Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை. அதற்கு முதல் யார் என்ன சொன்னாலும் விடுதலை கிடையாது: கோத்தபாய

Featured Replies

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியேன்! புனர்வாழ்வின் பின்னரே மாணவர்களை விடுவிப்பேன்!! - கோத்தபாய
 
'நான் நினைத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக  மாணவர்களைத் தடுப்புக் காவலிலும் வைக்க முடியும். அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். ஆனாலும், மாணவர்களின் எதிர்கால கல்வியை கருத்திற்கொண்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது.'
 
கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது சிறிலங்கா படைத்துறை அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் புனர்வாழ்வு விவகாரம் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ள சூழ்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
 
'பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. நான் நினைத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்களைத் தடுத்து வைத்திருக்கலாம். அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஆனாலும், மாணவர்களின் எதிர்காலக் கல்வியைக் கருத்திற்கொண்டு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் எனத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நால்வரையும் புனர்வாழ்வு வழங்காமல் விடுவிக்கவே முடியாது. இதைத் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் என்னுடன் பேச்சுவார்ததை நடத்தியபோதே  இந்த விவகாரங்களை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன். என்னுடைய கருத்துகளையும் நிலைப்பாடுகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். பழைய நிலைமைக்கு விடமாட்டேன்.
 
1980ஆம் ஆண்டு காலப்பகுதிகளிலும் மாணவர்களை இதேபோன்று சூடேற்றினார்கள். அவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்பட நான் ஒருபோதும் இடமளிக்கமாட்டேன். மாணவர்களைப் பாதிப்படையச் செய்யும் எந்த நோக்கமும் எங்களுக்கில்லை. அவர்கள் விடயத்தில் தேவையற்ற தலையீடுகளையும் நாம் விரும்பவில்லை. ஆனால், சில குழுக்கள் மாணவர்களைத் தவறாக வழிநடத்துகின்றன. இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விடயத்தில் தேவையற்ற தலையீடுகளை நான் ஒருபோதும் விரும்பவில்லை.
 
கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்தியாவில் எல்லாம் தொடர்புகள் இருக்கின்றன. அங்கிருந்தும் வழிநடத்தல்கள் வந்திருக்கின்றன. இதைப்பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால்,  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இவ்வளவு தூரம் அக்கறை எடுக்கின்றது. 
 
பல்கலைக்கழகத்துக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் செல்ல வேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பைத்தியக்காரத்தனமான வேலைகளில்தான் ஈடுபடுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணித் தலைவர்தான் மாணவர்களைப்  பின்னணியிலிருந்து இயக்குகிறார்.
 
கடந்த காலச் சம்பவங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இளைஞர் அணி தலைவரின் பின்னணியிலேயே நடந்துள்ளன. இவற்றை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபிப்போம். கூட்டமைப்புதான் மாணவர்களின் கல்விப் பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும்.
 
மாணவர்களுக்கு புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தகட்ட நடவடிக்கை. அதற்கு முதல் யார் என்ன சொன்னாலும் விடுதலை கிடையாது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைக்காமல் நாங்கள் தான் மென்போக்குடன் செயற்பட்டு வருகின்றோம். இங்கே தென்னிலங்கையில் இதேபோல் மாணவர் ஒருவர் குற்றம் புரிந்தால் அவரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்துகிறோம். இதேதான் வடக்கிலும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் இந்தப் பிரச்சினைக்குப் பொறுப்புக் கூறவேண்டும்' என்று கோத்தபாய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.      
12/30/2012 6:34:37 AM
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.