Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சுப் பதவி குறித்து கட்சியின் அதி உயர்பீடமே தீர்மானிக்கும்! – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பிரேரணை?

Featured Replies

அமைச்சுப் பதவி குறித்து கட்சியின் அதி உயர்பீடமே தீர்மானிக்கும்! – முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் பிரேரணை?
 
 
அமைச்சரவை மாற்றம் விரைவில் இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் யாப்பை மீறி தனித்தனியாகச் சென்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சியைத் தடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் யாப்பின்படி அமைச்சுப் பதவிகளை யாருக்கு வழங்கவேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சியின் அதியுயர் பீடத்துக்கு மாத்திரமே இருக்கின்ற நிலையில், இந்த அதிகாரத்தை யாப்பில் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்கான விசேட பிரேரணையொன்று அதியுயர் பீட உறுப்பினர்கள் சிலரால் முன்வைக்கப்படவுள்ளது.
கட்சியின் அதியுயர் பீடக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறும்போது குறித்த பிரேரணை வாய்மொழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் கட்சியால் வழங்கப்பட்ட பிரதியமைச்சர் பதவியைக் கட்சியினதும், தலைமைத்துவத்தினதும் அனுமதியின்றி இராஜிநாமாச் செய்ததே இவ்வாறான பிரேரணையொன்று முன்வைக்கப்படுவதற்குப் பிரதான காரணமெனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அமைச்சரவை மாற்றம் ஜனவரி மாதம் இறுதிப் பகுதியளவில் இடம்பெறலாம் என அரச உயர்மட்டத் தகவல்கள் ஊர்ஜிதப்படுத்தியிருக்கும் சூழ்நிலையில், கட்சிக்குக் கிடைக்கவிருக்கும் அமைச்சுப் பதவிகளை யார், யாருக்கு வழங்குவது என்ற ஒரு தடுமாற்றமான நிலை கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைப் பயன்படுத்திக்கொண்டு முக்கிய மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரச உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்து தனக்கும் முழு அமைச்சுப் பதவி வழங்கவேண்டுமெனக் கோரிக்கை முன்வைத்த விவரமும் கட்சித் தலைமை ஊடாக அதியுயர் பீட உறுப்பினர்களின் காதுகளுக்கு எட்டியுள்ளது.
இவ்வாறான பதற்றமிக்க சூழ்நிலைகளையடுத்தே வெள்ளிக்கிழமை கூடும் அதியுயர் பீடக் கூட்டத்தில் மேற்சொன்ன பிரேரணை முன்வைக்கப்படவிருப்பதாக கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்களிடமிருந்து அறியமுடிகின்றது.
இதேவேளை, கட்சியின் பேராளர் மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை தெஹிவளையில் இடம்பெறவுள்ளது. இந்த மாநாட்டின்போது கட்சியின் பதவி வழியிலுள்ள 23 பேரை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவது தொடர்பில் பேராளர்களின் அங்கீகாரம் கோரப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
தலைவர், செயலாளர் நாயகம், தவிசாளர் தவிர்ந்த வேறு பதவி நிலைகள் சிலவற்றில் மாற்றம் ஏற்படலாம் எனத் தெரியவருகின்றது. இது குறித்து இன்று கூடும் அதியுயர் பீடக் கூட்டத்தில் ஆராயப்பட்டு இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
முஸ்லிம் காங்கிரசின் யாப்பின்படி 19 மாதங்களுக்கு ஒரு முறை பதவி வழிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளவேண்டுமெனக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை இடம்பெறும் பேராளர் மாநாட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள், 13ஆவது திருத்தச்சட்டம், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா 'இஸ்லாமிய ஷரியா சட்டம் காட்டிமிராண்டிச் சட்டம்' என வெளியிட்டு கருத்து போன்றன தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளன.
இது இவ்வாறிருக்க, கட்சியின் பதவி வழியிலுள்ள 23 பேரையும் உள்ளடக்கி 'மசூறா சபை' என்ற ஒரு அதிகாரமிக்க அமைப்பை உருவாக்கவேண்டுமென்ற யோசனையை கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸனலி, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் முன்வைத்துள்ளதாக அறியமுடிகிறது.
அதியுயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டி சென்றுவிட்டது என்றும் இத்தொகையானோரை வைத்துக்கொண்டு கட்சி தொடர்பான தீர்மானங்களை எடுப்பது சிரமம் என்ற அடிப்படையிலேயே செயலாளர் நாயகம் ஹஸனலி குறித்த யோசனையை முன்வைத்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
ஆனால், இந்த யோசனைக்கு இதுவரை கட்சித் தலைவர் பச்சைக்கொடி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
12/27/2012 1:11:57 PM
 

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=496b85dc-5284-493e-ac19-764f513578b2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.