Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் டெல்லி மாணவி. டாக்டர்கள் தீவிர சிகிச்சை.

Featured Replies

டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் இரவு, பகலாக போராடுகின்றனர்.

 

சிங்கப்பூரில் மாணவி

 

டெல்லியில் கடந்த 16–ந்தேதி இரவில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து, சிதைக்கப்பட்ட நிலையில் வெளியே மாணவி ஒருவர் வீசப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெருத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உயிருக்காக போராடி வந்த மாணவி, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு நேற்று இரவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டார்.

 

resize_20121227180054.jpg

மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதி

 

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு அந்த விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கிருந்து மாணவி நேராக ஆம்புலன்ஸ் மூலம் பிரசித்தி பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். உயிருக்காக போராடி வரும் அவரை காப்பாற்ற டாக்டர்களும் இரவு, பகலாக போராடி வருகிறார்கள்.

 

இதுகுறித்து சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘ அந்த நோயாளி எங்களது மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மிக மிக மோசமான நிலையில் வந்து சேர்ந்தார். அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இந்திய தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அந்த நோயாளியின் அந்தரங்கம் காக்கப்படவேண்டும். அவர்களது குடும்பத்தின் மதிப்பு காப்பாற்றப்பட வேண்டும்’’ என்றார்.

 

இந்திய தூதரகம் உதவி

 

சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம், பாதிக்கப்பட்ட மாணவிக்கு மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், (சிங்கப்பூர் வந்துள்ள) அவரது குடும்பத்தினருக்கு தேவையான இயன்ற உதவிகள் அனைத்தும் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக சிங்கப்பூர் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘அந்த பெண்ணின் உடல்நிலை குறித்து நிறையபேர் எங்களை தொடர்பு கொண்டு விசாரிக்கின்றனர். பலர் அவருக்கு உதவவும் முன்வந்துள்ளனர். அவர்கள் அப்படி முன்வந்துள்ளமைக்காக நன்றி தெரிவிக்கிறோம். இந்த தருணத்தில், அந்தப்பெண்ணின், அவரது குடும்பத்தின், அவருக்கு சிகிச்சை அளிக்கிற மருத்துவர்குழுவின் அந்தரங்கம் மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் அவருக்கு தொடர்ந்து சுமுகமாக சிகிச்சையை தொடர முடியும்’’ என கூறப்பட்டுள்ளது.

 

மத்திய மந்திரி அறிக்கை

 

இதற்கிடையே டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டே நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘பாதிக்கப்பட்ட பெண்ணின் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருக்கிறோம். சம்பவம் நடந்த நாளிலிருந்து, அவருக்கு முடிந்த அளவு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளித்து வருகிறோம். நமது டாக்டர்களின் சிறப்பான முயற்சிகளுக்கு அப்பாலும் அவரது நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதும், சீரற்ற நிலைமை தொடர்வதும், நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. அவருக்கு இங்கே சிகிச்சை அளித்து வந்த டாக்டர்களின் அறிவுரையின்படி, அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடிவு எடுக்கப்பட்டது. பயண நேரத்தை கருத்தில் கொண்டு அவர் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையின் டாக்டர்களுடன் இங்குள்ள டாக்டர்கள் பேசி உள்ளனர். அந்தப்பெண் பற்றிய அனைத்து விவரங்களையும் கூறி உள்ளனர். அந்த பெண்ணுடன் குடும்பத்தினர் சிங்கப்பூரில் தங்கி இருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு பல வாரங்கள் சிகிச்சை அளிக்க வேண்டி உள்ளது’’ என கூறி உள்ளார்.

 

மாணவி அனுமதிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில்தான் உடல் நலமற்ற போது நடிகர் ரஜினிகாந்த், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் முன்னணி தலைவர் அமர்சிங் போன்றோர் சிகிச்சை பெற்று நலம் அடைந்து நாடு திரும்பினர் என்பது நினைவுகூரத்தக்கது. மாணவியின் சிகிச்சை செலவை அரசு ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

சிங்கப்பூர் மருத்துவமனையில் டெல்லி மாணவி கொண்டு செல்லப்படும் படம் பார்க்க.....

8d0a4f3d4ebb8e1d7e938ca89dd1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் போலி ஜனநாயகம் மேல் நடுத்தரவர்க்க மக்களுக்கும் இப்போது விளங்குகிறது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.