Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்படும் தளிர்த் திட்டம், வருவீர்களா? கை தருவீர்களா?

Featured Replies

[size=3]

நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் தாயகத்தில் உள்ள மாவீரர் குடும்பங்கள், போராளிகள் மற்றும் போரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போன்றோருக்கு உதவி செய்யும் நோக்கோடு தளிர்த் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.[/size][size=3]

இந்த நிகழ்வானது 24-11-2012 ரொறன்ரோவில் உள்ள Plasant Banquat Hall (7200 markham Road, Markham&Denison)இல் காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.[/size][size=3]

இந்த நிகழ்வு தொடர்பாக நாடுகடந்த அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு,[/size][size=3]

நமது தாயகத்தின் மீதும், நமது தாயகத்துக்காக களமாடிய வீரர்கள் மீதும், தவமாய் தவமிருந்து பெற்ற தன்னலம் ஏதும் இல்லா தலைவன் மீதும் நமக்குள்ள பற்றுறுதியினை புதுப்பிக்கும் நேரம் மீண்டும் ஒரு தடவை நம் முன் வருகிறது.[/size][size=3]

மாவீரன்[/size][size=3]

எந்த மாவீரனும் தான் இருந்து தமிழீழத்தில் இன்பமாக வாழ்வேன் என்று கனவு கண்டதில்லை.[/size][size=3]

ஒவொரு மாவீரனும் பின்னால் வருபவர்கள் இலக்கை அடைவார்கள் அவர்களுக்கு படிக்கல்லாக எனது உடலும் உயிரும் இருக்கும் என்ற நம்பிக்கையில் தம்மை கொடுத்தவர்கள்.[/size][size=3]

அண்ணன் இருக்கிறார். அவர் எனது குடும்பத்தை பார்த்துக்கொள்ளுவார் என்ற அசைக்க முடியா உறுதியுடன் கண் மூடிவிட்ட வீர மறவர்கள். இன்று இந்த மாவீரர் குடும்பங்களின் வாழ்வு நிலை என்ன?[/size][size=3]

போராளிகள்[/size][size=3]

தமது இளமையையும் இனிமையையும் நமக்கென தந்துவிட்ட நம் பிள்ளைகள் இவர்கள். நம் போராளி குஞ்சுகள் இவர்கள்.[/size][size=3]

அன்றாட வாழ்வுக்கு அல்லல் படும் நிலை ஒரு புறம். தன்மானத்தையே ஆடையாக கொண்டிருந்த இவர்களின் துன்பங்கள் வாய் விடு சொல்ல முடியாதவை.[/size][size=3]

பயத்தினாலோ சுய நலதினாலோ மற்றைய தாயக உறவுகளால் தீண்டத்தகாதவர் போன்ற ஒரு இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ஒரு புறம். இன வெறி மிருகங்களால் வேட்டையாடப்படுவது மறு புறம்.[/size][size=3]

இன்று யாருமற்ற ஏதிலிகளாக வாழ்ந்துவரும் இவர்களின் சொல்லணா துன்பங்கள் உலகில் எவருக்கும் வரக்கூடாதவை.[/size][size=3]

இந்த மாவீரர் நாளில் நம்மை நாமே சில கேள்விகளுக்கு உட்படுத்தி கொள்வது அவசியமாகிறது.[/size][size=3]

இவர்கள் ஒவ்வொரு நாளும் எதிர் கொள்ளும் சொல்லொனா துன்பத்தை துடைக்க வேண்டியது யார் பொறுப்பு?[/size][size=3]

இவர்களுக்கு என்ன சொல்லி நாம் ஆற்ற முடியும்? என்ன சொல்லி நாம் தேற்ற முடியும்?[/size][size=3]

இந்த மாவீரர் நாளில் தலைவர் மாவீரர் உரையாற்றினால் நம்மிடம் எவற்றை எல்லாம் கேட்பார்?[/size][size=3]

கண்டிப்பாக போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் இன்னலை துடையுங்கள் என்பது முதல் இடத்தில இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.[/size][size=3]

இவர்கள் நம் செல்வங்கள். இவர்களை தவிக்க விடுவோமேயானால் நமக்கும் நம் சந்ததிக்கும் இது மீளாப்பழி தவிர்க்கமுடியாதது.[/size][size=3]

இப்பழியை தவிர்க்க நாம் என்ன செய்யப்போகின்றோம்?[/size][size=3]

கணக்கீடு[/size][size=3]

எத்தனை குடும்பங்களுக்கு நமது உதவி தேவை என்று கணக்கிட்டால், சில போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களுக்கு புலம் பெயர் உறவுகள் இருக்கும்.[/size][size=3]

பல போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களில் எவருமே மிஞ்சாமல் அழிக்கப்படு விட்டனர்.[/size][size=3]

மீதம் தாமாக இயங்க முடியாது தவிக்கும் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களின் எண்ணிக்கை 25,000 இனை விட குறைவாகவே இருக்கும்.[/size][size=3]

ஒன்று அல்லது இரண்டு புலம் பெயர் குடும்பங்கள் இணைந்து ஒரு போராளி குடும்பத்தை தாங்கினால் அதிக பட்சம் நமக்கு தேவை 50,000 குடும்பங்களே.[/size][size=3]

அவர்கள் அன்று போட்ட பிச்சை தானே இன்று நம்மை இங்கு வசதியுடன் வாழ வைத்துள்ளது?[/size][size=3]

வேண்டும் நமக்கு…[/size][size=3]

உறவுகள், பொருள், நம்பிக்கை என அனைத்தையும் இழந்து நிற்பவர்கள் இவர்கள்.[/size][size=3]

இவர்களுக்கு உதவ கிடைத்தது நமக்கு கிடைத்த பேறாக கருதுபவர்கள் வேண்டும் நமக்கு.[/size][size=3]

இவர்களை நமது குடும்பத்தின் ஓர் அங்கமாக தாங்க கூடியவர்கள் வேண்டும் நமக்கு.[/size][size=3]

இந்த உறவுகளை அழைக்கும் பொழுது நம் தலைவன் எனக்கு தேடித்தந்த உறவு நீ என்று சொல்லக்கூடியவர்கள் வேண்டும் நமக்கு.[/size][size=3]

என் குடும்பத்தின் போராளி அல்லது மாவீரர் தேடித்தந்த சொத்தாக அவர்கள் எண்ணும் அளவுக்கு இருக்கக்கூடியவர்கள் வேண்டும் நமக்கு.[/size][size=3]

வருவீர்களா? கை தருவீர்களா?[/size]

[size=3]

[size=5]tgte.jpg[/size][/size][size=3]

http://www.canadamirror.com/canada/1800.html[/size]

  • 2 months later...

எம் மக்கள் எப்போதும் உதவுவதற்கு பின் தங்கியதில்லை, ஆனாலும் அவர்கள் செய்யும் சிறு உதவிகள் என்றாலும் அவை உரியவர்களுக்கு சென்றடைவதில் உள்ள நம்பிக்கை தன்மை உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் எம்மவர்கள் என்றும் உதவுபவர்களுக்கு கரம் கொடுப்பார்கள், தளிர் திட்டம் ஒரு தளிர் வளர்ந்து எவ்வாறு மரமாகிறதோ அதே போல வளர்ந்து எம் உறவுகளை கை கொடுத்து தூக்க உதவும் என்று நம்புகிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.