப்பது போல விசாரணை நடக்கிறது, தீர்ப்பு வழங்கப்பட போகிறது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது என பிரசாரம் செய்யப்பட்டமை ஐ.நாவின் மீளாய்வு கூட்டம் தொடர்பான நடைமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாததால் அல்லது பரபரப்பு தகவல்களை வழங்குகின்றோம் என்ற பிரமையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இருக்கலாம்.[/size][size=3]

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் இதில் சளைத்தவர்கள் அல்ல என்பதை இந்த நாட்களில் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கைகள் நிரூபித்து நின்றன. ஐ.நா.மனித உரிமை மீளாய்வு கூட்டத்தொடரில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் உரையாற்றினார் என்று கூட அறிக்கைகள் வெளிவந்தன. இலங்கை தொடர்பாக நடக்கும் விசாரணைகளில் பசுமை அமைப்பின் சார்பில் ஐ.நா மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சட்டமன்ற உறுப்பினர் மணி அவர்கள் சாட்சியமளிக்கிறார் என்றும் அக்கட்சியால் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.[/size][size=3]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை தொடர்பாக சர்வதேச நாடுகள் கலந்து கொண்ட விவாதம் நடைபெற்ற நவம்பர் முதலாம் திகதி வியாழக்கிழமைக்கு முதல் நாள் புதன்கிழமை ஜெனிவாவில் உள்ள ஐ.நா.கட்டிடத்தில் இலங்கை மனித உரிமை அமைப்புக்கள் உட்பட மனித உரிமை அமைப்புக்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. அது பொது மண்டபத்தில் நடைபெறும் ஐ.நா. கூட்டமல்ல. அது ஐ.நாவின் உத்தியோகபூர்வ கூட்டமும் அல்ல. மனித உரிமை அமைப்புக்கள் ஏற்பாடு செய்து சிறிய கருத்தரங்குகள் நடைபெறும் அறை ஒன்றில் நடந்த கூட்டத்திலேயே பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மணி உரையாற்றினார்.[/size][size=3]

அந்த கூட்டத்தில் இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த நிமல்கா பெனாண்டோ மற்றும் உலக தமிழர் பேரவை தலைவர் வணபிதா இம்மானுவேல் அடிகளார், நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத்தலைவர் பொன். பாலராஜ், ஒஸ்ரேலியாவிலிருந்து வருகை தந்த நாடுகடந்த தமிழீழ அரசு பிரதிநிதி மாணிக்கவாசகம் உட்பட பலரும் உரையாற்றினர். அதை வைத்துக்கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் ஐ.நாவில் உரையாற்றினார்கள் என்று அல்லது உலக தமிழர் பேரவை தலைவர் வணபிதா இம்மானுவேல் ஐ.நாவில் உரையாற்றினார் என செய்தி வெளியிட்டால் எப்படி நகைப்புக்கிடமானதாக இருக்குமோ அப்படித்தான் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கைகளும் இருந்தன.[/size][size=3]

அதை தவிர மனித உரிமை கூட்டத்தொடரில் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் மணி மட்டுமல்ல எந்த மனித உரிமை அமைப்புக்களும் உரையாற்ற முடியாது. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மட்டுமே உரையாற்ற முடியும்.[/size][size=3]

ஆனால் தமிழ் ஊடகங்களில் செய்தியை பார்த்த சாதாரண பொதுமக்கள் ஆஹா… தமிழீழம் அமைப்பதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் பிரிந்து சென்று தமிழீழம் அமைப்பதற்கு உலக நாடுகள் ஆதரவை வழங்க வேண்டும் என ஐ.நா.சபை கூட்டத்தொடரில் தமிழர் ஒருவர் பேசியிருக்கிறார் என புழகாங்கிதம் அடைந்திருப்பர். அவ்வாறு நடந்திருந்தால் தமிழர்களுக்கு சந்தோசம்தான். ஆனால் மனித உரிமை அமைப்புக்கள் குழு அறை ஒன்றில் நடத்திய கலந்துரையாடலில் உரையாற்றியதை மனித உரிமை கூட்டத்தொடரில் உரையாற்றினார் என எதற்காக பிரசாரம் செய்ய வேண்டும்?[/size][size=3]

தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்கள் வெறும் வாய்ப்பேச்சு வீரராக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த ஜெனிவா சம்பவமும் அதன் பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்ட அறிக்கைகளும் சாட்சியாக அமைந்திருக்கிறது.

அதை மிஞ்சும் வகையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை நியூயோர்க்கிலும் ஜெனிவாவிலும் வைத்து கையளிக்கிறோம் என திமுக செய்த பிரசாரங்களும் இந்த நாட்களில் தான் நடைபெற்றது. போர் நடைபெற்ற காலத்தில் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு தமிழ் மக்கள் மீது போரை நடத்திய இந்திய ஆளும் கட்சியின் பங்காளி கட்சியாக இருந்து வரும் திமுக ஈழத்தமிழ் மக்களின் வேர்களையே பிடுங்கி எறிந்து விட்டு ஈழத்தமிழர்களுக்காக தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம் மனுக்கொடுக்கிறோம் என நியூயோர்க்கிற்கும் ஜெனிவாவுக்கும் செல்வது ஈழத்தமிழர்களை ஏமாற்றுவதற்காகவா தமிழக தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காகவா என்பது புரியவில்லை.[/size][size=3]

ஈழத்தமிழர்களுக்கு புலுடா காட்டும் வேலைகளில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மட்டுமல்ல இந்திய அரசும் ஈடுபட்டிருக்கிறது என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை மீளாய்வு கூட்டத்தில் இலங்கை தொடர்பாக நவம்பர் முதலாம் திகதி வியாழக்கிழமை இந்தியா பேசிய விடயங்களையும், அதன் பின்னர் இலங்கை தொடர்பான அறிக்கையை தயாரிக்கிறோம் என நடத்திய தில்லுமுல்லுகளையும், அமெரிக்கா பிரான்ஸ் உட்பட சர்வதேச நாடுகள் முன்வைத்த பரிந்துரைகளை சிலவற்றை நீக்கி சிலவற்றை மாற்றியமைத்து இலங்கைக்கு சார்பாக அறிக்கையை தலைகீழாக மாற்றி அமைத்த கபடத்தனமான வேலையையும் இந்தியாவை தவிர வேறு எந்த ஒரு நாட்டினாலும் செய்ய முடியாதுதான். கடைந்தெடுத்த போக்கிலி தனம் ஒன்றை இந்தியாவினால்தான் வெற்றிகரமாக செய்ய முடியும். அதை செய்தும் முடித்திருந்தது.[/size][size=3]

மீளாய்வு கூட்டம் நடைபெற்ற வியாழக்கிழமை ஐ.நா.வின் இந்திய பிரதிநிதி பேசும் போது 13ஆவது திருத்தத்தை நீக்க கூடாது, வடமாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும், வடக்கிலிருந்து படைக்குறைப்பை செய்ய வேண்டும், அதிகாரப்பரவாக்கலை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என தெரிவித்திருந்தது. சுமார் 90நாடுகள் அவர்களுக்கு வழங்கப்பட்ட 72 விநாடிகளுக்குள் ( ஒன்றேகால் நிமிடத்திற்குள்) இலங்கைக்கு சார்பாகவும் எதிராகவும், ஆலோசனையாகவும் கருத்துக்களை முன்வைத்திருந்தன.[/size][size=3]

அதேவேளை இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் 210 பரிந்துரைகளை ஐ.நாவில் சமர்ப்பித்திருந்தன. இலங்கை தொடர்பாக அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்குவதற்காக இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய மூன்று நாடுகளும் நியமிக்கப்பட்டிருந்தன.[/size][size=3]

இந்த மூன்று நாடுகளும் அறிக்கை தயாரித்தது என சொல்வதை விட இடைத்தரகர் வேலை ஒன்றை செய்திருந்தன என கூறுவதே பொருத்தமாக இருக்கும்.[/size][size=3]

சர்வதேச நாடுகள் சமர்ப்பித்த 210 பரிந்துரைகளை இலங்கை பிரதிநிதிகளிடம் கையளித்து அவற்றில் சிறிலங்கா ஏற்றுக்கொள்ளும் பரிந்துரைகள் எவை, ஏற்றுக்கொள்ளாத பரிந்துரைகள் எவை என பரிந்துரைத்ததுடன் இலங்கை இந்திய பிரதிநிதிகள் கடத்தனமான வேலைகளையும் செய்திருந்தன. இதனை அமெரிக்காவும், பிரான்சும் வெளிப்படையாக கண்டித்திருந்தன.[/size][size=3]

அமெரிக்கா பிரான்ஸ் ஆகிய நாடுகள் சமர்ப்பித்த பரிந்துரைகளை நீக்கியது மட்டுமன்றி சில பரிந்துரைகளை சிறிலங்கா அரசுக்கு சாதகமாகவும் மாற்றி அமைத்து அந்த அறிக்கையில் இணைத்திருந்தார்கள். உதாரணமாக இறுதி கட்ட போர் நடந்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைய விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என செய்யப்பட்டிருந்த பரிந்துரையை இந்தியாவும் இலங்கை பிரதிநிதிகளும் சேர்ந்து தலைகீழாக மாற்றியிருந்தார்கள். இறுதிப்போரில் நடந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் சட்டத்திட்டத்திற்கு அமைய உள்நாட்டிலேயே விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மாற்றியமைத்திருந்தார்கள். இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இராணுவம் அதனை விசாரித்து வருவதாகவும், இலங்கை பிரதிநிதிகள் பதிலளித்திருந்தனர்.[/size][size=3]

இராணுவத்தின் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களை இராணுவமே விசாரித்து வருகிறது என்ற சிறிலங்காவின் விசித்திரமான பதில் போன்றுதான் அநேகமான பரிந்துரைகளுக்கு சிறிலங்கா பதிலளித்திருந்தது.[/size][size=3]

சிறிலங்கா ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பரிந்துரை செய்திருந்தன. அதனை கூட நிராகரித்திருந்த இலங்கை பிரதிநிதிகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தெளிவாற்றதாக காணப்படுகின்றன. அதனை நடைமுறை படுத்துவது சாத்தியமில்லை. நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்த சில விடயங்களை வைத்து தேசிய திட்டம் ஒன்றை தீட்டியிருக்கிறோம். அதனை நடைமுறைப்படுத்த உள்ளோம் என்றும் சிறிலங்கா தெரிவித்திருந்தது.[/size][size=3]

சர்வதேச நாடுகள் சமர்ப்பித்த பரிந்துரைகளை தொகுத்து சிறிலங்கா ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள், ஏற்றுக்கொள்ளாத பரிந்துரைகள், அதற்கு சிறிலங்கா கொடுத்த விளக்கம் என்பவற்றை அறிக்கையாக சமர்ப்பித்த பணியைத்தான் இந்தியாவும் ஸ்பெயினும் பெனினும் கூட்டாக செய்திருந்தன.[/size][size=3]

இதில் முக்கியமான விடயம் சர்வதேச நாடுகள் இலங்கை தொடர்பாக 201 பரிந்துரைகளை செய்திருந்த அதேவேளை இந்தியா ஒரு சிறிய பரிந்துரையை கூட செய்யவில்லை. பேச்சளவில் மட்டும் 13ஆவது திருத்தத்தை ஒழிக்க கூடாது, வடக்கு தேர்தலை நடத்த வேண்டும், படைக்குறைப்பை செய்ய வேண்டும் என ஐ.நா.மனித உரிமை சபை மேடையில் ஒலிவாங்கிக்கு முன்னால் பேசிய இந்தியா அந்த பேச்சை அடிப்படையாக வைத்தாவது ஒரு சிறிய பரிந்துரைகளை கூட இலங்கை தொடர்பாக ஐ.நா.சபையில் இந்தியா சமர்ப்பிக்கவில்லை. ஒலிவாங்கிக்கு முன்னால் பேசிய விடயத்தை ஐ.நா.சபையில் பரிந்துரையாக சமர்ப்பித்தால் எழுத்து மூல ஆவணத்தில் இடம்பெற்று விட்டால் இலங்கைக்கு அது பாதகமாக அமைந்து விடும் என்பதால் இந்தியா ஒரு பரிந்துரைகளை கூட முன்வைக்கவில்லை.[/size][size=3]

பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரிக்கா, உட்பட மேற்குலக நாடுகள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு சிறிய ஒத்தடம் கொடுக்கின்ற வகையில் அல்லது வடக்கு கிழக்கிற்கு அதிகாரபரவலாக்கலை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற நோக்கில் ஐ.நாவில் பரிந்துரைகளை முன்வைக்கின்ற போது இந்தியாவினால் ஒரு பரிந்துரைகளை கூட ஏன் முன்வைக்க முடியாமல் போய்விட்டது. தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்காதது மட்டுமல்ல சர்வதேச நாடுகள் சமர்ப்பித்த பரிந்துரைகளையும் இலங்கைக்கு சார்பாக மாற்றி அமைத்து அந்த அறிக்கையை பலவீனப்படுத்தும் வேலையை தான் இந்தியா செய்திருந்தது. [/size][size=3]

இந்தியாவின் கடத்தனமான வேலையை அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஐ.நா.சபையில் வைத்தே இந்தியா பிரதிநிதிகள் முன்னிலையில் வைத்தே கண்டித்திருந்தன. இலங்கை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக சில நாடுகள் நடந்து கொள்ளுகின்றன என அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகள் கடும் விசனத்தை வெளியிட்டிருந்தன.[/size][size=3]

இந்த விடயத்தை அவதானித்த சர்வதேச மன்னிப்புச்சபையின் இந்திய பிராந்திய தலைவர் அனந்த பத்மநாதன் இந்தியா மதில்மேல் பூனையாக நடந்துள்ளது என ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்.[/size][size=3]

ஐ.நா.மனித உரிமை மீளாய்வு கூட்டத்தொடரில் மட்டுமல்ல இந்தியா காலம் காலமாக ஈழத்தமிழர் விடயத்தில் கழுத்தறுக்கும் இத்தகைய செயல்களைதான் செய்து வருகிறது.[/size][size=3]

ஈழத்தமிழர்களுக்காக வெட்டி வீழ்த்தி அள்ளி தரப்போகிறது என நம்பிக்கொண்டு டில்லிக்கு காவடி எடுத்து திரியும் தமிழ் தலைமைகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதை சரியாக புரிந்து கொண்டால் இனிமேலாவது கபடத்தனமான இந்தியாவிடமிருந்து தப்பிக் கொள்ள முடியும் அல்லவா[/size]

[size=3]

http://www.thinakkathir.com/?p=43333[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.