Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் திரையுலகினர் உண்ணாவிரதம்

Featured Replies

  • தொடங்கியவர்

கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும்! உண்ணாவிரத போராட்டத்தில் ரஜினி பேச்சு!

 

மத்திய அரசின் சேவை வரியால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் உண்ணாவிரத போராட்டத்தில் பேசினார். மத்திய அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 12.36 சதவிகிதம் சேவை வரி விதித்துள்ளது. இதை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் திரையுலகினர் மட்டும் இதனை எதிர்த்து வருகின்றனர். இதைக் கண்டித்து இன்று (7ம் தேதி) திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே இந்த போராட்டம் நடந்து வருகிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், பெப்சி எனப்படும் சினிமா தொழிலாளர் சம்மேளனம் உள்ளிட்ட 16 சங்கங்கள் இந்த போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.

 

 

இதில் நடிகர்கள் ரஜினி, விஜய், சரத்குமார், சூர்யா, கார்த்தி, ராதாரவி, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சந்திரசேகர், சாந்த‌னு, ஜித்தன் ரமேஷ், விஷ்ணு, பாண்டியராஜன், பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன், நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகைகள் ராதிகா, வடிவுக்கரசி, ரேகா, நளினி, குயிலி, தயாரிப்பாளர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா-சினேகா உள்ளிட்ட பலர் பங்கேற்று உள்ளனர். காலை 8 மணிக்கு துவங்கிய இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது. தொடர்ந்து சின்னத்திரை பெரிய, வெள்ளித்திரை கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். ரஜினி, கமல் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதாக சொல்லியிருக்கிறார்கள்.


ரஜினி பேசுகையில், கறுப்பு பணத்தை கொண்டு வருவதற்காக வரியை அதிகப்படுத்துவதாக மத்திய அரசு கூறுகிறது. இதுபோன்று வரியை அதிகப்படுத்துவதால் கறுப்பு பண புழக்கம் தான் அதிகமாகும். எனவே இந்த சேவை வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மேலும் வரி செலுத்தாதவர்கள் மீது கடுமையான சட்டம் போட வேண்டும் என்றார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%AA-%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%95%E0%AE%AE-052200545.html

  • தொடங்கியவர்

பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு முடிவு?

 

நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதே போல், ரூ. 2.1 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். அதில் வரும் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, 2013-14ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. இப்பணிகளை மத்திய நிதியமைச்சகம் செய்து வருகிறது. இந்நிலையில், நாட்டிலுள்ள பணக்காரர்களுக்கு அதிகளவில் வரிவிதிப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் இத்தகைய வரிவிதிப்பின் மூலம் நடுத்தர மக்களின் ஏகோபித்த ஆதரவை அதிபர் ஒபாமா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் பொதுத்தேர்தலை கணக்கில் கொண்டு, அது போன்ற ஒரு வரிவிதிப்பைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இது குறித்து நிருபர்களிடம் பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் கூறுகையில், நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள வரிவிதிப்பு முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு உபரி வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நாட்டிற்கு மிக அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. அதிக வருமானம் உள்ளவர்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ரங்கராஜனின் இந்த கருத்து, பணக்காரர்களுக்கு அதிகவரி விதிக்க மத்திய அரசு தயாராகி விட்டதையே காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

 

வரிவிலக்கு வரம்பு உயர்வு: ஆண்டு வருமானம் ரூ.2.1 லட்சத்துக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது தற்போது ரூ. 2 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 10 சதவீத வரியும், ரூ. 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை உள்ளவர்கள் 20 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 30 சதவீத வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B5-090000254.html

விளைச்சலுக்கு போதிய நீரும் அரச உதவியும் இன்றி நூற்றுக்கணக்கில் விவாசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில் ஒரு படத்துக்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்த நடிகர்கள் தன் நாட்டின் அபிவிருத்திக்கு வரி கட்ட மறுத்து உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த சுயநலவாதிகளிடம் இருந்து தான் எம்மில் சிலர் எம் போராட்டத்துக்கு ஆதரவு தருவார்கள் என எதிர்பார்க்கின்றனர். தன் நாட்டுக்கே உதவாத இந்த கூத்தாடிகள் வேறு எவருக்கும் உதவப்போவதில்லை.

 

நடிகர்களை நடிகர்களாகவே பார்க்க வேண்டும். வெறும் பொழுபோக்கு பண்டங்கள் இவர்கள். பயன்படுத்த்விட்டு, பொழுதை களிப்புற அனுபவித்து விட்டு தூக்கி குப்பைக் கூடைக்குள் வீசவேண்டும்.

  • தொடங்கியவர்

அதிக பணம் உழைக்கும் இந்தியர்கள் நிச்சயம் அதிக வீதப்படி வட்டி செலுத்தவேண்டும்.

 

அதேவேளை அந்தபணத்தை நேர்மையாக செலவழிக்கும் நல்ல அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முதலில் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.