Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஹைனாவின் சிரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைனாவின் சிரிப்பு    

 

எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

 

 

515069-5275-35.jpg

 

 

 

இன்று பை--பாஸ் சாலை அமைந்திருக்கும் பகுதியில் ,1960கள் வரை தேனியில், மலைகளின் அடர்ந்த வனப்பகுதியில் ஹைனா எனப்படும் கழுதைப்புலிகள் வாழ்ந்து வந்தன. இன்று புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக வனங்கள் முழுதும் அழிக்கப்படுகிறது. மலையின் இதயத்தைப் பிளந்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுவிட்ட.து. தவிர காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அவர்களது இல்லங்கள் அமைப்பதற்காக வனங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன.

 

1980களில் கூட அங்கு செல்வதற்கே சற்று அச்சம் தரும் விதமாக வனம் இருக்கும். உடும்பு ,குள்ளநரி, முயல், காட்டுப்புறா ,மைனா ஏராளமான வறண்ட நில வாழ் பாம்புகள் வாழ்ந்த பூமி, இப்போது அவைகள் ஓட ஓட விரட்டப்பட்டு , அற்றுப்போகும் நிலைமைக்குத் தள்ளிவிட்டது அரசு நிர்வாகம். 60களில் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்குச் செல்வோர் கழுதைப்புலியின் சிரிப்பொலி கேட்டு நடுங்குவர். வனத்தின் ஆக்ரோஷமான மிருகம் என அழைக்கப்படும் கழுதைப்புலி, கும்பலாக வந்து தாக்கும் தன்மை கொண்டது. சிங்கம், புலி ,யானை போன்றவை கூட இவைகளைக்கண்டு சற்று பின் வாங்கும். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஹைனாவின் குட்டிகளை அவை கொன்று இவைகளின் ஆதிக்கத்தைக் குறைக்கும். மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் கொண்ட கழுதைப்புலிகள், நமது வண்டலூர் உயிரியில் பூங்காவில் மட்டும் சோர்வுடன் படுத்துக் கிடந்ததைக் கண்ட போது ஏனோ என் மனது சஞ்சலப்பட்டது. இந்தியாவில் இன்று அற்றுப்போன நிலையில் , அவை ஆப்பிரிக்க வனங்களில் சற்று அதிகளவு காணப்படுகின்றன. அதற்கடுத்து என்.ஜி.சி. அனிமல் பிளானட் சேனல்களில் பார்த்தால் தான் உண்டு!

 

ஒவ்வொரு உயிரினத்தின் நுட்பமான குணமும், அவைகளின் பிரத்யேக தகவல் தொடர்பு மூலம் வளப்படுத்தப்படுகிறது .சுரப்பிகள்மூலம் வெளிவரும் திரவத்தில் காணப்படும் பாக்டீரியாக்களின் பங்கு மிக முக்கியமானது. அறிவியல் ஆராய்ச்சிகள் அதி முக்கிய கண்டுபிடிப்பாக ஒரே இனத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் தங்களுக்கு என பிரத்யேக மணம் வீசும் திரவ வீச்சைத் தங்களது குழு இணைப்பு மொழியாக கொண்டிருப்பதை முதன் முதலாக கண்டறிந்துள்ளன. குழு கலாச்சாரம் கொண்ட ஹைனாக்களும் அவ்வாறான திரவ மொழியைத் தங்கள் மூக்கினால் நுகர்வதன் மூலம் வேறுபாடுகளை உணர்ந்து கொள்கின்றன. கடந்த கால ஆய்வுகளில் பாக்டீரியாக்கள் செரிமானம் மற்றும் உடல் கூறு இயக்கவியல் தொடர்புக்கு மட்டுமே உதவுகின்றன என புரிந்து கொள்ளப்பட்டன. பின்னர் நடத்திய ஆய்வில் பாலூட்டிகள் இவ்வாறான திரவ பீய்ச்சலில் தங்களது பாலினம், வயது, இனப்பெருக்கத்திற்குத் தயாரான நிலை ,எந்த குழுவைச் சேர்ந்தவை போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ள உதவியது. இங்கு பாக்டீரியாக்களின் பங்கு டி.என்.ஏ.க்களின் பங்கு போல் புதிய திடமான வம்சாவளியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. காடுகளில், புல்வெளிகளில் ஹைனாக்கள் ,கொத்தாக பீய்ச்சிவிட்டு செல்கின்றன. கொச்சை வாடை கொண்ட அவை , ஆய்வக ஆய்வில் ஹைனாக்களின் குழு வாழ்வியல் கூறுகளையும் எடுத்துரைப்பதாக உள்ளன. இவ்வாறான திரவ பீய்ச்சல், தங்கள் எல்லைகளை வரையறுக்கவும், மாற்றுக் குழு உறுப்பினரை விருந்தினராக ,தங்கள் குழு உறுப்பினராக ,பல சமயங்களில் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதற்கான அழைப்பாகவும் செயல்படுகிறது.

 

2426627269_6258438df0.jpg

 

மனித காதுகளுக்கு ,ஹைனாவின் சிரிப்பு ஏதோ மனிதக் கும்பல் நகைச்சுவைகளைப் பரிமாறிக் கொண்டு சிரித்து மகிழ்வதாகத் தோன்றும். ஒவ்வொரு தனி ஹைனாக்கு தனி அலைவரிசையிலான சிரிப்பு உண்டு. இது அவைகளின் குணத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவை நல்ல மன நிலையிலோ அல்லது ஆபத்தான பதற்றமான சூழ்நிலையிலோ, உணவு கிடைத்த மகிழ்விலோ மட்டுமே ஒலி எழுப்பும். இவ்வொலி மனித சிரிப்பொலியை ஒத்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கிகிள் என்று கூறப்படும் நமுட்டுச்சிரிப்பைப் போல் ஒலி எழுப்பும். இவ்வொலியை ஒவ்வொரு அரை மணிநேர இடைவெளியில் எழுப்பியவாறு இருக்கும் .ஒலி எழுப்பும் ஒவ்வொரு முறையும் ஏதோ அர்த்தம் பொதிந்தததாக இருக்கும். குழுத்தலைவனாக வெற்றி பெற்றது, சண்டித்தனம் செய்த பெண்ணோடு வலிய உடலுறவு கொண்டது, எதிர்பாராத விதமாக தோற்கடிக்கப்பட்டது என உளவியல் ரீதியான பாதிப்புகளை இவ்வொலி உணர்த்துகிறது. வயதானவை எழுப்பும் ஒலி அளவு சற்று நீண்டதாகவும் இளம் வயதினரின் ஒலி அளவு குறைந்தும் உள்ளது. இதில் ஆண், பெண் வேறுபாடும் உண்டு. நிக்கோலஸ் மாத்தீவனின் ஹைனாவின் சிரிப்பு பல உண்மைகளின் திறவு கோல் என்ற கட்டுரை சுவாரசியமான ஒன்று. இவர் கென்யாவில் 17 ஹைனாக்களோடு 5 வருட காலம் வாழ்ந்து ஆராய்ந்து கட்டுரையை சமர்ப்பித்துள்ளார்.

 

ஹைனாக்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் .மனித குழுக்களுக்கு அருகில் வாழும போது. அவை தங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்வது ஆச்சரியமளிக்கும். உதாரணமாக, எத்தி யோப்பியாவில் வாழும் தேவாடோ தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் பிரிவினர், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய 55 நாட்கள் எந்த புலால் உணவோ அல்லது பால் கலந்த உணவோ உண்ணுவதில்லை. முற்றிலும் காய் கனிகளையே தங்களின் உணவாக உண்கின்றனர். இவர்கள் அன்றாடம் அருகே உள்ள காடுகளுக்குச் சென்று அங்கு வாழும் ஹைனாக்களுக்கு மிஞ்சிய புலால் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம். இந்த 55 நாட்கள் அவர்கள் காய்கனிகளை மட்டுமே பரிமாறுவர். அப்போது அவையும், தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டு அவர்கள் தரும் உணவையே உண்கின்றன. அந்த 55 நாட்கள் புலால் உணவு வழங்கினாலும் அதை அவை மறுப்பது ,அவற்றின் ஜீன்களிலேயே மாற்றம் பதிவாகி விட்டதை உணர்த்துகிறது.

 

மற்றுமொரு சுவையான செய்தி, இவைகளின் உண்ணும் திறன். மிக அதிக பட்சமாகவும், ஏராளமான மாமிச உணவையும் உண்ணும். மாமிசத்தில், அழுகியது, தொற்று நோய் கண்டது போன்றவற்றையும் மாமிச எச்சங்களையும் தயங்காமல் உண்ணும் . முடியை மட்டும் கக்கும். இவற்றின் ஜீரண சக்தி அளப்பரியது. ஒரு குழுவில் ஆண் தலைமை வகித்தாலும், மூத்த பெண்ணே அதிகளவு உணவை உண்ணும்.

 

தாய் இறந்தாலும் குட்டிகளைப் பிற தாயே வளர்க்கும். குட்டிகள் பருவத்திற்கு வரும் வரை பால் ஊட்டும். அந்த சமயத்தில் வளர்ப்புத் தாய் தனது பாலுறவு பருவத்தையே தள்ளி வைக்கும்! இதுவே வாழ்க்கையைக் கற்றுத் தரும் மானசீக குருவாகச் செயல்படுகிறது. அதிக பட்சமாக 20 வருடங்கள் வாழ்கின்றன அல்லது கொல்லப்படுகின்றன.!

 

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=6139

 

ஹைனாக்கள் சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் .மனித குழுக்களுக்கு அருகில் வாழும போது. அவை தங்கள் வாழ்வியல் முறையை மாற்றிக் கொள்வது ஆச்சரியமளிக்கும். உதாரணமாக, எத்தி யோப்பியாவில் வாழும் தேவாடோ தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவப் பிரிவினர், ஈஸ்டர் பண்டிகையை ஒட்டிய 55 நாட்கள் எந்த புலால் உணவோ அல்லது பால் கலந்த உணவோ உண்ணுவதில்லை. முற்றிலும் காய் கனிகளையே தங்களின் உணவாக உண்கின்றனர். இவர்கள் அன்றாடம் அருகே உள்ள காடுகளுக்குச் சென்று அங்கு வாழும் ஹைனாக்களுக்கு மிஞ்சிய புலால் உணவுகளைப் பரிமாறுவது வழக்கம். இந்த 55 நாட்கள் அவர்கள் காய்கனிகளை மட்டுமே பரிமாறுவர். அப்போது அவையும், தங்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டு அவர்கள் தரும் உணவையே உண்கின்றன. அந்த 55 நாட்கள் புலால் உணவு வழங்கினாலும் அதை அவை மறுப்பது ,அவற்றின் ஜீன்களிலேயே மாற்றம் பதிவாகி விட்டதை உணர்த்துகிறது.

 

 

 

ஆச்சரியமான தகவல்!

 

இணைப்புக்கு நன்றி கிருபன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.