Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம்

 
TH14-EXCRETA-BRSC_1112472f.jpg Courtesy : The Hindu
இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம் டிவியில் போடுவார்கள் அதைப் பார்த்தப் படியே அன்றைய பொழுது ஓடிவிடும், அல்லது திரையரங்குகளுக்கு சென்று எதாவது புதுப் படத்தைப் பார்க்கச் செல்வோம். இது தான் எனக்குத் தெரிந்த நாள் முதலாக கொண்டாடப்படும் சுதந்திரத் தினமாக இருக்கின்றது. 
 
நிச்சயமாக நாம் பெற்றது சுதந்திரம் தான், ஏனெனில் எங்கு வேண்டுமானாலும் காறி உமிழ்ந்து எச்சில்களையும், சளிகளையும் துப்பிக் கொள்ளலாம். அடக்க முடியாமல் ஒன்றுக்கு வந்தால் கழிப்பறை நோக்கி ஓட வேண்டியதில்லை, எங்கு வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம். பெண்களின் பாடு கொஞ்சம் கடினம் தான். பொதுக் கழிப்பறைகளில் பெண்கள் போவதை விடவும் அடக்கிக் கொண்டு இருந்துவிடலாம் என்று பலர் இருந்துவிடுவார்கள். பொதுக் கழிப்பறைகள் ஏர்போர்ட்டில் கூட சுத்தம் செய்யப் படாமலயே தான் இருக்கும் என்பதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். பேருந்து நிலையங்களில் இருக்கும் பொதுக் கழிப்பிடத்தின் கதையை சொல்லித் தான் தெரிய வேண்டுமா என்ன. பல பேருந்து நிலையங்களில் ஒன்றுக்கு ஒரு ரூபாய், இரண்டுக்கு இரண்டு ரூபாய் என வசூல் நடக்கும், அது தனிக் கதை. பெரும்பாலான இடங்களில் கழிப்பறை என்பதே இருக்காது. இருந்தாலும் கூட லைனில் நிற்க வேண்டும். ஆயிரம் ஆயிரம் பேர் குழுமும் வழிப்பாட்டுத் தளங்களில் கூட பெரும்பாலும் கழிப்பறைகள் இருப்பது இல்லை. அப்படியே இருந்தாலும் மீண்டும் லைனில் நிற்க வேண்டும்.
 
உலகிலேயே கக்கூஸ் கட்டிக் கொள்ள திராணியற்ற நாடு நம் இந்தியா தான் என்பதையாவது நாம் அறிவோமா. இன்னும் பல ஊர்களில் காலை வேளைகளில் செம்புக்களைத் தூக்கி கொண்டு போவது வழக்கமாகவே இருக்கின்றன. நகரங்களில் வாழும் நடுத்தர மற்றும் மேன்மட்ட குடும்பங்கள் மட்டுமே டாய்லட் கட்டிக் கொண்டு வாழ்கின்றன. நகரப் புறங்களில் இருக்கும் அடிமட்ட மக்களும் சரி, பல கிராமங்களில் மட்டங்களை எல்லாம் தாண்டி கழிப்பறைகள் என்பது கனவாகவே இருக்கின்றன. 
 
இந்தியாவில் மழைக் காலங்களில் விரைவாக நோய்கள் தொற்றிக் கொள்வது ஏன் என யாரும் சிந்தித்தது உண்டா. குறிப்பாக இந்தியாவிலேயேக் கூட சில மாநிலங்களில் நல்ல முறையில் கழிப்பறை வசதிகள் இருக்கின்றன. குறிப்பாக கேரளாவைச் சொல்லலாம். ஓரளவுக்கு நல்ல சூழலில் பல இடங்களில் கழிப்பறைகள் இருக்கின்றன. அங்குள்ள மக்கள் பலரும் கழிப்பறைகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு நேர்மாறாக தமிழர்கள் கழிப்பறை விடயங்களில் பின் தங்கியே இருக்கின்றனர். மெரினா கடற்கரைக்கு காலையில் சென்றுவிடாதீர்கள் ! அங்கு கடலேய கழிப்பறையாகி இருப்பதைக் கண்டு மலைத்துப் போய்விடுவீர்கள். இதே நிலை பல இந்திய மாநிலங்களில் இருக்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் நல்ல முறையில் கழிப்பறைகள் இருக்கின்றன. ஆனால் வடக்கில் பல இடங்களின் நிலைமையோ தலைகீழாக உள்ளன. சென்னையில் கூட நான் பள்ளி சென்றக் காலங்களில் பலர் தெருவோரங்களில் மலம் கழித்து விட்டு போயிருப்பார்கள், அவையாவும் ஈ மொய்த்துக் கொண்டிருக்கும். மழைக் காலங்களில் அனைத்தும் ஒன்றாக கலங்கி குட்டையாக ஓடும். பல நேரங்களில் நாங்கள் டெட்டால் போட்டு காலை கழுவ வேண்டி இருக்கும். 
 
சொல்ல வந்ததை மறந்துவிட்டேன் பாருங்கள், இந்தியாவில் தான் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் உலகிலேயே அதிகம் வசிக்கின்றனர். இந்தியாவின் 58 சதவீதம் பேருக்கு கழிப்பறை வசதியே கிடையாது என்றால் பாருங்க. ஆனால் நமது அண்டை நாடான சீனாவில் நம்மை விட மக்கள் தொகை அதிகம் இருந்து அங்கு வெறும் 5 சதவீதம் மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதிகள் இல்லை எனலாம். வாராணாசியில் கங்கைக் கரையோரங்களில் படையலாக்கப்பட்டுள்ள மலங்களை காணும் போது, புனிதம் எல்லாம் மண்ணாங்கட்டிகள் என சொல்லத் தோன்றும். 
 
ஒரு நாடு ராக்கேட் விடுவதாலும், ஏவுகணைகள் செய்வதாலும் வல்லரசு ஆகிவிட முடியாது. எந்த ஒரு நாடு கழிவறை விடயத்தில் தன்னிறைவாகின்றதோ அது தான் என்னைப் பொறுத்தவரை வல்லரசாக இருக்க முடியும். குறிப்பாக நீங்கள் தாஜ் மகாலுக்கு செல்வீர்களானால் அதன் அருகே இருக்கும் யமுனை நதிக்கரையில் பலர் திறந்தவெளியில் மலம் கழிப்பதைக் காண முடியும். இந்தியாவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வரக் கூடிய தாஜ்மகாலுக்கு அருகேயே இப்படியான சூழல் என்றால் மற்ற இடங்களைப் பற்றி சொல்லவா வேண்டும். ஒழுங்காக கக்கூஸ்களைக் கட்டாமல் திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டு அதனை அள்ள மட்டும் ஒரு சாதியை உருவாக்கி வைத்துள்ளார்கள் நமது புத்திஜீவிகள். 
 
ஒரு நாளைக்கு மட்டும் ஒரு லட்சம் டன் மலங்கள் வயல் வெளிகளிலும், காய்கறித் தோட்டங்களிலும், நீர் நிலைகளிலும் சேர்கின்றன. இவை உரமாகின்றன என்ற வெட்டி வீராப்புப் பேசுபவர்களுக்கு நான் சொல்ல வேண்டியது என்னவெனில் இவை உரமாகுவதில்லை, மாறாக நோய்கள் உண்டாக்குக்கின்றன. நீர் நிலைகளில் மலங்கள் கலக்கும் போது அவற்றில் இருந்து பல தொற்றுக் கிருமிகள் பெருகிவிடுகின்றன. அவற்றை மீண்டும் நாம் உண்ணவும், பருகவும் செய்கின்றோம் இதனால் நோய்கள் பல நமக்கு வந்து சேர்கின்றன.
 
இந்தியாவின் 75 சதவீதம் நீர்நிலைகள் மனிதர்களாலும், தொழிற்சாலைகளாலும் அசுத்தப்பட்டுள்ளன என ஒரு அறிக்கைக் கூறுகின்றது. ஒவ்வொரு இந்திய நகரங்களில் வாழ்பவர்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தினமும் நமது உணவுகளில் மலங்கள் வந்து சேர்கின்றன என மத்திய நகர்புற அமைச்சகம் கூறுகின்றது. 
 
ஒவ்வொரு நாளும் இத்தகையக சுகாதாரக் குறைவுப்பாடுகளால் ஏற்படும் டயோரியா, மஞ்சள் காமாலை போன்ற நோய்களால் தினமும் ஆயிரம் குழந்தைகள் மரணிக்கின்றனர். இந்தியாவில் இருக்கும் 240, 000 கிராமங்களில் வெறும் 24, 000 கிராமங்கள் மட்டும் தான் பூரண கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் சுமார் 9 கோடியே 70 லட்சம் பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. பெரும்பாலான குடிநீர்கள் மலம் போன்றவைகளாலேயே அசுத்தமடைகின்றன. இந்தியாவின் பாதி பள்ளிகளில் முறையான டாய்லட் வசதிகளே இல்லை. பல தனியார் பள்ளிகளில் கூட ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு டாய்லட் என்ற நிலையே இருக்கின்றன. 
 
ஒவ்வொரு ஆண்டும் சுமார் இருபது கோடி டன் மலம் அகற்றப்படாமல் திறந்தவெளிகளில் விடப்படுகின்றன எனவும். ஒவ்வொரு கிராம் மலத்திலும் பத்து மில்லியன் வைரஸ்களும், ஒரு மில்லியன் பாக்டீரியாக்களும், ஆயிரம் பாராசைட் கிருமிகளும் இருக்கின்றன ஐநா சபையின் அறிக்கைக் கூறுகின்றது. 
 
மகாராட்ர மாநிலத்தில் மட்டும் அரசின் உதவியோடு 1997 - 2000 ஆண்டுப்பகுதியில் 16 லட்சம் டாய்லட்கள் கட்டப்பட்டன. ஆனால் பெரும்பாலான டாய்லட்களை மக்கள் பயன்படுத்துவதே இல்லையாம். மாறாக தானியங்களை சேகரித்து வைக்கும் கிட்டங்கியாக பயன்படுத்தி வருகின்றனர் என புது தில்லியைச் சேர்ந்த உலக சுகாதார அமைப்பின் பேச்சாளர் கூறினார். டாய்லட்களை மக்கள் முறையாக பயன்படுத்துவதை ஊக்குவிக்க மத்திய அரசு நிர்மல் கிமார் புரஸ்கார் என்ற திட்டத்தின் கீழ்  தன்னிறைவடைந்த கிராமங்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. சில ஊர்களில் கழிப்பறையை பயன்படுத்த காசும் தரப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. உலகில் எங்குமே இல்லாத வழக்கம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு டாய்லட்டை பயன்படுத்த மக்களுக்கு ஊக்கம் தரப்படுகின்றது. தமிழ்நாட்டின் முசிறி நகரில் டாய்லட்டை பயன்படுத்தினால் பயன்படுத்துவோருக்கு சிறிய தொகையைக் கொடுக்கின்றனர். சேகரிக்கப்படும் மலங்களை முறையாக உரங்களாக மாற்றி தோட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர் தமிழ்நாடு விவசாயக் பல்கலைக் கழகத்தினர்.
 

இந்தியா போன்ற நாடுகளில் போதிய நீர் வசதி இல்லாமையாலும், சேகரிக்கப்படும் கழிவுகளை முறையாக அகற்றும் வசதிகள் இல்லாமையாலும், மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் கழிப்பறைகள் என்பது கனவாகவே இருக்கின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸின் உதவியோடு குறைந்த அளவு நீரினைப் பயன்படுத்தக் கூடிய டாய்லட்களை உருவாக்கி வருகின்றனர் சில ஆராய்ச்சியாளர்கள். சூரிய ஒளியின் துணையோடு இயங்கக்கூடிய இந்த டாய்லட்கள் பல புற நகர் மற்றும் கிராமப் புறப் பகுதிகளில் பயன்படுத்தக் கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

 
எது எப்படியானாலும் மக்கள் மனது வைத்தால் மட்டுமே கழிப்பறை சுதந்திரம் என்பது இந்தியாவுக்கு வந்து சேரும். தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதிலும், கூழ் ஊற்றுவதிலும் மட்டும் ஆர்வம் கொண்டால் போதாது. வீட்டுக்கு வீடு கழிப்பறை கட்ட முயல வேண்டும் என்பது எமது அவா.
 

 

 

http://youtu.be/orIFs72HGmM

குஞ்சு மீன்களுக்கு சாப்பாடு போடுகின்றார்கள் :lol:  :D  , அலை கடலுக்குள் இழுத்துக்கொண்ட் போயிடும்

 

இதில் என்ன தப்பு, காற்றோட்டமா குந்துவதில் உள்ள சுகமே தனிசுகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.