Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடல்வழியே நாளை கூடங்குளம் முற்றுகைப் போராட்டம்- ஆயிரக்கணக்கான போலீசார் குவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

09-kudankulam-protest213-300.jpg

 

இடிந்தகரை: கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடக் கோரி நாளை கடல்வழியே முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளதையடுத்து அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

இடிந்தகரையில் நேற்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வலியுறுத்தி கடல்வழியே படகுகளில் சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்த கடல் வழி முற்றுகைப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் கலந்து கொள்கின்றனர்.அதே நேரத்தில் இதர மாவட்டங்களில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

 

இப்போராட்ட அறிவிப்பையடுத்து கூடங்குளம் பகுதியில் 1500 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். பிற தென் மாவட்டங்களிலிருந்தும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர். போராட்டக்காரர்கள் அணு உலைக்குள் சென்றுவிடாதவாறு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

 

இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் கடல்வழி முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.oneindia.in/news/2012/12/09/tamilnadu-protesters-plan-another-sea-siege-at-kudankulam-165988.html

இந்தப்போராட்டங்கள் இந்த அணுமின் நிலைய உற்பத்தியை நிற்பாட்டும் என தெரியவில்லை.

 

இருந்தாலும் இந்த போராட்டங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளன.


எனவே ஆகக்குறைந்தது பாதுகாப்பு நடவடிக்கைகளை என்றாலும் பலப்படுத்தும்.

481847_384356571650935_463380060_n.jpg

இன்று (10 -12 -2012 )அணு உலை எதிர்ப்பு போராட்டம் கூடங்குளத்தில் மேலும் தீவிரமடைந்துள்ளது .சுமார் 6 ,000 மக்கள் குவிந்துள்ளனர் .ஆண்கள் அனைவரும் கடலுக்குள் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட படகுகளில் நின்று போராட்டம் , பெண்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டு போராட்டம் நடத்திவருகின்றனர் .காவல் துறை அதிகளவில் குவிக்கப் பட்டிருக்கிறது .தேவைக்கு அதிகமான காவல்துறையினர் குவிக்க பட்டபோதிலும் , நிலைமையின் சீற்றத்தை உணர்ந்து அதனை சுற்றி உள்ள பல கிராமங்களில் காவல் துறையினரால் சுற்றிவளைக்க மேலும் பல காவல்துறை படைகள் வந்து இறங்கி கொண்டு இருகின்றனர். கடந்த போராட்டத்தை விட இன்னும் போராட்டத்தில் வலுவும் அதிக எண்ணிக்கையில் போராட்ட குழுவினர்கள் சேர்ந்திருப்பதால் காவல்துறையினர் திகைப்பு .

நிலைமை சற்று முன்பைவிட பதட்டமான சூழ்நிலையில் தான் இருக்கிறது ..இவர்களின் போராட்டம் வெற்றி பெற சுயநலம் தவிர்த்து இம்மக்களின் விடுதலைக்கு நாமமும் போராடுவோம் ..வாழ்க ஐயா உதயகுமார் அவர்களே உன் புகழ் வையகம் சிறக்க ..

உங்களுடன் ,

தமிழ்-தமிழர்கள் —

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம்: நடுக்கடலில் முற்றுகைப் போராட்டம்! சாகவும் தயார்- சுப. உதயகுமார்!

10-koodnakulam3-300.jpg

 

இடிந்தகரை: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடுக்கடலில் படகுகளில் நின்றபடி போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கூடங்குளம் அணு உலையைத் தடுக்க சாகவும் தயார் என்று போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

 

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இன்று கடல்வழியாக மீண்டும் அணுஉலையை முற்றுகையிடப்போவதாக கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் இடிந்தகரை கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான படகுகளுடன் கடல் வழியே அணு மின்நிலையத்தை முற்றுகையிட போராட்டக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர். பின்னர் நடுக்கடலில் நின்றபடி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

 

சாகவும் தயார்...: உதயகுமார்

போராட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார்,

கூடங்குளம் அணு உலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்னும் வரவில்லை மக்களின் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்கவில்லை. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அணுக்கழிவை என்ன செய்யப்போகிறீர்கள்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

 

ஆனால் மத்திய அரசோ உரிய பதிலைத் தரவில்லை. கர்நாடகாவில் எந்த இடத்திலும் அணுக்கழிவை வைக்க அனுமதிக்கமாட்டோம் என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அவர்களை மத்திய அரசு மதிக்கிறது. கர்நாடகாவில் அணுமின் திட்டம் அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதும் அத்திட்டம் கைவிடப்பட்டது.

தமிழர்களை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையில் நடத்துகிறது.

எங்களை தேசத்துரோகி எனக்கூறும் பா.ஜ.க.வினர், அணுமின்நிலையத்தை எதிர்க்கும் கர்நாடக முதல்வரை தேச துரோகி என்று கூறுவார்களா?.

தமிழக இயற்கை வளத்தை ரஷ்யாவிற்கு வழங்க அனுமதிக்கமாட்டோம். உயிரை கொடுத்தாவது இயற்கை வளத்தை காப்போம். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து நாங்கள் சாகவும் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.

பிற இடங்களில்...

 

இடிந்தகரை போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டக் குழுவினர் மறியல் போராட்டம் நடத்தினர்

இன்றைய போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஆயிரக்கணக்கான போலீசார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். போராட்டக் குழுவினர் அணுமின் நிலையத்துக்குள் நுழைந்துவிடாமல் தடுக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் அங்கு உஷார்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

 

கடந்த அக்டோபர் மாதமும் இதேபோல் நடுக்கடலில் நின்றபடி முற்றுகைப் போராட்டம் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.oneindia.in/news/2012/12/10/tamilnadu-anti-kknpp-protesters-plan-another-165998.html

Edited by தமிழரசு

484182_441667195900739_1030528175_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.